Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் பேசலாம் வாங்க - 11 - சிறுவர் வதை + வியாபாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சில செய்திகளும் கருத்துக்களும் என்னில் சில கேள்விகளை விதைத்தன...

 

சிறுவர்களை வைத்து வியாபாரங்கள் நடக்கின்றன

சிறுவயதிலேயே பிலபல்யம் ஆக்கப்படுவதால்

சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது

சிறுவர்கள் அவர்களை அறியாமலேயே ஆபத்துக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பன போன்ற கருத்துக்களை பார்க்கமுடிந்தது.

 

இதை யோசித்துப்பார்த்தபோது

இது தமிழர்களுக்கு மட்டும் பிரச்சினையான ஒன்றில்ல.

அண்மையில் நானும் ஒரு கேள்வியை எனது பிள்ளைகளிடம் எழுப்பியிருந்தேன்

ஒரு கார் விளம்பரத்துக்கு ஒரு சிறுவன் விளம்பரம்  செய்வது 

பிரெஞ்சுத்தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது

மக்களிடம் கேட்டேன்

இதற்கு அவருக்கு சம்பளம் கொடுக்கப்படும்

அப்படியாயின் சிறுவர்களை தொழிலாளர்களாக பாவித்தல் தடை என்னும் சட்டம்

பகிரங்கமாக தொலைக்காட்சியிலேயே மீறப்படுகிறதே

சிறுவர் தொழிலாளர் என்பதற்கான அளவு கோல் என்ன என......??

 

 

சிறுவர் தொழிலாளர்கள் தடைச்சட்டம் கடுமையாக அமுலில் இருக்கும்

வெளிநாட்டவர் தொலைக்காட்சிகளில்

சிறுவர் நிகழ்ச்சிகள்

ஆடல்

பாடல் 

போட்டிகள்

ஏன் விளையாட்டுக்கள் என சிறுவர்கள் பிரபலங்களாக உள்ளனர்

இதன் மூலம் பெரும் செல்வந்தர்களாகவும் உள்ளனர்..

 

அப்படியாயின் இவற்றில்  சிறுவர்கள் பங்கு கொள்ளக்கூடாதா?

அவர்கள் கலந்து கொள்ள என்ன அளவு கோல் வேண்டும்...??

 

பேசலாம்  வாங்கோ....

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றும் பிள்ளைகளுக்கு தெரிவும் வசதிகளும் இருக்கின்றன. அடிப்படை வசதிகள் பூர்த்தியான குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் தான் அனேகமாக பங்கு பங்கு பற்றுகின்றனர்.

எவ்வளவோ இலட்ச கணக்கான பிள்ளைகளுக்கு அடிப்படை வசதி இல்லமையால் கல்வி பாதிக்கப்படுகிறது. எத்தனையோ ஆயிரக்கணக்கான தமிழ் பிள்ளைகளும் இதில் அடக்கம்.

இங்கு சமூக அக்கறை மற்றும் சிறுவர் நலம் பற்றி முதலை கண்ணீர் வடிப்பவர்கள், வசதியற்று படிக்க முடியாத பிள்ளைகளுக்கு உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

குழந்தைகள் வேலை செய்வது தொடர்பாக கண்டிப்பான சட்டங்களும், வருமான வரி அறவிடல் தொடர்பான விதிகளும் மேலை நாடுகளில் அமுலில் உள்ளன.

உதாரணமாக ரிவி நிகழ்வில் ஒரு குழந்தை பாடுமாயின், பாடசாலை அனுமதி, நிகழ்வுகளுக்கு இடையே ஓய்வு, பண, வரி விடயங்களில் தெளிவு இருக்க வேண்டும்.

அவை மீறப்படும் போது, அந்த குழந்தைகளிடம் வேலை வாங்கியோர் சட்டச் சிக்கலுக்கு உள்ளாவார்கள்.

கீழை நாடுகளில், வேலை செய்யும் குழந்தைகள் நிலை பரிதாபமானது.

அட நம்ம விஜய் ரிவியை விட்டுவிடுங்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுவர் வதை, வியாபாரம் பற்றி கொஞ்சம் பேச முன்னம்...

