Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். மக்களை பிரிய மனமில்லை: ஹத்துருசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahindaj.jpg
-எஸ்.கே.பிரசாத்

யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றமாகிச் செல்வது கவலை அளிப்பதுடன், இங்குள்ள மக்களை விட்டுப் பிரிவதற்கு தனக்கு மனம் இல்லையெனவும் யாழ். மாவட்ட  கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். 

 கொழும்பு இராணுவத் தலைமையகத்தின் நிர்வாக அதிகாரியாக நாளை வெள்ளிக்கிழமை இவர் பதவியேற்கவுள்ளார். 

எழுதுமட்டுவாள் பகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 52ஆவது படைப்பிரிவின் தலைமையகத் திறப்பு விழாவின்போது, ஊடகவியலாளர்களுடனான  கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,  

'யாழ். மாவட்டத்தில்  கடந்த 04 வருடங்களாக  கடமையாற்றி வருகின்றேன். இந்தக் காலப்பகுதியில் இங்கு வாழ்கின்ற மக்களுக்கு பல சேவைகளைச் செய்துள்ளோம். இதனால், யாழ்ப்பாண மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் காலத்தில் பல்வேறு தேவைகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் இங்குள்ள மக்கள் இருந்தனர். இதற்கமைய, மக்களுடன் மக்களாக இருந்து பல்வேறு உதவிகளை அவர்களுக்கு வழங்கியிருக்கின்றோம். அதாவது, மாணவர்களின் கல்வி முதல் மக்களுடைய வீட்டுத் திட்டங்கள் என பல உதவிகளைச் செய்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியது மிக்க சந்தோசத்தை ஏற்படுத்துகின்றது. ஆயினும், தற்போது இடமாற்றம் பெற்றுச்செல்வது மிக்க கவலையையும் தருகின்றது. யாழ்ப்பாணம் ஒரு சிறந்த மாவட்டம். இங்குள்ள மக்கள் சிறந்தவர்கள்' என்றார். 

மஹிந்த ஹத்துருசிங்க இடமாற்றம் பெற்றுச் செல்வதைத்  தொடர்ந்து, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதியாக இதுவரை காலமும் இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா இன்று வியாழக்கிழமை பதவியேற்கிறார்.

 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இன்னும் கொன்று புதைக்க.. கிணற்றுக்க தள்ளிவிட ஆக்கள் இருக்கினமோ..?! நீங்க எல்லாம் பூமியை விட்டே போக வேண்டியனீங்க.. உங்க நல்ல காலம்.. கொழும்புக்குப் போறீங்கன்னு சந்தோசப்படுங்க. :icon_idea::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

போய்விடு...........

வாயில  வருகுது.............. :(  :(

யாழ் மக்களின் கையூட்டை விட்டுவர மனமில்லை.

நல்லாப்படலையே!  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
ராசாதி ராச, ராச மார்த்தாண்ட கொட்டாப்புளி மகாராசா கொழும்புக்குப் போறாரு.
 
வெள்ளை வான், மோட்டார் சைக்கிள் பரிவாரங்களையும் கூட்டிப் போ, கொய்யால, ராசா.

ராசாதி ராச, ராச மார்த்தாண்ட கொட்டாப்புளி மகாராசா கொழும்புக்குப் போறாரு.

வெள்ளை வான், மோட்டார் சைக்கிள் பரிவாரங்களையும் கூட்டிப் போ, கொய்யால, ராசா.

வெள்ளைவான், பட்டாகத்தி மோட்டார் சைக்கிள் எல்லாம் கொழும்பு போனால் வெண்தாடி வேந்தர் எப்படி தமிழ் மக்களுக்கு சேவை செய்வார்?

What a lucrative business is this! How can I leave this goldmine and go to Colombo.......?  <_<

 

காமினி பொன்சேக்காவைவிட நல்ல நடிகனாக இருக்கிறார்.

