Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் இருந்து வந்து தனது மனைவியை உயிருடன் எரித்தார் கணவன்- வவுனியாவில் சம்பவம்

Featured Replies

லண்டனில் இருந்து வந்து தனது மனைவியை உயிருடன் எரித்தார் கணவன்- வவுனியாவில் சம்பவம்

 

லண்டனில் இருந்து வந்த கணவன் மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற போது மனைவி கணனையும் கட்டிப் பிடித்ததால் இருவருக்கும் தீ மூண்டதில் மனைவி பலியாகியுள்ளதுடன்

கணவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்த வெளிநாட்டில் இருந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி கணவன் கொழுத்தியுள்ளார். இதன் போது மனைவி கணவனை எட்டி கட்டிப்பிடித்துள்ளார்.

இதனால் வவுனியா உக்கிளாங்குளத்தைச் சோந்த கஜேந்திரன் சுதாஜினி (வயது 28) என்ற பெண் மரமடைந்துள்ளதுடன் அவரது கணவனான பாலசந்திரன் கஜேந்திரன் (வயது 40) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மரணமடைந்த குறித்த பெண்ணின் கணவர் ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதுடன் திருமணம் செய்து 5 வருடங்கள் ஆகியும் மனைவியை வெளிநாடு கூப்பிடாது தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்தவர் என்றும் தெரியவருகின்றது. இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரகளை மேற்கொண்டு வருகின்றனர்.

va1.jpgva2.jpg

http://www.jvpnews.com/srilanka/95722.html

12 வயது வித்தியாசத்தில கட்டுறது.. 5 வருசமா தும்படிச்சுப்போட்டு தண்ணியில புரளுறது...

பாவம் மனுசி ஊரில என்ன செய்திச்சோ...

ஏட்டுச்சுரக்காயைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டிருந்தால் சரிவருமே?!

 

இந்த லண்டன்வாசியால ஒரு அநியாய உயிர்த்துறப்பு!!  :o

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான்

இந்த திரிக்குள் எழுதல..

 

இனி கை கால் காது.....  வைத்து ..

சரியன்று

பொறுங்கள்

சரியான செய்திகள் வரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் தீயில் காயமுற்றவர்களில் கணவனும் பலி:-

 

 

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட சந்தேகிக்கும் வகையிலான தீவிபத்தில் காயமுற்ற கணவன் மனைவியில் இன்று (28.1) கணவனும் உயிரிழந்துள்ளார்.

வவுனியா உக்குளாங்குளம் பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து அண்மையில் வருகை தந்திருந்த பாலச்சந்திரன் கஜேந்திரன் என்பவரும் அவரது மனைவியான கஜேந்திரன் சுதாஜினியும் நேற்று மாலை தீக்காயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்திருந்தார்.

இந் நிலையில் கணவனும் இன்று மாலை உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் இத் தீ விபத்து தொடர்பில் பல்வேறான சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் வவுனியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வீட்டில் இருந்த அறையொன்றில் கட்டில் உட்பட மின் விசிறி மற்றும் இதர பொருட்களும் அறைக்கு முன்பாக இருந்த சாய்மனை கதிரையும் முழுமையாக எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115988/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

12 வயது வித்தியாசத்தில கட்டுறது.. 5 வருசமா தும்படிச்சுப்போட்டு தண்ணியில புரளுறது...

பாவம் மனுசி ஊரில என்ன செய்திச்சோ...

ஏட்டுச்சுரக்காயைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டிருந்தால் சரிவருமே?!

 

இந்த லண்டன்வாசியால ஒரு அநியாய உயிர்த்துறப்பு!!  :o

 

பெரும்பாலான வெளிநாட்டு விசா நோக்க திருமணங்கள் 8 10 12 14 15 வயது வித்தியாசங்களில் தடல்புடலாக நடந்து பொம்பிளைகளும் வந்து பிள்ளைக்குட்டி எல்லாம் பெத்து.. பேர்த் டே பார்ட்டிகள்.. ஊர் சுற்றுலாக்கள் என்று அமர்க்களமாக உள்ளார்களே. யாழ் கள உறவுகள் இதனை அறியவில்லையோ..?!

 

எம்மவர்களுக்கு இது புதிதல்ல. முன்னர் சொத்து.. அரசாங்க உத்தியோகம் பார்த்து இப்படி கட்டிக்கொடுத்தார்கள். இப்போ வெளிநாட்டு விசா பார்த்து கட்டிக்கொட்டுக்கிறார்கள்.

 

என்ன நீங்க மிஸ்பண்ணிட்டதால.. இவையை திட்டுறீங்க போல.

 

இப்ப இரண்டு பேரும் போய் சேர்ந்திட்டுனம். அங்கையாவது விசா பிரச்சனை இன்றி.. பேராசை இன்றி..வெளிநாட்டு மோகமின்றி வாழட்டும் விட்டுங்க. :o:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாழப் பிடிக்கவில்லை என்றால்... நாகரிகமாக பிரிந்திருக்கலாம்.
காட்டு மிராண்டியள் மாதிரி.... மண் எண்ணை ஊற்றி ஏன், எரிக்க வேண்டும்?
இப்போ... இருவரின் வாழ்க்கையும், வீணாக.... போய் விட்டது. :o

  • கருத்துக்கள உறவுகள்

சரியோ, தவறோ தன்னை எரித்த கணவனையும் தன்னுடனேயே அழைத்துச் சென்ற அப்பெண்ணின் சமயோசிதம் குறிப்பிடத்தக்கது, ஒருவிதத்தில் பாராட்டலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.