Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாடியை வழிக்கமறுத்த சீக்கியர்: 50 ஆயிரம் டொலர்களை வழங்கிய நிறுவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

c26c9af5-7f30-469c-b369-54407425a8a3_S_s

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சா வழியை சேர்ந்த சீக்கியரான குர்ப்ரீத் கெர்ஹா என்பவர் நியூஜெர்சி நகரில் உள்ள கார் டீலரிடம் வேலை கேட்டு விண்ணப்பித்தார்.

நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற அவரை வேலையில் சேர்த்துக் கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. ஆனால், தாடியை எல்லாம் நீக்கிவிட்டு ‘டிரிம்மாக’ வேலைக்கு வர வேண்டும் என அந்நிறுவனத்தின் மேலாளர் உத்தரவிட்டார்.

மத சம்பிரதாயங்களை மீறிய வகையில் தாடியை எடுக்க முடியாது என குர்ப்ரீத் கெர்ஹா மறுத்துவிட்டார். அப்படியென்றால், உங்களுக்கு இங்கே வேலை தர முடியாது என்று மேலாளர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனையடுத்து, அமெரிக்காவில் வாழும் சீக்கியர் அமைப்புகள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட நபரின் சார்பில் 2009ம் ஆண்டு நியூஜெர்சி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சமநீதி, சமஉரிமை கோட்பாடுகளை மீறிய வகையில் கார் டீலர் நிறுவனம் தன்னை வஞ்சித்து விட்டதாகவும், தனக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் குர்ப்ரீத் கெர்ஹா வாதாடினார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கக்கூடிய சூழ்நிலை நிலவும் இவ்வேளையில் அவருடன் சமரசம் செய்துக்கொள்ள பிரதிவாதி முன்வைத்துள்ளார்.

பாதிக்கப்பட்டவருக்கு 50 ஆயிரம் டொலர்கள் இழப்பீடு தருவதாகவும், வழக்கை மீளப்பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குர்ப்ரீத் கெர்ஹா, ‘எனது தனிப்பட்ட நலனுக்காக நான் கோர்ட்டை அணுகவில்லை. எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய அனைத்து சீக்கியரின் நலனுக்காகவும் நான் வாதாடி வெற்றி பெற்றுள்ளேன்’ என்று கூறினார்.

 

http://www.canadamirror.com/canada/18331.html

  • கருத்துக்கள உறவுகள்

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குர்ப்ரீத் கெர்ஹா, ‘எனது தனிப்பட்ட நலனுக்காக நான் கோர்ட்டை அணுகவில்லை. எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய அனைத்து சீக்கியரின் நலனுக்காகவும் நான் வாதாடி வெற்றி பெற்றுள்ளேன்’ என்று கூறினார்.

 

இதனைப் பார்த்து மற்றைய நிறுவனங்கள்... சீக்கியரை நேர்முகத் தேர்வுக்கு கூப்பிட மாட்டார்கள்.

அப்படி கூப்பிட்டாலும், நேர்முகத் தேர்வில்... தெரிவு செய்ய மாட்டார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

இதனைப் பார்த்து மற்றைய நிறுவனங்கள்... சீக்கியரை நேர்முகத் தேர்வுக்கு கூப்பிட மாட்டார்கள்.

அப்படி கூப்பிட்டாலும், நேர்முகத் தேர்வில்... தெரிவு செய்ய மாட்டார்கள். :D

 

உண்மைதான்!
 
காசை வாங்கிப் போட்டு, போற போகில இந்த கதை வேற! நாதாரி!
 
இங்க இங்கிலாந்தில் வேலைக்கு விண்ணப்பம் செய்த ஆபிரிக்க பெயர் கொண்ட ஒருவர் நேர்முகத்துகே அழைக்கப் படவில்லை.
 
அதே சுஜ விபரத்தில் ஆங்கில பெயர் மாத்தி அனுப்ப அவர்கள் கூப்பிட விவகாரத்தினைக் மீடியாவுக்கு கொடுத்து விட்டு, நான் வழக்கு போடப் போவதில்லை. போட்டால் எனது நிறத்தவருக்கு வேலையே கிடைக்காது.
 
எனக்கு வேலை வேண்டும். என்னை நிரூபிப்பேன். அதன் மூலம் எம்மவர்களுக்கு வேலை கொடுக்க தயக்கம் வராமல் செய்வேன் என்றார்.
 
