Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறனை திட்டமிட்டு 27 ஆம் திகதி வரை அதாவது மாவீரர் தினம் வரை உள்ளே போட்டிருகின்றார்கள்

அவருடைய வயது உடல்நிலை ஆகியவற்றைக்கூட பொருட்படுத்தாதது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

  • Replies 284
  • Views 29.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • துளசி
    துளசி

    ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

  • விசுகு
    விசுகு

    வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

நெடுமாறனை திட்டமிட்டு 27 ஆம் திகதி வரை அதாவது மாவீரர் தினம் வரை உள்ளே போட்டிருகின்றார்கள்

அவருடைய வயது உடல்நிலை ஆகியவற்றைக்கூட பொருட்படுத்தாதது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

பாஸ் உலகத்திலேயே கொடிய அரக்கர்கள் இந்திய மத்தியும் ,சிறிலங்காவும் ..............அதற்கு வக்காளத்தும் ,யாழ்ராவும் பாட பல அரக்க தேவதைகள் ...........இங்கே உலாவருகிறார்கள் ..............ஆடை இன்றி :D ..............இவர்கள் வருவது எமக்கு மட்டும்தான் தெரிகிறது .அவர்களுக்கு தெரியவில்லையே என்று கவலைப்படுவதும் நாங்களே ........

உடனே கையெழுத்திடுங்கள் = பரப்புங்கள்
நண்பர்களையும் கையெழுத்திட வையுங்கள்...

 

Dr.J.Jayalalitha , Tamilnadu Cheif Minister : Please stop the destruction of Mullivaikkal Monument http://www.change.org/petitions/dr-j-jayalalitha-tamilnadu-cheif-minister-please-stop-the-destruction-of-mullivaikkal-monument

 

(facebook)

Edited by துளசி

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறனை திட்டமிட்டு 27 ஆம் திகதி வரை அதாவது மாவீரர் தினம் வரை உள்ளே போட்டிருகின்றார்கள்

அவருடைய வயது உடல்நிலை ஆகியவற்றைக்கூட பொருட்படுத்தாதது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

ஒரு தவறும் செய்யாத அந்த வயது போன ஜயாவுக்கு இரண்டு கிழமை ஜெயில்....இந்தியா தான் உண்மையான ஜனநாயக்க நாடு...... 

கையெழுத்திட்டேன் ....

 

1456804_656474827708068_1750114564_n.jpg

 

தோழர்களே நேற்று கொளத்தூர் மணி அண்ணன் கைது இன்று நெடுமாறன் அய்யா கைது, நாளை வைகோ ஐயாவும், சீமான் அண்ணனும் கைது செய்யப்படலாம்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு நமக்கான ஆட்சியை கைப்பற்றுவது மட்டுமே, நம் வீட்டிற்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் அதையெல்லாம் நாம் பிறகு பேசி தீர்த்துக்கொள்வோம், இல்லை பிறகு மோதிக்கொள்வோம்,

ஆனால் இன்றைய உடனடித்தேவை அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.எம் ஆகிய கட்சிகளை துடைத்தெறிவது தான்.

எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் மதிமுக எந்த தேசிய கட்சிகளோடும் கூட்டணி வைக்காமல் தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும், சீமான் அண்ணன் அவர் ஏற்கனவே மதிமுக தனித்து நின்றால் பிரச்சாரம் செய்வேன் என்று சொல்லியுள்ளது போல் இந்த கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை குறைந்தபட்சம் இந்த அணி மூன்றாவது இடமாவது பெறும், இதே கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆளும்கட்சியோ எதிர்கட்சியோ அது நாமாகத்தான் இருக்க வேண்டும். மக்களுக்காக இந்த தேர்தல் கூட்டணி அமைய வேண்டும்.

 

(facebook)

Edited by துளசி


உடனே கையெழுத்திடுங்கள் = பரப்புங்கள்
நண்பர்களையும் கையெழுத்திட வையுங்கள்...

