Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கர பவுன்சரில் காயமடைந்த ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸ் உயிருக்குப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்.நான் எப்படியாவது இவர் தப்பி விடுவார் என்றே நினைத்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பவுன்சரில் ஓட்டம் எடுக்க முனைவது தேவையற்ற றிஸ்க்.  விக்கெட்டுக்கு ஆபத்தற்ற அத்தகைய பந்து வீச்சை அநாவசியமாக எதிர்கொள்ளப் போய் பிடிகொடுத்து வெளியேறவும் நேரிடலாம். இப்படியான ஆபத்தில் சிக்கவும் நேரிடலாம்.

 

பவுன்சரில்.. சித்து விளையாடும்.. தற்போதையை 20/20 போட்டி முறை கொண்டு வந்துள்ள புதிய கிரிக்கெட் காலாசாரமும்.. தகுந்த உடற்பாதுகாப்பு கவசங்கள் இன்மையும்.. இந்த மரணத்திற்கு காரணம்.

 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சு ஆதிக்கம் குறைந்த பின்பு துடுப்பாட்டக்காரரின் ஆதிக்கம் பலமடங்கு ஓங்கிவிட்டது. தரமான மட்டைகள், பயிற்சி, சாதகமான விதிகள் (களத் தடுப்பில் கட்டுப்பாடுகள், மொக்கையான ஆடுதளங்கள், free hit, super over.. ) இப்படி பல.

இவற்றால் பந்து வீச்சாளர்களின் நிலை பரிதாபமாகிவிட்டது. ஒருநாள் போட்டிகளிலேயே 200 ஐ தாண்டிவிட்டார்கள் ( மொக்கையான இந்திய களங்களில் என்பது குறிப்பிடத்தக்கது.) இவை துடுப்பாட்டக்காரர்களுக்கு புதிய சவால்களாக அமைகின்றன. அது பந்துவீச்சுக்கு தர வேண்டிய மரியாதையையும், அவதானங்கயைும் குறைக்கின்றன.

இந்த உயிர் இழப்பினால் பௌன்சர்களை தடைசெய்து ஆட்டத்தை இன்னும் கேலிக்கூத்து ஆக்கக்கூடாது என்பதே எனது விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய நாட்களில் என்னை மிகவும் வருத்திய ஒரு மரணம். மூன்று நாட்கள் இவரது மரணச் செய்தியை வாசிக்கும்பொழுதெல்லாம் துக்கம் தொண்டையை அடைத்து கண்ணீர் சிந்திய நாட்கள். பலர் இறக்கிறார்கள் நாள்தோறும், ஆனால் இவரது மரணம் மட்டும் என்னை மிகவும் வருத்துகிறது, காரணம் புரியவில்லை.

 

இவருக்கு வந்த அனுதாபச் செய்திகளிப் படிக்கும்போது எப்படிப்பட்ட ஒரு மனிதனை இழந்திருக்கிறோம் என்று புரிகிறது.

 

மிகவும் நெருங்கிய ஒரு உறாவினர் இறந்தால் இருக்கும் அதே சோகம் இன்னும் மனதின் மூலையில் தங்கிக் கொண்டு இருக்கிறது.

 

அவரது ஆன்மா சாந்தியடையட்டும் !

முதல் பக்கம்
ஹியுஸ் இறுதிச் சடங்கில் கோஹ்லி பங்கேற்பு
நவம்பர் 30, 2014.

 

அடிலெய்டு: மறைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுசின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் கேப்டன் விராத் கோஹ்லி, இயக்குனர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.     

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன், இந்திய அணி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி போட்டிகளில் (இரண்டு நாள்) பங்கேற்க இருந்தது. முதல் பயிற்சி போட்டி ‘டிரா’வில் முடிந்தது.                                   

உள்ளூர் போட்டியில் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனால் இரண்டாவது பயிற்சி போட்டி ரத்து செய்யப்பட்டது. தவிர வரும் டிச., 4ல் பிரிஸ்பேனில் துவங்க இருந்த முதல் டெஸ்ட் போட்டியும் தேதி குறுப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.     

