Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை. 
[Wednesday 2014-10-01 10:00]
yalini-murukathas-011014-300-seithycom.j

வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23 ஆவது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார். திரு,திருமதி முருகதாஸ் சகுந்தலா ஆகியோரின் மகளான செல்வி யாழினி நோர்வே நாட்டில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது ஆரம்பப் கல்வியை நோர்வேயில் ஆரம்பித்திருந்து பின்னர் கடந்த 14 வருடங்களாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வாழ்ந்து கல்விகற்று வந்திருந்தார். இளம் வயதிலேயே கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்ட செல்வி யாழினி தனது கல்லூரிப் படிப்பில் விசேட சித்திகள் பெற்றவர். சட்டத்துறை பற்றிய அதீத அக்கறையின் காரணமாக சட்டப்படிப்பைக் கையில் எடுத்து, தனது முழு நேரத்தையும் சட்டத்துறையில் செலுத்தி, தீவிரமாகப் படித்து சட்டத்துறையில் முதுகலைப் பட்டத்தையும் இளம் வயதிலேயே பெற்றிருக்கின்றார்.

   

பல்கலைப் படிப்பில், சட்டத்துறையை (law) யாரும் அதிகளவில் விரும்பிப்படிப்பதில்லை. காரணம் சுமைகள் கூடிய சிக்கலான துறை இதுவாகும். அதிக நேரத்தை செலவிட்டு அதிகம் படிக்கவேண்டும். ஆனால் செல்வி.யாழினி இந்தச் சுமைகள் கூடிய படிப்பை ஒரு தவமாக எண்ணி விரும்பிப் படித்திருந்தார். தனது நாட்களின் அதிகளவு நேரத்தை இந்த துறையில் செலவிட்ட யாழினி ஒரே தடவையில் படித்து முடித்துப் பட்டம் பெற்றது மட்டுமில்லாமல், மறு நாளே அவருக்கு லண்டனில் உள்ள பிரபல நீதிமன்றமான Croydon County Court இல் அரச சட்டத்தரணியாக பணியாற்றும் சேவையையும் பெற்றுள்ளார் என்பது இங்கு சிறப்புடன் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இங்கிலாந்து நாட்டில், தனது இளம் வயதில் சட்டத்தரணியாகியுள்ள செல்வி யாழினி வல்வெட்டித்துறைக்கும் இந்த வகையில் பெருமை சேர்த்துள்ளார்.செல்வி யாழினி வல்வை ஊரிக்காட்டு பிரதேசத்தை சேர்ந்த திரு அருட்பிரகாசம், சாந்தகுணநாயகி ஆகியோரின் பேர்த்தி ஆவார். மறைந்த திரு அருட்பிரகாசம் அவர்கள் ஒரு மிகச் சகலதுறை விளையாட்டு வீரர் என்பதும் இங்கு நினைவுபடுத்திக்கொள்ளத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=117838&category=

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் யாழினி

  • கருத்துக்கள உறவுகள்

LLB= 3 வருடம்

 

LLM = 1 வருடம்.

 

மொத்தம் 4 வருடம்.

 

18 வயதில யுனிக்கு போக லண்டனில் நல்ல வாய்ப்புள்ளது. போனால் 22 வயதில் இதெல்லாம் முடிக்கலாம். அப்படித்தான் முடிக்கிறாங்க. இப்ப MEng, MSci MPhy.. எல்லாமே 4 வருடங்கள் தான் மொத்தம்.

 

இது சாதனை என்று சொல்ல முடியாது. பிள்ளை ஒரு வருசத்தை வீணாக்கி படிச்சிருக்குது. :lol::D

 

இதே ஊரில் என்றால்.. ஏ எல் எடுத்து.. வெட்டுப்புள்ளி வர காத்திருந்து.. அப்புறம் 19/ 20 வயசில யுனிக்குப் போய்.. முடிய.. 23.. 24 ஆகிடும். அதோடு ஒப்பிடும் போது.. இது கெட்டித்தனம் தான். அதில் பிள்ளையின் பங்கைவிட.. பிரித்தானியாவின் கல்வி நிர்வாக முறைமை மாணவர்களை 18 வயதில் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கும் சாத்தியப்பாட்டை திறம்பட வெளிப்படுத்துவது தான் காரணம்..!!

 

இதெல்லாம் சாதனை என்றால்.. வெவ்வேறு துறைகளில்.. வெவ்வேறு யுனிகளில்.. பெயர் நீளத்துக்கும் பட்டம் பெற்ற எத்தனையோ பேர் இருக்கினம். அவங்க...???! :icon_idea::)


இன்னொரு கதையளப்பு இந்தச் செய்தியில் உள்ளது. பிரித்தானியாவிலும் சரி.. இப்ப ஊரிலும் சரி.. நிறைய சட்டம் படிக்க மாணவர்கள் குவிகிறார்கள். சுமை... கஸ்டம் என்ற காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது.

 

இந்தச் செய்தியை ஆக்கிய ஊடகக்காரர்களுக்கு தான்.. எல்லாமே கஸ்டம் போல இருக்குது..!!

