Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கடற்கரை மணல் மீதான கிறுக்கல்கள்...!!! (: குரல் வடிவம் இணைக்கப்பட்டுள்ளது :)

Featured Replies

எழுத்தாக்கம் - குரல்வடிவம் :  ஒருவன் ~ கவிதை

 

 

கரைமணலைத் தொட்டுத்தொட்டு விளையாட...
நுரையலைகள் விட்டுவிட்டு அலையாட...
திரைகடல் மெட்டுப்போட்டு இனிதான,
திரைப்பாடல் ஒன்றின் முதல்வரியை ஞாபகமூட்டும்!

மெதுவாய் வீசுகின்ற உப்புக்காற்றின் ஈரம்,  
பக்கம்வந்து பேசுகின்ற வார்த்தைகள்...
முன்பொருநாளின்  மாலைப்பொழுதில்
அன்போடு மணல் அளைந்த
இருபது விரல்கள் பற்றிய கதை பேசும்!

உப்புக்காற்றில் உலர்ந்துபோன
இருஜோடி இதழ்கள்
காதலின் பருவமழையில்
முழுதாக நனைந்துபோக...
செக்கச் சிவந்த வானம்கூட
அவளின் கன்னம் பார்க்க வெட்கப்பட்டு
மேகத்தை அள்ளிப் போர்த்துக்கொள்ளும்!

மெளனங்கள் பேசிக்கொள்ளும்
ரம்மியமான  மாலைப்பொழுதில்
விரிந்த கடலுக்கும் வானத்துக்கும் இடையே
எதிர்காலக் கனவுகளை
திரையிட்டுப் பார்த்துக்கொள்ளும்.... இரு மனசுகள்!

அவன் தோளில் சாய்ந்தபடிதான்...
அவளுக்குப் பேசப்பிடிக்கும்!
பிறக்கப்போகும் முதற் குழந்தையிலிருந்து,
பேரப்பிள்ளைகள் வரைக்கும்...
நிறையக் கதை பேசுவாள்!
குழந்தைத்தனமாக அவள் சொல்லிக்கொண்டிருந்தால்,
கேட்டுக்கொண்டே இருக்கலாம்...!
அத்தனை இனிமையாயிருக்கும்...!!

எட்டிப்பார்க்கும் நிலாப்பெண்ணை,
ஒட்டிநின்று ஓரக்கண்ணால் ரசித்தபடி...
விட்டுச்செல்ல மனமின்றி,
மெல்ல அகலுவான் பகலவன்!
அவள் விடைபெறும் வேளைகளில்...
அவனும்  அப்படித்தான்...!!

அவனுடைய மாலைப்பொழுதுகளை...
தன்னுடன் இனிமையாக்கிய தேவதை அவள்!
"தேவதைகள் தோன்றி... பின் மறைந்துவிடுவார்கள்"
அப்படித்தான் அவளும் !
திடீரென்று ஒருநாள்,
சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து போனாள்!

மறைந்து... மறந்து....
இத்தனை வருடங்கள் ஆகியும்
மணல் மீது அழியாமல்
அப்படியே இருக்கின்றன காற்றடங்கள்!
வழக்கமான அந்த இடத்தில்
அத்தனை நினைவுகளும்....
குவிந்து கிடக்கின்றன மணல்மேடாய்!


 

மணல்வீடு கட்டி விளையாடும்
சின்னக் குழந்தைகளை பார்த்தபடி,
தனியாக ஒருவன்........
அக்கடற்கரையின் மணற்பரப்பில்,
ஒரு தேவதையின் பெயரை எழுதிக்கொண்டிருக்கிறான்!
கடலலைகள் ஓயாமல்
அதனை... அழித்துக்கொண்டே இருக்கின்றன...!!!

 

  • தொடங்கியவர்

கலக்கிட்டிங்க ஓய்!

 

மிக்க நன்றி.... ராஜன் விஷ்வா! :)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை வரிகள் நன்றாக உள்ளன!

 

ஆனால், வரிகளை வாசிக்கும் போது, இடையில ஒரு சத்தம், எதிரொலி போன்று கேட்கின்றது! :o

 

கொஞ்சம் கவனியுங்கள்! :D

 

சரி நடந்தது நடந்து போய் விட்டது!

 

அந்தக் கடற்கரையில குந்திகொண்டிருந்து மூக்கைச் சிந்திக்கொண்டிருக்காமல், அவளுக்கு உங்களையடையக் கொடுத்து வைக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு, மணலைத் தட்டிப் போட்டு,எழும்பி நடவுங்கோ, கவிதை! :icon_idea:

 

  • தொடங்கியவர்

கவிதை வரிகள் நன்றாக உள்ளன!

 

ஆனால், வரிகளை வாசிக்கும் போது, இடையில ஒரு சத்தம், எதிரொலி போன்று கேட்கின்றது! :o

 

கொஞ்சம் கவனியுங்கள்! :D

 

சரி நடந்தது நடந்து போய் விட்டது!

 

அந்தக் கடற்கரையில குந்திகொண்டிருந்து மூக்கைச் சிந்திக்கொண்டிருக்காமல், அவளுக்கு உங்களையடையக் கொடுத்து வைக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு, மணலைத் தட்டிப் போட்டு,

எழும்பி நடவுங்கோ, கவிதை!

