Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரிபதாதி விளம்புவீரே !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்

நாளொன்றுக்கு ஒருமுறை  சந்திப்பவர்

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

தடக்கிவிடுபவர்

இடையில் எடுத்துவிட்டால்

தடக்கி  விழுந்தால் சேதமாகுபவர்.... :lol:  :D

  • Replies 1.6k
  • Views 131.9k
  • Created
  • Last Reply

 

மூன்றெழுத்தில்

இவனொரு  ஓட்டி

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

எங்கள் யாழ் உறவு

இடையில் எடுத்துவிட்டால்

தமிழரை  ஒன்றுபடவிடாமல் தடுப்பது.....??

 

விரதி :rolleyes:

 

சினிமாவோ அரசியலோ இல்லாத ஒரு திரி, அதுவும் தமிழ் மொழி தொடர்பான ஒரு திரி ஆரம்பித்து 24 மணிநேரத்துக்கும் முன்னால் 100 பதிவுகளை கண்டிருக்கின்றது! ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருக்கு.

 

நல்லதொரு திரியை ஆரம்பித்த ஆதித்ய இளம்பிறையனுக்கும் ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி!

 

உங்கள் நண்பர்களையும் இந்த திரிக்கு அழைத்து வாருங்கள மக்காள்!

தமிழ் அகராதியில் "திரிபதாதி " என்ற சொல் இல்லை .

 

திரிபாகி   -இது சொல்லணியில் ஒன்று .மூன்றேழுத்தாய் ஒன்றின் பெயராய் ,முதலுமீறும் ஒன்றின் பெயராய் ,இடையுமீறும் ஒன்றின் பெயராவினவென்று வாசகம் செய்வது .

இப்படித்தான் இருக்கு .

காதையின்ஓ ரெழுத்து,ஒருசொல் வேறுஒவ்வொர் எழுத்தைக் 

     கண்டுசொல்லாய்ப் பொருளுறலே எழுத்துவருத் தனமாம்; 

ஓதுயிர்மெய் மொழியின்ஒற்றுப் பெயர்க்குங்கால் பொருள் வேறு 

     உடையதுஒற்றுப் பெயர்த்தல்,ஒரு கவிமூன்று கவியாய்ப் 

போதல்திரி பங்கி;மூன்று எழுத்துஒருசொல் முதல்பின் 

     புகல்இடைபின் சேர்ந்துசொற்க ளாந்திரிப தாதி; 

பாதம்உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ, விசை நூற்று 

     பத்தொன்பான் எழுத்தில்நிரோட் டகங்கரந் திசையே.  [5]

 

எழுத்து வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபங்கி, திரிபதாதி, 

நிரோட்டகம் ஆகியவற்றை விளக்குகின்றது.

     உரை : ஓரெழுத்து ஒரு மொழியாய்ப் பொருள் சுட்டி நின்று பின்னர் 

ஒரு எழுத்துச் சேர்த்தால் வேறொரு சொல்லாய்ப் பொருள் சுட்டி அமைதலே 

எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்று பெயர். சொல்லப்பட்ட 

மொழிகளில் உள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி விட்டால் வேறு பொருள் 

தரும்படி அமைப்பது ஒற்றுப் பெயர்த்தல்.

     ஒரு பாட்டாக இருப்பதை மூன்றாகப் பிரித்து எழுத மூன்று பாட்டாக 

அமையுமானால் அது திரிபங்கி எனப்படும். மூன்று எழுத்துக்களை உடைய 

ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் 

நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் 

அமையுமானால் திரிபதாதி எனப்படும். உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து 

உயிரெழுத்துக்களும், ப, ம, வ, நீங்கிய பதினைந்து மெய்யெழுத்துக்களால் 

உண்டான எழுபத்தைந்து உயிர்மெய் எழுத்துக்களும், (15x5) ப, ம, வ என்ற மூன்று 

மெய்யெழுத்துக்களும் இம்மூன்று மெய்யெழுத்துக்களால் உண்டான 

முப்பத்தாறு உயிர்மெய் எழுத்துக்களும் சேர்த்து மொத்தம் (5 + 75 + 3 + 36) 

119 எழுத்துக்கள் இல்லாமல் பாடுவது நிரோட்டம் என்று அழைக்கப்படும்.

