Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன் பாடலுக்காக காத்திருக்கிறேன்

Featured Replies

woman_crying_1_7djdj_16613_310x235.jpg

 

இந்த கணங்களை கடந்து போவது 

எப்படி என்று தெரியாமல்....

கனத்த மௌனத்துடன் சலனமற்றுக்கிடக்கிறேன்  

வெறுமையை சுமந்தபடி ...

 

நீ  

உனது பிரியங்களால் 

தின்று கொண்டிருக்கிறாய்.

 

கண்ணீர் கூடப்  பிரியம் தான்.

 

கனவுகளை தின்னும்  பூதத்திடம் 

மோதுகிற வண்ணத்துப்பூச்சியே,

ஏக்கம் தெறிக்கும் உன் கண்கள் 

என் அறைகளில் அலைகின்றன..

 

திரண்டெழும் நீரை மறுப்பதாக 

நடித்து நீ விழுத்தும் வார்த்தைகளோடு  

மௌனித்துப்போவதை விட வேறெதையும் 

செய்ய முடியவில்லை என்னால்.

 

என்ன செய்ய முடியும் என்னால் 

கண்ணீரை துடைப்பதற்கு

விழி துடைக்கும்  சிறுகரத்தினைவிடவா..!!!

 

அநேக பொழுதுகளில்,

வணக்கத்தில் தொடங்கி 

கண்ணீரில் முடிந்துவிடுகிற வார்த்தைகளில் 

மூழ்கிக்கிடக்கிறேன் நீ போனபின்பும்,

ஆற்றுப்படுத்தும் வித்தை தேடி.

 

எப்படித்தான் ஒப்பனை செய்தாலும் 

உனக்கான 

வார்த்தைகளை செய்வதில் தோற்றுப்போகிறேன்.

 

தோழியே...

அவாந்திரவெளிகள் கடந்தும்   கூடடையும் பறவை.

நீ பறவையாகு...

நாளைய விடியலில் 

உன் பாடலுக்காக காத்திருக்கிறேன். 

அன்புத் தோழனாக...

அன்று என் மௌனமும் தொலைந்திருக்கும்.

 

(என் அன்புத்தோழி ஒருவரின் கண்ணீர் என்னை சிதைத்த  கணத்தில் எழுதியது )

(அவாந்திரவெளிகள்=அவாந்தரவெளி உள்ளூர் வழக்கு சொல்)

Edited by நெற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தோழியே...

அவாந்திரவெளிகள் கடந்தும்   கூடடையும் பறவை.

நீ பறவையாகு...

நாளைய விடியலில் 

உன் பாடலுக்காக காத்திருக்கிறேன். 

அன்புத் தோழனாக...

அன்று என் மௌனமும் தொலைந்திருக்கும்.

 

(என் அன்புத்தோழி ஒருவரின் கண்ணீர் என்னை சிதைத்த  கணத்தில் எழுதியது )

 

 

இழப்பின் துயரிலும் இறுதி வரை தோழனாக செல்ல எல்லோராலும் முடிவதில்லை. உங்கள் பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறேன் நெற்கொழுதாசன். கண்ணீர் கவிதை நெடுகிலும் ஈரமாயிருக்கிறது. காயாத ஈரம் நினைவுகள் மட்டுமே. எனினும் நிகழ்காலத்தை புன்னகையால் வரவேற்கப் பழகிவிடில் கண்ணீரும் ஒரு காவியம் தான். வாழ்த்துக்கள்.

 

கனவுகளை தின்னும்  பூதத்திடம் 

மோதுகிற வண்ணத்துப்பூச்சியே,

ஏக்கம் தெறிக்கும் உன் கண்கள் 

என் அறைகளில் அலைகின்றன..  /// வெறுமைக்கு அதன் எதிரொலி அருமை .

 

அவாந்திரவெளிகள் கடந்தும்   கூடடையும் பறவை.//// ஆனால் இந்த இடம் எனக்குப் புரிதலில் சில குழப்பங்களை ஏற்படுத்துகின்றது விளக்கம் தந்தால் நல்லது கொழுவா கவிதையைக் கொழுவுவதில் நல்ல ஆழ்ந்த சஞ்சாரங்கள் உங்களிடம் காணப்படுகின்றன . வாழ்த்துக்கள் தொடருங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

தோழியே...

அவாந்திரவெளிகள் கடந்தும்   கூடடையும் பறவை.

நீ பறவையாகு...

நாளைய விடியலில் 

உன் பாடலுக்காக காத்திருக்கிறேன். 

அன்புத் தோழனாக...

அன்று என் மௌனமும் தொலைந்திருக்கும்.

 

 

மனிதமும், தெய்வமும் சங்கமமாகும் சந்தியில் நிற்கின்ற ஒரு கவிஞனின் வரிகள்!

 

தொடர்ந்து கவியுங்கள், நேற்கொழுதாசன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

அவாந்திர வெளிகள் என்பது என்ன??? எனக்குப் புரியவில்லை.

  • தொடங்கியவர்

அவாந்திர வெளிகள் என்பது என்ன??? எனக்குப் புரியவில்லை.

 

மிக்க நன்றி சாந்தி அக்கா ,கோமகன் ,புங்கை அண்ணை , மற்றும் அம்மா. 

