Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பல் ஒன்றை தாக்கியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளனர்

Featured Replies

இனப்பிரச்சனையால் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 தரப்பிற்கிடையில் முதல் முறையாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு முன்னுதாரணம் அற்றதா? :? :roll:

புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான வரைபின் அடிப்படையில் ஒரு தீர்வு பற்றி அடுத்த கட்டத்தில் பேசுவதாகத்தான் ஒஸ்லோ பிரகடனம் அறிவித்ததே அன்றி இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வு பற்றி அல்ல.

LTTE's proposal was about an interim administration and the Oslo declaration also only asserts that both parties will explore a solution (in the future rounds of talks) based on those proposals. The Oslo declaration does not talk about a final solution to the ethnic conflict!

  • Replies 100
  • Views 17.8k
  • Created
  • Last Reply

இனப்பிரச்சனையால் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 தரப்பிற்கிடையில் முதல் முறையாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு முன்னுதாரணம் அற்றதா? :? :roll:

புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான வரைபின் அடிப்படையில் ஒரு தீர்வு பற்றி அடுத்த கட்டத்தில் பேசுவதாகத்தான் ஒஸ்லோ பிரகடனம் அறிவித்ததே அன்றி இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வு பற்றி அல்ல.

LTTE's proposal was about an interim administration and the Oslo declaration also only asserts that both parties will explore a solution (in the future rounds of talks) based on those proposals. The Oslo declaration does not talk about a final solution to the ethnic conflict!

யுத்தநிறுத்த ஒப்பந்தம் முன்னுதாரணம் அற்றது என்பது உலகத்தில் எந்த ஒரு விடுதலைபோராட்ட இயக்கமும் அது எதிர்த்து போராடும் அரசினால் இந்தளவு தூரம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு யுத்த நிறுத்ததை செய்யவில்லை என்பதை துல்லியமாக சுட்டிக்காட்டவே எம்மால் சொல்லப்பட்டது. இது புலிகளின் இராணுவ வெற்றியின் ஒரு அரசியல் அறுவடையே.

அடுத்து ஒஸ்லோ ஒப்பந்தத்தில் இருக்கும் பந்தியே அல்லாமல் என்னால் எழுதப்பட்டது அல்ல. அதை மீண்டும் கீழே தருகிறேன்.

Responding to a proposal by the leadership of the LTTE, the parties agreed to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking peoples, based on a federal structure within a united Sri Lanka. The parties acknowledged that the solution has to be acceptable to all communities.

மேற்குறித்த வரிகளின் தமிழ் வடிவம் கீழ் வருமாறு..

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் யோசனையொன்றுக்குப் பதிலளிக்கு முகமாக தமிழ்மொழி பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் உள்ளக சுய நிர்ணயத்தின் மேல் நிறுவப்பட்ட தீர்வொன்றை ஐக்கிய இலங்கையினுள் சமஸ்டி அடிப்படையில் தேடுவதற்கு இக்கட்சிகள் இணக்கம் தெரிவித்தன. அத்தீர்வு சகல சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை இக்கட்சிகள் ஒப்புக் கொள்கின்றன.

ஆனால்,

LTTE's proposal was about an interim administration and the Oslo declaration also only asserts that both parties will explore a solution (in the future rounds of talks) based on those proposals. The Oslo declaration does not talk about a final solution to the ethnic conflict!

புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான வரைபின் அடிப்படையில் ஒரு தீர்வு பற்றி அடுத்த கட்டத்தில் பேசுவதாகத்தான் ஒஸ்லோ பிரகடனம் அறிவித்ததே அன்றி இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வு பற்றி அல்ல.

இதில் நீங்கள் குறிப்பிடும் மேல் உள்ள வரிகளுக்கு மூலம் என்ன? இதை எங்கிருந்து எடுத்தீர்கள்? இதை ஒஸ்லோ உடன்பாட்டில் இருந்துதான் எடுத்துவந்தீர்கள் எனில் அதன் மூலத்தை நாமும் பார்ப்பதற்கு வசதியாக இணைப்பதை எமக்கு தருவீர்களா?

நான் 2 மொழிகளிலும் எழுதியவை ஒஸ்லோ பிரகடனத்தில் சொல்லப்பட்டது என்ன சொல்லப்படாதது என்ன என்பவற்றை எனது வசனங்களில் அன்றி அந்த பிரகடனத்தின் நேரடி மேற்கோள்களை அல்ல. இதன் நோக்கம் நீர் ஓஸ்லோ பிரகடனத்தின் மேற்கோள்களை போட்டுவிட்டு அதில் இறுதி தீர்வு பற்றி சொல்லியிருப்பதாக போடும் தோற்றப்பாட்டை தெளிவு படுத்தவே.

நான் 2 மொழிகளிலும் எழுதியவை ஒஸ்லோ பிரகடனத்தில் சொல்லப்பட்டது என்ன சொல்லப்படாதது என்ன என்பவற்றை எனது வசனங்களில் அன்றி அந்த பிரகடனத்தின் நேரடி மேற்கோள்களை அல்ல. இதன் நோக்கம் நீர் ஓஸ்லோ பிரகடனத்தின் மேற்கோள்களை போட்டுவிட்டு அதில் இறுதி தீர்வு பற்றி சொல்லியிருப்பதாக போடும் தோற்றப்பாட்டை தெளிவு படுத்தவே.

