Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஐ'-க்கு திருநங்கைகள் எதிர்ப்பு: ஷங்கர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ' படத்தில் தங்களைப் போன்றோரை கொச்சைப்படுத்தி இருப்பதாகக் கூறி, இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன்பு நாளை (சனிக்கிழமை) அல்லது நாளை மறுநாள் போராட்டம் நடத்துவது என திருநங்கைகள் முடிவு செய்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஐ'. இப்படத்தில் வில்லன்களில் ஒருவராக ஒஜாஸ் ரஜானி என்ற திருநங்கை நடித்துள்ளார். இவர் இந்தி அளவில் பிரபலமான ஒப்பனைக் கலைஞராவார். படத்திலும் ஒப்பனைக் கலைஞராக வரும் இவரது கதாபாத்திரம், விக்ரம் தனக்கு கிடைக்கவில்லை என்று அவரைப் பழிவாங்கும்படி அமைந்திருக்கும்.

 

இந்நிலையில், இன்று 'ஐ' படத்திற்கு எதிராக திருநங்கைகள் அனுப்பிய அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

 

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்த பானு என்ற ஒருங்கிணைப்பாளரை, தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியது:

"'ஐ' படத்தில் திருநங்கைகளை மிகவும் தவறாக சித்தரித்திருக்கிறார்கள். இப்படத்தில் திருநங்கை அறிமுகமாகும் காட்சியில் விக்ரம் மற்றும் சந்தானம் இருவரும் இணைந்து "ஊரோரம் புளியமரம்" பாடலை பாடி கிண்டல் செய்வார்கள். மேலும், அந்த பாத்திரமே ஆண்களின் உடலுக்கு அலைவது போல சித்தரித்திருக்கிறார்.

நானும் அந்தப் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இடைவேளையின்போது அனைவருமே என்னையும் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். திருநங்கைகள் இப்போது பல்வேறு சாதனைகள் செய்யத் தொடங்கிவிட்டோம். தமிழ்த் திரையுலகில் இருப்பவர்கள் கொஞ்சம் வளர வேண்டும்.

 

நம் சமூகத்தில் ஏற்கெனவே திருநங்கைகள் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வருகிறார்கள். இப்படத்தை பார்ப்பவர்கள் அனைவருமே அந்தக் கண்ணோட்டமே மேலோங்கும். இறுதி காட்சியில் சந்தானம் கிண்டல் செய்திருக்கிறார். மேலும், சந்தானம் எப்போதுமே திருநங்கைகளை தவறாகவே பேசி வருகிறார்.

 

'ஐ' படத்துக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன்பு நாளை அல்லது நாளை மறுநாள் போராட்டம் நடத்த இருக்கிறோம்.

மேலும், தமிழக அரசு திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே எங்களால் படத் தணிக்கை குழுவில் இடம்பெற்று, திருநங்கை கொச்சைப்படுத்தும் காட்சிகளை எல்லாம் நீக்க முடியும்" என்று பானு தெரிவித்தார். 

 

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article6794009.ece?homepage=true

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பானையில் உள்ளதுதானே அகப்பையில் வரும்.

இவன் பாவம் சங்கர், சந்தானம் என்ன செய்வாங்கள்.

மொட்டைத்தலை வில்லன்கள், நீண்ட தலை முடி வில்லன்கள், காது மூக்கு குத்திய வில்லன்கள், அகோர முகம் கொண்ட வில்லன்கள், விகாரம் கொண்ட வில்லன்கள் என்று எல்லாமாதிரியும் வில்லன்களை காட்டி படம் எடுத்தாயிற்று. இப்போது transgender வில்லன் புதிய இறக்குமதி. சினிமாக்காரங்களின் புத்திக்கு இயலுமானதைத்தானே அவங்கள் செய்வாங்கள். சங்கர் ஐ படத்தில் தனது புத்தியை காட்டி இருக்கிறான். இதற்கு போராட்டம் செய்து என்ன பலன்?

சந்தானத்திடம் சதா நாளும் பொழுதும் நகைச்சுவை கேட்டால் அவன் பாவம் என்ன செய்வான். கீழ்த்தரமான பகிடிகள், இரட்டை அர்தமுள்ள பகிடிகள், வெற்று அலட்டல் என்று தன்னால் முடியுமான அளவு புலம்பி கல்லாப்பெட்டியை நிறைக்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

"யூ" படத்தை உடனடியாக சங்கர் எடுத்தல் நிலைமை மாறும். 

