Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பதிகங்கள் ஆற்றுவோம் வாரீர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0930.jpg

 

சைவ சமயம் உட்பட பல சமயங்களில் இறைவனைத் தொழ பதிகங்கள் இயற்றி கோவில்களில் தேவாலயங்களில் பாடி இறை நம்பிக்கைகளை பன்னெடும் காலம் வளர்த்து வரும் நிலையில்...

 

எமது இனத்தின் இருப்பின் முதலாய் நிற்கும் தெய்வத்தையும் கடந்து நினைவில் என்றும் இருக்க வேண்டிய மாவீரர்களை நெஞ்சால் தொழுது இலட்சியத்தால் அவரின் கனவு வென்று நிற்க.. தோத்திரங்கள் பதிகங்கள் இயற்றி நிற்போம். அவை பண்.. தாளம் கொண்டு புனிதம் நிலைக்க.. பாடப்படும் நிலை இயற்றுவோம்..! வீழ்ந்த வீரரின்.. இலட்சியம் காவி நிற்போம்.

 

அந்த வரிசையில்.. எங்கள் பங்களிப்பு...  உங்கள் பங்களிப்பையும் ஆற்றி நில்லுங்கள்...!

 

32.jpg

 

 

பண் - தாளத்துடன் பாடக் கூடியது. பண் - தாளம் - அறியப்பட வேண்டியது.

 

மாநிலத்தின் தமிழ் மரபு காத்தாராய்
தமிழ் வீழ் நிலத்தின் எழுச்சி வீரராய்
விடுதலை முளை நிலத்தின் முதலாகி நின்றோரே
வீரரே மாவீரரே உமை நெஞ்சிருத்தி கைதொழுகிறமே..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேசம் காக்க ஊனை உருக்கி நின்றவர் போற்றி

பாசம் துறந்து வேஷம் தொலைத்து வந்தவர் போற்றி

எல்லாம் இருந்தும் எதுவுமின்றி வாழ்ந்தவர் போற்றி

எல்லை காத்து எம்மினம் காத்து ஏகினீர் போற்றி

எல்லையில்லா உம் வீரம் எங்கும் விதைத்தீர் போற்றி

எம்மிருள் போக்கி எமக்காய் வாழ்ந்த எந்தையே போற்றி

எல்லைகளற்று எங்கும் நிறைந்தீர் போற்றி போற்றி

ஏகாந்த வெளியில் எப்போதும் இருப்பீர் போற்றி போற்றியே

 

  • கருத்துக்கள உறவுகள்

எமது இனத்தின் இருப்பின் முதலாய் நிற்கும் தெய்வத்தையும் கடந்து நினைவில் என்றும் இருக்க வேண்டிய மாவீரர்களை நெஞ்சால் தொழுது இலட்சியத்தால் அவரின் கனவு வென்று நிற்க.. தோத்திரங்கள் பதிகங்கள் இயற்றி நிற்போம். அவை பண்.. தாளம் கொண்டு புனிதம் நிலைக்க.. பாடப்படும் நிலை இயற்றுவோம்..! வீழ்ந்த வீரரின்.. இலட்சியம் காவி நிற்போம்.

 

அந்த வரிசையில்.. எங்கள் பங்களிப்பு...  உங்கள் பங்களிப்பையும் ஆற்றி நில்லுங்கள்...!

 

நன்றி  தம்பி

 

கனம் செய்வோம்

காவல் தெய்வங்களை 

கண்முன் வைத்து

காவல் செய்வோம்

அவர் கண்ட கனவு பலித்திட

நிம்மதியாக அவர் நித்திரை செய்திட

சில மணித்துளிகளை  ஒதிக்கிடுவோம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்பில் பங்களிப்பும்.. ஊக்கமும் நல்கிய உறவுகளுக்கு நன்றி. எமது இனத்தில்.. புதிய அத்தியாயம் ஒன்றின் ஆரம்பம்பாக இது அமையட்டும்..!

எமக்காய் உம் உறவுகளை பிரிந்தீர்

எமக்காய் உம் உற்றாரை மறந்தீர்

எமக்காய் உம் உயிரையும் தந்தீர்

உமக்காய் நாம் என்ன செய்தோம்?