நான் ஒஸ்லோ பிரகடனத்துக்கு எனது மொழியில் வியாக்கியானம் தரவில்லை.

ஒஸ்லோ பிரகடனத்தில் உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளேன்.

இன்னும் விளக்காம சொல்லவேண்டும் என்றால் ஒஸ்லோ பிரகடனத்துக்கு நீங்கள் விளக்க உரை கொடுக்க வேண்டிய அவசியத்துக்கு அது மற்றவர்களால் புரியமுடியாத மொழியில் எழுதப்பட்ட கிரந்தம் அல்ல.

மீண்டும் ஒஸ்லோ பிரகடனத்தில் உள்ள வரிகளை கீழ் தருகிறேன்.

PARTIES HAVE DECIDED TO EXPLORE A POLITICAL SOLUTION FOUNDED ON INTERNAL

SELF-DETERMINATION BASED ON A FEDERAL STRUCTURE WITHIN A UNITED SRI LANKA

ஒஸ்லோ பிரகடனத்தில் அரசியல் தீர்வு பற்றி பேசப்படாத விடயத்தை பேசப்பட்டது போல் ஒரு தோற்றப்பாட்டை களத்தில் நான் முன்வைப்பதான உங்கள் குற்றச்சாட்டுக்கு அந்த பிரகடன வரிகளை மீண்டும் கீழே தருகிறேன்.

Responding to a proposal by the leadership of the LTTE, the parties agreed to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking peoples, based on a federal structure within a united Sri Lanka. The parties acknowledged that the solution has to be acceptable to all communities.

நீங்கள் சொல்வது போல் '' சொல்லப்பட்டது என்ன சொல்லப்படாதது என்ன'' என்பதில் இருந்து அந்த ஒப்பந்தம் '' புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான வரைபின் அடிப்படையில் ஒரு தீர்வு பற்றி அடுத்த கட்டத்தில் பேசுவதாகத்தான் ஒஸ்லோ பிரகடனம் அறிவித்ததே......'' என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி தலைப்புக்கும் இங்கே நிகழும் கருத்தாடல்களுக்கும் தொடர்பே இல்லை! சமாதானம் உங்கள் விடயத்தை தமிழீழம் என்ற தனிக்களத்தில் தொடருவீர்களா? எங்கெளுக்கெல்லாம் உந்த இடைக்காலத்தீர்வெல்லாம் வேணாம். தனித் தமிழீழமே தீர்வு! அது பேச்சுவார்த்தைகள் மூலமாக வருமென்றால், யாரய்யா ஓம் படமாட்டோமென்றது!

இந்த படம் அவர்கள் டோரா மாதிரியிருக்கிறது! அப்படியா? முதல் எங்கேயோ படம் எட்டுத்ததை தற்போது போட்டு காட்டுகிறார்களோ?

மன்னிக்கவும் எனது தவறு, ஒஸ்லோ பிரகடனம் என்பது 2002 மார்கழியில் நடந்தது. இடைக்கால நிர்வாக சபை பற்றிய வரைபு சமர்ப்பிக்கப்பட்டது 2003 கார்த்திகை.

ஒஸ்லோ பிரகடனம் பற்றி பால அண்ணாவின் விளக்கும் கிளே உள்ளது:

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=13239

இதுவும் ஒரு பொருத்தமான ஆக்கம்:

http://www.sangam.org/articles/view2/?uid=541

அப்படி வரட்டும் பூனை வெளியால் நீங்கள் எங்க இருந்து வாறியள் எண்டு இப்ப விளங்குது 'சமாதானம்'.முதலில் ஒஸ்லோவில் எந்த ஒப்பந்தமும் கைச்சாதிடப்படவில்லை பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படைகளே சிலாகிக்கப்பட்டன.இதனை பாலசிங்கம் வெகுவாக விளக்கி உள்ளார்.ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட பிரகடனம் புலிகளின் தலமையினால் வெளியிடப்படவில்லை.

