Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்மோகன் சிங் கொழும்பு மாநாட்டைப் புறக்கணிப்பார்! இந்துஸ்தான் ரைம்ஸ்

Featured Replies

ManmohanSingh.jpgகொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிப்பதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளும்பட்சத்தில், காங்கிரஸ் கட்சிக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பும் என்ற காரணத்தினால் மன்மோகன் சிங் இந்தத் தீர்மானத்தை எடுக்கக் கூடும் என அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமன்றி தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்களும் இலங்கைப் பயணத்தைக் கைவிடுமாறு மன்மோகன் சிங்கிடம் கோரிவருகின்றனர்.

மத்திய அமைச்சர்களான ஜீ.கே.வாசன், நாராயணசாமி ஆகியோரும் இலங்கைப் பயணத்தைக் கைவிடுமாறு மன்மோகன் சிங்கிடம் கோரியுள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்ஷித் பங்கேற்கக்கூடும் என்றும் ரைம்ஸ் எதிர்வுகூறியுள்ளது.

http://tamilworldtoday.com/home

அப்படி நடந்தால் காசியின் வாய்க்கு சர்க்கரை.

 

அதன் பின்னர் இலங்கை இந்திய தமிழ் சினிமா ஊடக் கூடல் நாடக போக்கை மாற்றி உண்மை பாதையில் பயணிக்க வேண்டி வரும். மகாநாட்டில் இந்தியா இலங்கை செய்து வரும் அபிவிருத்திகளை காட்டி இலங்கையைக் காப்பாற்றாவிட்டால் இலங்கையை பிருத்தானிய பிரதமர், கனேடிய வெளித்துறை அதிகாரிகள் கேள்வி கேட்க இலகுவாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் விக்கியார் பங்கேற்பார் அல்லவா ?

 

விக்கியருக்கு அழைப்பு விடுக்கப்படும் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் விக்கியார் பங்கேற்பார் அல்லவா ?

 

உங்கள்  கேள்வி  

பல கிளைக்கேள்விகளை  எழுப்பக்கூடியது

 

அதுவே விக்கியாருக்கும் சிக்கலானது

அவரது நடவடிக்கைகளை

தமிழரும்

உலகமும் 

கூர்ந்து கவனித்துவரும் இவ்வேளையில்

இது போன்ற  நிகழ்வுகளில் அவர் பேசுபவை பெரும் எதிர்பார்ப்புக்குரியவை.

அவரது அறிவுக்கும் அனுபவத்துக்கும் சவால்  விடக்கூடியவை.

 

இருந்தாலும்

தலைவர்கள் இதைத்தாண்டித்தான் தம்மை நிரூபிக்கவேண்டியிருக்கிறது.

பார்க்கலாம்

Edited by விசுகு

விக்கியாரை வைத்து தானே சர்வதேசத்திற்கு பதில் சொல்ல பல நகர்வுகளை மகிந்தர் முன்னெடுக்க வேண்டியுள்ளது. இது தானே இப்போதைய கேள்வி!

அத விட்டு பாவம் வாயில்லா பூச்சி மன்மோகன் மாமாி ச்ச்ச்சச :D

சுமந்திரன் இந்தியாவைப் பகிஸ்கரிக்கக் கோரி இருக்கிறார். ஆகவே பேரம் பேசல் இன்னும் முடியவில்லைப் போல் இருக்கிறது.

ஆனால் விக்கியார் பங்கேற்பார் அல்லவா ?

விக்கியர் நாடுத்த்லைவர் இல்லை. பங்கு ஏற்க வைத்தால் முதல் முதலாக தமிழ் தலைவர் பொதுநலவயா நாடுகளின் தலைவர்களின் மடாநாட்டில் பங்கு கொண்டார் என்று ஆகும். இது தமிழ் ஈழத்து கொடுக்கும் பொதுநலவாயம் கொடுக்கும் அதிகார பூர்வ அங்கீகாரமாக இல்லாவிட்டலும் வட மாகாணத்துக்கு தன்னும் கொடுக்கும் அங்கீகாரமாக இருக்கலாம். 

 

விக்கியர் பங்கு பற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் போவதில் தவறும் இருக்காது. விக்கியர் அங்கு போனாலும் மக்கள் பிரச்சனையை கதைக்க கூடிய ஆள். ஆனால் போராளித்தன்மைகள் இல்லாதவர். அனாவசிய இடங்களில் விட்டுக்கொடுத்துவிடக்கூஅடிய ஆள். எவ்வளவு துரம் தேர்தலில் ஜனநாயக முறையாக விக்கியர் வந்திருந்தாலும் இவர் அடிமை மாகாண அடிமைப் பிரதிநிதியே. அவர் வெளிப்படையாக பேச, செயல்ப்பட மறந்தால் இவரையும் கக்கீம் மாதிரியே உலகநாடுகள் பார்க்கும்.

