Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மொழியின் தனிச்சிறப்புகள் யாவை ? ஏன் நாம் தமிழைக் கொண்டாட வேண்டும் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியின் தனிச்சிறப்புகள் யாவை ? ஏன் நாம் தமிழைக் கொண்டாட வேண்டும் ?

மகுடேசுவரன்

 

d7fb623c-53b9-481b-b0b8-9ae94f549a36.jpg

1. மொழி, அது தோன்றி வாழும் நிலத்தோடு தாவரங்களைப்போன்ற வேர்த்தன்மையுடையது. பூமத்தியரேகையை ஒட்டிய வெப்ப மண்டல நிலப்பகுதியின் மொழியாகிய தமிழும் அதிலிருந்து தோன்றிய திராவிட மொழிகளும் தாடையை நன்றாகத் திறந்து உச்சரிக்க வேண்டிய வை. மேற்கத்திய மொழிகளைத் தாடையைப் பிரிக்காமல் பல்வரிசை ஒட்டியபடி பேசவேண்டும். அவர்கள் வாய்திறந்து பேசினால் குளிர்காற்று உள்புகுந்துவிடும். அந்தக் குளிரைச் சமன்செய்ய உடல் வெப்பம்திரட்ட வேண்டும். ஆனால், தமிழ் அப்படியில்லை. தமிழைப் பேசினால் உடல் வெப்பம் தணிந்து சீராகும்.

2. வெப்ப மண்டல நாடுகள் மலைமடுக்கள் குறைந்த நீண்ட நெடிய சமவெளிப் பரப்புகளால் ஆனவை. வாழும் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டித்திரியாமல் நன்றாக விலகிக் கட்புலம் எட்டக்கூடிய தொலைவில் நடமாடக் கூடியவர்கள். அவர்களை அழைப்பதற்கு, ஓங்கி குரலெடுத்துக் கூப்பிடுவதற்குத் தமிழும் அதன் இனமான திராவிட மொழிகளும் ஏற்றவை. குடியிருப்புப் பகுதியிலிருந்து காட்டுக்குள் வேலை செய்கின்றவர்களை எட்டும் அளவுக்கு ஓங்காரமாய்க் கூவி அழைத்துச் செய்தி தெரிவிக்கும் காட்சியை இன்றும் ஊர்ப்புறங்களில் காணலாம்.

3. தமிழில் பேசுவதற்கு சுவாசமண்டலம் ஏராளமான காற்றை உள்ளிழுத்து வெளியேற்ற வேண்டியிருக்கும். தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசுவதே நெஞ்சுரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இதமான பயிற்சியாகும். உதாரணத்திற்கு பாரதியார் பாடல்கள் சிலவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பாருங்கள். இரண்டு சுற்று மைதானத்தில் ஓடியதுபோல் மூச்சு வாங்கும்.

4. தமிழ் முதன்மையாக இசைத்தன்மை வாய்ந்த மொழியாகும். தமிழில் நல்ல பொருள்வளத்துடன் வழங்கும் எந்தவொரு சொற்றொடரும் தன்னளவில் இனிய இசைப்பாங்குடன் அமையப் பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். அந்தத் தன்மையால்தான் திராவிட மொழிகளில் எண்ணற்ற பழமொழிகள் தோன்றின. பேச்சுப் புலமை மட்டுமே தகுதியாய்க்கொண்டிருந்த பாமர மக்கள், வாழ்வியல் உண்மைகளை அவர்கள் பேசும் தொடர்களில் ஏற்றிவைத்தனர். இந்த இசைத்தன்மை மொழியின் இயற்கையான பண்பாக இருப்பது தனித்த சிறப்பு.

5. தமிழ் அளவில்லாத சொல்வளம் பெற்றிருக்கும் மொழியாகும். தமிழில் வழங்கும் பெயர்ச்சொற்கள் ஒன்றிரண்டோடு சுட்டி முடிந்துவிடுவதில்லை. ஒன்றைக் குறிக்க மிகச் சாதாரணமாகப் பத்திருபது பெயர்ச்சொற்கள் இருக்கின்றன. அதேபோல் ஒற்றைச் சொல்லுக்கு எண்ணற்ற பொருள்களும் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, பாணி என்ற வெறும் இரண்டெழுத்துச் சொல்லுக்கு – காலம், தாமதம், நீண்ட காலம், இசைப்பாட்டு, இசை, ஒலி, இசையுறுப்பாகிய தாளம், அழகு, அன்பு, முல்லை யாழ்த் திறத்துள் ஒன்று, பறைப்பொது, கூத்து, கை, பக்கம், சொல், சர்க்கரைக் குழம்பு, கள், பழச்சாறு, இலைச்சாறு, மிளகும் பனைவெல்லமும் சேர்ந்த ஒரு மருந்துவகை, நீர், ஊர், நாடு, ஊர்சூழ் சோலை, காடு, பூம்பந்தர், பலபண்டம், கடைத்தெரு, நடை, சரகாண்டபாடாணம், பாடினி – என்று எத்தனை பொருள்கள் வழங்குகின்றன, பாருங்கள் !