 

Dr.J.Jayalalitha , Tamilnadu Cheif Minister : Please stop the destruction of Mullivaikkal Monument http://www.change.org/petitions/dr-j-jayalalitha-tamilnadu-cheif-minister-please-stop-the-destruction-of-mullivaikkal-monument

 

தமிழ்நாட்டு முதலவர் தமிழர் தானே அவருக்கு ஏன் ஆங்கிலத்தில் கடிதம் தமிழில் எழுதி போடுங்கோ நானும் கையெழுத்து போடுறன் துளசி .

தமிழ்நாட்டு முதலவர் தமிழர் தானே அவருக்கு ஏன் ஆங்கிலத்தில் கடிதம் தமிழில் எழுதி போடுங்கோ நானும் கையெழுத்து போடுறன் துளசி .

 

இந்த petition ஐ தயார் செய்தவர் Kanata, Canada இல் உள்ளதாக இருக்கிறது.

 

எனவே கனேடிய நண்பர்களுக்கும் விளங்கினால் அவர்களும் கையொப்பமிடுவார்கள் என நினைத்தும் இருக்கலாம். எனவே கையொப்பமிடுங்கள். :D

 

அவசர செய்தி...!!!

முள்ளிவாய்க்கால் முற்றத்தை முழுவதுமாக இடிக்க ஜெயலலிதா அரசு முடிவுசெய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஐயா வைகோ, அண்ணன் சீமான் உட்பட 700 பேரை காவல்துறை அடைத்து வைத்துள்ளது. அவர்கள் வெளியே சென்றால் பல ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி விடுவார்கள் என்ற அச்சத்தால் அவர்கள் அனைவரையும் காவல்துறை கண்காணித்து வருகிறது.

தள்ளாத வயதிலும் தமிழர்களுக்காக கோவிலை அய்யா பழநெடுமாறன் கட்டி கொடுத்ததோடு இல்லாமல் அதற்காக இன்று சிறையிலும் இருக்கிறார்.

தமிழ் உணர்வாளர்களே போராட்டத்தை உடனடியாக தொடருங்கள்.

இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

 

விடுதலைப்புலிகள் கட்டமைப்புடன் ஆட்சி நடத்தியபோது எதிக்கருத்து வைத்தவர்கள்......
 
2009 ல் நடந்த இன அழிப்பிற்கு பின்னரும் தங்களை மாற்றவில்லை.....இன்றும் மாறவில்லை.

 

 

ஏனென்றால் அவர்கள் உண்மையில் எதிர்த்தது விடுதலைப்புலிகளை அல்ல. தமிழனம் கெளரவமாக வாழ்வதை அவர்கள் எதிர்த்து எதிர் கருத்து வைத்தார்கள். விடுதலை புலிகளை எதிர்த்திருந்தால் புலிகளின் வீழ்ச்சியுடன் ஓய்ந்திருப்பார்கள். இன்னமும் தமிழன் வாழ்வதால் அவர்களும் ஓயவில்லை. தாங்கள் ஓய்ந்து விட்டால் கெளரவமான அரசியல் தீர்வை தமிழர்கள் அடைந்து விடுவார்களோ என்று பயப்படுகிறார்களே்.

சீமான் சவாரி செய்கிறார் என்ற போது வருந்தாத நீங்கள் அசைலம் என்றதும் ஓடி வந்து ஒப்பாரி வைக்கிற நிலையில்.. ஒற்றுமை.. புரிந்துணர்வு எப்படி வரும். சீமான் அவரின் குடும்பத்திற்காகவா உழைக்கிறார். தன் இனம் என்று தானே பாடுபடுறார். அதை சவாரி என்று வரையறுத்தால்.. தாயக மக்களின் சாவிலும் வலியிலும் கிடைக்கும்.. அசைலத்தை என்னென்று வரையறுப்பது என்று தான் கேட்டோம். அந்த நியாயத்திற்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்..???! இல்ல  ஒற்றுமை.. ஒருமைப்பாடு.. தான் உண்மையான விருப்பம் என்றால்.. எல்லோரினதும் செயற்பாடுகளை எல்லாரும் நீதி நியாயம் நேர்மை.. இருந்தால் மதிக்கனும்.. அதைவிட்டிட்டு.. ஒற்றுமையை எப்படி உருவாக்கிறது..???! 

