Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதீனியத்தைக் கட்டுப்படுத்த களைநாசினிப்பிரிவும் ஆரம்பம்!

Featured Replies

Agriculture%206985123.jpg

 

யாழ் மாவட்டத்தில் விவசாயத்தையும், மனித உடல் நலத்தையும், சுற்றுச்சூழலையும் மிக மோசமாகப் பாதித்து வரும் பாதீனியத்தை ஒழிக்கும் பணியில் களைநாசினி விசிறும் பிரிவு ஒன்றையும் உருவாக்கியுள்ளது வடக்கு மாகாண விவசாய அமைச்சு. இந்தப் பிரிவின் நடவடிக்கைகளை அமைச்சர் ஐங்கரநேசன் இன்று புதன்கிழமை ஊரெழுவில் ஆரம்பித்து வைத்தார்.
 
ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:- செயற்கை உரங்கள், பீடைகொல்லிகள், களைகொல்லி இரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு விவசாயத்தில் இவற்றின் பயன்பாட்டை இயன்றளவு குறைக்குமாறே நாம் வலியுறுத்தி வருகிறோம்.
 
இதன் அடிப்படையிலேயே பாதீனியம் ஒழிப்பிலும் முதற்கட்ட நடவடிக்கையாக களைகொல்லி இரசாயனங்களை விசிறுவதைத் தவிர்த்துக் கைகளினால் பிடுங்கி அழிக்கும் முறைகளையே நடைமுறைப்படுத்தி வந்துள்ளோம். நாம் முன்னெடுத்த வேலைக்கு உணவு, பாதீனியத்துக்குக் காசு கொடுத்துக் கொள்வனவு செய்தல் போன்ற நடைமுறைகளின் மூலம் பாதீனியம் ஒழிப்பில் கணிசமான அளவு வெற்றியும் கண்டிருக்கிறோம்.
 
அண்மையில் பெய்த சிறு மழையின் பின்னர் முளைக்கத் தொடங்கியிருக்கும் பாதீனியத்தை அது முற்றாக வளர்ந்து எமது நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு முன்னாக விரைந்து ஒழிக்கவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு உள்ளது. அதன் காரணமாகவே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் களைநாசினிகளை விசிறி அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
 
ஆனாலும், தொடர்ச்சியாகக் களைகொல்லி இரசாயனங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முளைக்கத் தொடங்கியிருக்கும் பாதீனியத்தை விவசாய அமைச்சு வந்து அழிக்கும் என்றோ, இன்னொருவர் வந்து அழிக்கவேண்டும் என்றோ காத்திராமல் தாங்களாகவே ஆரம்ப நிலையிலேயே கைகளினால் பிடுங்கி அகற்றுவதற்கு முன்வரவேண்டும்.
 
எவருடைய வீட்டு வளவிலேனும் விவசாய நிலத்திலேனும் பாதீனியம் காணப்பட்டால் அவற்றை அழிப்பது காணி உரிமையாளர்களின் கடமை. அழிக்கத் தவறினால் இலங்கை அரசின் 1999 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கத் தாவரப்பாதுகாப்புச் சட்டத்தின்படி உரிமையாளர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைவாசமும், ஒரு இலட்சம் ரூபா வரை தண்டப்பணமும் அறவிடலாம்.
 
பொதுநன்மை கருதி 2015 தை முதலாம் திகதியில் இருந்து இந்தச் சட்டத்தை வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.- என்று தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியின்போது களைநாசினி விசிறும் பணியாளர்களுக்கு களைநாசினிகளைப் பாதுகாப்பாக எவ்வாறு விசிறுவது என்று விளக்கமளிக்கப்பட்டதோடு, அவர்களின் தற்காப்புக்கான உடைகள் மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
 
நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் கி.சிறிபாலசுந்தரம், விவசாயப் போதானாசிரியர் க.தனபாலசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். -
 
Agriculture%206985124.jpg
 
Agriculture%206985122.jpg
 
 
Agriculture%206985121.jpg
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயற்பாடு.