6. ஒரு மொழியின் உயிர்நாடி அதில் வழங்கும் வினைச்சொற்கள்தாம். அம்மொழி பேசும் மக்கள் எத்தகைய வினைத்திட்பம் மிக்கவர்கள் என்பதையும் அச்சொற்களே எடுத்தியம்புகின்றன. தமிழ் வினைச்சொற்களின் அருமை என்னவென்றால் அவற்றுள் ஏராளமானவை பெயர்ச்சொற்களைப் போலவே வடிவில் எளியதாயும் அளவில் சின்னஞ்சிறிதாயும் இருப்பவை. உதாரணத்திற்குப் ‘பொங்கு’ என்ற இந்தச் சிறிய வினைச்சொல் பத்துக்கும் மேற்பட்ட செயல்களைச் சுட்டுவதாகும். அவை (பொங்குதல்) : காய்ந்து கொதித்தல், கொந்தளித்தல், மிகுதல், பருத்தல், மேற்கிளர்தல், மகிழ்தல், சினத்தல், செருக்குறுதல், நுரைத்தல், விளங்குதல், மயிர் சிலிர்த்தல், வீங்குதல், விரைதல், துள்ளுதல், கண் சூடடைதல், உயர்தல், செழித்தல், ஒலித்தல், சமைத்தல்.

7. ஒருவரின் சிந்தனைப் பாங்கு அவர் பேசுகின்ற மொழியோடு தொடர்புடையது. எண்ணம் வெறும் படிமத்தளத்தில் தோன்றுவது. அந்தப் படிமத்தை விளக்குவதற்கு, குறைந்தபட்சம் எண்ணியவரே விளங்கிக்கொள்வதற்கு அவருக்குத் தெரிந்த மொழியே துணை. எண்ணியவற்றை விளக்க, போதாக்குறையோடு ஒருவரின் மொழி இருந்தால் அந்த எண்ணத்தால் ஆகக்கூடிய நன்மை என்ன ? வளமான தாய்மொழியை வாய்க்கப் பெற்றவர் தம் எண்ணங்களை படிமத் தளத்திலிருந்து இல்லை, மொழித்தளத்திலிருந்தே உருவாக்கிக் கொள்ள வல்லவர் ஆவார்.

8. வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மெய்யெழுத்துகளும் உயிர்மெய்யெழுத்துகளும் தமிழின் உச்சபட்சச் சிறப்பாகும். ‘தமிழ்’ என்ற பெயரே இந்த மூன்று வகை எழுத்துகளையும் பயன்படுத்தி வழங்கும் பெயர் என்பர். த – வல்லின உயிர்மெய். மி – மெல்லின உயிர்மெய். ழ் – இடையின மெய். வன்மையாகக் கூறவேண்டிய இடத்தில் வல்லின மெய்களையும் வல்லின உயிர்மெய் எழுத்துகளையும் மிகுதியாகப் பயன்படுத்தி முழங்கினால், அந்த முழக்கம் முழங்குபவரின் உடலையும் மனத்தையும் பறைபோல் அதிரச் செய்துவிடக்கூடியது. ’எரிமலை எப்படிப் பொறுக்கும் ? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ? சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் துன்பச் சிறையின் கதவு தெறிக்கும் !’ – இவ்வரிகளில் வல்லின மெய் மற்றும் வல்லின உயிர்மெய்கள் மிகுந்து புழங்குவதால் உச்சரிப்பும் ஒலிப்பும் வன்மை உணர்ச்சி ததும்ப இருக்கின்றன.

9. மெல்லின மற்றும் இடையின மெய்களைப் பயன்படுத்தி எழுதினால் தமிழ்மொழி மென்மையின் தடத்தில் அதிராமல் நடக்கும். அவ்வகையான சொற்களை உரிய மாத்திரை அளவுகளில் திருத்தமாக உச்சரித்தால் மயக்கமே வந்துவிடும். உதாரணத்திற்கு ‘மெல்ல நட… மெல்ல நட… மேனி என்னாகும் ? சின்ன மலர்ப்பாதம் நோகும் ! உந்தன் சின்ன இடை வளைந்துவிடும் ! வண்ண சிங்காரம் குலைந்துவிடும்.’ மெல்லின மெய்களின் மென்மை புரிகிறதா ? (உங்க ளுக்கு எளிதில் விளங்கவேண்டும் என்பதற்காகவே திரைப்பாடல் உதாரணங்களைக் கூறியுள்ளேன். பாடல்கள் உச்சரிப்பொலிகளையும் கூடுதலாக நினைவூட்டும் என்பதற்காகவும்)

10. உலகில் எத்தனை இனங்களுக்குச் சொந்தமான தாய்மொழி வாய்த்திருக்கிறது என்று சிந்தியுங்கள். புலம்பெயர்ந்து ஏதிலிகளாக வாழ நேர்ந்தவருக்கும் உடன் வரும் சொத்து அவர்களின் தாய்மொழி. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த எத்தனை மொழிகள் பேசும் உதடுகளற்றுச் செத்தன என்று எண்ணுங்கள். இயேசுநாதர் பேசிய ஹீப்ரு மொழி பேசுவாரற்று ஆராய்ச்சிக் கூடத்தில் இன்று அடங்கிவிட்டது. வெறும் ஆயிரங்களில் சொற்களையுடைய மொழிகளைக்கூட அந்தந்த இனத்தினர் விடாது பற்றிக்கொண்டுள்ளனர். நம் பிள்ளைகள் எந்த மொழியை வேண்டுமானாலும் பயிலட்டும். ஆனால், தமிழைப் பழுதறக் கற்றுவிடட்டும்.

