Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேனிலவுக் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனையோ அநியாயங்கள் தினமும் பெண்களுக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன.நன்றி நாதமுனி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆய்வு நாதமுனி...கிரைம் கதைகளில் ந்ல்ல ஆர்வம் போல:D

எனக்கு முதலில் டிவானி மேல் தான் டவுட் இருந்தது ஆனால் நாதமுனி அண்ணாவின் ஆய்வை வாசித்தபின்பு அந்த டவுட் அவுட்.

நன்றாக அலசி ஆராய்ந்துள்ளீர்கள் நாதமுனி அண்ணா!! துளசி மாதிரி நீங்களும் சட்ட ஆய்வாளராக வந்திருக்க வேண்டியவர் தான் :)

  • கருத்துக்கள உறவுகள்
எனது அபிப்பிராயத்தின்படி, இது ஓர் திட்டமிட்ட படுகொலை.
அரபு நாட்டு சட்டப்படி எல்லோரும் கழுத்து வெட்டி கொல்லப்பட வேண்டும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எனது அபிப்பிராயத்தின்படி, இது ஓர் திட்டமிட்ட படுகொலை.
அரபு நாட்டு சட்டப்படி எல்லோரும் கழுத்து வெட்டி கொல்லப்பட வேண்டும்.

 

 

நீதிதேவன் மயக்கம் என்ற வார்த்தை கேள்விப் பட்டுள்ளீர்களா ? அது தான் இங்கே.
 
திட்ட மிட்ட படுகொலைக்கு நேரம் இருக்கவில்லை. ஆட்களும் ஒருவர்க்கு ஒருவர் அறிமுகமாக இருக்க வில்லை.
 
மேலும் குற்றம் சுமத்தப் பட்டவருடன் தொடர்பு கொண்டிருந்த ஒரே ஒரு நபர், தோங்கோ, தனது தண்டனைக் குறைப்புக்காக அரச தரப்புடன் 'டீல்' (சட்டப்படி - Plea Bargain) செய்து கொண்டதால், அரச தரப்பின் அந்த ஒரே சாட்சி பலவீனமாகி, நீதிமன்றில் அனுமதிக்க முடியாததாகி விட்டது.
 
மனைவி இறந்த 48 மணி நேரதினுள்ளும் அந்த 'கணவர்' அங்கிருந்தவாறே பிரிட்டனின் பிரபல்யமான ஓரின சேர்க்கையாளர்' இணைய தளம் சென்று 'logon' செய்து பார்த்து இன்னுமொருவருடன் 'காதல்' தொடர்பில் இருந்து இருக்கின்றார். அந்தளவுக்கு 'ஆண் மோக வெறி' பிடித்து இருந்திருக்கு.
 
இவர்களுக்கு இறைவன் தான் தண்டனை தர வேண்டும்.  :o
  • கருத்துக்கள உறவுகள்

நேர்த்தியான தொகுப்பு. பாராட்டுக்கள்.. நாதமுனி. :)

 

எனது அபிப்பிராயப்படி.. டிவானி சூழ்நிலைக்கைதி..!

 

திட்டமிட்டு கொலை செய்திருப்பாராகின்.. அதற்கான பின்னணி என்ன.. அந்த முடிவுக்கு வர.. அந்தப் பெண்ணில் ஏதோ தவறு இருக்கலாம்...??! ஓரினச் சேர்க்கை என்பது மலிவான காரணம்... கொலை செய்யும் அளவுக்கு அது போயிருக்க வாய்ப்பில்லை..!! அதுவும் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட பின்..ஏன் இப்படி ஒரு செயலைச் செய்து மாட்டிக்க நினைக்க வேண்டும்..????!

 

அவரா திட்டமிடாத கொலையாயின் ஏன் அந்தப் பெண் மட்டும் குறி வைக்கப்பட்டார்...??! இன்னும் சரியான காரணங்கள் அது தொடர்பில்.. வெளிவந்ததாகத் தெரியவில்லை..!!

 

எனவே இதில் மர்மம் நீடிக்கவே செய்கிறது..!!!

 

எதுஎப்படியோ நீதிமன்றம் டிவானியை விடுதலை செய்துவிட்டது. பெண்ணின் தரப்புக்கு.. மேல்முறையீட்டுக்கு வழி இருக்கோ என்று தெரியவில்லை. அத்தோடு டிவானி இன்று.. டுபாய் ஊடாக ஹட்விக் வழியாக தாயகம் திரும்பியும் விட்டார். :icon_idea:

Edited by nedukkalapoovan

திட்டமிட்டு கொலை செய்திருப்பாராகின்.. அதற்கான பின்னணி என்ன.. அந்த முடிவுக்கு வர.. அந்தப் பெண்ணில் ஏதோ தவறு இருக்கலாம்...??!

