Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது ம.தி.மு.க..!

Featured Replies

          இலங்கை அரசுடன் தொடர்ந்து நட்புறவு பாராட்டி வரும் மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ., தலைமையிலான தே. ஜ., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க,. விலகுவதாக கட்சியின் பொது செயலர் வைகோ சென்னையில் இன்று மதியம் தெரிவித்தார். தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக மோடி செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீப காலமாக வைகோ பா.ஜ., அரசை கடுமையா விமர்சித்து வந்தார். இலங்கை தமிழர்கள் தூக்கு, இலங்கை மீனவர்கள் கைது ஆகிய விவகாரத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மோடி அரசு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும் மோடியை வைகோ விமர்சிப்பது, கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வாறு செயல்படுவது சரியல்ல. நாவடக்கம் தேவை என எச்சரிக்கப்பட்டது. பா.ஜ., முன்னணி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கூட ம.தி.மு.க.,வை தடை செய்ய முயற்சிப்பேன் என்றும் கடும் எச்சரிக்கை தெரிவித்திருந்தார். இவ்வாறு பல பிணக்குகள் இருந்து வந்தன. இந்நிலையில் ம.தி.மு.க., மாவட்ட செயலர், உயர்நிலை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி, பாம்பாறு அணை விவகாரத்தில், மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஆதரவாக நடக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை வாஜ்பாய், அத்வானி போன்றோர் வழிநடத்தி சென்ற காலத்தில் கடைபிடிக்கப்பட்ட போக்கு மோடி தலைமையிலான கூட்டணியில் இப்போது இல்லை. எனவே இந்த உறவை தொடர முடியாது என்பதால் தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகிட முடிவு செய்துள்ளோம் என வைகோ கூட்ட முடிவிற்கு பின்னர் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

 

விவகாரத்து தான் வழி: எச்.ராசா : கூட்டணி விலகல் தொடர்பாக பா.ஜ., செயலர்களில் ஒருவரான எச்.ராஜா கூறுகையில், நாட்டை துண்டாடும் முயற்சிக்கு நாங்கள் துணை போக மாட்டோம். பா.ஜ., சித்தாந்தம், ம.தி.மு.க., சித்தாந்தம் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. ஒற்றுமை சரியாக இருக்கும் என நினைத்து தான் நாங்கள் ம.தி.மு.க,வை சேர்த்தோம். கல்யாணம் முடிக்கும் போது எல்லாம் சரியாக இருக்கும் என நம்பித்தான் முடிக்கிறோம். ஒத்துவரவில்லையெனில் விவாகரத்து தான் முடிவு. நல்ல முடிவு எடுத்துள்ளது. தினமும் சண்டை போட்டு கொண்டிருப்பதை விட பிரிந்து செல்வது நல்லலது. பிரிந்து செல்வதால் பாதிப்பு ஒன்றும் இல்லை. என தெரிவித்தார்.

 

ம.தி.மு.க., விலகல் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்; கூட்டணியில் இருந்த போது தொகுதிகளை விட்டு கொடுத்தோம். சகோதர உணர்வுடன் தான் இருந்தோம். ஆனால் உலகம் முழுவதும் மோடியை பாராட்டும் போது மோடியை வேண்டுமென்றே வைகோ விமர்சனம் செய்தார். இதனால் எங்களுக்குள் பிளவு ஏற்பட்டது. இவ்வாறு தமிழிசை சவுந்திர ராஜன் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு .....  சிங்களவரையும் கிந்திக்காரனையும் ஒருபோதும் நம்ப முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்

காலம் தாழ்த்திய முடிவு அடுத்து ?

  • கருத்துக்கள உறவுகள்

காலம் தாழ்த்திய முடிவு அடுத்து ?

அடுத்து,அடுத்த தேர்தல் வரும்வரைக்கும் தனித்தவில் தான்.
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தலைவர் கட்சியுடன் கூட்டுவக்கேலாதா?

  • கருத்துக்கள உறவுகள்

காலம்  தாழ்த்திய, முடிவு என்றாலும்...
வரவேற்கக் கூடிய, முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமும் முடிந்து போகட்டும்.. வைகோவுக்கு இப்போதும் கூட வரலாறு அற்புதமான வாய்ப்பை முன்னெப்போதையும் விட வழங்கியிருக்கிறது.. உங்களைப் போலவே பாஜகவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறது பாமக... திக்கு தெரியாத திசையில் தேமுதிக திணறிக் கொண்டிருக்கிறது... எங்கே செல்லும் இந்தப் பாதை என இருட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் இடதுசாரிகள்.. மீண்டும் திமுகவுடனா? என்று அசந்து போய் நிற்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.. ஆகையால் வரும் 2016 சட்டசபை தேர்தலிலாவது வலுவான ஒரு "முன்னணி"யை வைகோ முன்முயற்சி எடுத்து உருவாக்கி "மாற்று சக்திகளில்" ஒன்றாக இடம்பிடித்தால் மட்டுமே 21 ஆண்டுகாலம் இருளில் கிடக்கும் "மறுமலர்ச்சி"யை தொண்டர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் வைகோவால் காட்ட முடியும்! எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகளையும் வைகோவால் தக்க வைக்கவும் முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

பாமக, தேமுதிக, இடதுசாரிகள்,விசி, நாம் தமிழர், மதிமுக எல்லாம் ஒரே அணியில் வந்தா - இலங்கை தமிழர் ஆதரவு லாபிக்கு மூன்றாவது இடமாவது கிடைக்கும். ஆனால் இலங்கைபிரச்சினையை ஊறுகாய் போல பாவித்து பழக்கப்பட்ட இவர்கள் ஒருபோதும் ஒரணியில் நிக்கமாட்டார்கள் என்பதே உண்மை.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.