     விளக்கம் : ஒற்றுப் பெயர்த்தலுக்குத் தண்டி உரை தரும் விளக்கம் 

வேறு. திரிபதாதி என்பதைத் தண்டி திரிபாகி என்று குறிப்பிட்டுள்ளது.

     நிரோட்டம் என்பது இதழோடு இதழ் ஒட்டாதது என்று பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்

விரதி :rolleyes:

 

இல்லை  சகோதரி..

ஆனால் ஒரு பதில் சரி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்

நாளொன்றுக்கு ஒருமுறை சந்திப்பவர்

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

தடக்கிவிடுபவர்

இடையில் எடுத்துவிட்டால்

தடக்கி விழுந்தால் சேதமாகுபவர்.... :lol::D

இதுவும் பகல்தான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்
நான் கேட்பது???
முதல் எழுத்தை எடுத்துவிட்டால்
இது இல்லையென்றால்  எதையும் சாதிக்கமுடியாது
இடையில் எடுத்துவிட்டால்
இவர் இல்லாத சிரிப்பு..........?????? :lol:  :lol:  :lol: 

Edited by விசுகு

காதையின்ஓ ரெழுத்து,ஒருசொல் வேறுஒவ்வொர் எழுத்தைக் 

     கண்டுசொல்லாய்ப் பொருளுறலே எழுத்துவருத் தனமாம்; 

ஓதுயிர்மெய் மொழியின்ஒற்றுப் பெயர்க்குங்கால் பொருள் வேறு 

     உடையதுஒற்றுப் பெயர்த்தல்,ஒரு கவிமூன்று கவியாய்ப் 

போதல்திரி பங்கி;மூன்று எழுத்துஒருசொல் முதல்பின் 

     புகல்இடைபின் சேர்ந்துசொற்க ளாந்திரிப தாதி; 

பாதம்உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ, விசை நூற்று 

     பத்தொன்பான் எழுத்தில்நிரோட் டகங்கரந் திசையே.  [5]

 

எழுத்து வருத்தனம், ஒற்றுப்பெயர்த்தல், திரிபங்கி, திரிபதாதி, 

நிரோட்டகம் ஆகியவற்றை விளக்குகின்றது.

     உரை : ஓரெழுத்து ஒரு மொழியாய்ப் பொருள் சுட்டி நின்று பின்னர் 

ஒரு எழுத்துச் சேர்த்தால் வேறொரு சொல்லாய்ப் பொருள் சுட்டி அமைதலே 

எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்று பெயர். சொல்லப்பட்ட 

மொழிகளில் உள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி விட்டால் வேறு பொருள் 

தரும்படி அமைப்பது ஒற்றுப் பெயர்த்தல்.

     ஒரு பாட்டாக இருப்பதை மூன்றாகப் பிரித்து எழுத மூன்று பாட்டாக 

அமையுமானால் அது திரிபங்கி எனப்படும். மூன்று எழுத்துக்களை உடைய 

ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் 

நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் 

அமையுமானால் திரிபதாதி எனப்படும். உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து 

உயிரெழுத்துக்களும், ப, ம, வ, நீங்கிய பதினைந்து மெய்யெழுத்துக்களால் 

உண்டான எழுபத்தைந்து உயிர்மெய் எழுத்துக்களும், (15x5) ப, ம, வ என்ற மூன்று 

மெய்யெழுத்துக்களும் இம்மூன்று மெய்யெழுத்துக்களால் உண்டான 

முப்பத்தாறு உயிர்மெய் எழுத்துக்களும் சேர்த்து மொத்தம் (5 + 75 + 3 + 36) 

119 எழுத்துக்கள் இல்லாமல் பாடுவது நிரோட்டம் என்று அழைக்கப்படும்.

     விளக்கம் : ஒற்றுப் பெயர்த்தலுக்குத் தண்டி உரை தரும் விளக்கம் 

வேறு. திரிபதாதி என்பதைத் தண்டி திரிபாகி என்று குறிப்பிட்டுள்ளது.