உயிருள்ளவரை உமை மறவோம்

உமது கனவை நினைவாக்க

உமது இலட்சியம் நிறைவேற

நாம் ஒருமித்து ஒன்றாக ஒரு வழியில்

விடுதலை நோக்கி பயணிப்போம்........!

 

http://www.youtube.com/watch?v=3-hYPmD1w5o

வேவுபுலி ..!

 

நீர் பகைஅருகில் போகும்போது

பாம்புகளும் நடுங்கும் பாதைதனை விடும் ..

கம்பி பட்டு முள்வேலிகள் பூமாலையாய் தெரியும் ..

எதிரியின் மண்ணரன் சிறு புற்றாய் இருக்கும் ..

 

கந்தகப்பொதி புத்தக்பைபோல இருக்கும்

சுடுகோல் எழுதுகோலாய் இருக்கும்

கைக்குண்டு அழி ரப்பர் ஆகமுன் நிங்கள்

அதிகாலை மீண்டும் வந்திடுவீர் ஓய்விடம் ...

 

மச்சான் நீ எனக்கு பூசிவிட்ட கரி போகவில்லை

நாளை உனக்கு பூசுறன் கரி எண்ணை கலந்து

கழுவினாலும் போகாது காய்ந்தாலும் போகாது

பருவாயில்லை மச்சான் வெடிவிளுந்தா போயிடும் ...

 

டேய் நான் பக்கத்தில் உள்ளவரை ஒரு ரவை ..

உன்னை நெருங்கா வேங்கையா கொக்கா ..

என்று நீ கட்டி என்னை அணைத்த கணம் நினைவில் ...

கண்கள் கண்ணீரை தூவுதடா உன் மேல் என்

பாசக்கார தோழா.. :(

1002457_561110620609791_343191837_n.jpg

 

 

 

 

Edited by அஞ்சரன்

வேவுபுலிகளே ..!

 

கந்தகப்பொதி புத்தகப்பைபோல இருக்கும்

சுடுகோல் எழுதுகோலாய் இருக்கும்

கைக்குண்டு அழி ரப்பர் ஆகமுன் நீங்கள்

அதிகாலை மீண்டும் வந்திடுவீர் ஓய்விடம் ...

நெடுக்கு,

 

முதலில் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

 

இதனை இப்படியே யாழுடன் மட்டுமே விட்டு விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த திரியில் எழுதப்படும் பதிகங்களையும், மாவீரர் கேள்வி பதில் திரியில் உள்ள கேள்வி பதில்களையும் ஒன்றாக்கி ஒரு புத்தகமாக / தொகுப்பாக வெளியே கொண்டு செல்லல் வேண்டும். ஒரு 1000 பிரதிகளாவது அடித்தால் நல்லது. வணிக நோக்கில் பூச்சியம் தான் எமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தே இதில் இறங்க வேண்டும். அத்துடன் இவற்றினை micro film இல் எடுக்கப்பட்டு காக்கப்படல் வேண்டும்.

 

அப்பரதும், சம்பந்தரதும் பதிகங்கள் மட்டுமே அச்சில் ஏற்றிக் கொண்டு இருக்கும் காலகட்டம் மாற்றப்பட்டு இவையும் அச்சில் ஏற வேண்டும். எமக்காக உயிர் சிந்தியவர்களின் வரலாறு எம் இனம் இருக்கும் வரைக்கும் மறக்கப்படாது காவப்பட வேண்டும். அவர்களின் கனவுகள் தான் நிராசையாகி போய்விட்டன; நினைவுகளாவது எம்மை தொடரட்டும்.

 

இதனை ஒரு செயற்திட்டமாக கொண்டு செய்வதற்கு முனைகின்றவர்களுடன் நானும் யாழும் துணை நிற்பதில் தயக்கம் இல்லை. ஆனால் அதை முன்னெடுப்பவர்கள் குழு அரசியல் சாராதாவர்களாக இருத்தல் வேண்டும்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.