 

ஆனால் மன்மோகன் சிங் அங்கு போவது தமிழ் இனத்துக்கு பாரதூரமான அடி. அது விக்கியர் மாதிரியாக இலகுவில் தட்டிக்கழிபட போவதில்லை. கனடா போல முழுமனதாக மாகாநாட்டை எதிர்க்கும் நாடுகள், செல்வா காலத்தில் உடன்படிக்கைகைகள் கிழிக்கப்படும் போது எப்படி ஈழத்தமிழ் மக்கள் நம்பிக்கையீனம் அடைந்தார்களொ அப்படி ஒரு நிலைக்குத்தான் போவார்கள். இன்று  ஐ.நா.வில் இந்தியா தனது கனத்தை காட்ட முயலும் போது நிச்சயமாக பொதுநலவாயத்தில் இந்தியாவுக்கு ஒரு கனம் இருக்கு.  இங்கு இந்தியாவின் கனத்திலும் பார்க்க கவனிக்கப்பட வேண்டியது காங்கிரசின் "பொல்லாத நாராயணன் குணம்". இப்போ பிருத்தானியா கூடத்திற்கு போவதை பற்றி சில நம்பிக்கைகள் வெளிவந்திருக்கு. அவர்கள் கூட்டத்தில் இலங்கையில் வைத்துக்கொல்லப்பட்ட பிருத்தானிய பிரஜையும் தன்னார்வு தொண்ட நிறுவன தொழிலாளியுமான குராம் சாகிப்பை பற்றியாவது கேள்வி கேட்பார்கள். ஆனால் காங்கிரசின் மன்மோகன் சிங் 500 மீனவர்கள் இறந்தாலும் பரவாயிலை, இன்னுமொரு 500 தரமுடியும், மகிந்தா தான் சீனா கம்பனிகளிடம் வாங்கும்  50% கமிசன்களில் தனக்கும் ஒரு பகுதமுடியுமானால் என்று கேட்டு ஒரு ஒப்பந்ததுக்கு கையெழுத்து போட்டுவிடுவார். 

கனடா போன்று வெளிப்படையாக பொ.நா.மாநட்டை புறக்கணிப்பதற்கான காரணத்தை சொல்ல போவதில்லை என்றாலும் எதிர்வரும் பாராலுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கலந்து கொள்ள போவதில்லை இந்தியா. காமன்வெல்த் நாடுகளில் மிக பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில் மன்மோகனின் இலங்கை பக்க சார்பு கருத்துக்கள் நிச்சயம் சர்வதேச அழுத்தங்களை குறைக்க உதவும். ஆகையால் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் அது இலங்கைக்கு தலை வலியே. மகிந்தா மாகாண சபை தேர்தலையும், முதல்வர் சி.வியை முன்னிருத்தி கூடிய வரை சாமாளிக்கலாம் அல்லவா ? அதனால் தான் கேட்டேன் சி.வி கலந்து கொள்வாரா என்று! அடியேனின் சந்தேகம் அவ்வளவே ;-)

போகக் கிடைத்து போனால் சி.வி அரசுக்காக கதைக்க மாட்டார். அவர் ஒரு கெட்டத்தனமான பிரச்சாரியும் அல்ல. ஆனால் அங்கு முழு தீர்வு ஒன்று பற்றி பேசாமல், பிரதிநிதிகளிடம் காணி பொலிஸ் அதிகாரம் பெற்றுத்தரும்படி கேட்கக்கூடும். அது பிரதிநிதிகள் முழு கூட்டமைப்பையும் தெரிவுக்குழுவு போகும் படி கூற வைக்கலாம். 

 

ஆனால் அது எல்லாம் 5%-10% நடக்க சாத்தியமான நிகழ்வுகளே.  சம்பந்தர் இந்தியாவிடமே தெரிவுக்குழு பேச்சை நிராகரித்துவிட்டார். அதை வேறு பிரதிநிதிகள் கொண்டுவரும் சாத்தியம் இல்லை.

 

தேர்தல் வந்தது இந்தியாவால் என்றது மேற்கு நாடுகளுக்கு தெரியும். எனவே அவர்கள் அதில் யாரின் பிரச்சாரத்தையும் எளிதில் நம்ப மாட்டார்கள். ஐ.நா பிரேரணையை மடக்க ஐ.நா.வில்  இந்தியா வைத்த யோசனை தான் மாகாணசபைத் தேர்தல் .  ஆனால் சபைக்கு அதிகாரம் கொண்டுவருவத்தில் இந்தியாவின் இயலாமையை அவர்கள் நேரில் பார்க்கிறார்கள். தேர்தல் வேறு, அதிகாரம் வேறு. 13ம் திருத்தம் படி  வடக்கு கிழக்கு இணையாத மாகாண அதிகாரங்கள் மற்றைய மகாணங்களுக்கும் சமமானது. எனவே தென் மாகாணங்களின் சிங்கள எதிரிகள் கையில் மகிந்தா நீதி அதிகாரம் கொடுக்கவே மாட்டர். அது தற்கொலைக்கு சமன். ஆனால் 13ம் திருத்தத்தின் கீழ் வடக்கு-கிழக்கை இணைத்தால் அது இலகுவாகும். ஆனால் அதனால் தனிநாடு வந்துவிடும் என்று பயப்படுவர். எனவே வடக்குக்கும், கிழக்குக்கும் தனியாக ம்ட்டும் காணி, பொலிஸ் அதிகாரம் கொடுப்பதாக 13ம் திருத்தத்தை திருத்தலாம். அதற்கு தேவையான வாக்குகளை சிங்களவர் கொடுக்கப்போவத்தில்லை. 

