Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் முன்னாள் போராளிகளை கிளிநொச்சியில் இரகசியமாகச் சந்தித்த ஸ்டீபன் ராப்! – ஏற்பாடு செய்த ஐஓஎம் மீது பாய்கிறது அரசாங்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் முன்னாள் போராளிகளை கிளிநொச்சியில் இரகசியமாகச் சந்தித்த ஸ்டீபன் ராப்! – ஏற்பாடு செய்த ஐஓஎம் மீது பாய்கிறது அரசாங்கம். 

[sunday, 2014-02-09 07:39:16]
rapp-090214-150.jpg

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் பிரதிநிதியான, ஸ்டீபன் ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது இலங்கை அரசாங்கத்துக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தமாத முற்பகுதியில், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான குழுவினர், கிளிநொச்சியில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனத்தில்(ஐஓஎம்) , விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

  

இந்தச் சந்திப்புக்கு புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனமே ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதன்மூலம், புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனம், தமது கடப்பாட்டை மீறியுள்ளதாக அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இந்தச் சந்திப்பில் ஸ்டீபன் ராப்புடன் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனும் கலந்து கொண்டிருந்தார்.

கொழும்பிலுள்ள ஐ.நா வதிவிட இணைப்பாளரும், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான வதிவிடப் பிரதிநிதியுமான சுபினய் நந்தியுடன் நடத்தப்பட்ட ஆலோசனையை அடுத்தே, இந்தக் கூட்டத்தை புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததாக, அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளன.

இந்த இரகசியச் சந்திப்பு பற்றிய விபரம், தெரியவந்ததை அடுத்து, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கோபமடைந்து, கொழும்புக்குத் தெரியாமல் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தது குறித்து புலம்பெயர்ந்தொருக்கான அனைத்துலக அமைப்பை கண்டித்துள்ளார்.

உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தெரியாமல் உள்ளூர் பணியகம் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு கருதுகிறது. சந்திப்பின் போது, வன்னியின் கிழக்குப் பகுதியில் நடந்த இறுதிக்கட்டப் போர் பற்றி, அமெரிக்க குழுவினர் முன்னாள் விடுதலைப் புலி போராளிகளிடம் விசாரித்துள்ளனர். இதுதொடர்பாக இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள தகவல்களின்படி, சிறப்பு படையணிகளில் இடம்பெற்றிருந்தவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விடுதலைப் புலி போராளிகள், புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனம் மூலம் பயன்களைப் பெற்றுள்ளனர்.

அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட தகவல்களை, அமெரிக்கா தமது தீர்மானத்தை நியாயப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.போர் முடிவுக்கு வந்த பின்னர், புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனம் முன்னாள் போராளிகளுக்கான நலவாழ்வுத் திட்டங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=103243&category=TamilNews&language=tamil

இந்த சந்திப்பு நடந்தது உண்மையெனில் தமது மக்களின் விடிவிற்காக ஆயுத போராட்டம் தோற்கடிக்கபட்ட நிலையிலும் தமது மக்களின் விடிவிற்காக புதிய வடிவில் தம்மால் இயன்ற வகையில் போராட்டத்தை முன்னெடுத்த அந்த போராளிகளுக்கு நன்றி.

யார் வந்தாலும் இன்றும் புலிகளை தான் தமிழ் பிரதிநிதிகளாக சந்திக்கிறார்கள்.

இது போல இதுவரையில் ஒரு புரளி ஒன்றை இலங்கை கிளறியது கிடையாது.  

 

யார் அந்த புலிகள்?

 

அனந்தியை அமெரிக்க அதிகாரிகள் சந்தித்த்தால் இப்படி புரளியை ஸ்டீபன் வீடு திரும்பி ஒரு மாதத்தின் பின் அவிட்டுவிடுகிறார்கள். இவ்வளவு நாளும் பெரிய மந்திரி இறக்குமதிசெய்யும் அபினை அடித்துப்போட்டு மயக்கத்தில் கிடந்தார்களா பாதுகாப்பு மந்திரி சபை ஊழல்-லியர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதாவது ஒரு விடயத்தை ஒத்து கொண்டிருக்கினம், தமிழர்தான் புலிகள் புலிகள்தான் தமிழர்கள் என்பதை 

யார் வந்தாலும் இன்றும் புலிகளை தான் தமிழ் பிரதிநிதிகளாக சந்திக்கிறார்கள்.

