Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இருட்டு வேளையில் திருட்டுத்தனமாக செய்த செயல்; அந்த பழி முதல்வர் மீதே விழுந்துவிடும் : பழ.நெடுமாறன் பேட்டி

Featured Replies

தஞ்சை விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பூங்கா மற்றும் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதை தடுத்த பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்ப ட்டனர்.     பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். 

 

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம்,   ‘’முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கக் கூடாது என்று பல்வேறு வழிகளில் முயன்று தோற்றுப்போய்,  ஏதாவது செய்ய வேண்டும் என்று,  இருட்டு வேளையில் திருட்டுத்தனமாக செய்த செயல்.  முதல்வருக்கு தெரியாமல் இது நடந்தி ருந் தால் இந்த இருட்டு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்  அந்த பழி முதல்வர் மீதே விழுந்துவிடும்.    இல்லை யென்றால் நீதிமன்றம் மூலமாக அந்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, முன்பை விட அதிக சிறப்பம்சத்தோடு முள்ளியாய்க்கால் முற்றத் தின் இடிக்கப்பட்ட பகுதிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

 

நன்றி நக்கீரன் .

http://www.lankasri.com/ta/link-33y6C232TS.html

 

Edited by அஞ்சரன்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஜெயாவை பேசியவன் எல்லாம் லைனுக்கு வா ஓவர் . :D :D

 

இது வேறையா நடக்கட்டும் :(

  • தொடங்கியவர்

சத்தியமா ஈழத்தாய் இல்லையாம் கேட்டுக்குங்கோ .

 

ஜெயாவை பேசியவன் எல்லாம் லைனுக்கு வா ஓவர் . biggrin.pngbiggrin.png

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அரசியலில் சகஜம். அம்மா ஆட்சியில் உள்ளவரை அடங்கிற இடத்தில அடங்கி ஆடிற இடத்தில ஆடித்தான் காரியம் சாதிக்கனுன்னா.. அதையே தான் செய்தாகனும்..! அதில தப்பில்லத் தானே..! இல்ல திமிரோட தான் நிற்பன் என்று அடம்பிடிச்சா உள்ள இருந்து களிதான் சாப்பிடனும். வெளில கூச்சல் போட்டவன் காயா பிரியாணி சாப்பிட்டிட்டுக்கிட்டு இருப்பான்.. அதுவும் நெடுமாறன் ஐயாவுக்குத் தெரியும்.


அம்மாவும் கைவைச்சுத் தான் பார்த்தா. விளைவு கொஞ்சம் விவகாரமா இருந்திச்சு. அடக்கி வாசிக்கிறா. அதில ஐயா தூண்டில் போட்டு காரியம் சாதிக்க நினைக்கிறார். இதில நக்கல் நளினத்திற்கு இடமில்லை. பாடிக் கறக்கிற மாட்டில பாடிக் கறக்கனும். ஆடிக் கறக்கிற மாட்டில ஆடிக்கறக்கனுன்னு பழமொழியே இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் மனம் நோகக்கூடாது என்பதற்க்காக இலங்கை கொடிபிடிச்சனான் என்ற நம்மடை பம்மந்தரை விட இது ஒண்றும் அவ்வளவு கேவலமில்லை அஞ்சரன் கூல் டவுன். 

  • தொடங்கியவர்

நெடுமாறன் அய்யா அவர்கள் அடுத்து முற்றத்தின் சுற்றுச்சுவரை இடிச்ச புல்டோசர் டிரைவரை கண்டிச்சு போராட்டம் நடத்த உள்ளார் என்பதை .அறிய தருகிறோம் .