பத்து அரிசி மூட்டையை தானமாகக் கொடுத்தாலே பத்து கோடி ரூபாய்க்கு விளம்பரம் தேடுவோர் மத்தியில், பல ஏழைக் குழந்தைகளின் இருதய அறுவைச் சிகிச்சைக்காக கோடிக் கணக்கில் உதவி செய்தும் மூச்சுக் காட்டாமலிருக்கிறார் ஒருவர்... அவர்தான் நடிகர் விக்ரம். பத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளின் இருதய அறுவைச் சிகிச்சைக்கு அவர் சத்தமில்லாமல் பணம் கொடுத்து உதவியுள்ளார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏழைப் பெற்றோர்கள் தங்கள் மகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கும், படிப்புக்கும் விக்ரம்தான் முழுமையாக செலவு செய்தார் என்பதைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்துநர் விக்ரமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விசாரித்தார். அப்போதுதான் இந்த உண்மையை வெளியிட்டார் விக்ரம். தான் இதுபோல பல குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு மட்டும் உதவுவதாகவும், ஆனால் இதை எதற்கு வெளியில் சொல்ல வேண்டும் என்றும் கேட்டார் விக்ரம். மேலும் ஐ படத்துக்காக தான் பெற்ற சம்பளத்தில் ஒரு பகுதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காகச் செலவிட்டாராம் விக்ரம். இப்போது விஜய் மில்டன் இயக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இரு புதிய படங்களிலும் விக்ரம் நடிக்கவிருக்கிறார். Topics: vikram, விக்ரம், உதவி

Read more at: http://tamil.filmibeat.com/heroes/vikram-helps-poor-children-medical-expenses-032840.html.

 

Edited by BLUE BIRD

'ஐ' திரைப்படம் திருநங்கைகளை அவமானப்படுத்தவில்லை: சென்சார் அதிகாரி விளக்கம்
 

 

ஐ திரைப்படத்தில் திருநங்கைகளுக்கு எதிரான காட்சியமைப்பு இருப்பதாக குற்றம்சாட்டி நடைபெறும் போராட்டங்கள் குறித்து தணிக்கை குழுவின் மண்டல அதிகாரி பக்கிரிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஐ திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக ஒரு திருநங்கை நடித்துள்ளார். அவரை கதாநாயகனும், அவரது நண்பர்களும் கேலி செய்வது போன்ற காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. சமூகத்தில் உள்ள ஒரு சிலர், திருநங்கைகளை பார்க்கும் கண்ணோட்டத்தின்படிதான் படத்தின் நாயகனும் திருநங்கையை பார்க்கிறார். கதை அமைப்பில் அப்படி ஒரு காட்சி தேவைப்படுவதால் அதை அனுமதித்தோம். ADVERTISEMENT ஐ திரைப்படத்தை பட தேர்வு கமிட்டி, ரிவைசிங் கமிட்டி மற்றும் டெல்லியிலுள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய மேல்முறையீட்டு ஆணையம் ஆகிய மூன்று கமிட்டியினர் பார்த்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அப்படி வழங்கப்பட்ட படத்தை மறு தணிக்கை செய்யவோ, காட்சிகளை நீக்கவோ அதிகாரம் கிடையாது. யாராவது பாதிக்கப்பட்டதாக கருதினால், அவர்கள் நீதிமன்றத்தை அனுகலாம். இவ்வாறு பக்கிரிசாமி தெரிவித்துள்ளார்.

21-1421823895-shankar-vikram-ai--movie-6

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/why-we-permit-transgender-scene-i-movie-explains-censor-boa-219340.html

  • கருத்துக்கள உறவுகள்

நான் 'ஐ' பார்த்துவிட்டேன்.. எமி ஜாக்சன் ரசிகர் மன்றத்தில் ஆயுள்கால உறுப்பினர் ஆகிவிட்டேன்.. :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சி மேலீட்டால் எடுக்கும் முடிவுகள் தவறானதாகி விடும், எதுக்கும் மீள் பரிசீலனை செய்யவும்.

இன்னும் ஆறேழு வருடங்களில் எமியை கற்பனை செய்து பார்க்கவும். சிலசமயம்  எமி , உமிமூட்டையாகவும் போகலாம்...! :lol::)

ஐ பார்த்து விட்டு வந்து என் சொந்தப் பெயரில் இருக்கும் முகநூலில் போட்ட நிலைச் செய்தி இதுதான் (யாழில் இடுவதால் ஒரு சொல்லை தணிக்கை செய்துள்ளேன்)

 

ஐ - திருநங்கைகளை இந்தளவுக்கு கேவலமாக எவராலும் எடுக்க முடியாது.

இத்தனை காலமும் மிக மோசமாக அணுகப்பட்ட திருநங்கைகள் இப்ப சில வருடங்களாகத்தான் மிகச் சிறு அளவிலேனும் தமிழ் /இந்திய சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட தொடங்கியிருக்கும் போது, ஆண் திமிரில் எந்தவிதமான சமூக அக்கறையும் இன்றி ஷங்கர் அவர்களை சித்திகரித்து இருக்கும் விதம் மிக மோசமான ஒரு வன்முறை.

அதுவும்.. "ச்சீ.. நீ மனுசன் " என்று விக்ரம் வாயிலாக திருநங்கைகளில் பாலியல் உணர்வுகளை படு கேவலமாக பரிகசிக்கின்றார்

ஷங்கர் போன்றவர்களுக்கு எதிராக வெறுமனே ஆர்ப்பாட்டம் செய்வது மட்டும் போதாது. வெளியே இழுத்து ----- அடிக்க வேண்டும்.