 

அவர்கள் எல்லம் படிக்காத மோட்டு கூட்டம் என்பது உங்களுக்கு தெரியாதா? அது தமிழனை மட்டும் அல்ல, வெள்ளைக்காரனுக்கும் பொருந்தும், இதை நான் சொல்லவில்லை - :-)))))

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலி என்றால் கிலி கொண்டு ஓடிவந்து எழுதுறவையை காணோம். :D   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு சிங்களவர் மோட்டுக்கூட்டம் என்றார்கள். இறுதியில் யார் மோட்டுக்கூட்டம் என்பதை சிங்களவர் செய்கையில் காட்டினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில்

எதை எடுத்தாலும்

அதை புலிகள் மேல் போட்டு

எதை  செய்யமுனைபவர்களுக்கும் அதே  பட்டத்தை சூடி  பழகிப்போனதால்

இவ்வாறு செய்கிறார்கள்

ஆனால் இனி  அது எடுபடாது

அத்துடன் அவை  அவர்களுக்கே ஆப்பாகவும்

மற்றவர்களை தூண்டிவிடுவதுமாகவுமே அமையும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லக்கில் தூக்கும்போது சிங்களவர் மோடர் என்று நினைத்தார் இராமனாதன்.

கடைசி நேரத்தில் சுடலை ஞானம் பெற்று.. ஒன்றிரண்டு கல்லூரிகளை கட்டிவிட்டு போய்விட்டார்.

50இக்கு 50 கேட்டு மலையக மக்களின் வாக்குரிமைக்கு வேட்டுவைப்பதன்மூலம் ஈழத்தமிழனுக்கு சலுகைகளை வாங்கலாம் என்று நினைத்தார் பொன்னம்பலம்.
இறுதியில் பரந்தன் காங்கேசந்துறை தொழிற்சாலைகளுக்கு அப்பால் செல்ல முடியாமல், வயது போன நேரத்தில் கூட்டணி அமைத்துவிட்டு போய்விட்டார்.

 

ஆக பெரும்பாலான தமிழர் கட்டையில் போகும்போதுதான் தன் இனத்தைப்பற்றி சிந்திப்பதை வரலாறுகள் கூறுகின்றன.

ச்சே...2009 க்கு முதலே...இவர்களை எல்லா மாநாட்டுக்கும் அனுப்பியிருக்கலாம்.......

 

ஏதோ தமிழர்களின் பிரதிநிதியா அவர்களை சந்தித்த மாதிரி பலரின் கருத்து இருக்கு . :icon_mrgreen:

பாவங்கள் இரு பக்கத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அனுதாபம் தெரிக்கவும் ,இறுதி யுத்தம் பற்றியும் அறியவும் சந்திக்க போயிருப்பார் .

அதைவிட்டு நாட்டை பிடிச்சு உங்களிட்ட தாறம் என்று சொல்ல போனாரோ தெரியாது . :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தமிழர்களின் பிரதிநிதியா அவர்களை சந்தித்த மாதிரி பலரின் கருத்து இருக்கு . :icon_mrgreen:

பாவங்கள் இரு பக்கத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அனுதாபம் தெரிக்கவும் ,இறுதி யுத்தம் பற்றியும் அறியவும் சந்திக்க போயிருப்பார் .

அதைவிட்டு நாட்டை பிடிச்சு உங்களிட்ட தாறம் என்று சொல்ல போனாரோ தெரியாது . :D

 

 

அப்படிக்கொடுக்க

நாங்க விட்டுவிடுவமா என்ன...???

நண்பர் சொன்னது நினைவு வருகின்றது .

புலிகள் தமிழ் ஈழம் பிடித்தால் பல தமிழர்கள்  இலங்கைக்கு தான் குடிபெயர்வார்கள் .

