Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறமிழந்து போவேனோ...

Featured Replies

பார்த்தலையும்,

புன்னகைத்தலையும்,

நிராகரித்துவிடும் பலரை கடக்கவேண்டியிருக்கிறது.

 

அரவணைப்புகான ஏக்கத்தைதையும்

இன்றின் ஏமாற்றத்தையும்

சுமந்து திரியும் சிலரையும் கடக்கவேண்டியிருக்கிறது.

 

வீடுகளில்,

வேலைத்தளங்களில் - இருந்து

ஏதாவதொன்றைக் காவி வருபவர்களையும்,

ஒரு சீக்கரெட் , கபே வழியாக

ஏதோவொன்றை  இறக்கி வைக்க முயல்பவர்களையும்

சந்திக்க வேண்டியிருக்கிறது.

 

லெதர் ஜக்கெற்றுக்களும்

மப்ளர்களும் மனதையும் மூடிவிட

ஐபோனும் கூலிங்கிளாசும்

பொறிகளையும் தின்றுவிட

கொட்டடி முதல் கொடிகாமம் வரை

உறவாடி உணர்வோடு இருந்தம் என்பவரையும்

பொறுத்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது.

 

சென் நதியிலும் லூவர் மியூசியத்திலும்  ஈபிள் கோபுரத்திலும்

நீண்ட மெற்றோக்களிலும் ஏறிவந்த பின்னும்

ஒரு ஆபிரிக்கனை,

ஒரு துனிசியனை,

ஒரு ரூமேனியனை,

கள்ளன் கறுவல் என்று திட்டிக்கொள்பவர்களையும்

சகிக்க வேண்டித்தான் உள்ளது.

 

இந்தப் பயணத்தில் ...

முகமூடிகள்  மட்டுமல்ல

முகமில்லதவர்களும் பக்கத்து இருக்கைகளில்,

 

ஒரு காலத்தில்,

வல்லைக் காற்றையும் 

வல்லிபுரக்கோவிலையும்

தாவடிச் சுருட்டையும் 

கீரிமலைக் கேணியையும் சுகமென்றவர்கள்,

மாத விடுப்பில் பார்த்த 

சுவிசும், பார்சிலோனாவும், லூட்சும் போதும் என்கிறார்கள்.

வலைபின்னி வலைபின்னி 

வாழ்வினை இரையாக்கி கொள்கிறார்கள்.

 

இப்போது,

எனது பயமெல்லாம்  

இவர்களைப்போல, 

நானும் ஒரு அகதி என்பதை மறந்துபோவேனோ ?

Edited by நெற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயல்புகளைச்செதுக்கி ‘ஒரு உயிர் காவியமே வடித்திருக்கின்றீர்கள் கவிதையில்!...சொல்லியிருக்கின்ற எந்த வரிகளுக்கும் மறுப்பு எழப்போவதில்லை. நிதமும் இப்படிஒன்றை எதிர்நோக்கவேண்டித்தான் இருக்கிறது!

 

 

 

மிகவும் ரசித்தேன்!.

வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மிகக் கடினமான ஒரு விடயம் சூழ்நிலைகள் எம்மை மாற்றாமல் வாழ முயல்வதே.

சூழ்நிலை எனும் சந்தர்ப்ப வலைகளில் விழாமல் வாழும் மனிதனே தன் சுயத்தை இழக்காமல் வாழ்கிறான்.

'நான் எப்பொழுதுமே நானாகவே இருக்க விரும்புகின்றேன்'.... என்று சொல்வது மிகச்சுலபம். அதைத் தாண்டி வாழ்ந்து காட்டுதல் என்பதுதான் ஒரு மனிதனின் சிறப்பம்சமாக, வாழ்நாள் சாதனையாக இருக்க முடியும்.

முக்கியமான ஒரு கருத்தை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் நெற்கொழு! வாழ்த்துக்கள்.

 

வழமையாக உங்களின் படைப்புக்களில் எழுத்துப்பிழைகள் வருவது மிக மிகக் குறைவு. ஆனால் இதில் ஒருசில இடங்களில் சின்னச்சின்ன எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. கவனித்துக்கொள்ளுங்கள்! :)

  • தொடங்கியவர்

இயல்புகளைச்செதுக்கி ‘ஒரு உயிர் காவியமே வடித்திருக்கின்றீர்கள் கவிதையில்!...சொல்லியிருக்கின்ற எந்த வரிகளுக்கும் மறுப்பு எழப்போவதில்லை. நிதமும் இப்படிஒன்றை எதிர்நோக்கவேண்டித்தான் இருக்கிறது!

 

 

 

மிகவும் ரசித்தேன்!.

நன்றி தமிழ் தங்கை.

 

இப்போது

நாங்கள் கேட்பது

இற்றுப்போகாத ஆடை

பசி தீர்க்கும் உணவு

வாழ்வதற்கு உயிர் மற்றும்

கலையாத நித்திரையுமாக  குருகிப்போயின

(தர்மினி கவிதைகள் )

 

அந்த எதிர்நோக்கல்களில் இருந்து எங்களுக்கான இருப்பை கற்றுக்கொள்ளுவோம்.   

வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மிகக் கடினமான ஒரு விடயம் சூழ்நிலைகள் எம்மை மாற்றாமல் வாழ முயல்வதே.

சூழ்நிலை எனும் சந்தர்ப்ப வலைகளில் விழாமல் வாழும் மனிதனே தன் சுயத்தை இழக்காமல் வாழ்கிறான்.

'நான் எப்பொழுதுமே நானாகவே இருக்க விரும்புகின்றேன்'.... என்று சொல்வது மிகச்சுலபம். அதைத் தாண்டி வாழ்ந்து காட்டுதல் என்பதுதான் ஒரு மனிதனின் சிறப்பம்சமாக, வாழ்நாள் சாதனையாக இருக்க முடியும்.

முக்கியமான ஒரு கருத்தை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் நெற்கொழு! வாழ்த்துக்கள்.

 

வழமையாக உங்களின் படைப்புக்களில் எழுத்துப்பிழைகள் வருவது மிக மிகக் குறைவு. ஆனால் இதில் ஒருசில இடங்களில் சின்னச்சின்ன எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. கவனித்துக்கொள்ளுங்கள்! :)

நன்றி கவிதை.

 

மன்னிக்கவேண்டும். 

உண்மையில் கவனிக்கவில்லை. இனிமேல் இவ்வாறான தவறுகள் ஏற்படாமல் கவனிக்கிறேன். மிக்க நன்றி கவிதை என் தவறுகளை சுட்டிகாட்டியமைக்கு.  

 

நன்றி கவிதை குறித்த கருத்துப்பகிர்வுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்போது,

எனது பயமெல்லாம்  

இவர்களைப்போல, 

நானும் ஒரு அகதி என்பதை மறந்துபோவேனோ ?

 

 

அகதி எப்போதும் ஒருமாதிரித்தான் இருப்பார்கள். நடிப்புகளுக்கே இப்போது பெறுமதி அதிகம். ஆனால் காலம் எல்லாவற்றையும் கணக்கு வைத்துக் கொண்டே நகர்கிறது. அது ஒருநாள் தனது முகத்தை இந்த அகதிகளுக்குக் காட்டாது கடக்காது.

எண்ணத்தை அப்படியே கவிதையில் கரைக்கிறது நெற்கொழுதாசன்.

  • கருத்துக்கள உறவுகள்

அகதியாக வந்த தமிழன் என்பது உண்மையிலேயே ஒரு காலத்தில் ஒவ்வொரு நாளும் நினைவில் இருந்தது. ஆரம்பத்தில் ஊரைவிட்டுப் பிரிந்த நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். பின்னர் வருடங்களை எண்ணிக் கொண்டிருந்தேன். பனை மரங்கள் நிரம்பிய ஊர் கனவில் வருவது நின்ற பின்னர் எண்ணுவதை விட்டுவிட்டேன். ஆனாலும் அகதியாக வந்தவன் என்பதை மறக்கவில்லை.

2009க்கு முன்னர் எப்படி வந்தாய் என்று கேட்டால் அகதியாக வந்ததைச் சொல்லி இலங்கையின் இனப் பிரச்சினைகளைப் பற்றி சிறுவிளக்கம் சொல்லுவது வழமை. 2009 மே மாதத்திற்குப் பின்னர் யாரும் கேட்டால் ஸ்ருடன்ற் விசாவில் வந்தேன் என்று சொல்லுவதாகத் தீர்மானித்துள்ளேன். ஆனால் இதுவரை யாரும் கேட்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைக்குச் சொல்ல புதிய வார்த்தைகளே என்னிடம் இல்லை.

இந்தப் பயணத்தில் ...

முகமூடிகள்  மட்டுமல்ல

முகமில்லதவர்களும் பக்கத்து இருக்கைகளில், ////////  நாம் வாழ்கையில் சந்திக்கும் பலரைத் திருப்திப் படுத்தப் பல வேடங்கள் பல மேடைகளில் போட்டாலும் , உண்மை என்கின்ற மேடையில் ஒரேயொரு முகம்தான் இருக்கமுடியும் . கவிதைக்குப் பாராட்டுக்கள் :) :) .

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வல்ல கவிதை. வாழிய கவிஞன்

  • தொடங்கியவர்

உங்கள் பாதைகள் 

உங்கள் ஊருக்கு செல்கின்றன 

என் ஊருக்கு 

உங்கள் பாதையில்

எப்படிச்செல்ல முடியும் 

 

எனவே

நான் என் பாதையில் செல்கிறேன் 

(அப்துல் ரஹ்மான்)

 

எனது பயங்களை நீங்களும் ஏற்றுக்கொள்வதால்  எமது பாதைகள் சேருமிடம் ஒன்றாகும்.

 

சாந்தி அக்கா, கிருபன் ,சுமேரியர் அம்மா, கோமகன், ஐயா poet  கவிதை குறித்த கருத்துப்பகிர்வுக்கு  என் அன்புகள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.