Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக விளம்பரம்! Photo in

Featured Replies

வரும் 8ம் நாள் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல்  எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் உருவத்தை கொண்ட ஏ. ஆர் சிறிசேனா என்ற ஒருவரின் படத்தினையும் கொடிச்சின்னத்தினையும் இன்று காலை  யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் குறித்த   விளம்பரம் முன்பக்கத்தில் பாரியளவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

paper-1.JPGpaper-2.JPG
 

சிங்களவனா கொக்கா?

நாங்கள் இன்கே அடிப்ட அவன் இடைக்குள்ள பூந்து விளையாட பார்க்கிறான்.

இருந்தாலும் எங்கட சனதை இப்படி மட்டுக்கட்டினது பிழை என்று விரைவில் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு தோல்விபயம்!ஊடகங்களும் காசுக்காக இந்த விளம்பரத்தை போடுகின்றனர்.முதலில் ஊடகங்களில் தேர்தல் விளம்பரங்களையோ ,பிரச்சாரங்களை நடத்துவதையோ தடை செய்ய வேண்டும்.

மகிந்தவுக்கு தோல்விபயம்!ஊடகங்களும் காசுக்காக இந்த விளம்பரத்தை போடுகின்றனர்.முதலில் ஊடகங்களில் தேர்தல் விளம்பரங்களையோ ,பிரச்சாரங்களை நடத்துவதையோ தடை செய்ய வேண்டும்.

எதுக்கு ஊடகங்களை வையிறிங்கள்?

காசு கொடுத்து விளம்பரம் செய்ய சொன்னால் விளம்பரம் போடுரார்கள்.

போடாவிட்டால்தான் பக்கசார்பு.

 

இப்ப உழைச்சாத்தான் உண்டு.

இந்த விளம்பரம் மைத்திரிபால சிறிசேனவிற்கு தான் உதவியாக இருக்கும்.

  • தொடங்கியவர்

மோசடிகளை நம்பவேண்டாம்! மைத்திரியை போல் போலியும் களத்தினில்!! - மனோ கணேசன்

எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.
paper-2.JPG
ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி, மூக்கு கண்ணாடி அணிவித்து, பவுடர் பூசி, அலங்கரித்து, படம் பிடித்து, அந்த படத்தை தமிழ் ஊடகங்களில் விளம்பரமாக போட்டு, அப்பாவி தமிழ் மக்களை குறி வைத்து ஏமாற்றும் ஒரு தில்லாலங்கடி வேலையை மகிந்த அரசின் முகவர்கள் சிலர் செய்கிறார்கள் என கட்சி ஊடக செயலகம் மூலம் விடுத்துள்ள விசேட செய்தி அறிவித்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி அறிவித்தலில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இந்த ஆர். ஏ. சிறிசேன என்ற வேட்பாளரின் சின்னம், கொடி சின்னமாகும். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சின்னம், அன்னப்பறவை சின்னமாகும். ஊடகங்களில் விளம்பரம் செய்து மக்களை குழப்ப முயலும் அரசாங்கம் இன்னொன்றையும் செய்கிறது. மாதிரி வாக்குசீட்டு ஒன்றை அச்சடித்து தமிழ் மக்கள் மத்தியில் விநியோகம் செய்துள்ளது. இந்த மாதிரி வாக்குசீட்டில், எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சின்னமாக, கொடி சின்னம் காட்டப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு மக்களை குழப்பும் ஒரு வெட்கங்கெட்ட மோசடி நடவடிக்கையாகும்.

இத்தகையை வாக்குசீட்டு குறிப்பாக வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தோல்வியின் விளிம்பில் நின்றுக்கொண்டு மகிந்த ராஜபக்ச அணி செய்யும் இந்த மோசடி வேலையை தமிழ் மக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

paper-1.JPG

உண்மையான வாக்குசீட்டில், எமது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் தமிழ், சிங்கள மொழிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவரது பெயருக்கு இடதுபுறம் அவரது சின்னமான, அன்னப்பறவை அச்சிடப்பட்டிருக்கும். ஒட்டு மொத்த பத்தொன்பது வேட்பாளர்களின் பெயர் வரிசையில், எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர், பத்தாவதாக இடம்பெற்றுள்ளது.