 

கருத்துக்குள் கற்பனையை திணிக்கக் கூடாது!!  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுவர் இடிப்புக்கு கூடி அழும் தலைவர்கள் எல்லாம் ஏன் கூட்டணியை உருவாக்கலாம் தானே அது என்ன தேர்தல் வந்தா ஆளுக்கு ஒரு திசையில் போற பழக்கம் .!

காசு ...பணம் ...துட்டு ..மணி மணி ..!

 

இந்திய தமிழக அரசியல் முறைமை தெரியாவிட்டால் ...
தமிழில் விக்கிபிடீயாவில் இருக்கு பொய் வாசியுங்கள் 
 
தமிழர்களின் உரிமையும் உணர்வும் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மண்ணிலேயே சிதைக்க பட்டிருக்கு. மற்றவர்கள் அதை பற்றி பேசுகிறார்கள் 
இந்த்த திரியில் என்றாலும் உங்கள் புசத்தலையும் புராணங்களையும் புரந்தல்ல்லி வையுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

இதக் காணொளியில் 5.20 நிமிடத்தை மறக்காமல் பாருங்கோ காது குளிருது.... :D அந்த மானம் உள்ள தமிழனுக்கு நன்றிகள் பல......

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இதக் காணொளியில் 5.20 நிமிடத்தை மறக்கமல் பாருங்கோ காது குறிருது.... :D அந்த மானம் உள்ள தமிழனுக்கு நன்றிகள் பல......

 

5:20´வது நிமிடத்தில், அந்த உறவு ஒரு சில நிமிடங்களே... பேசினாலும்... அவ்வளவும் முத்துக்கள்.

விஜய தரணியை... வர்ணிக்க, இதனை விட அழகிய வார்த்தைகள்.... தமிழில் இல்லை.

விஜய தரணி... ரொம்ப ரென்சனாகிட்டாங்க... :D  :lol:  :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

5:20´வது நிமிடத்தில், அந்த உறவு ஒரு சில நிமிடங்களே... பேசினாலும்... அவ்வளவும் முத்துக்கள்.

விஜய தரணியை... வர்ணிக்க, இதனை விட அழகிய வார்த்தைகள்.... தமிழில் இல்லை.

விஜய தரணி... ரொம்ப ரென்சனாகிட்டாங்க... :D  :lol:  :rolleyes:

 

விஜய தரணி அவாவின் கட்ச்சி ஆக்களே அவாவை மிடியா முன்னால் வைச்சு அசிங்கப் படுத்தினவை...உண்மை சொல்ல அவாக்கு பத்தி கொண்டு வந்து விட்டது ஹா ஹா

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவர்இடிப்பின் போது நிகழ்ந்த காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான எனக்கும் என்னோடு தாக்குதலுக்கு உள்ளான தம்பி கரிகாலனுக்கும் ஆறுதலை நல்கிய அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள்.

நான் இப்போது நலமாக இருக்கிறேன். அய்யா நெடுமாறன் உள்ளிட்ட 85 பேர் தடுப்புக்காவலில் 14 நாட்கள் தண்டனையில் திருச்சி சிறைச்சாலையில் உள்ளனர். அவர்களை பிணையில் எடுப்பது பற்றியும் அடுத்த கட்ட போராட்டங்கள் பற்றிய முன்னெடுப்பிலும் இருக்கிறோம்.

ஜெயாவின் துரோக நிலையை விரைவில் விளக்கமாக எழுதுகிறேன்...