 

போய் சேருமோய்! அங்கேதான் போர்க்குற்றவிசாரணை நடக்கும். ஒவ்வொரு வடமாகாணத்தமிழனும் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்ல கொழும்பு வரும் போது திரும்ப சந்திக்கலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவர்களுக்கு கொழும்பில் இருக்கும் பதவிகளை விட யாழ் மாவட்ட தளபதி பதவியானது மிகவும் செல்வாக்கானது குறிப்பா இவர்கள் அங்கெ ஒரு குட்டி ஜனாதிபதியை போல செயற்ப்படலாம் அதனால் தான் யாழ்மாவட்ட தளபதி பதவியை வாங்க இராணுவத்தில் பெரிய போட்டியே நடக்கும்

மஹிந்த ஹத்துருசிங்க இடமாற்றம் பெற்றுச் செல்வதைத்  தொடர்ந்து, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதியாக இதுவரை காலமும் இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா இன்று வியாழக்கிழமை பதவியேற்கிறார்.

 

ஒருத்தர் போக இன்னொருத்தர் வாறார். ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவரும் செல்லும் நாளுக்காக தமிழர்கள் வெயிட்டிங். :rolleyes:

உண்மையில் இவர்களுக்கு கொழும்பில் இருக்கும் பதவிகளை விட யாழ் மாவட்ட தளபதி பதவியானது மிகவும் செல்வாக்கானது குறிப்பா இவர்கள் அங்கெ ஒரு குட்டி ஜனாதிபதியை போல செயற்ப்படலாம் அதனால் தான் யாழ்மாவட்ட தளபதி பதவியை வாங்க இராணுவத்தில் பெரிய போட்டியே நடக்கும்

உண்மை. கேட்காமலே கவனிப்பதில் எங்கட ஆக்கள் கில்லாடிகள்.

சிங்கள பகுதிகளுக்கு பதவி போட்டி இல்லை. அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தே சீவன் போயிடும்.

உண்மை. கேட்காமலே கவனிப்பதில் எங்கட ஆக்கள் கில்லாடிகள்.

சிங்கள பகுதிகளுக்கு பதவி போட்டி இல்லை. அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தே சீவன் போயிடும்.

ஏனென்றால் தமிழர்கள் இயல்பிலேயே அடிமை மனப்பாங்கு (slave mentality) கொண்டவர்கள். தன் இனத்தவர் பதவியில் இருந்தால் அவரிடம் அடங்கி நடக்காமல் முரண்டு பிடிப்பதும் அதே இடத்தில் அடுத்த இனத்தவர் இருந்தால் அதீத விசுவாசம் காட்டுவதும் தமிழர் இயல்புகளில் ஒன்றாகிவிட்டது.

ஏனென்றால் தமிழர்கள் இயல்பிலேயே அடிமை மனப்பாங்கு (slave mentality) கொண்டவர்கள். தன் இனத்தவர் பதவியில் இருந்தால் அவரிடம் அடங்கி நடக்காமல் முரண்டு பிடிப்பதும் அதே இடத்தில் அடுத்த இனத்தவர் இருந்தால் அதீத விசுவாசம் காட்டுவதும் தமிழர் இயல்புகளில் ஒன்றாகிவிட்டது.

600 வருட அடிமை புத்தி கனடாவில், லண்டனில் படித்த சிலருக்கு இன்றும் இருக்கு.

எனக்கு தெரிந்த ஒருவரிடம் நேசகரத்திற்காக உதவி கேட்டேன். அவர் ஒரு மனித்தியாலாமா ஏன் இந்த அமைப்புகளுக்கு உதவக்கூடாது. தமிழ் அமைப்புகள் போலி என்று எனக்கு சூடு கிழப்பி, சாமி ஆளைவிட்டால் காணும் என்று தப்பி வந்தேன்.

பின் விடுமுறை நேரம் நகை கடைக்கு சென்ற பொது அதே தெரிந்தவர் தனது ஊர் சிங்கள போலீஸ் இருவருக்கு தலைக்கு $500 அனுப்பி கொண்டிருந்தார்.

என்னை கண்டவுடன் ஆச்சியின் காணி பிரச்சினையில் உதவியதால் ஒவ்வொரு வருடமும் அனுப்புகிறேன் என்றார்.

தன்னலமிக்க சிலரை திருத்தவே முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.