Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவுகளும்,நாங்களும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

iranaaa.png

 

 

விரிந்த எனது தேசத்தின்,

பரந்து படர்ந்த வெளியெங்கும்,

அறைந்து நிற்கிறது வெறுமை!

 

நான்கு வருடங்கள் நகர்ந்து போனதை,

நம்பக்கூட முடியவில்லை!

 

உங்கள் நினைவுகள் சுமந்த,

உயிர்க்கூடுகள் மீது.

கோரை படர்ந்திருக்க,

எருக்கிலை சிந்தும் கள்ளிப்பால்,

உங்களுக்கு நிவேதனமாகின்றது!

அரவங கேட்டுச் சத்தமிடும்,

ஆட்காட்டிக்  குருவிகள்,

உங்களுக்காகக் கீதமிசைக்கின்றன !

 

எங்களுக்கெல்லாம் இப்போது,

இரண்டு விலாசங்கள்!

பிறந்த இடமொன்று,

மறையும் இடம் இன்னொன்று!

கிழக்கே உதித்து,

மேற்கில் மறைகின்ற,

சூரியன்களாக,

எங்களை நாங்களே,

உருவகித்துக் கொள்கிறோம்!

 

அரேபியப் பாலைவனங்களிலும்,

உருகும் பனிப் டலங்களிலும்,

எங்களால் வாழமுடிகின்றது!

 

நகருகின்ற ஒவ்வொரு வினாடியும்,

எங்கள் தேசம் தின்னப்படுகின்றது!

எங்கள் எச்சங்கள்,

கொஞ்சம், கொஞ்சமாக,

விழுங்கப்படுகின்றன!

 

குமர்ப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த,

தாய்களின் நிலையில் தான்,

எங்கள் வாழ்க்கை நகர்கின்றது!,

பருவகாலம் முடிந்ததும்,

பயிர் விளைக்க நினைக்கிறோம்!

 

நமது முடிவில்லாத பயணத்தின்,

நங்கூரமிட வேண்டிய நேரம்,

அண்மையில் வந்துவிட்டது!

 

இன்னும் தாமதித்தால்,

நாளை பிறக்கப் போகின்ற,

நம் பேரக்குழந்தைகளுக்கு ,

நல்ல கட்டுக்கதையொன்று,

கற்பனை செய்ய வேண்டும்!

 
  • கருத்துக்கள உறவுகள்

 

உங்கள் நினைவுகள் சுமந்த,

உயிர்க்கூடுகள் மீது.

கோரை படர்ந்திருக்க,

எருக்கிலை சிந்தும் கள்ளிப்பால்,

உங்களுக்கு நிவேதனமாகின்றது!

அரவங கேட்டுச் சத்தமிடும்,

ஆட்காட்டிக்  குருவிகள்,

உங்களுக்காகக் கீதமிசைக்கின்றன !

 

எங்களுக்கெல்லாம் இப்போது,

இரண்டு விலாசங்கள்!

பிறந்த இடமொன்று,

மறையும் இடம் இன்னொன்று!

கிழக்கே உதித்து,

மேற்கில் மறைகின்ற,

சூரியன்களாக,

எங்களை நாங்களே,

உருவகித்துக் கொள்கிறோம்!

 

அரேபியப் பாலைவனங்களிலும்,

உருகும் பனிப் டலங்களிலும்,

எங்களால் வாழமுடிகின்றது!

 

நகருகின்ற ஒவ்வொரு வினாடியும்,

எங்கள் தேசம் தின்னப்படுகின்றது!

எங்கள் எச்சங்கள்,

கொஞ்சம், கொஞ்சமாக,

விழுங்கப்படுகின்றன!

 

உலகில் ஈரூடகவாசிகளாய் வாழப்பழகிய ஈரூடகவாசிபோலவே எங்களது வாழ்வும். விரும்புகிறோமோ இல்லையோ இசைவாக்கம் அடைந்துவிட்டது இந்த வாழ்வு. எனினும் ஊர்காணும் கனவும் ஊர்வாழ உறங்கியோர் நினைவும் எங்களைத் தொடர்ந்து அலைத்துக் கொண்டிருக்கும் துயர்கள். இது ஆயிரம் வருடங்கள் போனாலும் அழியாது....!

கவிதையின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு விதியை எழுதியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் ஈரூடகவாசிகளாய் வாழப்பழகிய ஈரூடகவாசிபோலவே எங்களது வாழ்வும். விரும்புகிறோமோ இல்லையோ இசைவாக்கம் அடைந்துவிட்டது இந்த வாழ்வு. எனினும் ஊர்காணும் கனவும் ஊர்வாழ உறங்கியோர் நினைவும் எங்களைத் தொடர்ந்து அலைத்துக் கொண்டிருக்கும் துயர்கள். இது ஆயிரம் வருடங்கள் போனாலும் அழியாது....!

கவிதையின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு விதியை எழுதியுள்ளது.

