Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”டிப்ரஷன்” நோயால் வாழ்க்கையை இழந்து தவிக்கும்.... இளையோர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11-1397181754-stress5456-600.jpg

 

”டிப்ரஷன்” நோயால் வாழ்க்கையை இழந்து தவிக்கும் இளைஞர்கள்.

 

இன்றைய விரைந்து ஓடும் காலகட்டத்தில் எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றது ஒரு புது வியாதி.

 

குறிப்பாக இளைஞர்களைத் தாக்கும் இவ்வியாதி கிட்டதட்ட அவர்களை அழிவுப்பாதையிலேயே தள்ளி விட்டு விடுகின்றது.

 

உடலில் ஏற்படும் நோய்க்கு கூட மருந்து உண்டு.ஆனால், "டிப்ரஷன்" என்று அழைக்கப்படும் இம்மனச்சிதைவு நோய்க்கு மருந்து இருந்தாலும் அது பலனளிப்பதில்லை.

 

தவறான எண்ணங்கள்:

மாறிவரும் கால கட்டத்தில் வாழ்க்கை என்பது இளைஞர்களைப் பொறுத்தவரை காதல் பூக்கும் உலகம், பணம் காய்க்கும் தொழில், நாகரிக அரக்கன் என்றவைகளை மட்டுமே கொண்ட ஒன்றாக நினைக்க வைத்துள்ளது.

 

எல்லைமீறும் ஆசைகள்:

ஆனால், அந்த அளவுகடந்த ஆசைகளில் எல்லைமீறிப்போய் அவர்கள் செய்யும் சில காரியங்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையையே அழித்து விடுகின்றது.பெற்றவர்களின் அன்பெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை.

 

டிப்ரஷன் என்னும் “எமன்”:

அவர்களைப் பொறுத்தவரையில் கைநிறைய சம்பளம் வாங்கும் நான் ஏன் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகின்றது. அதில் எல்லை மீறிப் போய் , காதல் படுகுழியில் விழுந்து, வாழ்க்கையின் தாத்பரியங்கள் புரியாமல் எல்லாவற்றையும் இழந்து கடைசியில் "டிப்ரஷன்" என்ற காலனுக்குள் சிக்கி காணாமலே போய் விடுகின்றனர்.

 
கூடா நட்பு கேடாய் முடியும்:

சரி அப்படி ஒன்று,இரண்டு பேர் தங்களின் நிலை புரிந்து, பாலின வேறுபாடுகளைக் கடந்து நல்ல நட்புடன் இருந்தாலும் மற்றவர்கள் விடுவதில்லை.நண்பனுக்கு உதவி செய்கின்றேன் என்ற பெயரில் அவர்களின் மனதை தூண்டி தவறான விசயங்களை விதைத்து விடுகின்றார்கள்.

 
வாழ்க்கை இழப்பு:

விளைவு எல்லாவற்றையும் இழந்து, மனச்சிதைவுக்கு உள்ளாகி, சரியான முடிவு எடுக்க முடியாமல் வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர்.

 
குடும்பம்தான் மருந்து:

குடும்ப சூழல், கூட்டுக்குடும்பம் என்ற முடிச்சுகள் நம்மை கட்டிப்போடுவதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல.நம்முடைய வாழ்க்கை எப்போதும் தறிகெட்டு போய்விடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட சொர்க்கங்கள் அவை. வாழ்க்கை முழுதும் நமக்காக அர்ப்பணித்த பெற்றோருக்கு கண்டிப்பாக நமக்கு எது நல்லது என்பதையும் தெரிய வைக்க முடியும்.

 

மனச்சிதைவுக்கு மருந்து:

எனவே, இளைஞர்கள் இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி, சிதைந்து தற்கொலை முடிவிற்கு போகும் நிலைமையை தடுக்க ஒரே வழி குடும்பத்தினர் காட்டும் பரஸ்பர பாசம் மற்றும் அன்பால் மட்டும்தான் முடியும்.வாழ்க்கையை புரிந்து அவர்களுடைய எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.இதுதான் இம்மனச்சிதை நோய்க்கு ஒரே மருந்தாகும்.

நன்றி தற்ஸ்தமிழ்

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சமுதாய   அறிவூட்டல்  பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்கள் இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி, சிதைந்து தற்கொலை முடிவிற்கு போகும் நிலைமையை தடுக்க ஒரே வழி குடும்பத்தினர் காட்டும் பரஸ்பர பாசம் மற்றும் அன்பால் மட்டும்தான் முடியும்.வாழ்க்கையை புரிந்து அவர்களுடைய எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.இதுதான் இம்மனச்சிதை நோய்க்கு ஒரே மருந்தாகும்.

