Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும்! - சம்பந்தன் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும்! - சம்பந்தன் வேண்டுகோள் 

[Wednesday 2015-02-11 07:00]
Sampanthan-300-seithycom.jpg

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும் என்று இலங்கை வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

ஜனாதிபதித் தேர்தலையடுத்து இலங்கையின் அரசியல் களநிலைவரத்தில் ஏற்பட்டுவரும் பெரும் மாற்றங்கள் தொடர்பாக நேரில் கண்டறிவதற்காக இலங்கைக்கு ஒருவார கால பயணத்தை மேற்கொண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தைச் சேர்ந்த மூவரடங்கிய தூதுக்குழுவினர் நேற்றுமுன்தினம் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்தபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அணுகுமுறையிலும் பார்க்க தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணுகுமுறை எத்தகைய ரீதியில் மாற்றத்தைக் கொண்டிருக்கின்றது என வினவியதற்குப் பதலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

"உலகிற்கு ஒரே நாடு ஒரே மக்கள் என உதட்டளவில் கூறிக்கொண்ட போதிலும் மஹிந்த ராஜபக்‌ஷ சிங்கள மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக மட்டுமே நடந்துகொண்டார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அனைவரையும் உள்ளடக்கியதான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றார். அனைத்து மக்களின் பிரதிநிதியாக இருக்க விரும்புகின்றார். அனைவரது கருத்துகளையும் செவிமடுத்து முன்செல்ல விரும்புகின்றார்.

இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் நியாயமான ரீதியில் நடந்து கொள்ள விரும்புபவர்கள். ஆனால், அவர்களுக்கு சரியான தலைமைத்துவம் வழங்கப்படவேண்டும். துரதிர்ஷ்டவசமாக மஹிந்த அதைச் செய்திருக்கவில்லை. தாம் ஜனாதிபதியாக இருந்தபோது விடுதலைப்புலிகள் இயக்கத்தை தோற்கடித்தமையால் சிங்கள மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் தமக்கே வாக்களிப்பார்கள் என மஹிந்த எண்ணியிருந்தார். ஆனால், சிங்கள மக்கள் அந்த எண்ணத்தைப் பொய்ப்பித்துவிட்டார்கள்" - என்று விளக்கினார்.

மைத்திரிபால சிறிசேனவுக்குத் தேர்தலில் ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் தேசிய அரசில் அமைச்சுப் பதவிகளை ஏற்று அங்கம் வகிக்கவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சம்பந்தன்,

"நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போதைய அரசு குறுகிய காலத்திற்கே இருக்கும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசில் இணைந்துகொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெறுவது தீர்வாக அமைந்துவிடாது. மாறாக, காத்திரமான அதிகாரப்பகிர்வை உள்ளடக்கியதான தீர்வையே தமிழர் தரப்பு எதிர்பார்த்து நிற்கின்றது" என்று குறிப்பிட்டார்.

தமிழர்கள் தம்முடைய பிராந்தியத்தில் தமது அலுவல்களை முன்னெடுப்பதற்கான தன்னாட்சியுடன் கூடிய தீர்வையே விரும்புவதாகக் குறிப்பிட்ட சம்பந்தன், இப்படியான ஏற்பாடுகள் உலகின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். எதைச் செய்தாலும் சீனா தம்மைப் பிணையெடுக்கும் என்ற எண்ணம் இலங்கை ஆட்சியாளர்கள் மத்தியில் நிலவுவதாக இந்தச் சந்திப்பின்போது சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், அத்தகைய எண்ணம் நல்லதல்ல என்று தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ராவோ ஹூ ஹூவா, அதன் தெற்காசியப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சாங் ஜியுகுயிங் மற்றும் டேன் வேய் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். சீனக் கம்யூனிஸக் கட்சி உலகளவில் 180 நாடுகளில் 600 இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளைப் பேணிவருவதாக ராவோ ஹூஐஹூவா இதன்போது சுட்டிக்காட்டினார்.

2012ஆம் ஆண்டில் பீஜிங்கில் இடம்பெற்ற கம்யூனிஸக் கட்சியின் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவர் பங்கேற்றிருந்தபோதிலும் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கும் கம்யூனிஸக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது நேரடிச் சந்திப்பாக இந்தச் சந்திப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=126357&category=TamilNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவோடு பேசுவது ஒரு நல்ல நகர்வு!இப்படி ஒரு கொக்கியைப் போட்டால்தான் அமெரிக்கா கொஞ்சம் யோசிக்கும்.தொடர்ந்து சீனாவோடு சிறிலங்கா அரசைப் போல் பட்டும்படாத உறவு வைத்திருக்க வேண்டும்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும் என்று இலங்கை வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழுவினரிடம்
இந்தியா, சிறிலங்காவை தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதம் கொடுத்து தன்வசமாக்கியது போன்று.....சீனாவும் தமிழ் இளைஞர்களை புரட்சிகர சிந்தனைக்கு உட்படுத்தி ஐக்கிய இலங்கையில் புரட்சி செய்யதூண்ட வேண்டும்....சீனா நிரந்தரமாக கால் பதிக்க முடியும்...சீனாவின் அரசியல் ஆலோசகர் ஆர்.ஆர்...
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்  ஐயா

ஒரு முடிவுக்கு வரணும்

இணக்க அரசியலா ? இல்லை பிரச்சினையா?

போர்க்குற்றமா?  அணிவகுப்பா?

இந்தியாவா? சீனாவா?

 

இந்தியா ரொம்ப கெட்டது

அதனுடன் இந்த இரு தோணியில் கால்வைக்கும் விபரீத விளையாட்டு எதற்கு??

மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை தாங்காது தமிழினம்... :(  :(  :(

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும்! - சம்பந்தன் வேண்டுகோள்/////

ஈழத்தமிழர் தமிழர் தரப்புக்கு இந்தியா தொடர்ந்து துரோகம் இழைக்கின்ற பொழுது தற்ப்பொழுதைய ஈழத்தமிழர் தலைமை சீனாவை நோக்கி நட்ப்புக்கரம் நீட்டுவது பொருத்தமானதே........தவிர்க்க முடியாததும் கூட.....

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நகர்வு.. அடிக்கடி ஒரு தூதுக்குழுவையும் பெய்ஜிங்க்கு அனுப்பி எடுக்க வேண்டும்.. அவர்கள் வெறுமன பாம்புக்கறியை சாப்பிட்டிட்டு வந்தாலும் காரியமில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கோரிக்கை விடுறதும்.. சீனா அதைக் கண்டுக்காமல் போவதும் நடந்த நடக்கிற சங்கதிகள் தானே. சும்மா.. கொக்கு கொண்டு வரும் என்றிட்டு.. இருக்கிறதிலும்.. தூண்டிலை போட்டுப் பார்க்கிறதில தப்பில்ல தான். :lol::D

 

இதெல்லாம் நடைமுறைச்சாத்தியம் அல்ல வென்று தானே தந்தைச்செல்வாவின் காலத்திலேயே ஆயுதப்போராட்டத்துக்கு முஸ்தீபு போடப்பட்டது.அல்லது மண்கும்பான் பிள்ளையார் ஆலய முன்றலில் இன்பமும் சகாக்களும் கொல்லப்பட்டது கூட நினைவிருக்குமா? 

சீனனுக்கு தமிழ் விளங்குமா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.