 

 

http://kavimagudeswaran.blogspot.co.uk/2013/06/blog-post_26.html

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்பிற்க்கு நன்றி கிருபன் .

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பதிவு, கிருபன்!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கிருபன் !

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியின் தனிச்சிறப்புகள் யாவை ? ஏன் நாம் தமிழைக் கொண்டாட வேண்டும் ?

மகுடேசுவரன்

1. மொழி, அது தோன்றி வாழும் நிலத்தோடு தாவரங்களைப்போன்ற வேர்த்தன்மையுடையது. பூமத்தியரேகையை ஒட்டிய வெப்ப மண்டல நிலப்பகுதியின் மொழியாகிய தமிழும் அதிலிருந்து தோன்றிய திராவிட மொழிகளும் தாடையை நன்றாகத் திறந்து உச்சரிக்க வேண்டிய வை. மேற்கத்திய மொழிகளைத் தாடையைப் பிரிக்காமல் பல்வரிசை ஒட்டியபடி பேசவேண்டும். அவர்கள் வாய்திறந்து பேசினால் குளிர்காற்று உள்புகுந்துவிடும். அந்தக் குளிரைச் சமன்செய்ய உடல் வெப்பம்திரட்ட வேண்டும். ஆனால், தமிழ் அப்படியில்லை. தமிழைப் பேசினால் உடல் வெப்பம் தணிந்து சீராகும்.

2. வெப்ப மண்டல நாடுகள் மலைமடுக்கள் குறைந்த நீண்ட நெடிய சமவெளிப் பரப்புகளால் ஆனவை. வாழும் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டித்திரியாமல் நன்றாக விலகிக் கட்புலம் எட்டக்கூடிய தொலைவில் நடமாடக் கூடியவர்கள். அவர்களை அழைப்பதற்கு, ஓங்கி குரலெடுத்துக் கூப்பிடுவதற்குத் தமிழும் அதன் இனமான திராவிட மொழிகளும் ஏற்றவை. குடியிருப்புப் பகுதியிலிருந்து காட்டுக்குள் வேலை செய்கின்றவர்களை எட்டும் அளவுக்கு ஓங்காரமாய்க் கூவி அழைத்துச் செய்தி தெரிவிக்கும் காட்சியை இன்றும் ஊர்ப்புறங்களில் காணலாம்.

--------

 

 

கிருபன், நீங்கள்... பதிந்த பதிவுகளில், எனக்கு மிகவும் பிடித்தது இது தான்.

நன்றாக.. கிரகிக்கும் வண்ணமும், எல்லொரும்... விளங்கும் படியாகவும், விஞ்ஞான, மருத்துவத்துக்கு ஈடாக‌ கட்டுரை அமைந்துள்ளது.

ஊரில்... வீட்டு நாய் நாக்கை தொங்கப் போட்டால்....

அது... வெப்பத்தை, தணிக்கின்றது, என்று இப்ப தான்... விளங்கிக் கொண்டேன்.

பகிர்விற்கு நன்றி.... கிருபன்ஸ். :)

புது தகவல் தந்த இணைப்பிற்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு... உதாரணமாக....
"அடியே... ஆத்தா.... வயசுக்கு, வந்துட்டா...." என்றும்.
"நான்... ஸ்கூலிலை, பாஸாயிட்டன்பா....." என்றும்,
சொல்லக் கேள்விப் படும் போதே.... காது, குளிருது.

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் முதன்மையாக இசைத்தன்மை வாய்ந்த மொழியாகும். தமிழில் நல்ல பொருள்வளத்துடன் வழங்கும் எந்தவொரு சொற்றொடரும் தன்னளவில் இனிய இசைப்பாங்குடன் அமையப் பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். அந்தத் தன்மையால்தான் திராவிட மொழிகளில் எண்ணற்ற பழமொழிகள் தோன்றின. பேச்சுப் புலமை மட்டுமே தகுதியாய்க்கொண்டிருந்த பாமர மக்கள், வாழ்வியல் உண்மைகளை அவர்கள் பேசும் தொடர்களில் ஏற்றிவைத்தனர். இந்த இசைத்தன்மை மொழியின் இயற்கையான பண்பாக இருப்பது தனித்த சிறப்பு"

 

தேனிலும் இனியது தமிழ்
 

இணைப்பிற்கு நன்றி கிருபன்
 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.