மேலும் அதென்ன 'மென்மையான' போக்கு அதாவது தமிழர்களின் அபிலாசைகளைப் பிரதினிதித்துவப் படாமல் மேற்குலகம் சொல்லுவதற்கு தலை ஆட்டும் ஆமாம் சாமிப் பொம்மைகள் வேண்டும்.முள்ளந்தண்டிலாத தலமைகளிடம் நீங்கள் அதனை எதிர் பார்க்கலாம்.தமிழர்களின் போரட்டாத்திற்கென சில அரசியல் அடிப்படைகள் இருக்கின்றன,தமிழர்களின் தியாகங்களுக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது.மேற்குலகின் விருப்பங்களுக்கு வளைந்து போக நாங்கள் முள்ளந்தணிடிலாதவர்கள் கிடையாது.எமது சுதந்திரமும் இறமையும் விற்க முடியாதன,அவ்வாறே புலிகளின் தலமையும் விலை போகாதது.அதனால் தான் தமிழ் மக்களும் போராடும் போராளிகளும் அந்தத் தலமைக்கு விவாசமாக உடல்,பொருள், ஆவி என்று அனைத்தையும் ஒப்படைக்கின்றனர்.என்று நீங்கள் எதிர்பார்ப்பது போல் புலிகள் விலைபோகிறார்களோ அன்று எங்கள் போராட்டம் செத்துவிடும்.அதனைத் தான் மேற்குலகம் எதிர்பாக்கிறது.அதற்காகத் தான் நீங்கள்(?) மற்றும் ஜெயபாலன் போன்றோரை நோர்வே அரசு வளர்த்துவிடுகிறது.உங்கள் கருதுக்கள் அச்சொட்டாக ஜெயபாலனின் கருத்துக்குகளைப் பிரதிபலிக்கின்றன. நோர்வே அரசால் அவர் பராமரிக்கப்படுகிறார்,பிரச்ச

பிரித்தானியாவின்ரை விசேட பிரதிநிதி வந்த கப்பலையே உவங்கள் தாட்டவங்கள்? அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

கண்ணீர் அஞ்சலிகள் :cry: :cry:

அப்படி வரட்டும் பூனை வெளியால் நீங்கள் எங்க இருந்து வாறியள் எண்டு இப்ப விளங்குது 'சமாதானம்'.முதலில் ஒஸ்லோவில் எந்த ஒப்பந்தமும் கைச்சாதிடப்படவில்லை பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படைகளே சிலாகிக்கப்பட்டன.இதனை பாலசிங்கம் வெகுவாக விளக்கி உள்ளார். ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட பிரகடனம் புலிகளின் தலமையினால் வெளியிடப்படவில்லை.

மேலும் அதென்ன 'மென்மையான' போக்கு அதாவது தமிழர்களின் அபிலாசைகளைப் பிரதினிதித்துவப் படாமல் மேற்குலகம் சொல்லுவதற்கு தலை ஆட்டும் ஆமாம் சாமிப் பொம்மைகள் வேண்டும்.முள்ளந்தண்டிலாத தலமைகளிடம் நீங்கள் அதனை எதிர் பார்க்கலாம்...............புலிகளின் தலமையும் விலை போகாதது...........நீங்கள் எதிர்பார்ப்பது போல் புலிகள் விலைபோகிறார்களோ அன்று எங்கள் போராட்டம் செத்துவிடும்.அதனைத் தான் மேற்குலகம் எதிர்பாக்கிறது.அதற்காகத் தான் நீங்கள்(?) மற்றும் ஜெயபாலன் போன்றோரை நோர்வே அரசு வளர்த்துவிடுகிறது.உங்கள் கருதுக்கள் அச்சொட்டாக ஜெயபாலனின் கருத்துக்குகளைப் பிரதிபலிக்கின்றன. நோர்வே அரசால் அவர் பராமரிக்கப்படுகிறார்,பிரச்ச

India tipped off Lanka about suspected arms shipment of Tigers

Colombo, Sept. 19 (PTI):

Acting on a tip-off from Indian authorities, Sri Lankan forces have sunk a ship believed to be ferrying arms and ammunition for Tamil Tiger rebels, a top defence source here said today.

The Sri Lankan military was able to intercept the unnamed vessel some 125 miles off the island's coast because of the good intelligence which came from India, the source said.

"We have information of a total of three such ships and we have now taken out one."

Meanwhile, the government's defence spokesman Keheliya Rambukwella told reporters here that the ship sunk by war planes and naval gun boats on Sunday had originated from a port in Indonesia.

Rambukwella, who is also Policy Planning Minister, said Colombo was in touch with Indonesian authorities to get more details.

He said the ship that was sunk on Sunday was believed to be carrying about 150 to 200 tonnes of arms and ammunition.

The government believed that the Tigers may have been trying to smuggle in anti-aircraft missiles and heavy artillery. Some of the artillery fired by Tigers in recent months had been made in China, he said.

http://www.hindu.com/thehindu/holnus/00120...00609191654.htm

நனறி சமாதானம்

The Hindu.... :lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[b]சமாதானம் எழுதியது....

சமாதானம் என்பதன் அர்த்தம் எமது அரசியல் பார்வையில்தான் உண்மையான அர்த்தம் கொள்கிறது. யுத்தத்தின் நீட்சி தமிழ் இனத்தை இலங்கை தீவில் பூண்டோடு அழித்துவிடும். தொடர்ச்சியான யுத்தம் சிங்கள இனவாத மேன்மைக்கே வழிவகுக்கும். சமாதான கோசத்தின் மூலம்தான் நாம் எமது இலக்கை அடைய முடியும்.

[color=red]பதில்

உமது கருத்து யுத்தம் என்ற வீதி முடிந்துவிட்டது.

மீதியை சமாதானத்தின் வீதியால்ததான் கடக்கவேண்டும் தேசியத்தின் விருப்பத்துக்கு அப்பால் காலம் நிர்ப்பந்திக்கிறது மறுத்தால் இனத்தை மரணம் விளுங்கிவிடும், இசைந்தால் கிடைப்பதப் பெற்றுவாழலாம்.

