Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெகிழ வைத்த பாராட்டும்... ஒரு ஃபேஸ்புக் தேடலும்!

Featured Replies

பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக ஃபேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார்.

சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா, தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது சவாலானதுதான் இல்லையா? ஆனால் சம்ந்தா மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் தன் மகனுக்கு கதை சொல்லியபடி ,பாடிக்கொண்டும் அவனோடு விளையாடிக்கொண்டும் வந்திருக்கிறார். சிறுவன் ரெய்லானும் உற்சாகமாக அம்மாவுடன் விளையாடியபடி மெல்ல உறங்கியும் விட்டான். ரயிலில் அப்போது கூட்டம் அதிகமாகி பலரும் நின்று கொண்டிருந்ததால், சமந்தா தனது மடியில் தலை சாய்ந்து தூங்கி கொண்டிருந்த மகனை தூக்கி தன் மீது அமர வைத்துக்கொண்டு, இன்னொருவர் உட்கார இடம் கொடுத்திருக்கிறார்.

சமந்தாவின் இந்த பயணமும், இதில் அவர் ஒரு நல்ல அம்மாவாக நடந்து கொண்டதும் யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். இவ்வளவு ஏன் சம்ந்தாவே அதை கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இடையே பிரிஸ்டல் ரயில் நிலையத்தில் இறங்கிய பெரியவர் ஒருவர், சமந்தாவின் தோளை தட்டி அழைத்து, ’உங்கள் பையில் இருந்து கீழே விழுந்துவிட்டது’ என்று கூறியபடி ஒரு சீட்டை கையில் கொடுத்துவிட்டு கீழே இறங்கி சென்று விட்டார்.

அந்த சீட்டை பிரித்து பார்த்த போது அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.’ நீ இந்த தலைமுறைக்கே எடுத்துக்காட்டு. அன்பாக,அமைதியாக பிள்ளைக்கு நல்ல பழக்கத்தை கற்று கொடுத்தாய்’ என்று பாராட்டி எழுதப்பட்டிருந்ததுடன், என் சார்பாக ஒரு காபி அருந்தி மகிழுங்கள் எனும் குறிப்புடன் 5 பவுண்ட் நோட்டும் இணைக்கப்பட்டிருந்தது.

உன் வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள், அவளும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

அதை படித்ததும் சமந்தா, முகம் தெரியாத மனிதரிடம் இருந்து இப்படி ஒருபாராட்டா ? என நெகிழ்ந்து போய்விட்டார். 23 வயதான சமந்தா, கணவர் இல்லாமல் தனியே மகனை வளர்த்து வருபவர். எனவே இந்த பாராட்டால் கூடுதலாக மகிழ்ந்து போனார். தான் பிள்ளை வளர்க்கும் விதத்திற்கு கிடைத்த சான்றிதழாகவும் நினைத்து உருகினார்.

"இதை படித்ததும் என்னால் நம்பவே முடியவில்லை, இருபது முறையாவது மீண்டும் படித்திருப்பேன். நான் பார்த்திராத, பேசியிராத ஒருவர் இவ்வாறு எழுதியதை என்னால் நம்ப முடியவில்லை. இப்படி அவரை எழுத வைக்கும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்றும் தெரியவில்லை, மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன்” என்று சமந்தா நாளிதழ் ஒன்றுக்கான பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்தான் அவருக்கு, 'அடடா..! அந்த மனிதருக்கு நன்றி கூட சொல்ல முடியாமல் போய்விட்டதே!' என்று தோன்றியிருக்கிறது. அந்த நல்ல மனிதரை எப்படியாவது நேரில் பார்த்து நன்றி சொல்லிவிட வேண்டும் என்பதற்காக அவரை தேடும் முயற்சியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை விவரித்து, 'அவரைப்பற்றிய விவரம் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்!' என கேட்டிருக்கிறார்.

இந்த ஃபேஸ்புக் தேடலும் , அதன் பின்னே உள்ள நெகிழ வைக்கும் கதையும் இணைய உலகை இளகச்செய்துள்ளது.

இளம் அம்மாக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும், மற்றவர்கள் பற்றிய மனம் திறந்த பாராட்டு எத்தனை நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதற்கும் இந்த அழகான சம்பவம் உதாரணம். ஃபேஸ்புக் பதிவால் இது உலகம் முழுவதும் அறியப்பட்டதாகவும் ஆகியிருக்கிறது.

http://m.vikatan.com/tablet/index.php?module=news&aid=37850

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன். நீங்கள் இணைக்கும் பல விடயங்கள் சுவாரசியமானவையும் உடனே வாசிக்க ஆவலை ஏற்படுத்துவனவையும் ஆகும்.

 

மற்றது,

 

அந்த இளம் அம்மாவின் படத்தினையும் இணைத்தால் அவருக்காக நாங்களும் சேர்ந்து தேடலாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம் இப்ப நீங்கள் யாரைத் தேடப் போறீங்கள்.... இளம் அம்மாவையா  அல்லது  துலைந்த தாத்தாவையா....!! :)

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அபராஜிதன்.
அவருடைய தேடல் வெற்றியடைய வாழ்த்துக்கள்

எனக்கொரு சந்தேகம் இப்ப நீங்கள் யாரைத் தேடப் போறீங்கள்.... இளம் அம்மாவையா அல்லது துலைந்த தாத்தாவையா....!! :)

இது எல்லாம் சொல்லியா தெரிய வேணும்?
  • தொடங்கியவர்

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன். நீங்கள் இணைக்கும் பல விடயங்கள் சுவாரசியமானவையும் உடனே வாசிக்க ஆவலை ஏற்படுத்துவனவையும் ஆகும்.

மற்றது,

அந்த இளம் அம்மாவின் படத்தினையும் இணைத்தால் அவருக்காக நாங்களும் சேர்ந்து தேடலாம் :)

நன்றி நன்றி ☺☺

எனக்கொரு சந்தேகம் இப்ப நீங்கள் யாரைத் தேடப் போறீங்கள்.... இளம் அம்மாவையா அல்லது துலைந்த தாத்தாவையா....!! :)

நன்றி வருகைக்கு

பொடியன் கொள்ளை அழகு! :)

May god bless.

நன்றி வருகைக்கு

இணைப்பிற்கு நன்றி அபராஜிதன்.

அவருடைய தேடல் வெற்றியடைய வாழ்த்துக்கள்

நன்றி வருகைக்கு

இது எல்லாம் சொல்லியா தெரிய வேணும்?

நன்றி வருகைக்கு

நன்றி வருகைக்கு

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.