Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் மீண்டும் தாக்குதலுக்குள்ளான இந்து கோவில்: மக்கள் பதற்றம்

Featured Replies

அமெரிக்காவில் மீண்டும் தாக்குதலுக்குள்ளான இந்து கோவில்: மக்கள் பதற்றம் [ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 07:09.31 AM GMT +05:30 ] hindu_temple_001.jpgஅமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓஹியோ மாநிலத்தில் உள்ள கெண்ட் நகரில் இந்து கோவில் ஒன்று அமைந்துள்ளது.

இந்த கோவில் தாக்கப்பட்டுள்ளதை நேற்றிரவு பார்த்த கோவில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் அளித்தனர்.

அந்த இந்து கோவிலின் பல ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதோடு, கோவில் சுவற்றில் ’பயம்’ என்று ஸ்ப்ரே பெயிண்டிங்கால் வார்த்தைகள் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க உளவுத்துறை, மற்றும் கெண்ட் நகர் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல கடந்த 15-ம் திகதி, சியாட்டில் நகரில் உள்ள போத்தல் இந்து கோவில் சுவரில் ’வெளியே போ’ என்று எழுதப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மற்றொரு கோவில் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

hindu_temple_002.jpg

http://www.newindianews.com/view.php?200DDmYYbbc44WgAK324ee66044ee023llOmmdddccOOlJx2200AA400aae44SUMQQccbddmmDff23

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் சுவற்றில் ’பயம்’ என்று ஸ்ப்ரே பெயிண்டிங்கால் வார்த்தைகள் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

 

"யாமிருக்க பயம் ஏன்...." என்பதை எழுத முயற்சித்து இருப்பார்களோ...

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஏன் இந்துக் கோவிலை அமெரிக்காவில் கட்டினார்கள்?

(இது இந்தியர்களுக்கான கேள்வி மட்டுமே!)

ஒரு வியாபார நோக்கம்தான் .இது இனி ஐரோப்பாகாரர்களும் தொடங்குவினம்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஏன் இந்துக் கோவிலை அமெரிக்காவில் கட்டினார்கள்?

(இது இந்தியர்களுக்கான கேள்வி மட்டுமே!)

 

 

யாழ்ப்பாணத்தில்

சேர்ச்சை ஏன் கட்டினார்கள்....???

விதைத்ததைதானே அறுவடை செய்யமுடியும்?? :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஏன் இந்துக் கோவிலை அமெரிக்காவில் கட்டினார்கள்?

(இது இந்தியர்களுக்கான கேள்வி மட்டுமே!)

 

ஏன் ஐரோப்பாவில் சிலோன்காரர்கள் கோவில் கட்டும்பொழுது, இந்தியர்கள் அமெரிக்காவில் கோவில் கட்டக்கூடாதா?

(இது சிலோன்காரர்களுக்கான பதில் மட்டுமே!)

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில்

சேர்ச்சை ஏன் கட்டினார்கள்....???

விதைத்ததைதானே அறுவடை செய்யமுடியும்?? :(

பொருத்தமில்லாமல் குழம்பாதீர்கள் தலைப்பை ஒட்டி கருத்தெழுதுங்கள்! அமெரிக்காகாரன் நேரில் வந்து யாழ்ப்பாணத்தில் சேர்ச் கட்டினானா? அதுபோக வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்தபிறகு சாதியத்தின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது! இதற்கு சேர்ச்சுகளின் பங்களிப்பு முக்கியமானது!
  • கருத்துக்கள உறவுகள்

 

இதேபோல கடந்த 15-ம் திகதி, சியாட்டில் நகரில் உள்ள போத்தல் இந்து கோவில் சுவரில் ’வெளியே போ’ என்று எழுதப்பட்டிருந்த நிலையில்

 

 

 

c45fbc05-cdde-4ecb-895b-2b8a5c35bd2cwall

 

 

The incident happened when unidentified miscreants sprayed swastika and painted "Get Out" on one of the walls of the temple in the Seattle Metropolitan area.

 

அமெரிக்காகாரன் நேரில் வந்து யாழ்ப்பாணத்தில் சேர்ச் கட்டினானா? அதுபோக வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்தபிறகு சாதியத்தின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது! இதற்கு சேர்ச்சுகளின் பங்களிப்பு முக்கியமானது!

 

 

1816 இல் அமெரிக்க மிஷன் யாழ்ப்பாணத்தில் சர்சுகளைக் கட்ட ஆரம்பித்தது.

 

 

சாதியை தமக்கு சாதகமாக அல்லவா இந்த கிரீஸ்தவ சர்சுகள் பயன்படுத்தின. சாதிகள் கிரீஸ்தவத்தில் இல்லை என்று சொல்லிக்கொண்டே அதைவிட மோசமான மதப்பிரவினையை அல்லவா தமிழ் இனத்திற்குள் திணித்தார்கள். ஆகமொத்தம் கிரீஸ்தவம் வந்ததால் தமிழ் இனம் இழந்தது தான் அதிகம்.

 

 

They have replaced one with the another.

 

 

.

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவம் இலங்கைக்கு வந்ததில் பாரிய நன்மையே தவிர வேறொன்றுமில்லை. கல்வி, மருத்துவம், விளையாட்டு என்று அது பாரிய பங்களிப்பு செய்திருக்கின்றது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கிறிஸ்தவம் அல்லது வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்ததில் நன்மையைத் தவிர வேறெதுவுமில்லை. முற்றிலும் உண்மை. :wub:  :wub:  :wub:
 
ஆனால்......
 
சாதி...... தமிழ் கிறிஸ்தவர்களிடமும் கொடிகட்டி பறக்கின்றது. :D
  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தமில்லாமல் குழம்பாதீர்கள் தலைப்பை ஒட்டி கருத்தெழுதுங்கள்! அமெரிக்காகாரன் நேரில் வந்து யாழ்ப்பாணத்தில் சேர்ச் கட்டினானா? அதுபோக வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்தபிறகு சாதியத்தின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது! இதற்கு சேர்ச்சுகளின் பங்களிப்பு முக்கியமானது!

 

 

அமெரிக்காவில் மீண்டும் தாக்குதலுக்குள்ளான இந்து கோவில்: மக்கள் பதற்றம்

 

தலைப்பு...

யாழ்ப்பாணத்தில்

சேர்ச்சை ஏன் கட்டினார்கள்....???

விதைத்ததைதானே அறுவடை செய்யமுடியும்?? :(

 

திரியோட  தானே கேள்வி  நிற்குது..

 

மற்றும்படி

எனது கேள்விக்கு இங்கு உறவுகள் பதில் தந்துவிட்டார்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.