Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதியமைச்சர் திகாம்பரமும் ஐதேகவுடன் இணைகிறார்! - இன்று வெளியாகும் அறிவிப்பு

Featured Replies

அண்மையில், தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் நியமிக்கப்பட்ட பழனி திகாம்பரம் பிரதியமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு ஸ்ரீகொத்தாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஆளுங்கட்சியிலிருந்து விலகும் தனது முடிவை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள பிரதியமைச்சர் திகாம்பரம், அது தொடர்பான முடிவை பெரும்பாலும் இன்றுஊடகங்களுக்கு அறிவிப்பார் என்று தெரிய வருகின்றது.

அதேவேளை, நேற்றுமாலை நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை ஆளுங்கட்சியை விட்டு ஐதேகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=121238&category=TamilNews&language=tamil

Edited by துளசி

ஏன் இப்பவே ரிஸ்க் எடுப்பான் என்று டக்கி காத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் கட்சிகளும், ஆறுமுகம் தொண்டைமானும் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்க....

கூண்டோடு, மாற இப்பவே திட்டம் தீட்டியிருப்பார்கள்.
கருணாவின் வருகையும், அங்கு நிச்சயம் இருக்கும்.

விஜயகலா மகேஸ்வரனைப் பற்றி, சொல்லி தெரிய வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

டக்லஸ் ஆட்சிமாறியதும்தான் போவார். போனாலும் வரவேற்பிருக்கும்(10% யாழ் வோட்டு இவர் கையில்).

கருணாவுக்கும் இதே நிலைதான், ஆனால் போனாலும் பெரிதாய் வரவேற்பிராது ( மட்டில் கூட ஒரு மாகாணசபை சீட்டளவுக்கு கூட மக்களராதவில்லை).

விஜயகலா இப்பவே யுஎன்பிதான்.

தொண்டாவும், அதாவுல்லாவும், பதியுதீனும் டக்லஸ் போலத்தான்.

ஆனால் கக்கீம் தேர்தலுக்கு முன்பே மாறுவார் என்றே படுகிறது.

10 வீத யாழ் வோட்டுக்காக இல்லை டக்கிக்கு மரியாதை. தமிழருக்கு எந்த உரிமையும் கொடுக்காவிட்டாலும் அரசை மறுபேச்சின்றி ஆதரிக்கும் நபர் என்பதாலேயே வந்த மரியாதை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அரசை ஆதரிக்க ஆயிரம் பேர் இருக்கினம். சுரேஸ் பிரேமச்சந்திரனும் சந்திரிகாவுடன் இப்படி ஒட்டியவர்தான். ஆனால் டக்லசுக்கு மட்டும் ஏன் தனிமரியாதை ( கபினெட் அந்த்ஹஸ்து உட்பட). காரணம் அவருக்கு இருக்கும் ஓரளவு மக்களாதரவு. தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய கூட்டமைப்புக்காரர் எல்லாம் கூட்டமைப்பை விட்டுப்போன கட்டுக்காசும் தேறாது, ஆனால் டக்லஸ்சுக்கு அப்படியில்லை. அதுதான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்லஸ் ஆட்சிமாறியதும்தான் போவார். போனாலும் வரவேற்பிருக்கும்(10% யாழ் வோட்டு இவர் கையில்).

கருணாவுக்கும் இதே நிலைதான், ஆனால் போனாலும் பெரிதாய் வரவேற்பிராது ( மட்டில் கூட ஒரு மாகாணசபை சீட்டளவுக்கு கூட மக்களராதவில்லை).

விஜயகலா இப்பவே யுஎன்பிதான்.

தொண்டாவும், அதாவுல்லாவும், பதியுதீனும் டக்லஸ் போலத்தான்.

ஆனால் கக்கீம் தேர்தலுக்கு முன்பே மாறுவார் என்றே படுகிறது.

 

சில வருடங்களுக்கு முன்பு, அவர்களின் வியாபார நிறுவனங்களுக்கு... அரசால் நெருக்கடி வந்த போது...

அவர் கட்சி மாற, தீர்மானித்ததாக, எங்கோ வாசித்தேன்.

அவர் கட்சி மாறியிருந்த்திருப்பார் என்று, நினைத்தேன். கோசான்.