தனக்கு தானே ஆப்பு வைத்துகொண்ட ஜெயாவிற்கு கோடான கோடி நன்றிகள்...

 

செந்தில்நாதன் சேகுவேரா

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்குள் கற்பனையை திணிக்கக் கூடாது!!  :icon_idea:

 

அப்படின்னா நீங்க எல்லாருமே கற்பனையா தான் பேசிக்கிட்டு இருக்கீங்களா. சாரி.. அதில கருத்து வைச்சது தப்புத் தான்.  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதக் காணொளியில் 5.20 நிமிடத்தை மறக்காமல் பாருங்கோ காது குளிருது.... :D அந்த மானம் உள்ள தமிழனுக்கு நன்றிகள் பல......

என்ன நீதி.. சட்டம்.. சாதாரண ஒரு நடிகை.. இத்தனை கோடி சொத்துக்களை சுருட்டினது.. சட்டத்துக்குள்ளாகவா..??! கொடநாடு.. சென்னை.. போயஸ்காடின்னு.. நிலங்களை அபகரிச்சிருப்பது எல்லாம் சட்டத்துக்குள்ளாவா..??! ஏன் தலைவர் ராஜீவ் காந்திக்கு நினைவு சின்னம் உள்ள சிறீபெரும் புத்தூர் காணி ஆரோடு.. அவரோட பாட்டினதா.. தாத்தானடாதா..????!  எங்க இருக்கு நீதி.. விபச்சாரம் இல்லை என்று சொல்லிக்கிற சட்டம் இருக்கிற இடத்தில தானே விபச்சாரிகளை வைச்சிருக்கீங்க.. தமிழ்நாட்டில. யாரு அதை செய்யுறாங்க. சினிமாக்காரங்க தானே. செல்வி போட்டுக்கிற.. ஜெயலலிதா சுத்தமான பொண்ணு.. உந்த விஜயதாரணி சுத்தமான பொண்ணுன்னு.. மெடிக்கல் சாட்டிப்பிக்கட் காட்டுங்க பார்க்கலாம். பச்சைத் தமிழன்.. பச்சையாச் சொன்னாலும்.. அது தான் உண்மை.. நீதி..! அதை பெரிய புத்தகம் புத்தகமா படிச்ச நீதிபதி கூட இப்படி நேர சொல்ல முடியாது. அந்தளவுக்கு தான் சட்டம் உள்ளது. சட்டம் நீதி நியாயம் பார்க்காது.. கெளரவம்.. பார்க்கும். ஆனால்.. அவன் தமிழன் அப்பட்டாமாகவே சொல்லிட்டான்..!!! அவன் பொதுமகன். அவன் உண்மையைச் சொன்ன பொதுமகன். அவனை தண்டிக்க கூடாது.  :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

5.20 தில் நானும் கேட்டேன் அந்தக்கருத்தில் எந்தத் தவறையும் நான் அறியவில்லை. தேவ அடியார்கள் என்றால் அவர்கள் தேவர்களின் அருளைப் பெற்றவர்கள் அது பெருமைதானே. தேவடியார்களுக்கு பிறப்பதற்கு எத்துணை பாக்கியம் செய்திருக்க வேண்டும். இந்தப்பெண் விசயதாரனிக்கு ஏன் இத்தனை கோபம் வரவேண்டும்???.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பினை இடித்த அ.தி.மு.க. அரசை எதிர்த்து, நவம்பர் 16 இல் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - வைகோ அறிக்கை

அண்மைக் காலத்தில் உலகில் எங்கும் நடைபெறாத இனப்படுகொலை இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசால், தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இலட்சக்ணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள், தாய்மார்கள் கொலை செய்யப்பட்டனர். எண்ணற்ற தமிழ் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் வதைக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்.