 

வருகைக்கு நன்றிகள், சாந்தி!

 

மாவீரர்களின் நினைவுகளில் நீந்தும் காலமிது!

 

அதே வேளையில், அவர்களின் கனவுகளையும் நாம் மறந்து விடக்கூடாதே என்னும் ஆதங்கத்தின் விளைவே , இந்தக் கவிதை!

இன்றுதான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. எம் இனத்தின் நிலையையும் தேசத்தின் நிலையையும்

அழுத்தமாகச் சொல்கின்றன ஒவ்வொரு வரிகளும். மிக்க நன்றி புங்கை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்கு நன்றி புங்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. எம் இனத்தின் நிலையையும் தேசத்தின் நிலையையும்

அழுத்தமாகச் சொல்கின்றன ஒவ்வொரு வரிகளும். மிக்க நன்றி புங்கை!

வரவுக்கு நன்றிக்க, கவிதை!

 

'ராம ராஜ்ஜம்' ஒன்றைக் கட்டியெழுப்ப முயன்ற மகாத்மா காந்தி, உயிர் விடும்போது 'ராமா, ராமா' என்ற படியே போய்ச் சேர்ந்தார்! :o

 

அந்த 'ராம ராஜ்ஜம்', ராவண தேசத்தின் மீது நடத்திய,, நடத்தும் அலங்கோலங்கள் கொஞ்ச நஞ்சமில்லை!

 

அனுமானுக்கும் கோபம் வந்ததாம்! இலங்கையை எரித்தானாம்!

 

ஆனால் இராவணனுக்கும் கோபம் வந்தது! ஆனால், அதற்காக அவன் சீதையை எரிக்கவில்லை!  :o

 

ஆனால்,பின்னர் ராமனே சீதையை எரித்தான்! அவள் கற்புடன் தான் இருக்கிறாளா என்று உரசிப் பார்க்க!

 

நம்ம ராவணன், சீதையை உரசிப்பார்க்கக் கூட நினைக்கவில்லை!

 

அந்த நாள் முதல் இந்த நாள் வரை, இது தான் நமது பலவீனம்! :D

வரவுக்கு நன்றிக்க, கவிதை!

 

'ராம ராஜ்ஜம்' ஒன்றைக் கட்டியெழுப்ப முயன்ற மகாத்மா காந்தி, உயிர் விடும்போது 'ராமா, ராமா' என்ற படியே போய்ச் சேர்ந்தார்! :o

 

அந்த 'ராம ராஜ்ஜம்', ராவண தேசத்தின் மீது நடத்திய,, நடத்தும் அலங்கோலங்கள் கொஞ்ச நஞ்சமில்லை!

 

அனுமானுக்கும் கோபம் வந்ததாம்! இலங்கையை எரித்தானாம்!

 

ஆனால் இராவணனுக்கும் கோபம் வந்தது! ஆனால், அதற்காக அவன் சீதையை எரிக்கவில்லை!  :o

 

ஆனால்,பின்னர் ராமனே சீதையை எரித்தான்! அவள் கற்புடன் தான் இருக்கிறாளா என்று உரசிப் பார்க்க!

 

நம்ம ராவணன், சீதையை உரசிப்பார்க்கக் கூட நினைக்கவில்லை!

 

அந்த நாள் முதல் இந்த நாள் வரை, இது தான் நமது பலவீனம்! :D

உண்மையில் அன்று இராவணன் மன்னனை பற்றி வரலாற்றை மாற்றி எழுதினார்கள் என்று வரலாறு படித்தவர்கள் சொல்லும்போது நான் நம்பவில்லை ...........ஆனால் இன்று எம் வரலாற்றை நேரில் பார்க்கும் போது உண்மையில் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்கள் என்ற முடிவிற்கு மட்டுமே வர முடிகிறது ................இராவண காவியம் என்னும் ஒரு புத்தகத்தை ஒரு வரலாற்று ஆசிரியர் எழுதிக்கொண்டிருப்பதாக அறிந்தேன் ...........அது தேவையான ஒன்று இந்த கால கட்டத்தில் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அன்று இராவணன் மன்னனை பற்றி வரலாற்றை மாற்றி எழுதினார்கள் என்று வரலாறு படித்தவர்கள் சொல்லும்போது நான் நம்பவில்லை ...........ஆனால் இன்று எம் வரலாற்றை நேரில் பார்க்கும் போது உண்மையில் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்கள் என்ற முடிவிற்கு மட்டுமே வர முடிகிறது ................இராவண காவியம் என்னும் ஒரு புத்தகத்தை ஒரு வரலாற்று ஆசிரியர் எழுதிக்கொண்டிருப்பதாக அறிந்தேன் ...........அது தேவையான ஒன்று இந்த கால கட்டத்தில் .

நன்றிகள், தமிழ்ச்சூரியன்!

 

கம்பனே தனது வாயால் சொல்வதையும் கேழுங்கள்!