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் பொய் சொல்றார் என்று எதை வச்சு கண்டுபிடிச்சீங்க அஞ்ச்? :D

  • தொடங்கியவர்

நெடுமாறன் பொய் சொல்றார் என்று எதை வச்சு கண்டுபிடிச்சீங்க அஞ்ச்? :D

 

ஐயோ இசை வேணாம் அழுதுடுவன் இது செய்தி நானு கண்டுபிடிக்க வில்லையாக்கும் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயாவை  கை  காட்டி பேசும் அளவுக்கு நாம்................... :(  :(  :(  :(

அஞ்சரன்,  கள விதிகளின்படி செய்தியின் மூலம் குறிப்பிடப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்

நெடுமாறன் ஐயாவை  கை  காட்டி பேசும் அளவுக்கு நாம்................... :(  :(  :(  :(

 

வைகோவிடம் இருக்கும் துணிவு கூட ஐயாவிடம் இருக்கவில்லை வெளியில் வந்து விடும் அறிக்கை சொல்லுது அப்படி

அம்மாவை எதிர்க்க என்ன பயம் சுவரை இடிக்கும்போது ஒரு முதலவருக்கு தெரியாது என்று சொல்வது அடி முட்டாள்தனம் .

 

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவிடம் இருக்கும் துணிவு கூட ஐயாவிடம் இருக்கவில்லை வெளியில் வந்து விடும் அறிக்கை சொல்லுது அப்படி

அம்மாவை எதிர்க்க என்ன பயம் சுவரை இடிக்கும்போது ஒரு முதலவருக்கு தெரியாது என்று சொல்வது அடி முட்டாள்தனம் .

 

 

 

நெடுமாறன்  =  அடிமுட்டாள் :(  :(  :(

நன்றி  கெட்டவன்  தமிழன் :(  :(  :(

  • தொடங்கியவர்

நெடுமாறன்  =  அடிமுட்டாள் :(  :(  :(

நன்றி  கெட்டவன்  தமிழன் :(  :(  :(

 

நிங்களா எடுக்கும் முடிவு இது .

 

தேசத்துக்கு உழைத்தவன் எல்லாம் ஒருநாளில் ஒரு மணித்தியாலத்தில் துரோகி ஆக்கும் எமக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அண்ணே .

  • கருத்துக்கள உறவுகள்

நிங்களா எடுக்கும் முடிவு இது .

 

தேசத்துக்கு உழைத்தவன் எல்லாம் ஒருநாளில் ஒரு மணித்தியாலத்தில் துரோகி ஆக்கும் எமக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அண்ணே .

 

 

உங்கள் ஒவ்வொரு எழுத்தின் மூலமும்

உங்களை  நீங்களே

மிகவும் தாழ்த்திக்கொள்கின்றீர்கள்............. :(  :(  :(

நன்றி  வணக்கம்

  • தொடங்கியவர்

உங்கள் ஒவ்வொரு எழுத்தின் மூலமும்

உங்களை  நீங்களே

மிகவும் தாழ்த்திக்கொள்கின்றீர்கள்............. :(  :(  :(

நன்றி  வணக்கம்

 

இதில் என்ன இருக்கு அண்ணே தரம் தாழ்த்த கருத்து அவ்வளவுதான் இதில் முரண்பாடு நிச்சயம் இருக்கும் பொதுவெளியில் பலர் பலதரப்பட்ட கருத்துடன் இருப்பினம் எனக்கு பிடித்தது எனக்கு சரி என பட்டத்து மற்றவர்களுக்கு பிடிக்காது அதுக்காக எனது கருத்தை நான் முடக்க முடியாது .

 

எல்லா கருத்துக்களும் எதிர்கருத்தை கண்டிப்பா வைத்தே இருக்கும் அண்ணே இதில் தராதரம் என்பது எல்லாம் எங்களுக்கு நாங்கள் போட்டு வைத்து இருக்கும் ஒரு வட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவிடம் இருக்கும் துணிவு கூட ஐயாவிடம் இருக்கவில்லை வெளியில் வந்து விடும் அறிக்கை சொல்லுது அப்படி

அம்மாவை எதிர்க்க என்ன பயம் சுவரை இடிக்கும்போது ஒரு முதலவருக்கு தெரியாது என்று சொல்வது அடி முட்டாள்தனம் .