 

குறிப்பாக இலங்கையில் பல்கலைக்கழக கல்வியில்.. இப்போ.. சட்டம்.. முகாமைத்துவம்.. ஒரு பாடமாக போதிக்கப்படுகிறது..! அந்தளவுக்கு அவற்றின் முக்கியத்துவம் எல்லா துறைகளிலும் அமைந்துள்ளதோடு.. நிர்வாக முறைமைக்கு அடிப்படை சட்ட அறிவு எல்லோருக்கும் அவசியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எதுஎப்படியோ.. ஒரு பட்டதாரிக்கு பட்டங்கள் பெற்றமைக்கான சாதாரண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தரும் அதேவேளை நெடுக்கர் சொன்னது போல இது குறிப்பிடத் தக்க சாதனை அல்ல.

தமிழர்கள் பெரும் கல்விச் சாதனைகள் நிகழ்த்திக் கொண்டிருகிறார்கள். இது அதனுள் ஒன்று என எடுத்துக் கொள்ள முடியாது.

சட்டத் துறையில் இலங்கையில் மூவர் தான் கலாநிதிப் பட்டம் பெற்று உள்ளனர். (எனக்குத் தெரிந்த வகையில்) ஒருவர் மறைந்த கதிர்காமர். அடுத்தவர் பேராசிரியர் பீரிஸ்.

 

 இன்னுமொருவர் லண்டனில் உள்ள தமிழர். இவர் இலங்கை அரசால் புலைமைப் பரிசில் வழங்கி அனுப்பப் பட்டவர். (கடந்த 7 வருடங்களில்). டாக்டர் பட்டம் பெற்றதும் இங்கேயே தங்கி விட்டார். மேலும் ஆளும் பழமைவாத கட்சி தமது கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்து இருந்தது. (சட்டத் துறை டாக்டர் என்பதால்)

இந்த பெண்ணும் கலாநிதியாவதுடன் பாரிஸ்டர் ஆகி வர வாழ்த்துகின்றோம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  தொடர்ந்தும் சட்டத்துறையில் முன்னேறித் தமிழனின் பெருமையைத் தரணியெங்கும் சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

எல்லாத்துறையிலும் தமிழன் நிமிரணும்...

சட்டத்துறை

பொருளியல்த்துறை

பத்திரிகைத்துறை  உட்பட...

 

 

LLB= 3 வருடம்

 

LLM = 1 வருடம்.

 

மொத்தம் 4 வருடம்.

 

18 வயதில யுனிக்கு போக லண்டனில் நல்ல வாய்ப்புள்ளது. போனால் 22 வயதில் இதெல்லாம் முடிக்கலாம். அப்படித்தான் முடிக்கிறாங்க. இப்ப MEng, MSci MPhy.. எல்லாமே 4 வருடங்கள் தான் மொத்தம்.

 

இது சாதனை என்று சொல்ல முடியாது. பிள்ளை ஒரு வருசத்தை வீணாக்கி படிச்சிருக்குது. :lol::D

 

இதே ஊரில் என்றால்.. ஏ எல் எடுத்து.. வெட்டுப்புள்ளி வர காத்திருந்து.. அப்புறம் 19/ 20 வயசில யுனிக்குப் போய்.. முடிய.. 23.. 24 ஆகிடும். அதோடு ஒப்பிடும் போது.. இது கெட்டித்தனம் தான். அதில் பிள்ளையின் பங்கைவிட.. பிரித்தானியாவின் கல்வி நிர்வாக முறைமை மாணவர்களை 18 வயதில் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கும் சாத்தியப்பாட்டை திறம்பட வெளிப்படுத்துவது தான் காரணம்..!!

 

இதெல்லாம் சாதனை என்றால்.. வெவ்வேறு துறைகளில்.. வெவ்வேறு யுனிகளில்.. பெயர் நீளத்துக்கும் பட்டம் பெற்ற எத்தனையோ பேர் இருக்கினம். அவங்க...???! :icon_idea::)


இன்னொரு கதையளப்பு இந்தச் செய்தியில் உள்ளது. பிரித்தானியாவிலும் சரி.. இப்ப ஊரிலும் சரி.. நிறைய சட்டம் படிக்க மாணவர்கள் குவிகிறார்கள். சுமை... கஸ்டம் என்ற காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது.

 

இந்தச் செய்தியை ஆக்கிய ஊடகக்காரர்களுக்கு தான்.. எல்லாமே கஸ்டம் போல இருக்குது..!!

 

குறிப்பாக இலங்கையில் பல்கலைக்கழக கல்வியில்.. இப்போ.. சட்டம்.. முகாமைத்துவம்.. ஒரு பாடமாக போதிக்கப்படுகிறது..! அந்தளவுக்கு அவற்றின் முக்கியத்துவம் எல்லா துறைகளிலும் அமைந்துள்ளதோடு.. நிர்வாக முறைமைக்கு அடிப்படை சட்ட அறிவு எல்லோருக்கும் அவசியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!! :):icon_idea:

 

 

எனது மகன் 22 வயசில்

 

பட்டப்படிப்பு 3 வருடம் + MASTER 2 (2வருடம்)  முடித்தான்

பததிரிகைகள் ஒன்றிலும் காணோம்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகன் 22 வயசில்

 

பட்டப்படிப்பு 3 வருடம் + MASTER 2 (2வருடம்)  முடித்தான்

பததிரிகைகள் ஒன்றிலும் காணோம்....

 

(முழு) நிறைவாகும் வரை மறைவாயிருப்பது நல்லது. :D

 

குடும்பத்தில் முதல் பட்டப் படிப்பாயின் போடலாம்.  :lol:
 
உங்கள் சில விவேகமான எழுத்துக்களைப் பார்த்தால், குட்டி பதினாறு அடி பாயந்துள்ளதாக கருதலாம், விசுகர். :icon_idea:
 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.