ஏன் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே சமாதானத்திலேயே பயணித்து இருக்கலாமே இந்த இளப்புக்களுக்கும் தேவை இருந்திருக்காதே.

சீசி அப்படி இல்லை குறிப்பிட்ட அளவு தூரம் யுத்தத்தில் பயணம் செய்தால் தான் சமாதானத்தில் இருந்து அடையக்கூடிய ஒரு அரசியல் முதலீட்டைப்பெறலாம் பின் சாமாதானத்தை தொடரலாம்.

அது எப்படி ஆயுதத்துக்கு மிரளாத அரசவாதம் சமாதானத்துக்கு மிரளவேண்டும்.

சர்வதேச அழுத்தம் எந்த அரசயும் பணியவைக்கும். எனவே சமாதானத்தின் பக்கம் நாம் நின்றால் அது எமக்கு சாதகமாய் நிற்க்கும்.

அப்படியா பலஸ்தீனரின் போராட்டம் உலக அங்கீகாரம் பெற்றது. அவர்கள் படுபாதகமான முறையில் கொல்லப்படும் போது. அந்த அங்கீகாரத்தனத்தின் பெறுமதி செல்லாக்காசாகிறதே.

பக்தா போராட்ட அமைப்பும் தேர்தலால் மக்கள் அங்கீகாரம் என்ற மகுடத்தை சுமந்தும் அமரிக்க குடும்பநாடுகளால் அவை பயங்கரவாத அமைப்பென்றுதானே சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எனவே எம்கைகளை நம்பினால்தான் தேசியத்தின் பசியை தீர்க்கமுடியும்.

அல்லாதுவிடின் பசியை மறக்கச்செய்யத்தான் முடியும்.

ஒன்று இரண்டு உண்மைத் தகவல்களோடு தன் அரசியல் ஞானப்பார்வைத் தகவல்களோடு ஒட்டி விடுகிற பம்மாத்துதான் ஊடகஉழவியல்ப்போர்!!!!

பணத்துக்கு அநாதையானது இவர்கள் வாழ்வுகள், உடம்பில் மனித உணர்வுகள் செத்தபிறகு அநுபவிக்கப்போவது என்ன மிருக இன்பமா? அதனால்தான் மிருகத்தனமாக ஒழுக்கம் இல்லாமலும் வாழ்கின்றார்களா? இல்லாளின் ஊர்மேச்சல்தனம் அடுப்படிச் செலவைக்கவனிக்க, மீதச்செலவுக்கு ஊருக்கு உலைவைப்பதா?

யுத்தகாலத்தைப் போலல்லாது சமாதான காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகள் அதிகம். அதில் இருந்து நாம் தப்புவதற்காகவே சமாதானம் பற்றி மெளனம் சாதிக்கிறோம் அல்லது சமாதானத்துக்கு எதிராக பேசுகிறோம் என்பது கசப்பான உண்மை.

சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் தமிழர் தரப்பால் இலகுவாக வெற்றி கொள்ளகூடியதாக இருந்ததிற்கு யுத்த களத்தில் மட்டும் அல்ல அரசியல் தளத்திலும் நாம் பலமாக இருந்தோம். அன்றைய சர்வதேச அரசியல் தமிழர் தரப்புக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் சந்திரிக்கா அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழல் எமது தரப்புக்கு எதிராகமட்டும் அல்ல எதிரிக்கு சாதகமாக உள்ளது.

இந்திய அமெரிக்க உதவிகள் சிங்கள் தரப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு உசுப்பேத்தி உள்ளது. சிங்களம் யுத்தத்தை தெரிவு செய்துள்ள இந்த காலகட்டம் எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் அரிதாகும்.

[color=red]பதில்

இந்ததகவல்களின் ஆதாரம் உமது ஞானக்கண்ணா?

இதில் தான் உமது உள்நோக்கத்தின் சகுனித்தனம் களம் இறங்குகின்றது. எப்படியோ எதிரியின் தோற்றத்தை எம்மினத்துக்கு மிரளும் வண்ணம் வீங்கச்செய்து காட்டுகிறது

இது பலவீனத்தினால் வந்த முடிவு அல்ல. இது இன்றைய காலகட்டத்தின் யுத்த தந்திரோபாயமகும்.

ஆக, சமாதானம் என்பதுதான் எமக்கு முன் உள்ள சிங்கள யுத்தத்துக்கு எதிரான அரசியல் யுத்தம் ஆகும்.

ஆயுத கப்பலா சரக்கு கப்பாலா....??? அரசின் நாடகம் அம்பலம்....???

கிழக்கு கடற் பரப்பில் விடுதலைப் புலிகளின் பாரிய கப்பல்

ஒன்றை தமது படையனிகள் 8 மணித்தியலாம் கடும்

சமர் ஆடி வெற்றிகரமாய் மூழ்கடித்ததாய் பத்திhகையாளரை கூட்டி

ரம்புகல விளக்கி உள்ளார் .

அதவேளை தாங்கள் அந்த கப்பலை படம் எடுத்ததாகவும் கூறினார் .