அழகான சுவருக்கு அருகிலும் இந்தச்செடி உள்ளது. மக்கள் இன்னும் ஓரிரு வருடங்களில் விழிப்புணர்வைப் பெறுவார்கள். :huh:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயற்பாடு.

அழகான சுவருக்கு அருகிலும் இந்தச்செடி உள்ளது. மக்கள் இன்னும் ஓரிரு வருடங்களில் விழிப்புணர்வைப் பெறுவார்கள். :huh:

 

மக்கள் விழிப்புணர்வு பெறுக்கிறார்களோ இல்லையோ, நாங்கள் ஐங்கரநேசனைப்பற்றி தினமும் செய்தியில் படிக்கிறோம்...வாழ்க ...வடமாகாணசபையின் செயல்பாடுகள்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

 

மக்கள் விழிப்புணர்வு பெறுக்கிறார்களோ இல்லையோ, நாங்கள் ஐங்கரநேசனைப்பற்றி தினமும் செய்தியில் படிக்கிறோம்...வாழ்க ...வடமாகாணசபையின் செயல்பாடுகள்...

 

செயலின் மூலமே  ஒருவர் அடையாளம் காணப்படுதல் தகும்

அந்தவகையில் புதியவர் ஒருவர் தெரிகிறார்

துணையாக  இருப்போம்

எங்கட ஊர் மக்களைப் பற்றி எனக்குத் தெரியும்...  "பக்கத்து வீட்டில் வளர்ந்து இருந்தால் சொல்லுங்கள் பக்கத்து வீட்டுக்காரனை பிடிச்சு ஒரு 6 மாசத்துக்கு உள்ளே போடலாம்" என்று தகவலை உரிய முறையில் பரப்பி விட்டால் காணும். தன் வீட்டில் வளர்ந்து இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரனை மாட்டி விட துடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊர் மக்களைப் பற்றி எனக்குத் தெரியும்...  "பக்கத்து வீட்டில் வளர்ந்து இருந்தால் சொல்லுங்கள் பக்கத்து வீட்டுக்காரனை பிடிச்சு ஒரு 6 மாசத்துக்கு உள்ளே போடலாம்" என்று தகவலை உரிய முறையில் பரப்பி விட்டால் காணும். தன் வீட்டில் வளர்ந்து இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரனை மாட்டி விட துடிப்பார்கள்.

 

அப்படியா?

ஊருக்கு ஒரு புத்தி  உண்டு என்று அண்மையில் தான் தெரிந்து கொண்டேன் :(

உங்கள் ஊரைத்தெரிந்து கொள்ளலாமா?? :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் விழிப்புணர்வு பெறுக்கிறார்களோ இல்லையோ, நாங்கள் ஐங்கரநேசனைப்பற்றி தினமும் செய்தியில் படிக்கிறோம்...வாழ்க ...வடமாகாணசபையின் செயல்பாடுகள்...

கோயில் சுவருக்கு வர்ணம் பூசியவர்களுக்கு பார்த்தீனியம் பற்றிய‌ கவலை இருக்கவில்லை என்பதையே குறிப்பிட வந்தேன். :unsure: மறைமுகமாக சொல்ல வெளிக்கிட்டது ஓவர் மறைமுகம் ஆகிவிட்டது. :lol:

இயற்கையான முறையில் அழிப்பதே பயனுள்ளதும்  சுற்றாடலைப் பாதுக்காக்கக் கூடியதுமாகும்.

அப்படியா?

ஊருக்கு ஒரு புத்தி  உண்டு என்று அண்மையில் தான் தெரிந்து கொண்டேன் :(

உங்கள் ஊரைத்தெரிந்து கொள்ளலாமா?? :lol:  :D

 

தந்தை வழியில் வேலணை... உங்கள் புங்கைக்கு பக்கத்தில் தான்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
 

மலரும் இணையம் ஈ அடிச்சான் கொப்பியாக உள்ளதே?? எப்படி எல்லாம் பிழைக்கிறார்கள்??

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111447/language/ta-IN/-----.aspx

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.