உங்களின் வாழ்த்துக்கள் என்னை மட்டுமல்ல, என் அன்புத் தோழிக்கும் ஒரு உற்சாகத்தினை கொடுக்கும். அதற்காக மீண்டும் ஒருமுறை என் அன்பு நன்றிகள்.

 

என்னை மன்னிக்க வேண்டும் ஒரு சிறிய எழுத்துமாற்றமே அதற்கு காரணம்.  அவாந்திரவெளி அல்ல அவாந்தர வெளி இதுவே சரியான சொல். ஆனால் பேச்சுவழக்கில் அவாந்திரவெளி என்று சொல்லுவார்கள். 

 

அவாந்தரவெளி //////வெட்ட வெளி,பாலை நிலம்,

அவாந்தரதிசை ////நான்கு திசைகளுக்கும் உற்பட்ட திசைகள் (வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் இருக்கும் வாட கிழக்கு)  

மதுரைத் தமிழ் பேரகராதி (பக்கம் கருஎ)

Edited by நெற்கொழு தாசன்

மிக்க நன்றி சாந்தி அக்கா ,கோமகன் ,புங்கை அண்ணை , மற்றும் அம்மா. 

உங்களின் வாழ்த்துக்கள் என்னை மட்டுமல்ல, என் அன்புத் தோழிக்கும் ஒரு உற்சாகத்தினை கொடுக்கும். அதற்காக மீண்டும் ஒருமுறை என் அன்பு நன்றிகள்.

 

என்னை மன்னிக்க வேண்டும் ஒரு சிறிய எழுத்துமாற்றமே அதற்கு காரணம்.  அவாந்திரவெளி அல்ல அவாந்தர வெளி இதுவே சரியான சொல். ஆனால் பேச்சுவழக்கில் அவாந்திரவெளி என்று சொல்லுவார்கள். 

 

அவாந்தரவெளி //////வெட்ட வெளி,பாலை நிலம்,

அவாந்தரதிசை ////நான்கு திசைகளுக்கும் உற்பட்ட திசைகள் (வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் இருக்கும் வாடா கிழக்கு)  

மதுரைத் தமிழ் பேரகராதி (பக்கம் கருஎ)

 

விளக்கத்துக்கு நன்றி . அவாந்தரவெளி என்பதற்கான பொருளை இன்றுதான் கேள்விப்படுகின்றேன் மீண்டும் நன்றி .

  கடந்துபோன காலங்களும்.. அவை தந்த நினைவுகளும், நிகழ்கால சம்பவங்களும்...  எதிர்காலம் குறித்தான எதிர்மறைக் கேள்விகளை எம்முள் எழுப்பிவிடுகின்றன. ஆனால் அதற்கான பதில்கள் பெரும்பாலும்  எம்மிடத்தில் இருப்பதில்லை. ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் தாண்டிப் பயணிக்க வேண்டிய வாழ்க்கையைத்தான் எல்லாரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் நண்பா. அதுவே நிர்ப்பந்தமுமாய் ஆகிவிடுகிறது!

 

எப்பொழுதும் உங்கள் கவிகளுக்குள் மெலிதாக  இழைந்தோடும்  மனவுணர்வுகளைப்போல்... இக்கவிதைக்கும் ஒரு உயிரோட்டம் இருக்கிறது. வரிகளில் உள்ள ஏக்கமும் வலிகளும் புரிகிறது.

நட்புக்குள் உள்ள ஆதரவும் அன்பும் அழகாய் வெளிப்படுகிறது!

 

நன்றி நெற்கொழு! :)

 

 

  • தொடங்கியவர்

  கடந்துபோன காலங்களும்.. அவை தந்த நினைவுகளும், நிகழ்கால சம்பவங்களும்...  எதிர்காலம் குறித்தான எதிர்மறைக் கேள்விகளை எம்முள் எழுப்பிவிடுகின்றன. ஆனால் அதற்கான பதில்கள் பெரும்பாலும்  எம்மிடத்தில் இருப்பதில்லை. ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் தாண்டிப் பயணிக்க வேண்டிய வாழ்க்கையைத்தான் எல்லாரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் நண்பா. அதுவே நிர்ப்பந்தமுமாய் ஆகிவிடுகிறது!

 

 

நன்றி நெற்கொழு! :)

 

 இந்த வாழ்க்கை மீதான பிடிமானங்கள் இழந்து போனமைக்காண காரணங்களை எடுத்துச்செல்லும் வார்த்தைகள் இவை கவிதை.

 

இந்த நிர்ப்பந்த வாழ்வை எதற்காக இன்னும் தூக்கி திரிகிறேன் என்ற கேள்வி என்னை எப்போதும் குடைந்துகொண்டே இருக்கிறது. 

 

வரிகளில் உள்ள ஏக்கமும் வலிகளும் புரிகிறது.

நட்புக்குள் உள்ள ஆதரவும் அன்பும் அழகாய் வெளிப்படுகிறது!

நன்றி கவிதை... என்னால் இதை தவிர வேறு எதையும் செய்யமுடியவில்லையே என்ற ஏக்கம் என்னை தின்கிறது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.