 

 

 

 

மற்றப்படி,

 

இசை சொல்லியிருக்கின்ற மாதிரி, படம் பார்த்து விட்டு வெளியே வரும் முன்பாகவே நானும் எமியின் ரசிக மன்றத்தின் ஆயுட்கால உறுப்பினராகி விட்டேன். you tube இல் இருக்கும் இவரது Photo shoot video க்கள் பலது அதற்குப் பிறகு பார்த்து பிறவிப் பயனும் அடைந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தப்படத்தை பார்த்தேன்

கமலில் குணா படமும் 

விக்ரமின் அந்நியனும் சேர்ந்த கலவை தான்

ஐ..............

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஐ படத்தை மக்களோடு மக்களாக உட்கார்ந்து பார்த்தேன். ஒரு வெறிபிடித்த ரசிகர் இந்தப் படத்தைப் பலதடவை பார்த்திருப்பார் போல இருந்தது. திரையில் வசனம் வரமுதலே அவர் வசனம் பேசத் தொடங்கிவிட்டார்!

படத்தில் கதை இருக்கின்றதா என்பதையெல்லாம் யார் பார்த்தார்கள். எமி ஜாக்சனின் சதைதான் கண்ணுக்குள் இப்பவும் நிற்கின்றது. :icon_mrgreen::wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தை  பார்த்துக்கொண்டிருந்தபோது...

 

இந்த திரு நங்கையின் வரவும் அதனூடான பேச்சும் கிண்டல்களும் மனதுக்குள் சிறு சஞ்சலத்தை தந்தன.

படத்துடன் ஒட்டமுடியாதபடி மனநிலை மாறியிருந்தது.

சங்கர் குழாமினர் வியாபார நோக்கம் கருதி செய்யப்பட்ட ஒன்று

தலைகீழாகியது போலுள்ளது...

 

ஆனாலும்  இதில் ஒருவரை அந்த  பாத்திரத்துக்காக சித்தரிக்கவில்லை.

இதில் நடித்தவரும் ஒரு திரு நங்கை.

நடித்துத்தான் பணம் சேர்க்கவேண்டிய தேவையற்றவர்.

அவரே  இதற்கெல்லாம் உடன்பட்டு செய்திருப்பது தான் நெருடலானது.

இங்கு   போராட்டம் புறக்கணிப்பு என்போர் முதலில் அவரைத்தான் கேட்கணும்..

 

 

 

ஆனாலும்  இதில் ஒருவரை அந்த  பாத்திரத்துக்காக சித்தரிக்கவில்லை.

இதில் நடித்தவரும் ஒரு திரு நங்கை.

நடித்துத்தான் பணம் சேர்க்கவேண்டிய தேவையற்றவர்.

அவரே  இதற்கெல்லாம் உடன்பட்டு செய்திருப்பது தான் நெருடலானது.

இங்கு   போராட்டம் புறக்கணிப்பு என்போர் முதலில் அவரைத்தான் கேட்கணும்..

 

தமிழரைக் கொண்டே தமிழர்களின் கண்ணைக் குத்துவது போன்றது தான் இது. காசு பணம் துட்டு money money

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருநங்கைகள் ரோட்டிலை நிண்டு புடுங்குப்படுற நேரம்......

படத்திலை நடிச்ச உண்மையான திருநங்கையை புடிச்சு நாக்கை புடுங்கிறமாதிரி நாலுகேள்வி கேக்கலாமே..... :D

 

 

ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும் 

நாம்பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையய் 
கூடுனமே கூடுனமே கூட்டுவண்டிக் காளைபோலே 
மாட்டுனமே மாட்டுனமே நாரப்பய கையுமேலே......
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்படத்தை  பார்த்துக்கொண்டிருந்தபோது...

 

இந்த திரு நங்கையின் வரவும் அதனூடான பேச்சும் கிண்டல்களும் மனதுக்குள் சிறு சஞ்சலத்தை தந்தன.

படத்துடன் ஒட்டமுடியாதபடி மனநிலை மாறியிருந்தது.

சங்கர் குழாமினர் வியாபார நோக்கம் கருதி செய்யப்பட்ட ஒன்று

தலைகீழாகியது போலுள்ளது...

 

ஆனாலும்  இதில் ஒருவரை அந்த  பாத்திரத்துக்காக சித்தரிக்கவில்லை.

இதில் நடித்தவரும் ஒரு திரு நங்கை.

நடித்துத்தான் பணம் சேர்க்கவேண்டிய தேவையற்றவர்.

அவரே  இதற்கெல்லாம் உடன்பட்டு செய்திருப்பது தான் நெருடலானது.

இங்கு   போராட்டம் புறக்கணிப்பு என்போர் முதலில் அவரைத்தான் கேட்கணும்..

 

 

படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்காக அவர் நடிப்பதற்கு முன்வந்து இருக்கலாம்.
 
திருநங்கைகள் பற்றி சமூகத்தில் உள்ள யாதாத்த‌ பார்வையை காண்பிக்கவே மேற்கண்டவாறு படம் எடுக்கப்பட்டது எனும் வியாக்கியானம் நகைப்பிற்குரியது. 
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.