 

 

இதனை புதியதொரு மென்பொருள் கொண்டு எடிற் பண்ணியிருந்தேன். அதனால் ஒழுங்காக சீர்செய்ய முடியவில்லை. இன்னும் கொஞ்சம் கவனமெடுத்து நுட்பமாக எடிற் பண்ணவேண்டும்.

 

புங்கை.... காலங்களுக்கு மட்டுமே எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை இருக்கிறது.

அதனைத்தான் கவிதையின் இறுதி வரிகளில்... குறிப்பிட்டிருக்கின்றேன்.

ஒரு தேவதையின் பெயரை எழுதிக்கொண்டிருக்கிறான்...!

கடலலைகள் ஓயாமல்...

அதனை அழித்துக்கொண்டே இருக்கின்றன...!!

 

 

மணலைத் தட்டி எழும்பி நடக்க வெளிக்கிட்டு ரொம்ப நாளாச்சு.

மிக்க நன்றி புங்கை... உங்கள் கருத்துக்கும் அன்புக்கும்! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

எழுதி செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும் அழுதாலும் தொழுதாலும்.....

வருந்தாதே மனமே .... வலி நீங்கி   விழித்து எழ வாழ்த்துக்கள். சோகமும் ஒருவகை சுகம்தான்.

கவிதையாக   மட்டும்  நினைக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

அவனுடைய மாலைப்பொழுதுகளை...

தன்னுடன் இனிமையாக்கிய தேவதை அவள்!

"தேவதைகள் தோன்றி... பின் மறைந்துவிடுவார்கள்"

அப்படித்தான் அவளும் !

திடீரென்று ஒருநாள்,

சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து போனாள்!

மறைந்து... மறந்து....

இத்தனை வருடங்கள் ஆகியும்

மணல் மீது அழியாமல்

அப்படியே இருக்கின்றன காற்றடங்கள்!

வழக்கமான அந்த இடத்தில்

அத்தனை நினைவுகளும்....

குவிந்து கிடக்கின்றன மணல்மேடாய்!

 

மணல்வீடு கட்டி விளையாடும்

சின்னக் குழந்தைகளை பார்த்தபடி,

தனியாக ஒருவன்........

அக்கடற்கரையின் மணற்பரப்பில்,

ஒரு தேவதையின் பெயரை எழுதிக்கொண்டிருக்கிறான்!

கடலலைகள் ஓயாமல்

அதனை... அழித்துக்கொண்டே இருக்கின்றன...!!!

 

 

அழகிய கடற்கரையின் மணல் வெளிகளில் எத்தனையோ பேரின் கனவுகளும் காதல் நினைவுகளும்  புதைந்து கிடக்கிறது கவிதை. 

 

மறையும் தேவதைக்காகவா காத்திருந்தான் அந்தக் கிறுக்கன்.

 

  • தொடங்கியவர்

எழுதி செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும் அழுதாலும் தொழுதாலும்.....

வருந்தாதே மனமே .... வலி நீங்கி   விழித்து எழ வாழ்த்துக்கள். சோகமும் ஒருவகை சுகம்தான்.

கவிதையாக   மட்டும்  நினைக்கவும்.

 

எப்பொழுதும் எனக்கு ஒரு அன்னையைப்போல்.... அன்பாகவும் ஆறுதலாகவும் அறிவுரை சொல்லும்

உறவு நீங்கள் அக்கா. உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நிலாக்கா. :)

  • தொடங்கியவர்

அழகிய கடற்கரையின் மணல் வெளிகளில் எத்தனையோ பேரின் கனவுகளும் காதல் நினைவுகளும்  புதைந்து கிடக்கிறது கவிதை. 

 

மறையும் தேவதைக்காகவா காத்திருந்தான் அந்தக் கிறுக்கன்.

 

அழகிய கடற்கரை மணல்வெளிகளைப் போலவே மனவெளிகளில் உலவும் நினைவுகளும் ரொம்ப அழகானவை. தொலைப்பதும் தேடுவதும் கூட.... வலி கலந்த சுகம்தான்.

தேவதைகள் தோன்றுவார்கள்... மறைவார்கள், அதுதான் அவர்களின் இயல்பே.

ஆனால் இந்தக் கிறுக்கன் காத்திருந்தது.... அந்தத் தேவதை மீண்டும் தோன்றினால் அவளிடம்,

ஒரேயொரு கேள்வி மட்டும் கேட்பதற்காகத்தான். ஆனால், அதற்கு அந்தத் தேவதையிடம் பதில் இருக்குமோ தெரியாது. :)

 

மிக்க நன்றி சாந்தி அக்கா :)

கடற்கரை மணல் வெளி என் சுமைதாங்கி
என் மனக்காயங்களை அதிகம் அங்கேதான் இறக்கிவைப்பேன்.

அந்த சோளக காற்று வீசும் நாளில் தென்னை மர நிழலில் ஒரு சாறத்தை நிலத்தில போட்டிட்டு அப்பிடியே “அப்பாடா “ எண்டு விழுந்து படுத்தா வாற சுகம்....
கோடி குடுத்தாலும் கிடைக்காது.
அதன் அருமையும் பெருமையும் அனுபவிச்சவனுக்கே தெரியும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.