ஆனால் இது வரை அவை எந்த ஒரு

ஊடகத்திலும் வெளியானதாக தெரியவில்லை .

மாறாக இன்னும் மூடு மந்திரமாகவே

இந்த விடயமானது உள்ளது .

விடுதலைப் புலிகள் இதை மறுத்துள்ளார்கள் .

தமது கடற்புலிகள் இது பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதாக கூறிய

புலிகளின் இராணுவ பேச்சாளர்

பின்னர் இதை வன்மையாக மறுத்துள்ளார் .

ஆனால் இதில் புலிகள் ஒரு கால அவகாசத்தை எடுத்தனர்

அது எவ்வாறாயின் வழமையாக இலங்கை படைகள்

புலிகளின் இவ் வகையன கலங்களை தாக்கி அழித்தபோது அந்த

கலங்களை படம் பிடித்து ஆதரமாக ஊடகங்களில்

வெளியிட்டனர் .

ஆனால் அது இந்த செய்தி புனையப் பட்டு கொண்டிருக்கும் வரை

வெளியாகவில்லை .

அதன் பின்னாலே அவர்கள் முற்றாக மறுத்துள்ளனர் .

ஏன் இவ்வளவு கால அவகாசம் எடுத்ததர்கள்....??

இது இன்னும் மூடு மந்திரமாகவே உள்ளது....??

இதற்குள்ளேயே விடையும் அடங்கி உள்ளது....

ஆனால் பர பரப்பு செய்தியாய் பெரிய புதகாரமாக்கி

அரசியல் லாபம் தேட முனைந்த சிங்கள அரசு ஏன்

தன்னிடம் இருக்குதென சொன்ன அந்த படைகல ஆவணத்தை

வெளியிடவில்லை....???

அப்படி ஆனால் இந்த நிகழ்வானது திட்டமிடப்பட்ட

ஓரு பிரச்சார செய்தியே என வைத்து கொள்ளலாம்....

ஏன் எனில் புலிகள் எந்தவொரு காலத்திலும் இவ்வாறான நிகழ்வுகளை

தாங்கள் செய்வதில்லையென கூறுவது வழமை...

எதிர் பாரத விதமாக இவ்வாறாக நிகழ்தால்..

அதுவும் குறிப்பாக இராணுவம் அதனை ஆதர புர்வமாக நிருபிக்கின்ற போது தான்

ஒத்து கொள்வது வழமை. ஆனால் தற்போது அப்படி நடந்திருந்தால் அவர்களை இந்த

இலங்னை இராணுவமே காப்பாற்றி விட்டுள்ளது .

ஏனெனில் ஆதரம் அவர்களிடம் இல்லை .

இனி புலிகள் திருப்பி கேட்க கூடும் உங்களிடம் ஆதரம் இருந்தால் காட்டுங்கள்

என்று. எனவே தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற நிலையில் புலிகள் .

இதில் என்ன நடந்ததென்று புலிகளுக்கும் அரசுக்கும் இந்தியாவிற்கும் ஏன்

அமெரிக்காவிற்கு கூட தெரியும் . ஆனால் எல்லோரும் மௌனமாய் ஏன்...??

அது தான் அரசியல் .

ஆனால் ஊடகங்களுக்கு நல்ல தீணியகவும் மறுபுறத்தில்

இலங்கை படைகளும் தான் உஷார் அடைந்துள்ளனர் .

தமிழ் தேசியம் தனது கடமையில் கண்ணாகவே உள்ளது .

முடிவாக மக்களின் கேள்வி கடலில் நிகழ்ந்தது என்ன...??

அங்கு மூழ்கடிக்கப் பட்டது ஆயுத கப்பலா...??

சரக்கு கப்பலா....?? இலங்கை கடல் படை

ஏன் அதை விபரிக்கவில்லை காட்சிகளோடு...??

அப்படியானல் இது திட்டமிடப்பட்ட அரசின் மிகவும்

கபடத்தனமான பிரச்சார யுக்தி...

தற்போதைய தனது படைகளின் பீத்ல்களை

மறைப்பதற்கு அரசு போட்ட நாடகம் என்பதே உண்மை.

-வன்னி மைந்தன் -

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

இங்கு 2 விடையங்கள் கவனிக்கப்பட வேண்டும்

1)

இலங்கையின் ஒருமைப்பாட்டின் கீழ் உள்ளக சுயாட்ச்சி சார்ந்த தீர்வு பற்றி பரிசீலிக்க தயார் என்று தான் கூறப்பட்டதே அன்றி வெளியக சுயாட்சி அதாவது பிரிந்து சென்று சுதந்திரப்பிரகடனம் செய்யும் கொள்கையை முற்றாக கைவிட்டுவிட்டதாக அறிவிக்கப்படவில்லை. நல்லெண்ண அடிப்படையில் சிங்களத்தரப்பிற்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது இந்த சந்தர்ப்பம் சரியே பயன்படுத்தாதவிடத்து பிரிந்து செல்வதை தவிர வேறு வழியில்லை என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கு.