 

பிரதி அமைச்சர் முரளிதரன் எப்ப சொந்த வீட்டுக்கு வரபோறார்  :D

இப்படி அரசை ஆதரிக்க ஆயிரம் பேர் இருக்கினம். சுரேஸ் பிரேமச்சந்திரனும் சந்திரிகாவுடன் இப்படி ஒட்டியவர்தான். ஆனால் டக்லசுக்கு மட்டும் ஏன் தனிமரியாதை ( கபினெட் அந்த்ஹஸ்து உட்பட). காரணம் அவருக்கு இருக்கும் ஓரளவு மக்களாதரவு. தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய கூட்டமைப்புக்காரர் எல்லாம் கூட்டமைப்பை விட்டுப்போன கட்டுக்காசும் தேறாது, ஆனால் டக்லஸ்சுக்கு அப்படியில்லை. அதுதான் காரணம்.

ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சியில் பத்து வருடம் இருந்து விட்டு பின்னரும் இதே ஆதரவு டக்கலசுக்கு இருந்தால் அதை ஆதரவு என்று நம்பலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அரசை ஆதரிக்க ஆயிரம் பேர் இருக்கினம். சுரேஸ் பிரேமச்சந்திரனும் சந்திரிகாவுடன் இப்படி ஒட்டியவர்தான். ஆனால் டக்லசுக்கு மட்டும் ஏன் தனிமரியாதை ( கபினெட் அந்த்ஹஸ்து உட்பட). காரணம் அவருக்கு இருக்கும் ஓரளவு மக்களாதரவு. தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய கூட்டமைப்புக்காரர் எல்லாம் கூட்டமைப்பை விட்டுப்போன கட்டுக்காசும் தேறாது, ஆனால் டக்லஸ்சுக்கு அப்படியில்லை. அதுதான் காரணம்.

 

200 வாக்குகள் எடுத்து, கபினெட் அந்தஸ்து உள்ள அமைச்சராய் இருந்தால்,

மக்கள் ஆதரவு என்று கணிப்பதா?

அட கொடுமையே.....

வர, வர,,,, நம்ம சனத்துக்கு, மண்டையிலை களிமண் கூடிப் போச்சுது.scare3.gif:D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மூன்று தரம் ஆட்சியில் அமர்ந்த எம்ஜிஆருக்கு, முதலாவது எலக்சனுக்கு பின் மக்கள் ஆதரவில்லை என்கிறீர்களா துல்ஸ்?

உங்க லாஜிக் எங்கோ இடிக்குதே?

  • கருத்துக்கள உறவுகள்

பிரதி அமைச்சர் முரளிதரன் எப்ப சொந்த வீட்டுக்கு வரபோறார்  :D

 

எல்லா அரசியல்வாதிகளையும் விட, 

முரளிதரனுக்குத்தான்.... இக்கட்டான, திரிசங்கு சொர்க்க நிலை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ அண்ணை 90களில் நடந்த எலக்சனிலேயே நிக்காதேங்கோ....அதுக்குப் பிறகு 15 தேர்தல் நடந்தாச்சு.

அப்ப மூன்று தரம் ஆட்சியில் அமர்ந்த எம்ஜிஆருக்கு, முதலாவது எலக்சனுக்கு பின் மக்கள் ஆதரவில்லை என்கிறீர்களா துல்ஸ்?

உங்க லாஜிக் எங்கோ இடிக்குதே?

நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள். எம்ஜியாரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள். டக்கிக்கு இருக்கும் ஆதரவு பதவியை வைத்து சிறிய சலுகைகள் காட்டி பெற்ற ஆதரவு என்ற எல்லோருக்கும் தெரிந்த அற்ப விடயத்துக்கு ஒரு விவாதமா? அதுவும் டக்லஸ் ஆதரவாளருக்கே இந்தவிடயம் தெளிவாய் தெரியும். நம்ம தலைவர் வெட்க ரொசம், மனச்சாட்சி துளியளவும் இல்லாமல். பதவியில் உள்ள ஆட்சியை ஆதரித்து எமக்கும் கொஞ்சம் இனிப்புக்கள் தருவார் என்ற நம்பிக்கை தான். அது மட்டும் இல்லையென என்றால் விளைவு பூச்சியம் தான்.

Edited by tulpen

டக்லஸ் ஆட்சிமாறியதும்தான் போவார். போனாலும் வரவேற்பிருக்கும்(10% யாழ் வோட்டு இவர் கையில்).

கருணாவுக்கும் இதே நிலைதான், ஆனால் போனாலும் பெரிதாய் வரவேற்பிராது ( மட்டில் கூட ஒரு மாகாணசபை சீட்டளவுக்கு கூட மக்களராதவில்லை).

விஜயகலா இப்பவே யுஎன்பிதான்.

தொண்டாவும், அதாவுல்லாவும், பதியுதீனும் டக்லஸ் போலத்தான்.