     நிரோட்டம் என்பது இதழோடு இதழ் ஒட்டாதது என்று பொருள்.

இணைப்பிற்கும் விளக்கத்திற்கும்  நன்றி சோழியான் .

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்

நான் கேட்பது???

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

இது இல்லையென்றால் எதையும் சாதிக்கமுடியாது

இடையில் எடுத்துவிட்டால்

இவர் இல்லாத சிரிப்பு..........?????? :lol: :lol: :lol:

பதில்.. :huh: (ஆனால் தில் என்பது தமிழ்ச்சொல் இல்லையே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்
மனிதர்கள் வரவேற்காதது
முதல் எழுத்தை எடுத்துவிட்டால்
மீன்களின் எதிரி
இடையில் எடுத்துவிட்டால்
இவை  அறுபத்திநான்கு................... :icon_idea: 

மூன்றெழுத்தில்

மனிதர்கள் வரவேற்காதது

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

மீன்களின் எதிரி

இடையில் எடுத்துவிட்டால்

இவை  அறுபத்திநான்கு................... :icon_idea: 

 

கவலை

 

மூன்றெழுத்தில்

இவனொரு  ஓட்டி

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

எங்கள் யாழ் உறவு

இடையில் எடுத்துவிட்டால்

தமிழரை  ஒன்றுபடவிடாமல் தடுப்பது.....??

 

சாரதி

 

  • கருத்துக்கள உறவுகள்

சரியான  பதில்கள்

பச்சை  இல்லை

மன்னிக்கவும்...

மலையுச்சி

முதல் எழுத்து போனால்: காயம் வந்தால் இது வரும்

இடை எழுத்து போனால்: ஒரு விளையாட்டில் பாதி

Edited by தமிழினி

மலையுச்சி

முதல் எழுத்து போனால்: காயம் வந்தால் இது வரும்

இடை எழுத்து போனால்: ஒரு விளையாட்டில் பாதி

 

குவடு!!!  :o

சரியான பதில் சோழியன் அண்ணா .... ஆனால்....... என்னிடம் தற்போது நோ பச்சை :)

பச்சை பிரச்சினை இல்லை. நன்றி.

 

முதலை விட திறந்து பிடி!
இடை நழுவ கடையேழு வள்ளல்!!
முதலிரண்டும் தூக்கியும் நிறமும்!!

 

இணைத்துப் பாரு பாயும் நீராய்!!  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில்

இவனொரு  பகைவன்

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

எங்கள் யாழில் எரிவது

இடையில் எடுத்துவிட்டால்

சூடாக்க

இது  நடக்கவேண்டும்.........

  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமத் தூரதுவின் இடை
நீங்கின் தொந்தர வெனினும்
தலைநீங்கத் தாரை தலைவன்தான்! :D

 

மூன்றெழுத்தில்

இவனொரு  பகைவன்

முதல் எழுத்தை எடுத்துவிட்டால்

எங்கள் யாழில் எரிவது

இடையில் எடுத்துவிட்டால்

சூடாக்க

இது  நடக்கவேண்டும்.........

 

 

எதிரி!!

  • கருத்துக்கள உறவுகள்

முதலை விட திறந்து பிடி!

இடை நழுவ கடையேழு வள்ளல்!!

முதலிரண்டும் தூக்கியும் நிறமும்!!

 

இணைத்துப் பாரு பாயும் நீராய்!!  :icon_mrgreen:

காவிரி

வலிகாமத் தூரதுவின் இடை

நீங்கின் தொந்தர வெனினும்

தலைநீங்கத் தாரை தலைவன்தான்! :D

 

நவாலி!!  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நவாலி!!  :icon_mrgreen:

நவாலி சரியான பதில் சார்! :D

காவிரி

 

சரியான பதில்!!  :)

  • கருத்துக்கள உறவுகள்

முன்னது போனால் காற்றிலொரு வகைகாணும்

இடையது போனால் கடைசி மெத்தையாகும்

முற்றும் சேர்ந்தால் மூடுதிரை ஆகிகிவிடும்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.