தமிழ் ஈழத் தாயகத்தின் சுதந்திரத்தை மீட்பதற்காக உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீரம் செறிந்த சமர்களை, தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் விடுதலைப்புலிகள் நிகழ்த்தினர். சிங்களப் படைகளைச் சிதறடித்து வெற்றி கண்டனர். ஆனால், சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் காங்கிரÞ தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத்தமிழர்களின் உயிர்க்கவசமான, புலிப்படையை அழிக்கும் குறிக்கோளோடு, சிங்கள அரசுக்கு, முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களைத் தந்து, இந்தியாவின் தளபதிகளை அனுப்பி, யுத்தத்தை பல வழிகளிலும் உதவி இயக்கியது.

இந்தியா செய்த பண உதவியால், மேலும் ஆறு அணு ஆயுத வல்லரசுகளிடம் இருந்து, இராஜபக்சே அரசு, ஆயுதங்களையும், உலகம் தடை செய்த குண்டுகளையும் பெற்று, தமிழர்களை அழிக்கப் பயன்படுத்தியது. இதனால், விடுதலைப் புலிகளுக்குப் போரில் பின்னடைவு ஏற்பட்டது. உலகின் கொடுந் துயரமாக, முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில், 1,47,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில், தாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்தியாதான் காரணம் என்று; இந்தியாவுக்காகத்தான் போரை நடத்தினோம் என்றும் மகிந்த ராஜபக்சே திமிரோடு சொன்னான்.

விடுதலைப்புலிகள் கட்டி எழுப்பிய மாவீரர் துயிலகங்கள், போரில் மடிந்த புலிகளின் கல்லறைகள் அனைத்தையும் இராஜபக்சே இடித்துத் தரை மட்டமாக்கினான். நெஞ்சை நடுங்கச் செய்யும் இந்தப் பேரழிவை, உலகத்துக்கு உணர்த்தவும், தாய்த் தமிழகத்தில் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தந்த தியாகிகளை நினைñட்டவும், தஞ்சைக்கு அருகில் விளார் சாலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் முன்னின்று மூன்று ஆண்டு காலம் எண்ணற்ற சிற்பிகள், சித்திரக் கலைஞர்கள், கட்டடக் கலைஞர்கள் அர்ப்பணிப்பு உழைப்பால், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த முற்றத்தை இடித்துத் தகர்க்க வேண்டும் என்று, அண்ணா தி.மு.க. அரசு திட்டமிட்டது. இதனைத் திறக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தொடுத்த வழக்கு தள் ளுபடி செய்யப்பட்டது.

இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்கு, நெடுஞ்சாலைத் துறையிடம், 2011 ஆகÞட் மாதம் முற்றத்தின் சார்பில் விண்ணப்பம் தரப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. முற்றத்தின் வாயிலுக்கு உள்ளே, இரண்டு அழகான கருங்கல் நீரூற்றுகள், பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டன.

2012 ஆம் ஆண்டு, அனுமதியைத் தொடர்ந்து நீட்டிக்கக் கோரியபோது, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி வழக்கமாக வந்து விடும் என்று அரசுத் தரப்பில் பதில் சொல்லப்பட்டது.

ஆனால், 2013 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நிகழ்ச்சிகள், நவம்பர் 10 ஆம் நாள் முடிவுற்றபிறகு, மூன்றாம் நாளில், 13 ஆம் தேதி அதிகாலை 4.30மணிக்கு, மூன்று பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு, அந்தப் பூங்காவுக்குள் ஆடு மாடுகள் வர விடாமல் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடித்தனர். கருங்கள் நீரூற்றுகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற அறிவிப்புக் கற்பலகையையும் உடைத்து நொறுக்கினர். பூங்காவில் இருந்த செடிகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் முழுமைக்கும், இரவில் பிரகாசமான வெளிச்சத்தைத் தந்த விளக்குக் கம்பத்தையும் பிடுங்கி எறிந்தனர்.