 

ஈ பீ ஆர் எல் எவ், கருணா குழு, ஶ்ரீ லங்கா அரசு, விடுதலை புலிகள் என அனைத்து தரப்பினரும் சிறுவர்களையும், குழந்தைகளையும் பல்வேறு ரூபங்களில் பயன்படுத்தி அவர்கள் கொல்லப்படுவதற்கும், அவர்கள் வாழ்வு சீரழிந்து சின்னாபின்னமாவதற்கும் காரணமாய் விளங்கினார்களே. 

 

இதைப்பற்றி நாம் கவலைப்பட்டது, கவலைப்படுவது உண்டா?

 

 

ஆண்டு ஐந்திலிருந்தே தமது பிள்ளைகளை புலமைப்பரிசில் சோதனைக்கு தயார்ப்படுத்து தொடங்கி பெற்றோர் சித்திரவதை செய்கின்றார்களே?

 

வெளிநாடுகளிலும் பிள்ளை விருப்பம் இல்லாமல் சுவிமிங், பியானோ, தனியார் ரியூசன் என்று படி படி படி என்றும், பிள்ளைக்கு விருப்பம் இல்லாமல் தமக்கு விருப்பமான துறைகளில் பிள்ளைகளை அழுத்தம் கொடுத்து வதைக்கின்றார்களே.

 

படிப்பு, பிள்ளையின் எதிர்காலம் என்று தமிழ் பெற்றோர் தாயகத்திலும், வெளிநாடுகளிலும் பிள்ளைகளிற்கு எத்தனை விதமான சித்திரவதை செய்கின்றார்கள். 

 

உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். இதனுடன் ஒப்பிடும் போது எத்தனை தமிழ் பிள்ளைகள் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுகின்றார்கள்?

 

பூசணிக்காயை விட்டு விட்டு கடுகு போன இடத்தை ஆராயவேண்டாம்.

 

கடுகை விடுத்து பூசணிக்காயை பற்றி கொஞ்சம் பேசலாம் வாருங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வணக்கம் விசுகர்!
உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகின்றது. உங்கள் எண்ணங்களும் அபிலாஷைகளும் எனக்கு தெரிகின்றது.
ஆனால்.....
 
மேலைத்தேசத்தவர்கள் தங்கள் பாதையில் வென்று விட்டார்கள்.... :icon_idea:
எதையும் செய்வார்கள்..... :lol:
இன்று மேலைத்தேசத்தவர்கள் இருக்கும் நிலையில் கல்வி கலாச்சாரம் எதுவுமே முக்கியமில்லை..... :)
அவர்களுக்கு அப்பா அம்மாவே முக்கியமில்லாத கலாச்சாரம்... :D
அதை அவர்கள் ஊடகங்களும் சரியென போதிக்கும். :icon_idea:
 
நாங்கள் அப்படியான நிலமையிலா இருக்கின்றோம்? :(
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாட்டு மக்கள் பல விடயங்களையும்.. சீர்தூக்கிப் பார்க்கும் பண்பைக் கொண்டிருக்கிறார்கள். அதனால்.. நல்லது கெட்டதுகளை அலசவும்.. தீர்மானிக்கவும் செய்கிறார்கள். எம்மவர்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் கூட மட்டமான சமூக அறிவோடுதான் இருக்கிறார்கள்.  அந்த வகையில்.. செம்மறி ஆடுகளாகவே இருக்கிறார்கள். ஒரு ஆடு பாய்ந்தால்.. எல்லாம் அதையே பின்பற்றிப் பாயும். அல்லது வாத்துக் கூட்டங்களாகவே இருக்கப் பிரியப்படுகிறார்கள்.

 

இதுதான் எம் சிறுவர்கள் விடயத்திலும் எம்மவர்களின் நிலைப்பாடு. அதனை நிதர்சனமாகவே கண்டுவருகிறோம். பக்கத்து வீட்டுக்காரன் கராட்டி படிச்சா.. என் பிள்ளை விரும்புதோ இல்லையோ.. அதுவும் படிக்கனும். பக்கத்து நாட்டில ஒன்று மெடிசின் படிச்சால்.. எனதும் படிக்கனும். இந்தியாவில.. ஒன்று படம் நடிச்சால்.. எனதும் நடிக்கனும்.

