Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்வரும் வாரம் இலங்கைக்கு விஜயம் செய்கிறார் சுப்ரமணியன் சுவாமி!

Featured Replies

Subramanian%20Swamy.jpg

 

இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்தியாவின் ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் வாரம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் தமிழகத்தில் இயங்கும் தேசிய மீனவர்கள் சம்மேளனம், சுப்ரமணியன் சுவாமியை சந்தித்து மனு ஒன்றை கையளித்துள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் பிரதான கட்சிகளாக அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மற்றம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பன, மீனவர்களின் விடயத்தை அரசியல் நலனுக்காக பயன்படுத்துகின்றன.

இந்த நிலையிலேயே மீனவர்கள் சம்மேளனம் சுப்ரமணியன் சுவாமியை அணுகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.pathivu.com/news/29002/85//d,article_full.aspx

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பெயர் சுப்பிரமணியம் இல்லை! :o

 

இவரது பெயர் 'சுப்பிரமணியன்'  :D

 

நீங்கள் வேண்டுமானால், இவரைச் சுப்பிரமணியம் என்று அழைத்துப்பாருங்கள்! அவரது முகம்மாறுகின்ற விதத்தையும் அவதானித்துப் பாருங்கள்! இரண்டுக்கும் நிறைய வித்தியாசமிருக்கின்றது! :o

 

  • தொடங்கியவர்

தலைப்பிலும் செய்தியிலும் மாற்றி விட்டிருக்கிறேன். :D

இந்தையாவில்  "ன்" இல் தான் பிராமணரின் பெயர்கள் முடியும்.

 

சுப்பிரமணியம் எண்டால் பிராமணர் அல்லாதவர்களுக்குத் தான் வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த போது சிறீலங்கா பக்கம்.. எட்டியும் பார்க்காதவர் இப்ப அடிக்கடி அங்க எதுக்குப் போறார். இவரை வெகு அருகில் இருந்து கண்காணிக்க வேண்டும். எதிர்கால சதித்திட்டங்களை செயற்படுத்தும் நோக்கோடும் இவரின் பயணங்கள் அமையலாம். ராஜீவ் காந்தி கொலைத் திட்டத்தின் முக்கிய சூத்திரசாரியாக இவர் மீது குற்றச்சாட்டுக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிர மணியனோ! அன்றி மணியமோ!! அதற்கு இப்போ தோல் எருமை மாடுபோல் தடித்துவிட்டது. மழையோ, குளிரோ, வெயிலோ அதற்கு இப்போ எல்லாம் ஒன்றுதான்....!! :lol:

எல்லாம் இலங்கையை நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றி, வெகுமதிகள் பெறத்தான்.. வழமையாக இவர் செய்யும் அலுவல்கள் தான் இம்முறையும்.. அடுத்து இரகசிய பேச்சுக்கள் பின் அமெரிக்காவிற்கு பயணம் அங்கு தலை கழுவி இலங்கையை மனிதவுரிமை நெருக்கடி ,உலகவிசாரணையில் இருந்து தப்ப வைக்க நரித்திட்டங்களை வகுப்பது... இப்படி அடிக்கி கொண்டே போகலாம்.. நெடுக்கு சொல்லும் விடையம் சரிதான். இவரை அமெரிக்காவில் செல்வாக்கு இல்லாமல், செல்லாக்காசாக்க வேண்டும்... முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற முறை அமெரிக்கத் தீர்மானம்நிறைவேற்றப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன் மகிந்தவைச் சந்தித்தார் .உடனடியாக அமெரிக்கா சென்று ரொபேட்டோ பிளேக்கைச் சம்தித்தார்.இந்த முறையும் அப்படியான நோக்கம் இருக்கலாம்.

தான் சாவதற்கிடையில் ஈழத்தமிழரை நூற்றுக்கு நூறுவீதம் அடிமைகளாக பார்த்துவிட்டு மண்டையை போடவேண்டும் என்ற ஆசை கொண்ட மனிதர் மன்னிக்கவும் பிராணி இந்த சுப்பிரமணி.

சுப்பிரமணியசாமி  சேர இடமில்லாமல் பா.ஜ.கா வில் சேர்ந்து இருக்கிறார். இவரால் இனிமேல் எதுவும் முடியாது. தனக்கே கட்சி இல்லாமல் இலங்கை இராஜதந்திரத்தில் போய் முடித்துவிட்டார்.

 

இவரின் RAW, CIA, TID தொடர்புகள் மெல்ல மெல்ல அறுந்துபோகும் ஏன் எனில் இவருக்கு அரச தொடர்புகள் அறுந்துகொண்டு போவதால் முன்னர் மாதிரி அந்த நிறுவனங்களுக்கு உதவ முடியாது. 

 

இலங்கை இவருக்கும் முன்னர் வாக்குறுதிகள் கொடுத்தது. போன தடவை தன்னால்த்தான் ஈழத்தமிழரின் பிரச்சனைகளை, மீனவர் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று பேசிய்வர். இது 100% இவரை மகிந்தா முட்டாள் ஆக்கி இவருக்கும் 13+ கொடுத்து ஏமாற்றியதின் விளைவு. போன தடவை இவர் மகிந்தா தனக்கு கொடுத்த வாக்குறுதிகளை பிளேக்கிடம் போய்க்கொடுத்தவர். இனி அது சரிப்பட்டுவராது. 

 

கடுவனாக இருந்த போது கடித்த நாய் இப்போது கிழண்டிய பின்னரும் கலைத்துக்கடிக்கும்  என்று இனி இவரைக்கண்டு மிரளத்தேவை இல்லை.

சுப்பிரமணியசாமி உருவப்படத்திற்கு செருப்படி

 

கொள்ளையடிக்க தில்லைக்கோயில் மீண்டும் தீட்சிதர்களிடம் ஒப்படைப்பு
உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து – துணைபோன சு.சாமி உருவப்படத்தை செருப்பால் அடித்து – எரித்து ஆர்ப்பாட்டம்

 

madurai-hrpc-2.jpg

 

madurai-hrpc-4.jpg

madurai-hrpc-6.jpg

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
இதொரு காமடி பீஸ் இதைப்பார்த்து பெரிதாக அலட்டிக்க தேவையில்லை, மகிந்த ராஜபக்ச புதிசாக கை படாமல் எதையாவது வைத்திருக்கின்றேன் வந்து பார் என்றிருப்பார் உடனே நாக்க தொங்க விட்டபடி வரப்போகுது சு சுவாமி அவ்வளவுதான்.   
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.