ஆனால் கக்கீம் தேர்தலுக்கு முன்பே மாறுவார் என்றே படுகிறது.

சிறு திருத்தம், கருணாவுக்கு அங்கு இடம் கிடைக்காது. 

 

எங்கள் டங்கயாருக்கும் இப்ப இருக்கும் செல்வாக்கு அங்கு போனால் இருக்குமோ தெரியாது.

தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறை வந்த பின்னர் ( அனேகமாக புதிய அரசியலமைப்பில் இந்த முறையே அமுல்படுத்தப்படும் போல தெரிகிறது) இந்த டக்கிளசு கருணா ஆகியோர் பாராளுமன்றத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள். எம்ஜியாரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள். டக்கிக்கு இருக்கும் ஆதரவு பதவியை வைத்து சிறிய சலுகைகள் காட்டி பெற்ற ஆதரவு என்ற எல்லோருக்கும் தெரிந்த அற்ப விடயத்துக்கு ஒரு விவாதமா? அதுவும் டக்லஸ் ஆதரவாளருக்கே இந்தவிடயம் தெளிவாய் தெரியும். நம்ம தலைவர் வெட்க ரொசம், மனச்சாட்சி துளியளவும் இல்லாமல். பதவியில் உள்ள ஆட்சியை ஆதரித்து எமக்கும் கொஞ்சம் இனிப்புக்கள் தருவார் என்ற நம்பிக்கை தான். அது மட்டும் இல்லையென என்றால் விளைவு பூச்சியம் தான்.

 

அது மாத்திரம் இல்லை யாழுக்குள் இருக்கும் சாதியமும் இவருக்கு ஒரு சாதகமாய் போய்விட்டது. 

 

சாதியடிப்படையில் ஒதுக்கப்பட்டவர்களை டங்கி அரவனத்துகொண்டுள்ளார் அதுவும் ஒரு காரணம்.

 

கோசன் சொன்னதுமாதிரி இவருக்கு ஒரு பகுதி வாக்கு உள்ளது என்னமோ உண்மைதான் அனால் அது நிலையானதா? 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அரசியல் வாதிக்கும் எப்போதும் வாக்கு வங்கி நிரந்தரமில்லை. டக்கிளசுக்கு சாதி, பதவி நப்பாசையில் மட்டுமில்லை, தமிழ்தேசியத்துக்கு எதிரான வாக்காளர்கள் என்று ஒரு கூட்டாக 10% யாழ் வாக்குகள் இருப்பது உண்மையே.

எமது நாட்டில் ஓரினசேர்கையாளரே இல்லை என்று ஈரான் அதிபர் காமெடி பண்ணியது போல இல்லாமல், யாழில் 10% மக்கள் தமிழ் தேசியக் கொள்கை பால் ஈர்க்க படாமல் இருக்கிறார்கள் எனும் கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

மணி சொல்வது போல் வெஸ்மின்ஸ்டர் முறைக்கு மாறினால் இவர்களுக்கு பாராளுமன்ற வாய்ப்பு இராது. ஆனால் வெஸ்மின்ஸ்டர் முறைக்கு மாறினாலும் விகிதாசார பிரதிநிதிதுவம் பேணப்பட்டால் தொடர்ந்தும் வெல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறை வந்த பின்னர் ( அனேகமாக புதிய அரசியலமைப்பில் இந்த முறையே அமுல்படுத்தப்படும் போல தெரிகிறது) இந்த டக்கிளசு கருணா ஆகியோர் பாராளுமன்றத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

 

கோலோச்சும் அரசுடனும்,

காத்து அடிக்கிற பக்கம், சாய்ந்து போகும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை!!!

இதனை, நிவர்த்தி, செய்ய முடியாது.

 

இதற்கு, புலிகளின் அரசியல் தான், சிறந்தது.

மிகவும், போற்றப் படக் கூடியது.

 

"மயிலே.... மயிலே... என்றால்,  அது, இறகு போடாது." :)

காதுக்குள் சூடு வைத்து, நாலு பேரை... விளக்கு கம்பத்தில் கட்டி வைத்தால் நாடு.... தன்ரை பாட்டில், திரும்பும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா அரசியல்வாதிகளையும் விட, 

முரளிதரனுக்குத்தான்.... இக்கட்டான, திரிசங்கு சொர்க்க நிலை. :lol:

 

சகுனிகளுக்கும், கண்ண பிரான்களுக்கும் 'திரிசங்கு' நிலை என்று ஒன்று வருவதில்லை!

 

இப்போது ஹக்கீமையும், தொண்டைமான்களையும் இதனுடன் சேர்த்து விடலாம்!

