Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் ஆட்சிக்கு வந்தால் மாவீரர் தினத்தை அரசு நிகழ்ச்சியாக நடத்துவோம் - சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழீழ மாவீரர் தினத்தை  அரசு நிகழ்ச்சியாக நடத்துவோம் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
நவம்பர் 27 மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. பொது இடத்தில் நடத்த அனுமதி கிடைக்காததால் ஒரு மண்டபத்தில் அரங்க  கூட்டமாக தொடங்கியது.

அரங்கில் விடுதலைப்புலிகளின் பல படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறிப்பாக லெப்டினன் சங்கர் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. மேடையின் பின்பக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர்கள் துயிலகத்தில் விளக்கு ஏற்றும் காட்சி படமாக வைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மாவீரர் தினத்தை பொது இடத்தில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டள்ளது. திராவிட கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போது இப்படியான தடைகள் ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. அ.தி.மு.க வும் இதற்கு விதிவிலக்கல்ல. அதனால் தான் நாம் ஆட்சிக்கு வர வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தால் மாவீரர் தினத்தை அரசு நிகழ்ச்சியாக நடத்துவோம். அப்போது யாராலும் தடுக்க முடியாது.

ஈழத்தில் வீரமரணம் அடைந்து கிடந்த நம் தங்கைகளை பிணம் என்றும் பாராமல் புணர்ந்த கொடியவன் சிங்களன். அவர்களை விரட்டும் காலம் வரும். இன்றும் பாதுகாப்பு இன்றியே நம் உறவுகள் ஈழத்தில் இருக்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகள் அவர்களின் பாதுகாப்பை வாழ்க்கையை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இந்த நிலை மாற நம்மை தமிழன் ஆழ வேண்டும். இவ்வாறு கூறி தனது உரையை நிறைவுசெய்தார்.

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10226:2013-11-28-11-28-34&catid=1:latest-news&Itemid=18

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் அம்மாட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நாம் ஆட்சிக்கு வந்தால் மாவீரர் தினத்தை அரசு நிகழ்ச்சியாக நடத்துவோம் - சீமான்

 

வாசிக்க கேக்க நல்லாய்த்தான் இருக்கு........மத்திய அரசு இதுக்கேல்லாம் குண்டக்கமண்டக்க பண்ணாது??????

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணா ஆட்சிக்கு வரணும் என்றால் தமிழகத்தில் உள்ள எல்லாத் தொகுதியிலும் நாம் தமிழர் இளைஞர் அமைப்புக்களை உருவாக்கி அங்குள்ள கிராமிய மக்களில் இருந்து நகர மக்கள் வரை தேவையான சேவைகளை வழங்குவதோடு.. அவர்களின் பிரச்சனைகளை முன்னின்று எதிர்கொள்ளவும் வேண்டும். அத்தோடு ஈழத்தமிழர்களுக்கு அவர்கள் ஏன் ஆதரவளிக்கனும் என்றதையும் சதா சொல்லி வரணும். ஈழ மக்கள் பட்ட படுகின்ற கஸ்டங்களை காண்பிக்க வேண்டும்.

 

அப்படி மக்களை மக்களாகச் சென்று அணுகிச் செயற்பட்டால் அன்றி.. அவர்களின் கஸ்டத்தில் பங்கெடுத்து அதை நீக்க உழைத்தால் அன்றி.. இலவசத்துக்கு வாக்குப் போடக் கூடிய நிலையில் மக்களை வைச்சுக் கொண்டு.. தமிழ் மக்களின் பணத்தைச் சுருட்டி பணக்கார முதலைகளாக உலாவரும் பிரதான திராவிடக் கட்சிகளிடம் இருந்து மக்களை வெளிய இழுத்து வந்து வாக்குப் போட செய்வதற்கு மாவீரர்கள்.. ஈழப்போராட்ட ஆதரவு மட்டும் போதாது.

 

மேலும்.. திராவிடக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் தமிழ் மக்களை எவ்வாறு எல்லாம் வரலாற்று நெடுகிலும் ஏமாற்றி வந்துள்ளன.. தமிழ் மக்களை ஏழைகளாகவும் சாதிகளாகவும் பிரித்து பகுத்து வைத்திருந்து அடிமைகளாக்கி உள்ளன.. என்பதை மக்கள் உணரும் வகைக்கு எடுத்துச் சொல்லி அதில் இருந்து வெளியே வருதற்கான மார்க்கங்களையும் இனங்காட்டுவதோடு.. அவர்களை வழிநடத்தவும் வேண்டும்.

Edited by nedukkalapoovan

சில வேளைகளில் அத்தைக்கு மீசை முளைத்து சீமான் சித்தப்பா ஆகிவிட்டால் கூட, அப்போது அம்மாதான் பிரதமராக இருப்பார். பிறகென்ன? அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியால் மாவீரர் நாளை நடத்த முடியவில்லை என்று சொல்லி விட்டு இருக்க வேண்டியதுதான்.

ஹா ஹா ஹா ஹா முடில ஏன் ஏன் இப்டி இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 14774166744 அப்டி ஒரு இருக்கிறது அடிக்கடி மறக்குது பாருங்கோ .

சீமான் இது மட்டும் இல்லை...தாங்கள் பதவிக்கு வந்தால் ஈழத்தில் உள்ள எல்லோருக்கும் "தியாகிகள் ஓய்வூதியம்" கூட கொடுப்பார்...

அவரிடம் அதற்கான திட்டங்கள் கூட உள்ளது...

அவர் பிரதமராக வந்தால் தமிழ்நாட்டின் தலைநகரம் திருகோணமலை தான்...

சிறி லங்காவை ஆசியாவின் அதிசயம் என்று ராஜபக்சே கொமெடி பில்டப் கொடுப்பது ஏனோ எங்களை உறுத்துவதில்லை.

 

அதை சொல்லும்போது ராஜாபக்சே சிரித்துகொண்டு தானே சொல்லுகிறான்...

ராஜபக்சே சொல்லுவதை எல்லாம் நம்புறீங்களே....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நிச்சயமாக ஆசியாவின் அதிசியம் தான் அனால் அதனை கொண்டு நடத்துவதற்கு அவர்களுக்கு தெரியவில்லை நிச்சியமாக சிங்கப்பூர் மாதிரி பல கொள்கைகளை இன மொழி ரீதியாக இலங்கை தத்தெடுத்தால் ஆசியாவின் அதியசமாக மாற்றலாம்

சுண்டல்: இலங்கை மட்டும் அல்ல எந்த நாடும் singapore மாதிரி எல்லா மக்களுக்கும் சமமான உரிமை கொடுத்தால்..உலகில் பிரச்சனைகளுக்கு இடமில்லை....இந்தியா கூட உலகின் அதிசயமாகலாம்...

அதீத நம்பிக்கை வேலைக்காகாது.செய்கின்றவன் சொல்லமாட்டான் .

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைக்கு அதிமுக, திமுக வை அப்புறப்படுத்த வேண்டும்.இரண்டு கட்சிகளும் தமிழர்களுக்கு நன்மை செய்யவில்லை என்பதை நிரூபித்து இருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.