Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னை திரும்பிய திவாகர் உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை திரும்பிய திவாகர் உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார்! 

[sunday, 2014-03-02 10:04:27]
singer-thivakar-150-seithy.jpg

ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தல்களால் இலங்கை சென்றோம், இலங்கைக்கு செல்வதற்கு எனக்கு விருப்பமே இல்லை. இலங்கை சென்றதற்காக உலகத் தமிழர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். நாம் தமிழர்கள், யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, என்றும் தமிழர்களுக்கு அநீதி செய்ய நான் தயாரில்லை, தமிழக இயக்குனர் கௌதமன் மற்றும் உணர்வாளர்களின் வேண்டுதலில் என் நிகழ்ச்சியை ரத்துச் செய்தேன் என சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்ற திவாகர் தெரிவித்தார்.

  

நாம் தமிழர்களை என்றும் எதிர்த்ததில்லை நானும் தமிழருக்காகப் போராடுவேன் என இலங்கையில் ஏற்பாடாகியிருந்த சுப்பர் சிங்கர் இசைநிகழ்ச்சிக்காக கொழும்பு சென்று தமிழ் உணர்வாளர்களின் தூண்டுதலினால் அந்நிகழ்ச்சி ரத்தாகி மீண்டும் சென்னை திரும்பிய சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்ற திவாகர் தெரிவித்தார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104755&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்ததிக்கு நன்றி

ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தியபோதே மறுத்திருந்தால் உண்மையில் நீங்கள் ஒரு உணர்வாளன் என்று பெருமிதம் கொண்டிருப்போம். 

இவருக்கு எங்களின் பிரச்சனை முன்னர் தெரிந்திருக்கவில்லையாம் ஆனால் இவர் தமிழர் என்பதற்காகவே என்னை போல பலர் உங்களுக்கு ஆதரவளித்திருந்தோம் ஆனால் நீங்கள் தமிழனாக இருந்திருக்கவில்லை என்று நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கின்றது  

  • கருத்துக்கள உறவுகள்

நடத்தப்படவிருந்த நிகழ்ச்சி தமிழர்களுக்கு எதிரானது என்பது தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதை திவாகர் தனது பேட்டியில் திரும்பத் திரும்பத் தெரிவிக்கின்றார். 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்' என்ற தமிழ் குறளையும் நாங்கள் கையில் வைத்துக்கொண்டு வருந்தி மன்னிப்புக் கோரும் ஒருவரை மேன்மேலும் வருத்தமடையச் செய்யாது மன்னிப்பதே சிறந்தது. திவாகர் மன்னிப்புக் கோருகிறார். ஆனால் அங்குசென்ற மற்றவர்களில் தமிழர்களே இல்லையா? அவர்கள் யாருமே இதுபற்றி வாயைத் திறந்ததாக ஒரு செய்தியேனும் வரவில்லையே!!.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒருவர்தான் தமிழர். மற்றவர்கள் கன்னடரும் மலையாளியும்

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது தான் தெரிவானார்

அதனால் இழுத்த இழுவைக்கெல்லாம் ஆடவேண்டியநிலையிலிருப்பார்

வருந்துகிறார்

இனி  செய்ய  மாட்டேன்  என்கிறார்

அரவணைத்து செல்லவேண்டியவர்

மறப்போம்

மன்னிப்போம்

ஆம் விட்டுவிடுங்கள் கலைஞ்சன் எப்போதும் இளகிய மனம் கொண்டவன் ..........முடிவெடுக்கும் சந்தர்ப்பங்களும், சவால்களும் கொண்டவன் .................இவை அனைத்துக்கும் மேலாய் சிறியவன் ,எம்மைப்போல வாழ்க்கை அனுபவம்றவன் .................இவன் உணர்வான் ,இவனை புறக்கணிக்காமல் தமிழ் உணர்வில் மென்மேலும் ஊட்டுவோம் ,,,,,,,,,,,,,,,,எமக்குள் அடங்கி சாதனை படைப்பான் .ஏன் அனுபவத்தில் இருந்து .............புரிதலும் , புரியாததும் உங்கள் எண்ணத்தில் .........மன்னிக்கவும்  மனதை நோகடித்திருந்தால் .................

  • கருத்துக்கள உறவுகள்

பாவமப்பா அவன்ட பிழைபிலையும் மண்ணை அள்ளி போட்டுடாங்கள்.

 

கொழும்பிலே ஒரு இசை நிகழ்ச்சி நடந்திட்டால் மட்டும் இலங்கையிலே அமைதி குடிகொள்கிறது என்று நம்புறத்துக்கு ஐநா என்ன Galleface  ல கடலை விக்கிற அமைப்பா. போங்கப்பா நீங்களும் உங்கட எண்ணங்களும். :lol:

 

பாவமப்பா அவன்ட பிழைபிலையும் மண்ணை அள்ளி போட்டுடாங்கள்.

 

கொழும்பிலே ஒரு இசை நிகழ்ச்சி நடந்திட்டால் மட்டும் இலங்கையிலே அமைதி குடிகொள்கிறது என்று நம்புறத்துக்கு ஐநா என்ன Galleface  ல கடலை விக்கிற அமைப்பா. போங்கப்பா நீங்களும் உங்கட எண்ணங்களும். :lol:

 

நல்ல கருத்து.

இருந்தாலும் இவர்கள் திரும்பி வந்ததை வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு எங்களின் பிரச்சனை முன்னர் தெரிந்திருக்கவில்லையாம் ஆனால் இவர் தமிழர் என்பதற்காகவே என்னை போல பலர் உங்களுக்கு ஆதரவளித்திருந்தோம் ஆனால் நீங்கள் தமிழனாக இருந்திருக்கவில்லை என்று நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கின்றது  

 

புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மிள் பலர் சிங்கள தேசத்துப்பிரச்சனைகளைத் தெரிந்திருந்தும், சிங்களத்து டில்மா தேனீரைப்பருகிறார்கள். சிறிலங்கா விமானத்தில் பறக்கிறார்கள். சிங்களத்து நெக்டோவினை அருந்துகிறார்கள். சிங்களத்து துடுப்பாட்ட அணிவரும் போது சிங்கக்கொடியுடன் ஆடுகிறார்கள். ஆனால் இவர்களில் யாராவது முத்துக்குமார், செங்கொடி போன்றவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறார்களா?. திவாகரை அரவணைப்போம்.

இவரை வைத்து புலத்தில் ஒரு கலைநிகழ்ச்சி வைத்து பணம் சேர்த்து அதை ஈழத்தில்/இந்தியாவில் பரிதவிக்கும் உறவுகளுக்கு யாரவது உதவினால் நல்லம்...இயக்குனர் கௌதம் இதை முன்னின்று செய்ய வேண்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.