அப்போது முற்றத்தின் குடிலில் படுத்து இருந்த பழ.நெடுமாறன், ‘எதற்காக இடிக்கின்றீர்கள்?’ என்று காவல்துறையைக் கேட்டபோது, ‘வருவாய்த் துறை அதிகாரிகள்தான் இடிக்கிறார்கள், நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம்’ என்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளைக் கேட்டபோது, அவர்கள் எதுவும் சொல்ல மறுத்தனர்.

தடுக்க முயன்ற தமிழ் உணர்வாளர்களையும், பழ.நெடுமாறன் அவர்களையும், கைது செய்தனர். அங்கே திரண்டு வந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

2011 ஆகÞட் மாதம் பூங்காவுக்குக் கொடுத்த அனுமதியை, அதே ஆண்டு டிசம்பர் மாதம் ரத்துச் செய்துவிட்டதாக, மோசடியாக இப்பொழுது ஒரு கோப்பை அரசு தயாரித்து உள்ளது. அப்படிச் செய்து இருந்தால், அதை பழ. நெடுமாறனுக்குத் தெரிவித்து இருக்க வேண்டும். முற்றத்தின் முகப்பை இடிப்பதற்கு முன்னால், தாக்கீது கொடுத்து இருக்க வேண்டும்.

ஆனால் சட்ட விரோதமாக, நீதிக்குப் புறம்பாக, முற்றத்தை இடித்து, உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஜெயலலிதா அரசு நெருப்பைக் கொட்டி உள்ளது.

இந்த அராஜகத்தைக் கேள்விப்பட்டவுடன், நான் தோழர்களோடு மதுரையில் இருந்து விரைந்தேன். போலீÞ தடைகளை உடைத்துக்கொண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குள் சென்று, ‘இது தமிழர்களின் சொத்து; இதை உடைக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி, பகல் 12 மணி முதல், இரவு 9 மணி வரை அங்கேயே இருந்தேன். பழ. நெடுமாறனையும், உணர்வாளர்களையும், நீதிமன்றக் காவலுக்கு அனுப்புகிறார்கள் என்று அறிந்தபிறகு, அங்கிருந்து புறப்பட்டேன்.

ராஜபக்சே அரசின் செயலுக்கும், ஜெயலலிதா அரசின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

தமிழக மக்களையும், உலகத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காக, முதல் நாள் மாலையில் சட்டசபையில் காமன்வெல்த் மாநாடு குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, மறுநாள் அதிகாலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் அக்கிரமத்தை, அ.தி.மு.க. அரசு செய்து உள்ளது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. முயலோடும் ஓடிக்கொண்டு, வேட்டை நாயோடும் சேர்ந்து துரத்துவது. Running with hare; hunting with the hound.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த மோசடிப் பித்தலாட்டத்தை, தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற, வஞ்சகமான கொடிய நோக்கம், அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.

எனவே, முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் காக்கின்ற உறுதியோடு, அ.தி.மு.க. அரசின் அராஜகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நவம்பர் 16 சனிக்கிழமை அன்று, காலை 11.00 மணி அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கு ஏற்க அழைக்கிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
14.11.2013 மறுமலர்ச்சி தி.மு.க.

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

1471278_10153456022100198_861710575_n.jp


விகடன் இப்படித் திட்டியுள்ளதே. இதுக்கு...???! 


1425632_1422144541336328_1529909764_n.jp


சீமான்..... சாதித்தவற்றுள் இந்த உணர்வூட்டல் தான் முக்கியமானது. அதனை புகலிடத்தில் உள்ள எம்மவர் கூட செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலை கழகம்- நேற்று நடத்திய போராட்டத்தின ஒரு பகுதி...முற்றத்தை இடித்தமைக்கு அரசை எதிர்த்து அம்பத்தூரில் சாலை மறியல் நடைபெற்றது..

 

 

dcji.jpg

 
 

முள்ளிவாய்க்காலோடு கருணாநிதி கருவறுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு ஜெயலலிதாவை வேரறுப்போம்.

-மாணவர்கள் சபதம்.

Joe Britto
(facebook)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.