Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பறிக்கப்பட்ட பட்டங்கள் சலுகைகள் அனைத்தையும் மீண்டும் பெறுகிறார்:-

sarath%20f%201_CI.jpg



மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா விடுவிக்கப்பட்டு உள்ளார்.

இந்த அறிவிப்பை விடுத்துள்ள ஜனாதிபதி ஊடகபிரிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமையான பொதுமன்னிப்பை வழங்கி உள்ளதாவும் தெரிவித்துள்ளது.

அவருக்கு எதிராக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீருபனமாகி உள்ளதாக இராணுவ நீதிமன்றம் இன்று 2011 இல் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அவரது சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115783/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழர்கள் மீது மேற்கொண்ட போர்க்குற்றங்களில்    இருந்தும் விடுவிக்கப்பட்டிட்டார் போல. வெள்ளைக்கொடி விவகாரம்.. அப்படியே காணாமல் போச்சுது.

 

மைத்திரி - ரணில் கூட்டு முயற்சி நல்லாவே போர்க்குற்றவாளிகளை பாதுகாக்குது. தமிழர்கள் அதனையும் மாற்றத்தின் விளைவு என்று கண்டு மகிழ்கிறார்களோ என்னவோ..??! குறிப்பாக கூட்டமைப்பினர். :(:rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

மீண்டும் ஜெனரல் ஆனார் சரத் பொன்சேகா – குடியுரிமையை வழங்கவும் உத்தரவு JAN 21, 2015 | 13:00by கார்வண்ணன்in செய்திகள்

Sarath-Fonseka-300x200.jpgசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னைய ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு மீண்டும் ஜெனரல் பட்டமும் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

2010ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதையடுத்து, சரத் பொன்சேகா மீது இராணுவப் புரட்சிக்கு முயற்சித்தாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, இராணுவ நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் தனது குடியுரிமை மற்றும் இராணுவப் பட்டம் மற்றும் விருதுகள் அனைத்தையும் இழந்ததுடன், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.

பின்னர், 2012ம் ஆண்டு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்ட போதிலும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட குடியுரிமையோ, இராணுவ பட்டங்கள் மற்றும் விருதுகளோ மீளளிக்கப்படவில்லை.

இந்தநிலையிலேயே, புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட குடியுரிமை மற்றும் ஜெனரல் பட்டம் உள்ளிட்ட அனைத்தையும் மீளளிக்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தில் இருந்தும் முழுமையான பொதுமன்னிப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/01/21/news/3075

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  இனியென்ன பாவங்களும் / குற்றங்களும் கழுவி எடுக்கப்பட்டு விடும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  இனியென்ன பாவங்களும் / குற்றங்களும் கழுவி எடுக்கப்பட்டு விடும். 

அப்படி நடக்க விடக்கூடாது... போராடணும் ஐயா.. வாங்க போராடுவோம். எப்போது இலங்கைக்கு வாறீங்கள்.. ஒரு SMS அடியுங்கோ.. எயார்போர்ட்டுக்கு வாறன். உங்களைப்போல  உணர்வாளர்களை பெற்றது ஈழத்தமிழர் செய்த பாக்கியம் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

  இனியென்ன பாவங்களும் / குற்றங்களும் கழுவி எடுக்கப்பட்டு விடும். 

 

பாவங்களையும் / குற்றங்களையும் கழுவி எடுக்கப்பட்ட நீரை ஊற்றுவதற்குப் பாத்திரங்கள் தேவை. புலிவாந்தி எடுப்போரிடம் பெரும் பீப்பாக்களே உள்ளன. அவர்கள் தனக்கெனவாழாப் பிறர்க்குரியாளர்கள். மைத்திரி கேட்காமலே பீப்பாக்களுக்கு புலிச்சின்னம் பொறித்து அவற்றை மைத்திரியின் சமூகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி நடக்க விடக்கூடாது... போராடணும் ஐயா.. வாங்க போராடுவோம். எப்போது இலங்கைக்கு வாறீங்கள்.. ஒரு SMS அடியுங்கோ.. எயார்போர்ட்டுக்கு வாறன். உங்களைப்போல  உணர்வாளர்களை பெற்றது ஈழத்தமிழர் செய்த பாக்கியம் ஐயா.