 

வாரணம் பொருத மார்புகள் அவனுடையவை!  (வாரணம் என்பது யானை)

 

வரையினை எடுத்த தோள்கள் அவனுடையவை! (வரை என்பது கைலாய மலை)

 

நாரத முனிவற்கேற்ப நயம்பட உரைத்த நாவு அவனுடையது ! (சாமகானம் என்பது நான்கு வேதங்களிலும் சிறந்த இசை வடிவம் கொண்டது! நாரத முனிவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சாமகானம் பாடிச் சிவனை மகிழச்செய்தவன்)

 

வீரமும் களத்தில் விட்டுச் சென்றான்!  (இராவணனது வீரத்துக்கு நிகரான வீரம் படைத்தவன் 'வாலி' ! அவனைக் நேரில் கொல்ல முடியாத இராமன், மறைந்திருந்தே அவனைக் கொல்கின்றான்! அது கூட, வாலி தனது தம்பியான சுக்கிரீவனுடன் மல்யுத்தம் செய்யும் போது! அந்த வீரத்தை, இராவணன் களத்தில் எறிந்து விட்டுச் செல்கின்றான் என்கிறார் கம்பன்)

 

அவனது பெருமையைச் சொல்ல, பின்வரும் ஒரு உதாரணமே போதுமானது!

 

திருநீற்றுப்பதிகத்தில், திருநீற்றின் மகிமையை உயர்த்திக்காட்ட வேண்டிய தேவை சம்பந்தருக்கு ஏற்படுகின்றது!

 

ஒன்றை உயர்வாகக் காட்டுவதற்கு, அதற்கு நிகரான ஒன்றையே உதாரணமாகக் காட்டுவது, கவிகளின் வழக்கம்!

 

அவர் தேடிப்பிடித்த ஒப்புவமையில்லாத உவமை 'இராவணன்"

 

இராவணன் மேலது நீறு என்று தான் கூறுகின்றார்!

 

ஒரு பிராமணன், உமையிடமே ஞானப் பாலுண்டவன், இந்திரனையோ அல்லது சந்திரனையோ உவமானம் காட்டாமல், ஒரு 'அரக்கனைத்' தேடி எடுக்கிறான் என்றால் அவனது 'மகிமை' எத்தகையாதாக இருந்திருக்க வேண்டும் என நினைத்துப்பாருங்கள்! 

கம்ப ராமாயண பாட பகுதியின் போது, இந்த ராமாயன கதையில் ஒரு உன்னதமான சிவ பக்தர் உள்ளார் அவர் யாரென்று தமிழாசிரியை கேட்டார், ராமன், லக்குவனன், அனுமன், பீமன் சுக்ரீவன் என நான் அடுக்கி கொண்டே போனேன், தலையில் ஒரு குட்டும் வைத்து விடையும் கூறினார். இராவணன் போன்றொரு சிவ பக்தன் எவனுமில்லை என்று.... :D

கம்ப ராமாயண பாட பகுதியின் போது, இந்த ராமாயன கதையில் ஒரு உன்னதமான சிவ பக்தர் உள்ளார் அவர் யாரென்று தமிழாசிரியை கேட்டார், ராமன், லக்குவனன், அனுமன், பீமன் சுக்ரீவன் என நான் அடுக்கி கொண்டே போனேன், தலையில் ஒரு குட்டும் வைத்து விடையும் கூறினார். இராவணன் போன்றொரு சிவ பக்தன் எவனுமில்லை என்று.... :D

ஆம் நண்பரே அப்பிடி வரலாறு சொல்கிறது நானும் அறிந்தேன் ..............அதன்பின்பும் இராவணனை கொடியவன் என்று வரலாற்றில் திரித்து எழுதப்பட்டதையே இந்த சான்றுகள் காட்டுகின்றது . :)

ஆம் நண்பரே அப்பிடி வரலாறு சொல்கிறது நானும் அறிந்தேன் ..............அதன்பின்பும் இராவணனை கொடியவன் என்று வரலாற்றில் திரித்து எழுதப்பட்டதையே இந்த சான்றுகள் காட்டுகின்றது . :)

கம்ப இராமாயணம் வட இந்திய புலவர் வால்மீகியின் இராம காதையை தழுவி எழுதப்பட்டது. மூலம் சமஸ்கிருதம் என்று நினைக்கிறேன், ராமனுக்கு நிகரானவன் என்பதால் இராவணனை அரக்கன் ஆக்கியிருக்கலாம். அன்றும் இன்றும் தமிழன் தானே ஆரியனின் எதிரி.

பி.கு இப்போது தான் ரியுசனுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறேன், நண்பன் என்டு திரும்ப சொன்னால் ரியுசன் மிஸ்ஸிடம் சொல்லிபுடுவேன். :D

புங்கை அண்ணா கவிதை ஆழமான கருத்துடன் அழகாகவும் உள்ளது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.