Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா " மேதின உரையின் பின் விக்கினேஸ்வரன் பொலிசாரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்

Featured Replies

நாற்பதினாயிரம் மொக்கங்களை விட நாலு நல்ல மனம் படைத்தவனால்தான் சோறு சாப்பிடிறீங்க என்பதுதான் புண்ணியம் சார்  :D

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் விக்கியர் அவசர அவசரமா அறிக்கை விடுகின்ற அளவுக்கு நிலைமை, அங்க தான் நிக்கிறார் தலைவர்....... அர்ஜுன் அண்ணா போன்றவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாம இருக்கு......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம் வேண்டும் என்று வாக்கு போடும் வயது எனக்கு அப்போ இருக்கவில்லை புத்தனுக்கு அது அப்போ இருந்தது என்பது புத்தன் எனக்கு அண்ணரா . :icon_mrgreen:

மாவட்டசபை பற்றிய கூட்டங்களுக்கு நானும் சென்றேன் .அதில் கூட்டணி என்ன சொன்னார்கள் என்று புத்தனுக்கு நினைவு இருக்கோ தெரியாது .அதிலும் காசியர் பேசியது இன்னமும் எனக்கு நினைவு இருக்கு .சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் .மாவட்ட சபை அதிகாரம் என்பது தமிழ் ஈழத்தை நோக்கி போகும் பயணத்திற்கு ஒரு தங்குமிடம் தான் .

பள்ளிகூடம் போகாத விளங்காபயல்கள்  இதை விளங்காமல் தமிழ் ஈழத்தை அமிர் விற்று விட்டார் என்று கூட்டங்களையே குழப்பினார்கள் .அதில் முக்கியமானவர்கள் தமிழ் இளைஞர் பேரவை( குறிப்பாக உமாவும் மாணிக்கமும் ).

------------------------------------------------

 

நீங்கள் எனக்கு தோழர் :D....மற்றது கள்ள வாக்கு போட இரண்டு மூன்று வயது கூடிய அண்ணமாருடன் போய்யிருக்ககூடும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையானால் ....இங்கு இவ்வளவு கருத்தும் தேவையில்லை என்பதே என் பணிவான வேண்டுகோள் ..............[ சோத்த தின்னிட்டு பொத்துக்கொண்டு படுப்பதே மேல் :D  ] 

இதோ ஜந்தாம் கட்டாம் போர் ஆரம்பிக்க போகின்றது.தமிழ்சூரியன் வகையறாக்கள் விசில் அடிக்க தயராகி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் பற்றிய கருத்து தொடர்பில் விக்னேஸ்வரன் விளக்கம்:-

03 மே 2014

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மேதின உரையின்போது தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்தொன்று தொடர்பில் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் தனது மேதின உரையில், 'இராணுவத்தை ஒருபோதும் வட மாகாணத்திலிருந்து எடுக்க மாட்டோம் என்று ஜனாதிபதி இறுமாப்பாகக் கூறியதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன். ஒருகாலத்தில் பிரபாகரனும் கேட்பாரின்றி அதிகாரத்தில் இருந்தார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல. அப்படியாயிருந்தும் இப்படியான சவாலான கருத்துக்களை அவர் ஏன் முன்மொழிகின்றார் என்று எண்ணி அவர் மீது பரிதாபப்பட்டேன்' என்று கூறியிருந்தார்.

அதுபற்றி எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அதுபற்றிய விளக்க அறிக்கை ஒன்றை முதலமைச்சர் இன்று வௌியிட்டுள்ளார்.

'அலெக்ஷாண்டர் ஒரு மகாவீரன். அதற்காக அவன் அதிகாரங்கள் அனைத்தையும் தன் வசம் வைத்திருக்கவில்லை என்று கூற முடியாது. பிரபாகரன் ஒரு மகா வீரன் என்று சரத்பொன்சேகா கூட அண்மையில் கூறியிருந்தார். அதற்காக அவர் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசம் வைத்திருக்கவில்லை என்று கூற முடியாது' என்று கூறியுள்ளார் விக்னேஸ்வரன்.

'ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 18-வது திருத்தச் சட்டத்தின் பின் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசமே வைத்திருக்கின்றார். இன்று கேட்பாரின்றி அதிகாரத்தில் இருக்கின்றார். இவை எவ்வளவு காலத்திற்கு என்பதைப் பற்றி ஜனாதிபதி சிந்திக்க வேண்டும் என்றே மேற்கண்டவாறு கூறினேன்' என்றும் கூறியுள்ளார் முதலமைச்சர்.

'தங்கை அனந்தி அவர்கள் நான் கூறியதன் அர்த்தம் புரியவில்லை என்றும் ஆனால் முதலமைச்சர் காரணமில்லாமல் எதுவும் கூறியிருக்க மாட்டார் என்றும் கூறியதாக அறிந்தேன். அப்படிக் கூறியிருந்தால் அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், 'நான் பேச்சு முடிந்து மண்டபத்தில் இருந்து வெளியே வந்தபோது எவருமே என்னை அண்டி எதுவும் கேட்கவில்லை, கேட்க எத்தனிக்கவும் இல்லை. எல்லோரும் வழக்கம் போல் கைகூப்பி வணக்கம் தெரிவித்தே என்னை வழியனுப்பினார்கள்' என்றும் சி.வி. விக்னேஸ்வரன் கூறினார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106418/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
மேலும், 'நான் பேச்சு முடிந்து மண்டபத்தில் இருந்து வெளியே வந்தபோது எவருமே என்னை அண்டி எதுவும் கேட்கவில்லை, கேட்க எத்தனிக்கவும் இல்லை. எல்லோரும் வழக்கம் போல் கைகூப்பி வணக்கம் தெரிவித்தே என்னை வழியனுப்பினார்கள்' என்றும் சி.வி. விக்னேஸ்வரன் கூறினார்.
அது......அடுத்த தேர்தலிலும் நீங்கள்தான் முதலமைச்சர்......
  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து  தெரிவது

இன்றுவரை

பிரபாகரனை கேள்வி  கேட்கும் அளவுக்கு எவரும்

மக்களின் முன் வளரவில்லை

மக்களுக்காக  செய்யவில்லை

என்றுமே அந்தநிலை வராது  என்பதை முதலமைச்சர் உணர்ந்ததால் தான் இந்த சலாப்பல் அறிக்கை...........

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து தெரிவது

இன்றுவரை

பிரபாகரனை கேள்வி கேட்கும் அளவுக்கு எவரும்

மக்களின் முன் வளரவில்லை

மக்களுக்காக செய்யவில்லை

என்றுமே அந்தநிலை வராது என்பதை முதலமைச்சர் உணர்ந்ததால் தான் இந்த சலாப்பல் அறிக்கை...........

சளாப்பல் அறிக்கை விட ஈழத்திலும் ஒருவர் உள்ளார் என்பதில் மகிழ்ச்சி.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சளாப்பல் அறிக்கை விட ஈழத்திலும் ஒருவர் உள்ளார் என்பதில் மகிழ்ச்சி.. :lol:

 

 

உங்களது சந்தோசத்தை புரிந்து கொள்ளமுடிகிறது

உங்களுக்கு ஊரிலும் ஒரு தோழர் கிடைத்துள்ளார் என்றால்

சந்தோசம்  வராதா என்ன?? :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொறுப்பான பதவியில்இருப்பவர் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும்.இது தற்செயலாக வாயில் வந்த வார்த்தை கிடையாது.எழுதி வைத்து வாசித்திருக்கிறார்.சொல்ல வந்த கருத்தைச் சொல்வதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.இருந்தும் இந்த வார்த்தைப் பிரயோகம் மக்களிடையே எப்படியெல்லாம் விளங்கிக் கொள்ளப்படும் என்பதை சட்டம் அறிந்தவர் தனக்குள்ளே விவாதித்துப்பார்திருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்காது.இந்தப்பதவியே அவருக்குத் ஒரு வகையில் சம்பந்தர் மூலமாகத் தலைவர் போட்ட பிச்சையே!

மொத்தத்தில்

பல்லக்கேறுவதும் வாயாலே பல்லுடைபடுவதும் வாயாலே!!!

என்பதை நிரூபித்திருக்கிறார்.

யாகாவாராயினும் நாகக்க! காவாக்கால்

சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.