நன்றி - சிறி

  • கருத்துக்கள உறவுகள்

டிப்பிரஷன் ஆண்களுக்கு மட்டும் தான் வருமா...??? நோய்களுக்கு ஆண்,பெண் என்ற பேதம் தெரியாது என்று நினைக்கிறன்..எல்லாம் அவர்,அவர் மனங்களைப் பொறுத்தது..சிலர் எவ்வளவு தான் பிரச்சனைகள் வந்தாலும் அதற்கு உரிய வைத்தியரை நாடும் அழவுக்கோ இல்லை மருந்துகளை எடுக்கும் அழவுக்கோ போவதில்லை.அதற்காக யோசனை,கவலைகள் அற்ற மனிதர்களாகவும் வாழ்கிறர்கள் என்றும் சொல்லி விட முடியாது. நோயாளிகளுக்கு  இரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலே உமக்கு அடிப்படையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது..இந்த வைத்தியரை ஒருக்கா பார்த்துட்டு வாறீரா என்று கேக்கிற குடும்ப வைத்தியர்களும் இருக்கிறார்கள்.அதாவது தங்களால் நோயாளிகளிடம்  அறிய முடியாத ஒன்றை வேறை விதமாக அறிய முற்படும் செயல்..இதை எல்லாம் முறியடித்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள்...

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிப்பிரஷன் ஆண்களுக்கு மட்டும் தான் வருமா...??? நோய்களுக்கு ஆண்,பெண் என்ற பேதம் தெரியாது என்று நினைக்கிறன்..எல்லாம் அவர்,அவர் மனங்களைப் பொறுத்தது..சிலர் எவ்வளவு தான் பிரச்சனைகள் வந்தாலும் அதற்கு உரிய வைத்தியரை நாடும் அழவுக்கோ இல்லை மருந்துகளை எடுக்கும் அழவுக்கோ போவதில்லை.அதற்காக யோசனை,கவலைகள் அற்ற மனிதர்களாகவும் வாழ்கிறர்கள் என்றும் சொல்லி விட முடியாது. நோயாளிகளுக்கு  இரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலே உமக்கு அடிப்படையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது..இந்த வைத்தியரை ஒருக்கா பார்த்துட்டு வாறீரா என்று கேக்கிற குடும்ப வைத்தியர்களும் இருக்கிறார்கள்.அதாவது தங்களால் நோயாளிகளிடம்  அறிய முடியாத ஒன்றை வேறை விதமாக அறிய முற்படும் செயல்..இதை எல்லாம் முறியடித்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள்...

 

11-1397181771-depression1-600.jpg

 

யாயினி... உங்களது கேள்வி, என்னை மனம் குலையச் செய்து விட்டது.

காலையில்... வேலைக்குப் போகும், சிறிய இடைவெளியில்... இதனை கட்டாயம் யாழில் இணைக்க வேண்டும், என்ற அவசரத்தில்... தலைப்பையும், போட்ட படத்தையும்.... சரியாக, நான் தெரிவு செய்யாதற்காக... மன்னிக்கவும். :)

 

”டிப்ரஷன்” நோயால் வாழ்க்கையை இழந்து தவிக்கும் இளைஞர்கள். என்ற... தலைப்பை,

”டிப்ரஷன்” நோயால் வாழ்க்கையை இழந்து தவிக்கும்.... இளையோர்கள். என்று மாற்றியுள்ளேன்.

நான் போடும்... எல்லாத் தலைப்புக்களிலும், பெண்களின் படத்தையே... போடுவதால்.

இந்த்தத் தலைப்பில் மட்டும்... ஆண் இருக்கட்டுமே. :D

 

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட.... நிலாமதி அக்காவுக்கும், அன்புச் சகோதரன் விசுகுக்கும் நன்றி. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கூட்டுக்குடும்பம் இல்லாட்டி இல்லாத பொல்லாத வருத்தமெல்லாம் வரும்.
இப்பவெல்லாம் சீரழிஞ்ச வாழ்க்கை....புருசன் எத்தினை மணிக்கு வேலையாலை வருவான் எண்டு மனுசிக்கும் தெரியாது....மனுசி எத்தினைமணிக்கு வேலையாலை வருவ எண்டு மனுசனுக்கும் தெரியாது.... :o
பிள்ளையளுக்கு இரண்டும் தெரியாது...... ^_^
நாறல் சாப்பாட்டை சூடாக்கி சாப்பிட்டுக்கொண்டு கோலாவும் கார்ட்டூன் படமும் எண்டு கதை அந்தமாதிரி போகுது... :D
இப்பத்தையான் கார்ட்டூன் படத்தை பாக்க வேறை உலகத்திலை இருக்கிற பீலிங் எல்லாம் வரும்..... :(
  • கருத்துக்கள உறவுகள்

டிப்பிரசன் அநேகமாக புலத்தில் இருப்பவர்கள் எல்லோருக்கும் உண்டு.ஆட்களைப் பொறுத்து/அவர்களது பிரச்சனைப் பொறுத்து கூட்டிக் குறையலாம். எனக்கும் கொஞ்ச காலம் இருந்தது இப்ப இல்லை நிம்மதியாய் இருக்கேன்.சனியன் என்னிடம் திரும்பி வரவே கூடாது:( இந்த நேரத்தில் வயிறு உப்பி போய் இருக்கும்,நெடுகப் பசிக்கும்,கோபம்,கோபமாய் வரும் என்பன சில அறிகுறிகளாகும். பதிவுக்கு நன்றி தமிழ்சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு 'சமுதாயப் பிரச்சனையைத்' தொட்டிருக்கிறீர்கள், தமிழ் சிறி!

