Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போராட்டத்தின் எதிரொலி கத்தி படத் தயாரிப்பாளரை மற்ற விஜய் முடிவு?

Featured Replies

விஜய்,சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் கத்தி படத்திற்கு ரிலீஸ் ஆகும் முன்னரே பயங்கர எதிர்ப்பு நிலவுவதால் இந்த படத்தின் தயாரிப்பாளர் படத்தை கைமாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருங்கிய நண்பரான லைகா புரடொக்ஷன் நிறுவனர் ஏ.சுபாஷ்கரன் மற்றும் கருணாமூர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கும் கத்திபடத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என தமிழ் அமைப்புகளும், மாணவர்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரச்சனையை சுமூகமாக முடிக்க தற்போது  நேரடியாக களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தில் ஏற்பட்டுள்ள ஒரே பிரச்சனை தயாரிப்பாளர் என்பதால் தயாரிப்பாளரிடம் பேசி படத்தை வேறொரு தயாரிப்பாளரிடம் கைமாற்றும்படி விஜய் ஏ.ஆர்.முருகதாஸிடம் ஆலோசனை கூறியிருப்பதாகவும், வேறு தயாரிப்பாளர் இந்த படத்தை விலைக்கு வாங்கிக்கொள்ள தயங்கினால், தானே சொந்தமாக படத்தை வாங்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் முருகதாஸிடம் கூறியதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

எனவே விரைவில் லைகா நிறுவனர் பத்திரிகையாளர்களை அழைத்து, தங்கள் நிறுவனம் படத்தில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக அறிவிப்பார் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர். மேலும் கத்தியை வேறு யாரும் விலைக்கு வாங்க தயங்கினால், விஜய் மற்றும் முருகதாஸ் இணைந்தே படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பை இன்னும் சில நாட்களில் வெளிவரும் என செய்திகள் கூறுகின்றன.

கத்தி படத்தின் பிரச்சனையை தமிழ்  அமைப்புகள் கையில் எடுத்தல்  விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கி உள்ளார் என தெரிகிறது.

http://www.pathivu.com/news/33309/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

  • கருத்துக்கள உறவுகள்
அப்பாடா ஒரு பிரச்சணை முடிஞ்சுது................
அண்ணன் சீமானும் கொஞ்சம் நின்மதி அடைவார்.........................
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணை ஒரு மாதிரி தீர்த்து வச்சிட்டார்.தூ

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணே நீங்களே உங்க மேல தூன்னு துப்பிறேள்.

 

சீமானுக்கு இது தொடர் வெற்றி.

 

சீமான் சொன்னது.. கத்தி படத்தை எதிர்க்கன்னு சொல்லுற அளவுக்கு அதன் கதை இல்லை. பிரச்சனை தயாரிப்பாளர் தான். அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

 

இப்ப தயாரிப்பாளரை மாற்றவே முடிவாகியிருப்பதாகச் செய்தி சொல்லுது.

 

கத்தி படம்.. வரத்தான் போகுது..!!

 

இதில கத்தி படம் வரவே கூடாதுன்னு.. எவனாவது போராடினான்...???! அப்புறம் எதுக்கு துப்பிறேள். ஒருவேளை நீங்க அப்படி நினைச்சிட்டேள் போல.. சீமான் மீதான கடுப்பில..அவசரத்தில..! காம்.. டவுண் அண்ணே. :lol::D

 

 

Edited by nedukkalapoovan

மேலே உள்ள செய்தி உண்மையானால் அது போராடிய அனைவருக்கும் நல்ல செய்தியே. இந்தப் போராட்டம் சாத்தியமற்றது என்று சொன்ன எல்லோர் முகத்திலும் கரியைப் பூசி உள்ளது. லைக்காவுக்கு எதிரான தமிழ் மக்களின் உணர்வை வெளிப்படுத்த இந்தப் போராட்டம் களம் அமைத்துக் கொடுத்துள்ளது. போராட்டத்தை முன் நின்று நடாத்திய மாணவர்களுக்கும் , ஆதரவு தந்த அனைத்து தமிழ் அமைப்புக்களுக்கும் நன்றிகள். 

 

இங்கிலாந்த்தில் இருக்கும் தமிழ்ப்பள்ளி ஒன்றின் விழாவுக்கு லைக்கா தேடி வந்து அனுசரணை செய்யக் கேட்டு இருந்தது. உங்கள் அனுசரணை எமக்கு வேண்டாம் என்று சொல்லப்பட்டது. தேடி வந்து அனுசரணை செய்ய வேண்டிய நிலையில் லைக்கா குழுமம் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக லைக்கா குழுமமும்  அதனைச் சேர்ந்தவர்களையும் தமிழ் மக்க்கள்  முற்று முழுதாகப் புறக்கணிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

கத்தி படத் தயாரிப்பாளர் பிரச்சனை: லைக்காவை மாற்ற விஜய் முடிவு. (செய்தி)

புலிப்பார்வை படக் காட்சி பிரச்சனை: சர்ச்சைக்குரிய காட்சிகள் என்று கருதப்படும் காட்சிகள் அனைத்தும் நீக்கம். இயக்குநனர் பிரவீன்காந்தி அறிவிப்பு. (செய்தி)

மொத்தத்தில் அண்ணன் சீமான் சொன்னபடி.. பிரச்சனைகள் தீர்வை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றன. அண்ணன் மீது வசவு பொழிந்த கூட்டம் என்ன பண்ணப் போகுது..??! தாங்களே தங்கள் மீது காறித்துப்பப் போகுதா. இல்ல பிளேட்ட மாத்தப் போகுதா..???!