இங்கேதான் உங்கள் கற்பனை விஞ்சி நிற்கிறது.. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து விடயங்களும் ஒரு முதல்வருக்குத் தெரிந்திருக்கும் என்கிற அவசியம் இல்லை.. ஒரு அதிகாரி நினைத்திருந்தாலே இவற்றை சாதிக்க முடியும்.

முதல் கட்டமாக குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்தல்; அடுத்த கட்டமாக இடித்தல்.. இப்பி நடந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டு..

அதே நேரத்தில் ஜெயாவின் ஆசீர்வாதத்துடன் நடந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டு. சிக்கலான இந்த விவகாரத்தில் ஜே இன்னும் எதையும் சொல்லவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

முன்பு ஒருமுறை திருச்சிக்கு ஒரு வட இந்தியர் மாவட்ட ஆட்சியராக வந்தார். கொஞ்சநாள் நகரத்தை ஆராய்ந்துவிட்டு ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினார் (மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் வளாகத்தில்.)

ஒரு பிரபலமான புடவை கடையின் இரண்டாம் மாடி விதிகளை மீறி நகராட்சி எல்லைக்குள் துருத்திக் கொண்டிருந்தது. அதையும் இடிக்க நடவடிக்கை எடுத்தார்.

முதலில் பெட்டியுடன் ஆட்சியரை சந்திக்க முயன்ற முதலாளி அது சரிப்படாததால் பின்னர் அதே பெட்டியுடன் உள்ளூர் அரசியல்வாதிகளைச் சந்தித்தார்.

அப்போது கலைஞரின் ஆட்சி.. இடிப்பு முயற்சிகள் நிறுத்தப்பட்டன. ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இப்போது சொல்லுங்கள். இடிக்கச் சொன்னவர் கலைஞரா அல்லது நிறுத்தச் சொன்னவர் கலைஞரா? :D

எனது அனுமானம் இது எதுவுமே அப்போது கலைஞரின் காதுகளை எட்டியிராது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 முயன்ற முதலாளி அது சரிப்படாததால் பின்னர் அதே பெட்டியுடன் உள்ளூர் அரசியல்வாதிகளைச் சந்தித்தார்.

அப்போது கலைஞரின் ஆட்சி.. இடிப்பு முயற்சிகள் நிறுத்தப்பட்டன. ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இப்போது சொல்லுங்கள். இடிக்கச் சொன்னவர் கலைஞரா அல்லது நிறுத்தச் சொன்னவர் கலைஞரா? :D

எனது அனுமானம் இது எதுவுமே அப்போது கலைஞரின் காதுகளை எட்டியிராது. :rolleyes:

 

இசை,

 

சின்னப் பிள்ளைதனமா இருக்குது உங்க கதை!.

 

கலைஞர் நேர காசு வாங்கிய பின் நிறுத்தப் பட்டிருந்தால் அது சந்தி நாறி இருக்கும்.

 

லோக்கல் ஆக்கள் மூலம் பெட்டி கலைஞரை போய் சேர்ந்த படியால் இடிபாடு நின்றது.

 

3 ஜி விடயத்தில் பெரிய அமௌண்டு என்று நேரா குடும்பமா கையை நீட்டி, மகள் உள்ளார போய் இருந்தது தெரியும் தானே!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

இது எண்ணப் சின்னப் பிள்ளைதனமா இருக்குது உங்க கதை!.

கலைஞர் நேர காசு வாங்கிய பின் நிறுத்தப் பட்டிருந்தால் அது சந்தி நாறி இருக்கும்.

லோக்கல் ஆக்கள் மூலம் பெட்டி கலைஞரை போய் சேர்ந்த படியால் இடிபாடு நின்றது.

3 ஜி விடயத்தில் பெரிய அமௌண்டு என்று நேரா குடும்பமா கையை நீட்டி, மகள் உள்ளார போய் இருந்தது தெரியும் தானே!

