Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'குடும்ப ஆட்சியிலிருந்து நாட்டைக் காக்கவே போட்டி': மைத்திரிபால

Featured Replies

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
 
141121150036_maithripala_sirisena_rajith
 
'100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்': மைத்திரிபால
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் சிறிசேன இந்த முடிவை அறிவித்தார்.
 
அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, துமிந்த திசாநாயக்க, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜிவ விஜேசிங்க, வசந்த சேனாநாயக்க ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
 
'குடும்ப ஆட்சியிலிருந்து நாட்டை காப்பதற்காகவே' தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
'100 நாட்களுக்குள் சீர்திருத்தம்'
'இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். பொது மக்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். நாட்டின் ஜனநாயகம், சட்டம்-ஒழுங்கு சிர்குலைந்துள்ளன' என்ற சிறிசேன, இந்த அழிவில் இருந்து நாட்டை காப்பதற்காகவே தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாகக் கூறினார்.
 
141110173024_ranil_wickramasinghe_304x17
 
'மைத்திரிபால அரசாங்கம் அமைத்தால் ரணில் விக்ரமசிங்க பிரதமராவார்'
 
தான் வெற்றிபெறும் நாள் முதல் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்படும் என்றும் கூறிய மைத்திரிபால, தான் அமைக்கும் அரசாங்கத்தின் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவுள்ளதாகவும் கூறினார்.
 
தனது புதிய ஆட்சின் கீழ், அரசியல்யாப்பின் 18 வது திருத்தம் இரத்துச் செய்யப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
 
அரசியல் யாப்பின் 18 வது திருத்தம் காரணமாகவே நாட்டில் சர்வாதிகார ஆட்சியொன்று உருவாகியுள்ளதாக கூறிய அவர், காவல்துறை, அரசசேவை, நீதித்துறை, ஊடக சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
 
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நீக்கப்பட்ட அரசியலமைப்பின் 17 வது திருத்தத்தை மீண்டும் அமலுக்கு கொண்டுவருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
தன்னை பொது ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்காக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் உள்ளிட்ட தரப்பினருக்கு நன்றி கூறுவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் ஆகியவை கொண்ட நாடொன்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவே தான் இந்த சவாலை ஏற்றுக்கொண்டதாவும் சிறிசேன கூறினார்.
 
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி பதவியிலிருந்து நாட்டை காப்பதற்காகவே தான் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.
 
இன்னும் பெரும் எண்ணிக்கையிலான ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் தினங்களில் தம்முடன் இணையவுள்ளதாகவும் அமைச்சர் சேனாரத்ன கூறினார்.
 
சந்திரிகா மீண்டும் தீவிர அரசியலில்
 
141121144505_maithripala_sirisena_chandr
 
'கட்சியையும் பொதுமக்களையும் காப்பதற்காகவே மீண்டும் தீவிர அரசியலில்': சந்திரிகா
 
முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவும் இங்கு கருத்து தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து மிகவும் கீழ்த்தரமான முறையில் தன்னை அகற்றியதாகக் கூறிய சந்திரிகா குமாரணதுங்க, கட்சியை மட்டுமன்றி பொதுமக்களையும் காப்பதற்காகவே மீண்டும் அரசியலுக்குள் பிரவேசித்ததாக தெரிவித்தார்.
 
தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கு பலதடவைகள் முயன்ற போதிலும், அதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் வழங்குவதற்கு எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரும்போது எல்லோரும் புது மாப்பிளையாகத்தான் வருவார்கள். போகப்போகத்தான் எல்லாம் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா வந்தார்.

யாழ்ப்பாணத்தை விட்டுப் புலிகளை வெளியேற்றினார்.

அப்போது தமிழ் மக்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்டிருந்தனர்.

 

மகிந்த வந்தார்
வடக்கு-கிழக்கிலிருந்து புலிகளை முற்றாகவே கிண்டிக் கிழங்கெடுத்தார்.

தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் மகிந்த 2 இலட்சம் வாக்குகளினால் வெற்றிபெற்றார்.

 

இப்ப மயித்திரிபால வருகிறார்.
என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ?

எதுக்கும் ****ப் ***ள் எச்சரிக்கையா இருக்கிறது நல்லது என்று எனக்குத் தோணுறது. :D

போனதடவை பொன்னர் மகிந்தவை எதிர்த்து நின்று தோற்று போனதோடு சிறைக்கும் போனார் அத்தோடு குடியுரிமையையும் இழந்தார்.

 

இவருக்கு எப்போ சங்கு வருமோ?

 

இல்லாரும் சேர்ந்து பாபாவில மனுசனை ஏத்தியாச்சு அப்பிடியே குள்ளநரி ரணில் தப்பிட்டுது.

ஒபாமா வந்தார் மோடி வந்தார் இப்ப மைத்திரிபால வருகின்றார் தமிழர்களை காக்க .

புலம்பெயர் ஒரு கூட்டம் இப்படியே கூவி திரியுது அதற்கு பின்னால் ஒரு பெருங்கூட்டம் இப்பவும் அலையுது .

மைத்திரிபால பயங்கரவாதத்தை ஒழித்ததற்கு ராஜபக்சாவிற்கு இப்பவும் நன்றி சொல்லவேண்டும் என்கின்றார் .

 

நாட்டை காப்பம் என்றுதான் அவர் பேசுகின்றார் .அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய இலங்கை பற்றித்தான் அவர்கள் கதைக்கின்றார்கள் .தமது நாட்டை பற்றிய கவலை தான் அவர்களுக்கு. எமக்குத்தான் எங்கட பிரச்சனை .அது முடியத்தான் இது பற்றி கதைக்கலாம் என்ற நிலைதான் .

 

  • கருத்துக்கள உறவுகள்

த.தே. கூ அவசரமாக முடிவெடுக்காது' - இரா. சம்பந்தன்......அய்யாவே சொல்லிட்டாரு...அப்ப நீங்கள் ஆரை சொல்லுறீங்க.....புலம் பெயர் சிறு கூட்டமென்று சொல்லுங்க...ஒட்டு மொத்தமாய் சொல்லாதீங்க...

தமிழரை விட்டு விடுங்க. எப்படியும் நிரந்தர அடிமைகள்தானே. சிங்கள மக்களாவது குடும்ப ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சிறிதளவாவது ஜனநாயகத்தை அநுபவிக்க ஆட்சி மாற்றம் அவசியமே. ஆகவே மைத்திரிபால வெல்ல வாழ்த்துக்கள்.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.