இவை பற்றிய இந்த உண்மை தகவல்களை விஷயம் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் தங்கள் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, ஊரவர்களுக்கு நேரடியாகவோ, தொலைபேசி மூமாகவோ எடுத்துகூறி தெளிவு படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புடைய செய்தி;-

யாழில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக விளம்பரம்!

 

http://www.pathivu.com/news/36643/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அவ்வளவு மட்டமாக கணிக்கிறார்களா....???

தமிழர்களை அவ்வளவு மட்டமாக கணிக்கிறார்களா....???

 

கொஞ்சம் மட்டம்தான் அன்னை. 

  • கருத்துக்கள உறவுகள்

2005 இல எம்மை மட்டமாக கணித்து வெற்றியும் பெற்றார்கள்.

ஆனால் இந்த முறை முடிவு மக்களின் கையில். நாம் எப்படிப் பட்ட சூரர்கள் என்பதை மக்கள் 8 திகதி காட்டுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

2005 இல எம்மை மட்டமாக கணித்து வெற்றியும் பெற்றார்கள்.

ஆனால் இந்த முறை முடிவு மக்களின் கையில். நாம் எப்படிப் பட்ட சூரர்கள் என்பதை மக்கள் 8 திகதி காட்டுவர்.

நான் வாக்கு சாவடிக்கு வாக்கு போட போனால்கூட மைத்திரிக்குதான் போடுவேன்.
அதன் பொருள் நான் சூரன் எனபது இல்லை.
மகிந்த மீதான வெறுப்பு ஆகும்.
 
அரசியல் லாபம் என்பது ஒருவருக்கும் போடாது இருந்து சிங்களவர்களை இரண்டாக பிரித்த நிலையில் மகிந்தவை வெல்வதால் மட்டுமே நிகழும்.
பலமான எதிர் அணி ஒன்றுடன் சிங்களம் பிளவுபடும்போது மகிந்தவின் ஊழல் அரசியல் சீழ் வடிய தொடங்கும். அதிகார பலம் மேலும் இக்கடிட்கு இழுத்து செல்லும்.
 
தமிழ் நாட்டில் கடந்த காலத்தில் கருணாநீதியும் ஜெயலலிதாவும் திரும்பி திரும்பி வருகிறார்கள்.
மக்கள் எப்போது அறிவாளியாக இருந்தார்கள்?
ஜெயலிதா வெல்லும்போதா ?
கருணாநிதி வெல்லும்போதா ?
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் மட்டம்தான் அன்னை. 

 

 

உங்களை  வைத்து

மக்களை மாக்கள் எனக்கணிக்கக்கூடாது....

பெயரில் சுத்துமாத்து செய்து

சின்னத்தை மாற்றிவிட்டால் தமிழர்கள் ஏமாந்துவிடுவார்கள் என்பதை ஒத்தூதுவது எந்த பொது நன்மைக்காக...

:(  :( 

 

யாருக்கோ எழுதிய கருத்தை ரதவறாக புரிந்து கொண்டதுக்கு வருத்தமும் மன்னிப்பையும் தெரிவிக்க விரும்புகிரேன்.

இருந்தாலும் சுயலாபமோ சுகபோகமோ எறிருந்தால் நாங்கள் இங்கு வரவேண்டியதில்லை. பொறுப்பும் அக்கறையும் தமிழராக பிறந்த எல்லோருக்கும் உண்டு.

 

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்

மைத்திரிபால சிறிசேனவின் அன்னப்பறவை சின்னத்துக்கு பதிலாக முச்சக்கரவண்டி அச்சிட்டு போலி வாக்குச்சீட்டு!