 

போர் முடிய வந்த தேர்தலை மேற்குநாடுகள் கையாள முயன்றன. அவர்களுக்கு சிங்கள மக்களிடம் இருக்கும் இனத்துவேசம் நன்றாக விளங்கியதால் தங்கள் பக்க வேட்பாளராக ரணில் வராமல், பொன்சேக்காவை போட்டார்கள். சிங்கள மக்கள் தேர்தலில் தங்கள் தலைக்கு ஆப்பு வருவதைக்கண்டு பொன்சேக்காவை விழுத்திவிட்டார்கள். அந்த தேர்தலில் இந்தியாவின் கை கட்டப்பட்டிருந்தது. பொன்சேக்கா இந்தியாவின் எதிரி. எனவே இந்த மாகாண சபை தேர்தலில் மேற்கு நாடுகளுக்கு மேலாக சென்று இந்தியா தனது பலத்தை காட்டியிருக்கிறது. இதில் இந்தியா தனது வெற்றியாக காட்ட முயன்றது மாதிரியே கூட்டமைப்பு வென்றது. ஆனால் அதிகாரம் மட்டும் கைக்கு வரபோவத்தில்லை என்றது மேற்கு நாடுகளுக்கும் தெரியும்.  

 

மேலும் சி.வி. கொண்டுவரப்பட்டது 13ம் திருத்தத்தின் சில சட்ட சிக்கல்களை மேற்கு நாடுகளுக்கு தெளியவைப்பதற்காவே. இதில் சி.வி எப்படி நடந்து கொள்வார் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

இந்துஸ்தான் ரைம்சின் பத்தி இந்தியாவில் ஆழம்பார்க்கும் ஒரு நடவடிக்கை... வரும் விமர்சனங்களை பொறுத்து முடிவு அமையும்... விடயம் அந்த அளவிலேயே இப்போது நோக்கப்படவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

சீவி யை அழைத்து தந்தலையிலே மண் அள்ளிக்கொட்ட, இலங்கை அரசு ஒன்றும் புலம்பெயர்ஸ் ஆல் வழிநடத்தப்படுவதில்லை.

சீவி யை அழைத்து தந்தலையிலே மண் அள்ளிக்கொட்ட, இலங்கை அரசு ஒன்றும் புலம்பெயர்ஸ் ஆல் வழிநடத்தப்படுவதில்லை.

நல்லா சொன்னீங்கள்...

இலங்கை அரசு தலையிலை மண்ணை அள்ளி கொட்ட இல்லைதான் ஆனால் பெற்றோலை ஊத்தி கொள்ளும்....

ஐநாவில் ஒருவருட கெடு , ஐநா தோல்வி அறிக்கை , நவ்வி பிள்ளை அறிக்கை , தருஸ்மன் அறிக்கை , C4 ஆவணம் எல்லாம் இலங்கைக்கு குடுக்க பட்ட பட்டங்கள்...

உதுகளை வாங்கி குடுத்த சி வி யை பாராட்டுகிறோம்... அதனால் அவரை அரசாங்கம் கூப்பிடாது ஆனால் காப்பாத்த கூப்பிடும்...

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இந்திய பிரதமர் தவிர்க்கக் கூடும்

17 அக்டோபர் 2013


பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதனை, இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங், தவிர்க்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியும், கூட்டணி கட்சியான திராவிட முன்னேற்றக்கழகமும் அமர்வுகளை பகிஸ்கரிக்க வேண்டுமென கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் ஏனைய கட்சிகளும் அமர்வுகளில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளன.


இவ்வாறான ஓர் பின்னணியில் பிரதமர் மன்மோகன் சிங் அமர்வுகளில் பங்கேற்பதனை தவிர்க்கக் கூடும் என இந்திய ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள அமர்வுகளில் துணை ஜனாதிபதி ஹமீட் அன்சாரியும், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் பங்கேற்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.


அமர்வுகளில் பிரதமர் பங்குபற்றக் கூடாது என தமிழக கட்சிகள் பல்வேறு வழிகளில் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன. எதிர்வரும் ஆண்டில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கக் கூட்டணி மிகவும் நிதானமாக தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இந்திய பிரதமர் பங்கேற்கவில்லை, அவுஸ்திரேலியாவில் நடைபெ;றற இந்த அமர்வில் துணை ஜனாதிபதி அன்சாரியே பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97764/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மன் மோகன் சிங்

வைத்தியசாலையில் அனுமதி  என்று செய்தி  வரும்போலுள்ளது......... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.