 

நினைச்சன் :) எங்க இன்னும் நெடுக்ஸ் அண்ணாவைக்காணும் அந்த பெண்ணின் மீது தவறிருக்கலாம் என்று சொல்வதற்கு என்று :huh: ...............இதோ வந்துட்டார்!!!!!!! :wub::icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

நினைச்சன் :) எங்க இன்னும் நெடுக்ஸ் அண்ணாவைக்காணும் அந்த பெண்ணின் மீது தவறிருக்கலாம் என்று சொல்வதற்கு என்று :huh: ...............இதோ வந்துட்டார்!!!!!!! :wub::icon_idea:

 

 

ஏன் அந்தப் பெண்ணின் ex செய்திட்டு பழியை டிவானி மீது திருப்பும் வகையில் நடந்திருக்கக் கூடாது. குறித்த பெண்ணின் குடும்பத்துக்கு தென்னாபிரிக்க இந்திய சமூகத்தோடு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இவா அடிக்கடி அங்கு சிறு வயது முதல் போயும் வந்துள்ளா. டிவானியை விட அவருக்கு தென்னாபிரிக்க தொடர்பு அதிகம்..!!!! இந்தக் கோணத்தை ஏன் சறுக்க விட்டார்கள்..???????! :icon_idea::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியின் எழுத்துநடை எப்போதுமே ஒரு 'திகில்' நிறைந்த மர்ம நாவலை வாசிப்பது போலவே இருக்கும்!

 

அதற்காகவே திரும்பத் திரும்ப வாசிப்பதுண்டு!

 

மற்றது.. பொதுவாக இந்தியர்களின் மனத்துக்கும்.. அவர்களது செயல்களுக்கும் எந்த விதமான தொடர்பாடலும் இருப்பதில்லை! :o

 

Screen-Shot-2013-01-12-at-5.20.35-PM.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வருகை தந்த அனைவருக்கும், குறிப்பாக நெடுக்கருக்கும் நன்றி.
 
புங்கை, நீங்கள் சொன்ன இந்தியர் பற்றிய குறிப்பு சரிதான்.
 
நேற்று ஒரு 'recruitment agency' வெள்ளையருடன் பேசினேன். பங்களூரில் இருந்து இரு மாதங்களுக்கு முன் ஒரு பெண் வேலை முகவர், அங்கு தலைமையகத்தினை கொண்ட,  நிறுவனத்துக்கு, லண்டனில் ஒரு பாங்கில், ஒரு பெரிய assignment க்கு ஆள் தேடி எனது cv வாங்கி அனுப்பி வைத்தார். 
 
பொதுவாக இவர்களுக்கு வேலை செய்ய விரும்புவதில்லை. ஆனால் அந்த வங்கியில் நுழைய நல்ல சந்தர்ப்பம் என கருதி அனுப்பினேன்.
 
இரண்டு மாதமாக பதில் இல்லை. கடந்த வாரம், திடீரென, அந்த நிறுவனமே நேரில் அழைத்தது. எனது cv, internet ல் கிடைத்ததாம். அரைமணி நேரத்தில் interview என்றார்கள். முடியாது. வேறு meeting இருக்கிறது என்று சொல்லி தவிர்த்தேன்.
 
காரணம் நேர்மையீனம். தனது நாட்டினை சேர்ந்த இன்னுமோர் சிறிய நிறுவனத்துக்கு  ஆப்பு வைக்கும் நேர்மையீனம்.
 
நான் விருப்பமில்லை என்றதும், நான் இலங்கையர், இந்தியர் இல்லை என்று தெரிந்ததும் அந்த வெள்ளையர் அதே நேர்மையீனம் குறித்து விசனம் தெரிவித்தார். அந்த நிறுவனம் எனது விபரத்தினை கொடுத்து, என்னை தொடர்பு கொள்ள சொல்லி உள்ளதாம். 
 
மேலும் 'anti-money laundering' விசாரணை வலயத்தினுள் பல நிறுவனங்கள்  மாட்டி உள்ளதாக தெரிவித்தார். பல நிறுவனங்கள், கஸ்டமர்களிடம் வாங்கும் பணத்தினை, இங்குள்ள வங்கிகளிடம் போட்டு, வரி கட்டி மிகுதியை அனுப்பாமல், அப்படியே, பெரிய 'money transfer' நிறுவனங்கள் மூலம் அனுப்பி, இங்கே loss ம், அங்கே லாபமும் காட்டும், சுத்துமாத்து வேலை (பழைய விளையாட்டு தான்) காட்டுகிறார்களாம்.
 
இதே போல, பெரிய வங்கிகளின் இந்திய கால் சென்டர்களில், பணம் கொடுத்து, அந்த வங்கி, உயர் அதிகாரிகளின் account விபரங்களையே BBC வாங்கி வெளியிட, அவ்வளவு தான்: அந்த வங்கிகள் எல்லாம் இப்போது தமது விளம்பரங்களில் 'all our call centers are now in the UK' என்று போடுமளவுக்கு, அந்த சுய நல பரதேசிகளின் வேலை பலரது வேலைகளை பறித்து விட்டது. ஆனால் கதைத்தால், தாம் ஏதோ பெரும் தேசாபிமானம் உள்ளவர்கள் என காட்டிக் கொள்வார்கள்.
 
 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.