 

குடைச்சலுக்கு ஒரு குறையுமில்லை.....
அப்ப சரத் பொன்சேகா செய்ததெல்லாம் சரி எண்டுறியள்...

இங்கு ஏற்கனவே நான் குறிப்பிட்டிருந்த விடயம் அமெரிக்காவின் பணத்தில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் நடைபெறும் இந்த ஆட்சியில் போடும் பிச்சையை தமிழர் தரப்பு ஏற்க வேண்டியது தான்.ஆனால் இவர்கள் திட்டமிட்டு ஆடிய கபட நாடகத்தில் சம்பந்தனுக்கு ஏற்றமாதிரியும் மனோ கணேசனுக்கு ஏற்ற மாதிரியும் கதைகளைசொல்லி வைத்து சிங்களத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் காயை நகர்த்திக்கொண்டிருக்கின்றார்கள்.தமிழர்களை வாய் திறக்க விடாமல் திணிக்கப்படும் ஏட்டுச்சுரக்காய் எப்படி கறிக்குதவும்

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/152549-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2005%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE/

 

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/152523-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது அவர்களின் அரசியல் பழிவாங்குதல் செயற்பாடுகள்

 

ஒருவர் பழி  வாங்கினார்

அடுத்தவர் அதை எடுத்து

மற்றவரை பழி  வாங்குகின்றார்

 

இதற்கும் தமிழரது போராட்டங்கள்

போர்க்குற்றங்களுக்கும் சம்பந்தமில்லை

அவை வேறு வழிகளில் பயணிப்பவை

பயணிக்கணும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இலங்கையில் இன்று விடுதலைப்புலிகள் கீறிய கோட்டை வைத்துத்தான் சகல அரசியல் நடவடிக்கைகளும் நடக்கின்றன.
ஆனால் யாரும் வாயை திறக்க முடியாத அளவிற்கு பிரச்சனைகளை மூடி மறைத்து......போலியாக தமிழர் பிரச்சனைகளை தீர்ப்பார்கள்.
சுகம் வரும் ஆள் தப்பாது.
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தல் வரையும் தான் சிறிசேனா ரணிலின் கூட்டு
நடக்க இருக்கும் பிடுங்குப்பாட்டுக்கள் மகிந்தவும் கோத்தாவும்
மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.அப்போது சிறி சேனாவும் அவர்களுடன் சேர்ந்து வருவார்.

சிங்களவன் தமிழரைப் பற்றி நன்றாகப் படித்துவிட்டான்.
கூட்டமைப்பும் தனக்கேற்றவாறு ஆடி அசைந்து ஒரு மாதிரி இணக்க அரசியலுக்குள்ளே இறங்கிவிட்டால் பிரச்சனை முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அழுதும் அவளே பெற வேணும்.நாட்டில் உள்ள மக்களின் விருப்பே எங்கள் முடிவாக இருக்க வேணும்.என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

குடைச்சலுக்கு ஒரு குறையுமில்லை.....
அப்ப சரத் பொன்சேகா செய்ததெல்லாம் சரி எண்டுறியள்...

 

இல்லை.  சும்மா வெளியில இருந்து சவுண்டு விடாமல் நேரில் வந்து போராடுவிங்கள் என்று உங்கள் மீது உயர்ந்த மதிப்பு வைத்து சொன்னேன்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை.  சும்மா வெளியில இருந்து சவுண்டு விடாமல் நேரில் வந்து போராடுவிங்கள் என்று உங்கள் மீது உயர்ந்த மதிப்பு வைத்து சொன்னேன்.

 

இப்ப ஒரு sms அடிக்கிறன்  எயார்போர்ட்டுக்கு வாறியளே...

  • கருத்துக்கள உறவுகள்

சரததை குற்றங்களில் இருந்து விடுவித்ததது சிறிலங்கா அரசாங்கமும் கூட்டமைப்பம்தான்.தமிழ்மக்கள் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.