 

தமிழர்களிடத்தில், இந்தப் பிரச்சனை மிகவும் அதிகம்!

 

எமது கலாச்சாரம், தெரிந்தோ, தெரியாமலோ, பல சுமைகளை எம்மீது ஏற்றி விடுகின்றது!

 

துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் எல்லாவற்றையும் சுமந்தேயாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் நிலையொன்று ஏற்படும்!

 

எமது கோவில்களாவது, இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒரு முக்கியமான 'பங்களிப்பை' வழங்க வேண்டும்!

 

ரதி சொன்னது போல, ஒவ்வொரு மனிதனின் அல்லது பெண்ணின் வாழ்க்கையிலும் ' ஒரு கட்டம்' வந்து போகும்!

 

அதை அடையாளம் காண்பதுடன், அது மீண்டும் வராமல் பார்த்துக்கொள்வதும் தான் மிகவும் முக்கியமானது!

  • கருத்துக்கள உறவுகள்

மனஅழுத்தம் என்பது எல்லாவகையான மனிதர்களுக்கும் உள்ளது இல்லை என்று மறுதலிப்பவர்கள் மிகச்சிலரே. குறிப்பாக நம்மவர்களை எடுத்துக் கொண்டு அதாவது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை எடுத்துக் கொண்டால் விகிதாசாரத்தில் கூடிய அளவு பாதிப்புடையவர்களாக இருப்பதை அவதானிக்கலாம்.அடிப்படை வாழ்வுக்கான பிரச்சனைகள் பொருளாதாரம், சமூக வாழ்வு என்று பற்பல கோணத்தில் இந்த மனஅழுத்தம் பலரைத்துன்புறுத்துகிறது... இதில் ஒரு உண்மை எதுவென்றால் தமக்கு மன அழுத்தம் உள்ளதை பலர் அறிவதில்லை நீண்டகாலமாக இருக்கும் ஒரு விடயத்தை அடையாளம் கண்டு கொள்ளாமல் அது தமது இயல்பான குணம் என்பதாக நினைத்து கொள்கிறார்கள் அல்லது தாம் சார்ந்தவர்களின் குணங்கள் என்று அதனை அடையாளம் காண முற்படாமலே அதற்கு தம்மை முழுமையாக்கி விடுகிறார்கள் என்பதேயாகும். தொடர்ச்சியாக ஒருவருடன் உரையாடும்போது இலகுவாக கண்டு பிடித்துவிடலாம். பல சமயங்களில் இவருக்கு மன அழுத்தம் உள்ளது என்பதை காட்டிக் கொள்வதிலும் பார்க்க காட்டாமல் இருப்பதே நன்மையானதாகவும் இருக்கிறது.. ஏனெனில் மன அழுத்தம் தொடர்பாக நம்மவர்களுக்குள் போதிய தெளிவில்லாமையே.. மன அழுத்தம் என்பது ஏதோ பைத்தியக்காரப்பட்டத்தைத் தரும் என்பதுபோல் மிகப்பயங்கரமாக கற்பனைபண்ணப்பட்டுவிடும் அபாயம் நம்மவர்களுக்குள் அதிகம் சாதாரணமாக ஒருவருக்கு மன அழுத்தம் என்று நாங்கள் பேசிக்கொண்டாலே அடுத்த நாள் குறிப்பிட்ட அந்நபருக்கு மெண்டல் ஆக்கிப்போச்சு என்று கூறிக் கொள்ளும் கூர்ப்பியல்பு நம்மிடையே அதிகம். மன அழுத்தத்தைக்காட்டிலும் அது வெளியே மற்றவர்களுக்குத் தெரிந்து அதன் மூலம் தாம் ஏளனத்திற்கு ஆளாகி விடக்கூடாதே என்கிற தாக்கம் அதிகம் அதுவே வேறொரு பெருந்தாக்கத்திற்கு வழிவகுத்துவிடும்.... மன அழுத்தம் என்பதை பாதிக்கப்படுபவர் விருப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டால் மாத்திரமே பலனளிக்கக்கூடியது மற்றப்படி எந்த முயற்சியும் பலனளிக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.