சர்வதேச சமூகம் புலிகள் சுதந்திர தமிழீழ கொள்கையை முற்றாக கைவிட்டுவிட்டார்கள் என்று பிரச்சாரப்படுத்தி தங்களது நிகழ்ச்சி நிரலை பலப்படுத்த முயன்றனர் என்பதற்கு புலிகள் பொறுப்பல்ல.

2) இடைக்கால தீர்வு பற்றியது. நிரந்தர தீர்வு நோக்கிய நகர்வுகள் (மேற்கூறிய பரிசீலிப்பதற்கான ஆர்வம்) என்பது ஒரு இடைக்காலத்தீர்வில் உடன்பாட்டை எய்து அதை அமுல்படுத்தி பாதிக்கப்பட்ட இடங்களில் சுமூக வாழ்கையை கொண்டுவந்து நல்லெண்ணத்தை வழர்ப்பதன் மூலமே சாத்தியமாகும் என்பது தெளிவாக்கப்பட்டிருக்கு. இதன் முதற்படியாகத்தான் இடைக்கால தன்னாட்டி அதிகார சபைக்கான வரைபு முன்வைக்கப்பட்டது. அதைக்கூட பலர் இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வாக சித்தரித்து பிரச்சாரம் செய்தார்கள்.

உள்ளக சுயாட்சி அடிப்படையில் நியாயமான தீர்வை அடைவது பற்றி பரிசீலிக்க தயார் அதன்மூலம் சிங்களத்தரப்பு எந்தளவிற்கு விட்டுக் கொடுப்போடு செயற்படுகிறது எந்தளவிற்கு பேச்சுக்கள் மூலம் ஒரு நியாயமான தீர்வை கொண்டுவரலாம் என்ற ஒரு வழிக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கத் தயார் என்று அறிவிக்கப்பட்டதே அன்றி எந்தச் சூழ்நிலையிலும் அது ஒன்று தான் தமிழருக்கு தீர்வை வழங்கும் ஒரே வழியாக இருக்கும் என்று புலிகள் அறிவிக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனால் PTI - Press Trust of India வை அதாரம் காட்டியே the Hindu செய்தியை தந்துள்ளது

இது உன்மையாயின்...

பாரதூரமான விசயம்...

இன்னும்மொரு முறை சரியான நேரத்தில் கழுத்தறுத்துள்ளது :twisted:

YOU TOO, INDIA ??

சமாதானம் 2002 ஆம் மாவீரர் உரைக்குப் பின் மூன்று மாவீரர் உரைகள் வந்தாச்சு, நீர் இன்னும் 2002 ஆம் ஆண்டிலயே நிக்க்கிறீர்.ஒரு பொய்யைத் திருப்பித் திருப்பி சொல்லுறதால அது உண்மை ஆகிவிடாது. ஒஸ்லோ அறிக்கை ஒப்பந்தமோ பிரகடனமோ கிடயாது.அது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தரப்புக்களால் இனி மேல் பேச்சுவார்த்தைகள் எந்த அடிப்படயில் நடை பெறக்கூடும் என்று விடப்பட்ட அறிக்கை.அதன் பின்னர் பல படுகொலைகள் ,போர் நிறுத்த மீறல்கள், ஆட்சி மாற்றங்கள் கொள்கை மாற்றங்கள் சிறிலங்காவில் நடந்து விட்டது.அந்த அறிக்கையில் தீர்வு பற்றிப் பரிசீலிப்பதாகவும் அது சுய நிற்ணயத்தின் அடிப்படயிலயே இருக்க வேண்டுமென்றும், அவ்வாறு இருக்காது விடின் எமது சுய நிற்ணயதின் அடிப்படியில் பிரிந்து செல்லப் போவதாகவே தலைவரின் மாவீரர் உரையும் ,பாலசிங்கம் தமிழ் நெற்றுக்கு வழங்கிய பேட்டியும் இருக்கிறது. நாம் இப்போது இருப்பது அந்த நிலையில் தான்.சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இரு நாட்டுத் தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தம் எவ்வாறு நடைமுறைப் படுதப்பட்டுக்கொண்டிருகிறது என்பதிலிருந்து, சர்வதேசத்தின் யோக்கியதை தெரிகிறது.இந்த ஒப்பந்தமே கேலிக்குரியதாக இருக்குமிடத்து எவரை நம்பி நாம் எந்த ஒரு தீர்வையும் பரிசிலீக்க முடியும்? எமக்கான பாதுகாப்பை நாம் தான் ஏற்படுத்த வேண்டும் என்பதையே சமாதான் காலத்தில் நடந்த அத்தனை சம்பவங்களும் எங்களுக்குச் சொல்லி உள்ளன.எந்த உடன் படிக்கையும் அதனை அமுல் படுதுவதற்கான பலம் இன்றி நிறை வேறாது என்பதுவும் நிதர்சனமான உண்மைகள்.சர்வதேசம் என்றுமே எமது மக்கள் பற்றிக் கவலைப் பட்டது கிடையாது,அப்படியாயின் சிறிலங்கா அரசால் நித்தமும் நடக்கும் படுகொலைகளை அவை என்றாவது கண்டித்து சிறிலாங்கா அரசை பகிரங்கமாகக் குற்றம் சாட்டி தடைகளை வழங்கி உள்ளனவா? இந்தச் சர்வதேச நாடுகளிடம் மென்மையான பொக்கைக் காடுங்கள் என்று கூற உங்களுக்கு நாக் கூச வில்லை? நீங்கள் எவரிடம் நன்மை பெறுகுறீர்கள் என்பது இந்த வாக்கியத்தில் இருந்து வெகுவாக விளங்குகிறது.எமது மக்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் எவ்வாறு நாம் மென்மையாக பவ்வியமாக இருக்க முடியும்.புலிகளையும் உங்களைப்போல் நினைத்தீர்களா?