அப்ப என்னென்று விடுகின்றது . :icon_mrgreen:

ச்சே...2009 க்கு முதலே...இவர்களை எல்லா மாநாட்டுக்கும் அனுப்பியிருக்கலாம்.......

ச்சே 2009க்கு முதலே இந்த யோசனை உங்களுக்கு தோன்றியிருந்தால் பிரச்சினையை முடிச்சிருக்கலாம். ஐஞ்சு வருசம் லேட்.

நண்பர் சொன்னது நினைவு வருகின்றது .

புலிகள் தமிழ் ஈழம் பிடித்தால் பல தமிழர்கள் இலங்கைக்கு தான் குடிபெயர்வார்கள் .

அப்ப என்னென்று விடுகின்றது . :icon_mrgreen:

நண்பருக்கு அரசியல் சரித்திரம் தெரியாதாக்கும்?

தமிழீழம் கிடைக்கும்போது சிங்கள பகுதியில் இருக்கும் தமிழரும், இசுலாமியரும் அடித்து விரட்டபடுவார்கள்.

பின் 1983 போல் கப்பல் ஏறி யாழ்பாணத்திற்கு தான் வரவேண்டும்.

ச்சே 2009க்கு முதலே இந்த யோசனை உங்களுக்கு தோன்றியிருந்தால் பிரச்சினையை முடிச்சிருக்கலாம். ஐஞ்சு வருசம் லேட்.

 

இந்த யோசினை எனக்கு வந்து ஒரு பிரயோசினமும் இல்லை.... "அவருக்கு" வந்திருக்கோணும்...பாவம் தமிழர்கள் :)

இந்த யோசினை எனக்கு வந்து ஒரு பிரயோசினமும் இல்லை.... "அவருக்கு" வந்திருக்கோணும்...பாவம் தமிழர்கள் :)

அவருக்கு யோசனை சொல்லுமளவிற்கு உங்களின் அரசியல், இராணுவ அனுபவங்கள் என்ன?

அண்ணா, முதலில் உங்கட திட்டத்தின் படி ஒரு சிறி லன்கனை கனடாவில் கவுன்சிலராக்கி முதலில் காட்டுங்கோ பார்ப்பம்?

மல்வெர்னில், மிசிசாகாவில் இறக்கிய உங்கள் அரசியல் சிங்கங்கள் டிபோசிட் இழந்து வாலை சுருட்டிவிட்டார்கள் ஆனால் நீங்கள் சவுண்டை நிப்பாட்டவில்லை.

அது சரி, உங்கள் இணக்கவாத செஞ்சேனை தலைவர் கடைசி 5 வருடத்தில் என்ன தீர்வு வைத்தார்? கள்ளகாதலுக்கு செஞ்சேனை தோழரை சகோதரத்துவ படுகொலை செய்வதா உங்களது அரசியல்?

நாங்கள் பாவம் தான் கண்ட கண்ட அரை அவியல் எல்லாம் அரசியல் பேசி கேட்கவேண்டிய நிலைமை.

விவசாயி விக்: ராதிகா சிர்ப்பசெசன் ஒரு Srilankan  அவர் கனடிய MP  :)

விவசாயி விக்: ராதிகா சிர்ப்பசெசன் ஒரு Srilankan அவர் கனடிய MP :)

இங்கு தான் கொஞ்சம் நீங்கள் திணறுகிறீர்கள்.

மட்டை போட்டவரை தமிழராக்குவதும் வெற்றி பெற்றவரை சிறி லங்கன் ஆக்குவதும் நீங்கள் காலந்தொட்டு செய்யும் யுக்தி.

சிறி லங்கன் என்றால் என்ன? ராதிக்காவிடம் இந்த சிறி லங்கன் குடியுரிமை இருக்கா?

சிறி லங்கன் என்றால் தமிழா,சிங்களமா,இசுலாமியரா?

ஏன் இந்த சிறி லங்கன்ஸ் வீசா எடுத்து சிறி லங்கா போயினம்?

ராதிகா கனடிய தமிழ் பெண்மணி.

தமிழர் என்று சொல்லி தலை நிமிர்ந்த காலம் போய் சிறி லங்கன் என்று சொல்லி சில்லறை சேர்க்கும் காலத்தில் வாழ்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.