கத்தி படத்தை எதிர்க்க அதன் கதையில் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை.. தயாரிப்பாளர் தான் பிரச்சனை என்று சொன்னார் அண்ணன் சீமான். அந்தப் பிரச்சனை தயாரிப்பாளர் மாற்றத்தோடு முடிவுக்கு வரப் போகிறது..?!

புலிப்பார்வை தொடர்பில் அதன் இசை வெளியீட்டு மேடையிலேயே சொன்னார்.. பாலா.. சீருடை அணியாத பள்ளி மாணவன் என்று. இப்போ.. இயக்குனரும் அண்ணனின் கருத்தை.. மக்கள் கருத்தை உள்வாங்கி இருக்கிறார்.

ஆக.. இந்த போராட்டத்தில் அண்ணன் சீமானின் ராஜதந்திரமான.. நடுநிலையான.. பகை.. பிளவுகளைத் தூண்டாத.. அணுகுமுறை வெற்றி கண்டுள்ளது. பாராட்டுக்கள் அண்ணா. மேலும்.. இதே விடயத்துக்காக நியாயமான அக்கறையோடு போராடிய மாணவர்கள் மற்றும் அமைப்புக்கள்.. தமிழகம் சார்ந்த தனி மனிதர்களுக்கும் நன்றிகள்..!

இந்த..மாற்றங்கள் வெறும் செய்தி அறிக்கையில் என்று இல்லாமல்.. நிஜத்திலும் இருக்க பார்த்துக் கொள்வது அவசியம்..!!! அது மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதிலும் தான் தங்கி உள்ளது..!!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணே நீங்களே உங்க மேல தூன்னு துப்பிறேள்.

சீமானுக்கு இது தொடர் வெற்றி.

சீமான் சொன்னது.. கத்தி படத்தை எதிர்க்கன்னு சொல்லுற அளவுக்கு அதன் கதை இல்லை. பிரச்சனை தயாரிப்பாளர் தான். அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இப்ப தயாரிப்பாளரை மாற்றவே முடிவாகியிருப்பதாகச் செய்தி சொல்லுது.

கத்தி படம்.. வரத்தான் போகுது..!!

இதில கத்தி படம் வரவே கூடாதுன்னு.. எவனாவது போராடினான்...???! அப்புறம் எதுக்கு துப்பிறேள். ஒருவேளை நீங்க அப்படி நினைச்சிட்டேள் போல.. சீமான் மீதான கடுப்பில..அவசரத்தில..! காம்.. டவுண் அண்ணே. :lol::D

உங்கட அண்ணரின் பங்கு இதில் எவ்வளவு,காக்கா இருக்க பனம்பழம் விழுந்த கதை இங்க வேணாம் குருவித்தம்பி
  • கருத்துக்கள உறவுகள்

22 ஆண்டுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த கருணாவை, தங்களின் தேவைக்காக எதிரியால் பாவிக்க முடியும். ஆனால் ஒரு நல்ல நட்பினைத் தமிழனால் உருவாக்க முடியாது. நிச்சயமாக முழுமனதோடு என்னால் லைக்காவை எதிர்க்க முடியவில்லை. ஏனென்றால் இத்தனை காலமும் ஒருவரையும் எங்களுக்காக பாவிக்கத் தெரியாத மூடத்தனத்தை தொடச்சியாகப் தொடர மனம் இடங் கொடுக்கவில்லை. இதுவரை எவராவது லைக்காவோடு தொடர்பு கொண்டு சிங்கள அரசோடு சேர்ந்து இயங்க வேண்டாம் என்று பேசியிருந்தால் அது இராச தந்திரமாக இருந்திருக்கும். சமீபத்தில் அவதானித்த ஒன்று. விஜய் தொலைக்காட்சியில் கனேக்சன் என்ற நிகழ்ச்சியின் விளம்பரதாரர்களாக இடையே லிபரா வந்தது தான். எப்போது அவர்களைத் துரோகி ஆக்குகின்றீர்கள் எனப் பார்க்கலாம்...

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் லைக்கா ஒதுங்கி விட்டதா அல்லது பினாமியை வைத்து அவர்கள் தான் வெளியிடுவார்களோ தெரியாது. லைக்கா மகிந்தாவுடன் சேர்ந்து இலங்கையில் காலுன்றினால் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை?...நீண்ட காலத்தை அடிப்படையாக வைத்து புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் பல விதத்தில் காலுன்றுவது நல்லது தானே!...மகிந்தாவோடு சேர்ந்து வியாபாரம் செய்தால் மகிந்தாவை ஆதரிக்கிறார்கள் என அர்த்தமோ????

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஊடுருவல் என்பது எல்லா இடத்திலும்.உள்ளது தான்.அதை நாம் எப்படி பயன்படுத்திறம் என்பதை பொறுத்து தான் இருக்கு.அவனை அணைப்பதா ஒதுக்குவாதா என்று தெளிவு எமக்கு இல்லை.புலிகளும் தான் எத்தனையோ இராணுவ அமைப்புகளில் பணி புரிந்துள்ளார்கள்.அதுக்காக கண்ட படி தியாகி துரோகி பட்டம் வழங்ங கூடாது தான்.ஆனால் எமக்குத்தான் போறுமை இல்லையே.  :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.