பாலசிங்கம் தெளிவாக ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களால் , பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் பரிசீலிக்கப்படலாம் என்ற விடயம் அடங்கிய ஒரு அறிக்கயே அது ஒப்பந்தம் அல்ல என்று கூறி உள்ளார்.ஒப்பந்தங்கள் நாட்டின் தலைவர்களுக்கிடயே தான் ஏற்படுத்தப் படலாம்.மேலும் அவ்வறான ஒப்பந்தங்களைச் செய்ய முதல் புலிகளின் மத்திய குழுவினதும் எனைய மக்கள் அமைப்புக்களினதும் கருதுக்கள் பெறப்பட வேண்டும்.இப்படி எதுவுமே நடை பெறாத ஒஸ்லோ அறிக்கை அன்றைய காலகட்டத்தில் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கை மட்டுமே.இதை இபோது நீங்கள் தூக்கிப் பிடிப்பதன் நோக்கம் என்ன? நன்றாகச் சேவகம் செய்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nivetha123

எழுதப்பட்டது: திங்கள் புரட்டாதி 18, 2006 4:56 pm Post subject: வீடியோவில் படம் காட்டி இருக்கிறார்கள்.

செய்தி உண்மைபோல் தான் இருக்கிறது. வீடியோவில் படம் காட்டி இருக்கிறார்கள். தரவிறக்கம் செய்து பார்க்கவும்.

http://www.defence.lk/Air17sept.wmv

வன்னி மைந்தா! இதில் வரும் வீடியோ படத்தை பார்த்து எங்களுக்கு விளங்கப்படுத்தும். எனக்கு ஏதோ ரணில் காலத்தில் தாக்கப்பட்ட கப்பலை இப்போ படங்காட்டுற மாதிரி இருக்கு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுத கப்பல் வருகுது......!!! என்று 2 வாரங்களுக்கு முன் கவிதை எழுதின உமக்கேன் இப்ப முழி பிதுங்கிது. :roll: :roll: :roll: :roll:

ஆயுத கப்பலா சரக்கு கப்பாலா....??? என்று கேள்வி வேறை :shock: :shock:

ஆதாரம் கேட்கிறீர் http://www.defence.lk/Air17sept.wmv ல் போய் பாரும். :shock: :shock:

நன்றி இணைப்புக்கு

அந்தக் கப்பல் 8 மணிநேர சண்டையின் பின்பு மூ;ழ்கடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இவர்கள் எடுத்த வீடியோ 2.24 இலிருந்து 3.50 வரையுள்ளது.

அந்தக்கப்பல் வீடியோவைப்பார்த்தால்...

எட்டுமணிநேரம் தாக்குப்பிடித்த கப்பலாக தெரியவில்லை...

எனக்கு இரண்டு சந்தேகங்கள்

1) இது புலிகள் கப்பல் என்றால் இப்படி வெள்ளை

வெளேரென்ற முழிப்பாக இருக்கும்?

2) அப்படி அதிகாலையில் ஆயுதங்களுடன் வந்த கப்பலுக்கு

பாதுகாப்பு ஏதும் இல்லாமலா இருந்திருக்கும்?

ஆளில்லாத செட்டப் கப்பலாக இது இருக்குமோ?....

ஆயுத கப்பல் வருகுது......!!! என்று 2 வாரங்களுக்கு முன் கவிதை எழுதின உமக்கேன் இப்ப முழி பிதுங்கிது. :roll: :roll: :roll: :roll:

ஆயுத கப்பலா சரக்கு கப்பாலா....??? என்று கேள்வி வேறை :shock: :shock:

ஆதாரம் கேட்கிறீர் http://www.defence.lk/Air17sept.wmv ல் போய் பாரும். :shock: :shock:

8ம்ணித்தியாலம் நடந்த சண்டையில் 5 நிமிடவீடியோ படம் நல்லா தான் இருக்கு அதுவும் கப்பல் ஒடி ஒடி கடசியில் இந்த கீபிர் என்ன என்னும் என்னை தாக்கவில்லை என்று ஒரு இடத்தில் நின்ற பின் தாக்குதல் நடக்குதுங்கோஓஓஓஓஓஓஓஓ

சத்தியமாக நான் நம்ம மாட்டேன் ஏன் என்றால் என்னும் கரி நாகம் கருணா சொல்லவில்லை இது உண்மையோ பொயோ என்று இதே படத்தை நான் முன்ந்தியும் பார்க்கவில்லை :P :P

என்ன பக்கதில ஒரு மீன் படிக்கிற போட்டையுமா விடுதலை புலிகள் விடவில்லை?