 

இந்நிலையில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த மூன்று நாட்களாக அடிலெய்டில் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஹியுஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். தவிர நேற்று முன்தினம் கோஹ்லி, தனது பேட் மற்றும் தொப்பியை அடிலெய்டு ஓவல் மைதானத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த ஹியுசுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் வைத்தார். இன்று இந்திய வீரர்கள் அனைவரும் பயணத்திட்டத்தின் படி பிரிஸ்பேன் செல்கின்றனர்.     

ஹியுசின் இறுதிச் சடங்கு வரும் டிச., 3ல் அவரது சொந்த ஊரான மேக்ஸ்விலியில் நடக்கவுள்ளது. இதில், இந்தியா சார்பில் கேப்டன் விராத் கோஹ்லி, இயக்குனர் ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், இந்திய அணியின் மானேஜர் அர்ஷாத் அயுப் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் மூன்று அல்லது நான்கு இந்திய வீரர்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதி முடிவு, பிரிஸ்பேனில் இன்று முடிவு செய்யப்படும்.
 

http://sports.dinamalar.com/2014/11/1417368368/ViratKohliHughesFuneralFunctionIndiaAustralia.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளையாட்டுவீரருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இறுதிச் சடங்கில் பிலிப் ஹியூஸ் சவப்பெட்டியை சுமக்கிறார் கேப்டன் கிளார்க்
 

 

நாளை மாக்ஸ்வில்லில் நடைபெறும் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கில் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க், பிலிப் ஹியூஸ் சவப்பெட்டியை சுமக்கும் 8 நபர்களில் ஒருவராகச் செயலாற்றுகிறார்.

மேலும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிலிப் ஹியூஸின் நெருங்கிய நண்பரான மைக்கேல் கிளார்க் உரையாற்றுகிறார்.

பிலிப் ஹியூஸின் சவப்பெட்டியச் சுமக்கும் 8 நபர்களில் ஒருவராக மைக்கேல் கிளார்க் தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். ஹியூஸின் தந்தை கிரெக், அவரது சகோதரர் ஜேசன், ஆரோன் பின்ச் உள்ளிட்டோர் சவப்பெட்டி சுமப்பவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பிலிப் ஹியூஸ், மாக்ஸ்வில்லில் அனைவருடனும் நெருங்கிப் பழகியவர் என்பதால் இறுதிச் சடங்கில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஹியூஸ் குடும்பத்தினர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

சாலை வழியாக பிலிப் ஹியூஸின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த 40 நிமிடங்களுக்கு பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

சுமார் 5,000 பேர் பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்களில் முன்னாள், இந்நாள் வீரர்கள் அனைவரும், ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர். மார்க் டெய்லர், ரிச்சர்ட் ஹேட்லி, லாரா, ஷேன் வார்ன், ஹஸ்ஸி, பிரெட் லீ, ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், கிளென் மெக்ரா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/article6655109.ece

  • கருத்துக்கள உறவுகள்

பிலிப் கியூஸ் உயர்தர வகுப்பினை கோம்புஸ் ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்றார். அக்காலத்தில் ஈழத்தமிழர்கள் அதிகம் படித்த பாடசாலை கோம்புஸ் பாடசாலை. அவருடன் பல ஈழத்தமிழர்கள் கல்வி கற்றார். அப்பாடசாலையில் பிலிப் கியூசுக்கு துடுப்பாட்டம் கற்பித்த ஆசிரியர் ஈழத்தமிழரான பாலன் மாஸ்டராவர். இவர் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்.

  • தொடங்கியவர்

பிலிப் கியூஸ் உயர்தர வகுப்பினை கோம்புஸ் ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்றார். அக்காலத்தில் ஈழத்தமிழர்கள் அதிகம் படித்த பாடசாலை கோம்புஸ் பாடசாலை. அவருடன் பல ஈழத்தமிழர்கள் கல்வி கற்றார். அப்பாடசாலையில் பிலிப் கியூசுக்கு துடுப்பாட்டம் கற்பித்த ஆசிரியர் ஈழத்தமிழரான பாலன் மாஸ்டராவர். இவர் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்.

 

நல்ல தகவல் இணைப்புக்கு நன்றி கந்தப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.