அவருடன் ஒப்பிடும் போது, இந்த சீக்கியர் ஒரு சுயநலவாதி.
  • கருத்துக்கள உறவுகள்

வேலை

சுயநலம்  என்பதற்கு அப்பால்

அவர்களது இந்த  விடாப்பிடியான மதப்பற்று பாராட்டத்தக்கது

தமிழரிடம் இல்லாத ஒன்று இது................. :(

  • கருத்துக்கள உறவுகள்

மதப்பற்று சாப்பாடு போடுமா விசுகர்?

  • கருத்துக்கள உறவுகள்

மதப்பற்று சாப்பாடு போடுமா விசுகர்?

nithyananda-guru.jpg

 

 

 

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்குத் தான் சோறு! நடிகைகள்!

மற்றவர்களுக்கு பட்டை!!!

  • கருத்துக்கள உறவுகள்

வேலை

சுயநலம்  என்பதற்கு அப்பால்

அவர்களது இந்த  விடாப்பிடியான மதப்பற்று பாராட்டத்தக்கது

தமிழரிடம் இல்லாத ஒன்று இது................. :(

மதப்பற்று தாடியிலா இருக்கிறது, விசுகர்?

 

இங்கே தான் பிரச்சனைகளே ஆரம்பிக்கின்றன!

 

பிராமணர்களின் மதம் பூணூலிலும், புத்தனின் மதம் காவியுடையிலும், முஸ்லிம்களின் மதம் வெறும் புர்க்காவிலும், சீக்கியர்களின் மதம் தாடியிலும்,கிறிஸ்தவர்களின் மதம் சிலுவையிலும் தொங்குவதால் தான், உலகத்தில் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன!

 

ஆறுமுகநாவலர் சொன்னது மாதிரி மூன்று குறிகளிட்டு, நாங்கள் ஏன் வேலைக்குச் செல்வதில்லை?

 

ஏனெனில் மற்றைய சமூகத்துடன் ஒத்திசைந்து வாழ வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது!

 

வள்ளுவனின் வார்த்தையில்,

 

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்,

பழித்தது ஒழித்து விடின்!

  • கருத்துக்கள உறவுகள்

மதப்பற்று சாப்பாடு போடுமா விசுகர்?

 

சாப்பாடு மட்டுமா போடுது...........??
கதவை  திறந்து உள்ளே போங்க .......... உலக சந்தை க்கு  வாராததே வந்து இருக்கும்.

வேலை

சுயநலம்  என்பதற்கு அப்பால்

அவர்களது இந்த  விடாப்பிடியான மதப்பற்று பாராட்டத்தக்கது

தமிழரிடம் இல்லாத ஒன்று இது................. :(

 

இவர்களிடமும் ஜூதரிடமும் எனக்கு பிடித்த ஒரு விடயம்.
பெண்கள் மீது எந்த சுமைகளையும் சுமத்துவதில்லை. இவர்களை வைத்துதான் இனத்தை தெரிந்துகொள்ள முடியும்.
 
மற்றயவர்களுக்கு பெண்கள் எல்லாம் சுமக்க வேண்டும் ........... பெயர் மட்டும் ஆண்களுக்கு வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு மனிதரும் அல்லது ஜீவனும் தான் விரும்பி ஒரு மதம் சார்ந்த குடும்பத்துள் அல்லது சமூகத்துக்குள் பிறப்பதில்லை.பிறந்ததும் அந்த ஜீவன் பெற்றோராலும், மூதாதையினராலும், ஆசிரியர்களாலும் நல்ல நல்ல விசயங்கலையெ கற்றுக் கொடுக்கப் பட்டு வளர்கின்றான். அப்போது மடாலயங்களே கல்விக் கூடங்கலாகவும் இருந்தன. அந்த முறைகளும்,அறிவும் அவனுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருமெனில் அவன் ஏன் அவற்ரின்னின்று மாறவேண்டும். எல்லா இனங்களிலும் பெரும்பான்மையான  மக்கள் அப்படித்தான் வாழ்கின்றனர்.

தூரதிஸ்ட வசமாக சில போலிகளும் இதற்குள் உருவாகி விடுகின்றன. அந்தப் போலிகள் தான் பிழைப்புக்காக பல தப்புகளைச் செய்துவிட்டு மதச் சின்னங்கலுக்குள் நின்று கூப்பாடு போடுகின்றன. அந்தக்  கூப்பாடுகள் தான் வெளியெ பூதாகரமாய்த் தோற்றமளிக்கின்றன.

அதைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.