 

சம்பந்தன்கள்....? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிலசு எக்கேடு கெட்டா எனக்கென்ன. எனக்கு அந்தாளை பிடியாது என்பதுக்காக அவருக்கு 10% இல்லை என்று பொய் எழுத முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிலசு எக்கேடு கெட்டா எனக்கென்ன. எனக்கு அந்தாளை பிடியாது என்பதுக்காக அவருக்கு 10% இல்லை என்று பொய் எழுத முடியாது.

 

விடுதலைப் புலிகளுக்கெதிரான வாக்குகள் டக்ளஸ் அவர்களுக்கு இருந்தது என்னமோ உண்மைதான் .

ஆனால் இப்போதுதான் அவர்கள் இல்லையே ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கியை எமக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ, வடக்கில் டக்கிக்கு ஒரு வாக்கு வங்கி உண்டு. 2010-ல் இருந்து இலங்கையில் வசிக்கிறேன். இதை உணர முடிகிறது. ஜாதி வாக்குகள் ஒரு பக்கம். டக்கியால் பலனடைந்த, உத்தியோகம் பெற்ற ஆட்களின் வாக்குகள் ஒரு பக்கம். நாளை நாடாளுமன்ற தேர்தல் வந்தால்கூட டக்கிக்கு 1 சீட் நிச்சயம். கொஞ்சம் முயற்சித்தால், 2-வது சீட் எடுக்கலாம்.

 

அந்த முயற்சியில் வன்னியில் பல வேலைகள் செய்கிறார்கள்.  அவர்களது கட்சியை சேர்ந்த சந்திரகுமார் கிட்டத்தட்ட வன்னியிலேயே இருந்து செயல்படுகிறார். சில நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சந்திரகுமாரின் மச்சான் (மனைவியின் சகோதரர்) கிளிநொச்சியில் வசிக்கிறார். புலிகளின் ஊடகப் பிரிவு ஆள் அவர் (பழைய ஈரோஸ்). அப்படி ஒரு கனெக்ஷனும் உள்ளது.

 

வடக்கில் உள்ள அநேக அரசு அலுவலகர்கள் டக்கியால் நியமனம் பெற்றவர்கள். முக்கியமாக கிராம சபை, பட்டின சபை அலுவலகர்கள் ஈ.பி.டி.பி. அனுதாபிகள். இவர்கள்தான் மக்களை நேரடியாக சந்திக்கும் ஆட்கள். நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஆட்கள். டக்கி ஏதோ ஒரு பதவியில் இருக்கும்வரை சில காரியங்களை செய்யலாம் என ஒரு நம்பிக்கை பலருக்கு உள்ளது.

 

மொத்தத்தில் வடக்கில் வாக்கு வங்கி உள்ள ஒருவர் டக்கிதான்.

 

நாளைக்கே மாவை தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி தனியே எலக்ஷனில் நின்றால் கட்டுப்பணமும் தேறாது. மற்ற தமிழ் அரசியல்வாதிகளின் நிலையும் அதுதான்.

 

கூட்டமைப்பினருடன் கதைத்தால், வடக்கில் எத்தனை எம்.பி. சீட் உள்ளதோ, அதில் ஒன்றை கழித்துவிட்டே தமக்குள் கணக்கு போடுகிறார்கள். அந்த 1 சீட் டக்கியுடையது என அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.

 

இதுதான் நான் நேரில் கண்டு உணர்வது. இந்த கணிப்பு தப்பா சரியா என்பது, தேர்தல் முடிவு வரும்போது மட்டுமே தெரியவரும்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்
நாளைக்கே மாவை தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி தனியே எலக்ஷனில் நின்றால் கட்டுப்பணமும் தேறாது. மற்ற தமிழ் அரசியல்வாதிகளின் நிலையும் அதுதான்.

 

 

இது டக்ளசுக்கும் பொருந்தும். அரசின் கூட்டை விட்டு வெளியில் வந்து தனியே டக்ளஸ்  தேர்த்தலில் நின்றாலும் அதே கதி தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது டக்ளசுக்கும் பொருந்தும். அரசின் கூட்டை விட்டு வெளியில் வந்து தனியே டக்ளஸ்  தேர்த்தலில் நின்றாலும் அதே கதி தான்.

நுணாவிலான்.. டக்ளசின் கூட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன். கூட்டைவிட்டு டக்ளஸ் வெளியே வந்தால் ஜெயிக்க முடியாது என்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வடக்கில் செல்வாக்கு ஓரளவுக்காவது இருக்க வேண்டும் என்று அர்த்தமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.