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைதீவு,வவுனியா,மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்று பரவாலக மக்களை குழப்பும் வகையில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின்  அன்னப்பறவை சின்னத்துக்கு பதிலாக முச்சக்கரவண்டி சின்னத்தை பதிலீடு செய்து மாதிரி வாக்குச்சீட்டுக்களை சிலர் விநியோகித்து உள்ளனர்.
vote%20set-2.jpg
இந்தநிலையில் குறித்த வாக்குச்சீட்டுக்களை வைத்திருப்பது தேர்தல் சட்டத்தின்கீழ் தவறு என்ற அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
vote%20set-1.JPG
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை இழப்புகள், துரோகங்கள், சர்வாதிகார பம்மாத்துக்கள் அத்தனைக்க்கும் பின்பும் உரிமைக்காக, தெளிவாக தரம் பார்த்து வோட்டுப் போடும், சிந்திக்க தெரிந்த எம்மக்கள் சூரர்களே. தமிழகம் ஒரு மந்தை அரசியல் வெளி. ஏணி வைத்தாலும் எம்மக்களின் அரசியல் முதிர்சி அங்கே எட்ட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை இழப்புகள், துரோகங்கள், சர்வாதிகார பம்மாத்துக்கள் அத்தனைக்க்கும் பின்பும் உரிமைக்காக, தெளிவாக தரம் பார்த்து வோட்டுப் போடும், சிந்திக்க தெரிந்த எம்மக்கள் சூரர்களே. தமிழகம் ஒரு மந்தை அரசியல் வெளி. ஏணி வைத்தாலும் எம்மக்களின் அரசியல் முதிர்சி அங்கே எட்ட முடியாது.

 

 

உங்களுக்கு தமிழகத்துடன்  ஏதோ தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்  போலும்

அடிக்கடி இவ்வாறு சீண்டி எழுதி  வருகின்றீர்கள்

தயவு செய்து வெளியில் வைத்துக்கொள்ளவும்

யாழில்  வேண்டாம்........ :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

2005 இல எம்மை மட்டமாக கணித்து வெற்றியும் பெற்றார்கள்.

ஆனால் இந்த முறை முடிவு மக்களின் கையில். நாம் எப்படிப் பட்ட சூரர்கள் என்பதை மக்கள் 8 திகதி காட்டுவர்.

 

மனோ கணேசன் பதறி அடித்துப் பதில் அறிக்கை விடும் அளவில் தமிழ் மக்கள் தாயகத்தில் இல்லை எனக் கூற  முடியாது.

சிறிய தவறால் ஏற்படும் ஒவ்வொரு பிழையான வாக்கும் மகிந்தவிற்குச் சாதகமாகத் திரும்பும் .

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை இழப்புகள், துரோகங்கள், சர்வாதிகார பம்மாத்துக்கள் அத்தனைக்க்கும் பின்பும் உரிமைக்காக, தெளிவாக தரம் பார்த்து வோட்டுப் போடும், சிந்திக்க தெரிந்த எம்மக்கள் சூரர்களே. தமிழகம் ஒரு மந்தை அரசியல் வெளி. ஏணி வைத்தாலும் எம்மக்களின் அரசியல் முதிர்சி அங்கே எட்ட முடியாது.

 

இந்த எண்ணம் உங்களுக்கு, எப்போதோ.... இருந்திருக்குமானால்.....

புலிகளை, சிங்களவனுக்கு... காட்டிக் கொடுத்திருக்க மாட்டீர்கள்.

சில எண்ணங்கள் தான்.... ஈழத் தமிழரின் எதிர்காலத்தையே.... கேள்விக் குறியாக்கப் போகின்றது என்பதை, உணருங்கள் கோசான்.

இந்தச் செய்தியை வெளியிட்டது பதிவு இணையத்தளம் என்பதையும் கவனத்தில் எடுங்கோ மக்களே  :rolleyes: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.