நாதம்ஸ்.. அது என்னவாகவும் இருக்கலாம்.. :D நமக்கு தெரிய வருவது ஒரு சிறிய பாகமே என்பதையே சொல்லவந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் மனம் நோகக்கூடாது என்பதற்க்காக இலங்கை கொடிபிடிச்சனான் என்ற நம்மடை பம்மந்தரை விட இது ஒண்றும் அவ்வளவு கேவலமில்லை அஞ்சரன் கூல் டவுன். 

 

பெருமாள் சொன்னது கேட்டிச்சா....

ப்ளீஸ்... அஞ்சரன், கூல் டவுன். :)

  • தொடங்கியவர்

இங்கேதான் உங்கள் கற்பனை விஞ்சி நிற்கிறது.. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து விடயங்களும் ஒரு முதல்வருக்குத் தெரிந்திருக்கும் என்கிற அவசியம் இல்லை.. ஒரு அதிகாரி நினைத்திருந்தாலே இவற்றை சாதிக்க முடியும்.

முதல் கட்டமாக குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்தல்; அடுத்த கட்டமாக இடித்தல்.. இப்பி நடந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டு..

அதே நேரத்தில் ஜெயாவின் ஆசீர்வாதத்துடன் நடந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டு. சிக்கலான இந்த விவகாரத்தில் ஜே இன்னும் எதையும் சொல்லவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

முன்பு ஒருமுறை திருச்சிக்கு ஒரு வட இந்தியர் மாவட்ட ஆட்சியராக வந்தார். கொஞ்சநாள் நகரத்தை ஆராய்ந்துவிட்டு ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினார் (மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் வளாகத்தில்.)

ஒரு பிரபலமான புடவை கடையின் இரண்டாம் மாடி விதிகளை மீறி நகராட்சி எல்லைக்குள் துருத்திக் கொண்டிருந்தது. அதையும் இடிக்க நடவடிக்கை எடுத்தார்.

முதலில் பெட்டியுடன் ஆட்சியரை சந்திக்க முயன்ற முதலாளி அது சரிப்படாததால் பின்னர் அதே பெட்டியுடன் உள்ளூர் அரசியல்வாதிகளைச் சந்தித்தார்.

அப்போது கலைஞரின் ஆட்சி.. இடிப்பு முயற்சிகள் நிறுத்தப்பட்டன. ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இப்போது சொல்லுங்கள். இடிக்கச் சொன்னவர் கலைஞரா அல்லது நிறுத்தச் சொன்னவர் கலைஞரா? :D

எனது அனுமானம் இது எதுவுமே அப்போது கலைஞரின் காதுகளை எட்டியிராது. :rolleyes:

 

உண்மையா இசை அப்படி நடக்குமா அப்ப எதுக்கு ஒரு அதிகாரம் உள்ள முதல்வர் .

 

ஒரு வேளை தலைவரின் தாய் திருப்பி அனுப்பபட்டது கருணாநிதிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கும் அல்லவா .

 

சும்மா டவுட்டுதான் கேட்டேன் .

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா இசை அப்படி நடக்குமா அப்ப எதுக்கு ஒரு அதிகாரம் உள்ள முதல்வர் .

ஒரு வேளை தலைவரின் தாய் திருப்பி அனுப்பபட்டது கருணாநிதிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கும் அல்லவா .

சும்மா டவுட்டுதான் கேட்டேன் .

எனது அனுமானம்.. கலைஞருக்குத் தெரியாமலே அதுவும் நடந்திருக்கலாம்.. மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து 'சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம்' என்று அறிக்கை வந்தால் கியூ பிரிவு நடவடிக்கை எடுககும். ஒவ்வொன்றுக்கும் முதல்வரிடம் போக மாட்டார்கள். அப்படிப் போனால் முதல்வருக்கு வேறு வேலையே செய்யமுடியாது.

ஆனால் நடப்பவைக்கு முதல்வரே பொறுப்பு..! தவறு நடந்தால் வருத்தம் தெரிவித்து விசாரணைக்கு உத்தரவிடுவது இன்றியமையாதது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.