என்ன தான் நடக்குது நடக்க்கடுமே சிலர் இருக்கும் வரை இப்படி யான சதாம்குசயன் பெரிய வாகனத்தில் அணுஆயுதம் கடதுவதாக கொலின்பாவல் ஜநா சபையில் படம் காட்டியதை விட பறவாய் இல்லை தான் என்னா நாலைக்கு 40 பங்களாதேசகாரரின் உடலோ இல்லை சீனா காரரின் 60 உடலோ கரை ஒதுங்காம விட்டா சரி தனுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

கொழுத்திப்போட்டா வெடிக்காமல் புகைச்சுப்போட்டு விடுற சீன வெடி மாதிரித்தானாம் இப்ப புலிகள் பாவிக்கிற சீனத்தயாரிப்பு விமான எதிர்ப்பு எவுகணைகள். அதாலை தான் விமானத்தாக்குதல்களால் பலத்த இழப்புகளாம். இந்த இக்கட்டான நிலையில்தான் புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவிலை வேண்ட வெளிக்கிட்டவையாம் AK47, புகைச்சுப் போட்டு விடாது நம்பிக்கையா சுடும் எண்டும்.

அதில கொஞ்சப்பேர் பிடிபடடுட்டினமாம். தப்பிப்பிழைச்சு வேண்டினதுகளை கொண்டு வந்த கப்பலைத்தான் இப்ப 8 மணத்தியால கடும் தாக்குதல்களிற்கு பிறகு மூழ்கடிச்சிருக்காம். ரணில் காலத்திலையும் கப்பல் தாண்டது. ரணில் காலத்து சர்வதேசத்து நிகழ்ச்சி நிரல் எப்படி பின்கதவால் மகிந்தவின்ரை ஆட்சிக்குள் வந்தது?

இந்த பின்கதவாலை வந்ததை முன்கதவாலை வெளிப்படைய அறிவிக்க ஒரே வழி எல்லோரும் சமாதானம் என்று கோசம் போடுங்கோ. அறிவிச்சா பிறகு சொல்லுவம் நீங்கள் தானே சமாதானம் என்று கோசம் போட்டனீங்கள் எண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தா!!!!!!!!!!!!!!!!!!

நீரும் உம்முடைய புண்ணாக்கு ஆய்வும்!!!!!!!!!!!!!!

அடியேன், அப்பவே சொன்னன்!!!!!!!!!!!!

நீர் நம்ம இனமெண்டு!!!!!!!!!!!!!!!!

உம்முடைய இனிசல் "கா" தானே!!!!!!!!!!!!!!!!!!!!!

உந்தப் புலிச் சாயப் புராணத்தை உட்டுட்டு!!!!!!!!!!!!!!!!

வருவீர், நிஜ உலகிற்கு!!!!!!!!!!!!!!!!!

வெகு விரைவில்!!!!!!!!!!!!!!!!!

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

இது என்ன ஆராச்சியோ கடவுளுக்குதான் வெளிச்சம். வன்னிமைந்தன் நல்ல கவிஞர் எழுத்தாளர் என்பதில் சந்தேகம் இல்லை. கற்பனை ஆராய்ச்சிகள் உங்கள் பெயருக்கு இழுக்கே தரும். வேண்டாமே.

அதை விடுங்கள்.

அந்த ஒளிப்பதிவை பார்த்தேன். இரண்டு சந்தேகங்கள்

1: நிமிடம் 1,47 தொடக்கம் 2,12 வரை உள்ள வீடியோ பதிவில் ஒரு சிவப்பு நிற life boat மாதிரி ஒன்று விலகி செல்கிறது. அது என்ன? அது life boat ஆக இருந்தால் அதில் இருந்தவர்கள் எங்கே?

2: 3,35 to 5,09 வரையுள்ள வீடியோ பதிவில் எடுக்கப்பட்ட காட்சிகள் "கிட்டதட்ட" ஒரே திசையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒரு யுத்த விமானத்தில் இருந்து ஒரே திசையில் இவ்வளவு நேரம்(1,34 நிமிடங்கள்) ஒளிப்பதிவு செய்வது சாத்தியமா? விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.

புகையும் அந்த படகு போன பின்தான் வருகிறது. எல்லாம் setup மாதிரிதான் தெரியுது.

வாசகன் அது சட்டலைட்டில இருந்து எடுத்தது. அமெரிக்க தூதுவர் மிகவும் பலம் வாய்ந்த இலங்கைப்படைகளை சந்திக்க வேணும் எண்டது விளங்குதே. அதுதான் சூட்டிங்களில இப்ப அமெரிக்க சட்டலைட்டுகள் பாவிக்கிறாங்கள் birds eye view எடுக்க.

எல்லாரும் ஒரே குரலில சமாதானம் எண்டு ஒப்பாரி வைய்யுங்கோ. அது தான் இப்பொழுது எங்களுக்கு இருக்கிற ஒரே வழி. இல்லாட்டி பின்கதவாலை வந்தது கூரையை பிச்சுக் கொண்டும் வந்துடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.