 

இதுதான் எம்மவர்களில் படித்தவர் முதல் பாமரர் வரை உள்ள மனோநிலை.  மேற்கு நாட்டவர்களில் கூர்ப்பில் பிந்திய இந்த நிலை அருகிவிட்டது. நாம் இன்னும் முழுமையாகக் கூர்ப்படையாமை தான் விசுகு அண்ணா பிரச்சனையே.  இன்றேல்.. சிறுவர் வதை எது.. பகிடி வதை எது.. சிறுவர் ஊக்குவிப்பு எது.. படிப்பு அறிமுகம் எது என்பதை புரிந்து கொண்டிருக்கமாட்டமா என்ன..?!

 

மேற்கில்.. யுனிகளில் பகிடி வதை கிடையாது. (ரகசியமாக சில எம்மவர்கள் செய்யலாம்). ஆனால் ஊரில் இப்பவும் செய்கிறார்களாம். இதே தான் சிறுவர்கள் விடயத்திலும்.. வதை... இந்தியா போன்ற மனித உரிமைகளை சரிவர மதிக்கத் தெரியாத.. ஏன் இனங்காணத் தெரியாத நாட்டு மக்களை அண்டி வாழ்வதாலோ எண்ணவோ... அங்கிருந்து வரும் சமூகப் படைப்புக்களின்.. குறிப்பாக சினிமாவின் தாக்கம்.. ஊரில் மட்டுமல்ல.. மேற்குலகில் வாழும் எம்மவர்களிலும் செல்வாக்குச் செய்கிறது. இந்த நிலை மாறி.. எம்மவர்கள் மேற்குலக மக்கள் போல விடயங்களை சுயசிந்தனையோடு சீர்தூக்கிப் பார்த்து தனக்குரியதை தானே தீர்மானிக்கும் தன்மை பெற்றால் அன்றி... எம்மவர்கள் மத்தியில் உள்ள சில வதைகளை அகற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல.   :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
குருக்கள் செய்தால் குற்றமில்லை !
 
 
மனிதவதை மூலம்தான் ஐ போன் உங்கள் கைகளுக்கு வந்து சேர்க்கிறது.
குறைந்தது ஒரு வாரத்தில் இருவர் என்றாலும் ஐ போன் தயாரிக்கும் இடத்தில் சீனாவில் வேலை பளுவை தாங்க முடியாது தற்கொலை செய்கிறார்கள்.
ஆதாரபூர்வமாக நிருபிக்கபட்டிருக்கிறது.
 
இப்போ நீங்கள் போட்டிருக்கும் ஆடை கூட 
ஒரு வறியவரின் இரத்த கறை படிந்ததுதான் ....
மலிவு விலையில் எமக்கு வேண்டும் என்றால் ...
ஒரு வறிய தொழிலாளி சில சதங்ககளுக்காக இரத்தம் சிந்துகிறான்.
பங்களாதேசத்தில் அப்பப்போ ஆடை தொழில்சாலைகள் தீப்பற்றி அவர்களும் கருகி போகிறார்கள்.
இப்போ தீவிரமாக செய்தி வெளிவராது தடுத்து கொள்கிறார்கள்.
 
மேலைநாட்டில் அப்படி இருக்கிறது ...
இப்படி இருக்கிறது ..... என்று எண்ணாதீர்கள்.
நாங்களே இங்கே அடிமையாகத்தான் இருக்கிறோம். 
கொஞ்சம் சுதந்திரமான பணக்காரகளின் அடிமைகள்.
எங்களை அடிமை படுத்தி வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் என்பதில் எமக்கு பெருமை!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தார்கள் இது பயங்கர குற்றம். :o


எமது அரசியல் ஆய்வாளர்கள் 18 வயதிற்கு மேற்பட்ட 20 வயதினரையும் பாலகர்களாகத்தான் பார்த்தார்கள்  :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தார்கள் இது பயங்கர குற்றம். :o

சிறிலங்கா சிறப்பு படையினர் 30 வருடமாக சிறுவர்கள் மீது குண்டுவீசி கொன்றது மீட்புபோர். 
அதை இனப்போர் என்று பெயர் சுட்ட பார்கிறார்கள் சில புலிவாலுகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.