Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்தமிட்டவனின் நாக்கை கடித்து பொலிஸில் முறைப்பாடு!

Featured Replies

Published On: Sat, Feb 8th, 2014

 

கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த வாலிபரின் நாக்கை கடித்து காயப்படுத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

போபாலில் உள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில் 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். வழமைபோன்று திங்கட்கிழமை காலை வேலைக்கு சென்ற அந்த பெண்ணை 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வழிமறித்து கட்டாயப்படுத்தி முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வாலிபரின் நாக்கை நன்றாக கடித்து காயப்படுத்தியுள்ளார். வலியால் அந்த வாலிபர் அலறி துடித்துள்ளார். இது குறித்து இரண்டு பேரும் கம்லாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

அப்போது, தான் அழகு சிகிச்சை நிலையத்தில்; வேலை செய்வதாகவும், இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் கூறிய அந்த பெண், கடந்த சில நாட்களாகவே அந்த வாலிபர் தன்னை கேலி செய்ததாகவும், இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

ஆனால், முத்தம் கொடுத்த வாலிபரோ, தானும், அந்த பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக பழகி வந்ததாகவும், ரதிபேட்டில் வேலை பார்த்து வந்த தன்னை போபால் வந்து இரவில் ரயில் நிலையத்தில் தங்கியிருந்தபோது, காலையில் தம்மை சந்திக்குமாறு கூறியதாகவும், அதன்படி தாம் ரயில் நிலையத்தில் படுத்து தூங்கிவிட்டு காலையில் அந்த பெண்ணை பார்த்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர், அந்த வாலிபரின் விளக்கத்தை ஏற்க மறுத்ததோடு வழக்கு பதிவு செய்து, அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

 

இதனிடையே வாலிபரின் நாக்கை கடித்த அந்த இளம்பெண், இதேபோன்று பெண்களுக்கு ஒரு நிலைமை ஏற்பட்டால் தாம் கடைபிடித்த முறையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

 

http://www.puradsifm.com/news/world-tamil-news/kiss/

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணை நம்பினார்.. நாவிழந்தார்.. :huh::D

நல்ல காலம் நாக்கோட தப்பிட்டார் மச்சான். எல்லை மீறி போயிருந்தால் ...........

  • கருத்துக்கள உறவுகள்
முத்தம் குடுக்கையில் ஓவராய்ப் போய் நாக்கை கடிச்சிருப்பா இதுக்குப் போய் :lol:
 

நாக்கை இப்படி கடிக்குதே ஒருவேளை பாக்கு கிடைச்சா :D :D

  • கருத்துக்கள உறவுகள்

பற்குறி, நகக்குறி பதிப்பது ஆண்களுக்கு மட்டுமே சொந்தமா??  பெண்களுக்கு இல்லையா???  என்னையா சமத்துவம்..!! :blink::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணை நம்பினார்.. நாவிழந்தார்.. :huh::D

 

நாட்டில் உள்ள வழக்குமொழி " நக்குண்டார் நாவிழந்தார் " என்பதே...!  இங்கும் அதுதான் நடந்திருக்கு...! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் உள்ள வழக்குமொழி " நக்குண்டார் நாவிழந்தார் " என்பதே...! இங்கும் அதுதான் நடந்திருக்கு...! :lol::D

இப்படி ஒன்று அரைகுறையாக கேள்விப்பட்ட ஞாபகம் இருந்தது.. :D இதுக்கு என்ன விளக்கம்?? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாய் :

 

எம்ஜிஆர் வீதியால் போகின்றார் , வழியில் கஞ்சா கருப்பு  வீட்டு வாசலில் நிக்கிறார். எம்ஜிஆரைப் பார்த்ததும்  வாங்கண்ணே வீட்டை, வந்து சாப்பிட்டுட்டுப் போகலாம்.

 

வேண்டாம் கருப்பு  இன்னொரு நாளைக்கு வாறன். இல்லைண்ணே ஒரு கோப்பியாவது குடிச்சுட்டுப் போங்கோ.

சரி , நல்ல வெய்யிலாய்க் கிடக்கு, ஒரு பேணி மோர் கொன்டுவா போதும். குடித்திட்டுப் போகிறார்.

 

அடுத்தடுத்த நாளில் கஞ்சா ஒரு மதிலால் குதித்தோடுவதைப் பார்க்கின்றார். வீட்டுக்காறர்  மூர்த்தி பஞ்சாயத்தில் முறையிடுகிறார் , நேற்று இரவு வீட்டை களவு போயிட்டுது என்று.

 

பஞ்சாயத்துன் தலைவர் பாப்பையா விசாரிக்கிறார்,  ஏம்பா நீங்க யாராவது இவர் வீட்டில் களவெடுத்த திருடனப் பார்த்தீங்களா.

 

இப்ப எம்ஜிஆருக்குத் தெரியுது கஞ்சாகருப்புதான் எடுத்தது என்று ஆனால் முந்தநாள் அவர் வீட்டை கை நனைச்சபடியால் அவரைக் காட்டிக் கொடுக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டு  நக்குண்டார் நாவிழந்தார் என நினைத்து "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே , இருட்டினில் நீதி மறையட்டுமே" என்று பாடிக்கொண்டு போகின்றார். :)

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. விளங்கிவிட்டது.. :D நன்றி சுவி அண்ணா.. இலங்கைக்குப் போன இந்திய அதிகாரிகளையும் இந்த வகையில் சேர்க்கலாமோ?? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. விளங்கிவிட்டது.. :D நன்றி சுவி அண்ணா.. இலங்கைக்குப் போன இந்திய அதிகாரிகளையும் இந்த வகையில் சேர்க்கலாமோ?? :huh:

 

சீச்சீ அவர்களுக்கு மோர் குடுத்திருக்க மாட்டார்கள், பசுவையே குடுப்பார்கள் , பாலே கறந்து அருந்தலாம்...! :lol::)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.