Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ம் திருத்தச் சட்டத்தை விடவும் வலுவான அதிகார பகிர்வு முறைமை ஒன்று அவசியம் - விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா பழசைப்போட்டு கிளறிக்கொண்டு இருக்கியள்.இப்ப நடைமுறைக்கு சாத்தியமான தீர்வு எது என்டு எல்லாரும் ஒரு முடிவுக்கு வாங்கோ.எது எப்படியோ சுவர் இருந்தால் தான் சித்திரம் கீறலாம்.அங்கை சனம் பொருழாதார அபிவிருத்தி அடைந்தால் தான் அர்களின் இருப்பு நிலைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,

இருக்க ஏன் பிரபாவை கொண்டு வந்து செருகிகிறீர்கள்? பின்பு நாம் பதில் சொன்னா புலிஎதிர்ப்பு வாந்தி எண்டு சொல்குவியள்.

13 ம் சட்ட திருத்தத்தை விட கூடிய அதிகாரம் கேட்டதற்க்காக பிரபாவை யாரும் பயங்கரவாதி என்று பட்டியலிடவில்லை. அனுராதபுரம், அரந்தலாவை, தலதாமாளிகாவ, மத்திய வங்கி, பஸ் டிரெயின் எண்டு பொதுமக்களை அப்பட்டமாக குறி வைத்ததாலும், நீலன் ஆனந்தராஜா இப்படி பல சமூக பிரதிநிதிகளை போட்டதாலும் தான் பிரபா பயங்கரவாதியாகினார்.

சீவீ யாரையும் போடப்போவதுமில்லை, மக்களின் மீது தாக்குதல் செய்யப் போவதுமில்லை. ஆக இவரை ஒரு போதும் பயங்கரவாதி முத்திரை குத்தி ஊதித்தள்ள முடியாது.

 

1958 ஆம் ஆண்டிலிருந்து புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியகாலம்வரை தமிழரின் பிரச்சனை உலக்த்திற்கு தெரியாமல் இருந்தமைக்கு என்ன காரணம்.....இவ்வளவு அழிவுக்கு பின்பும் சர்வதேசமோ ,அல்லது சிறிலங்கா அரசோ தமிழருக்கு ஒரு தீர்வை கொடுக்காமைக்கு என்ன காரணம்.....

கியூபா தலைவரையோ, சல்வடோரியையோ, மாவோ வையோ, சவேசையோ, அரபாத்தையோ உலகு அமெரிக்கா சொன்ன படியால் பயங்கரவாதிகளாய் கணிக்கவில்லை.
புலிகள் பயங்கரவாதிகள் என்றால் நீங்கள் கூறும் இவர்களும் பயங்கரவாதிகள்தான்...இவர்கள் யாவரும் பழைய காய்கள் அதாவது 1975 ஆம் ஆண்டுக்கு முதல் இருந்த உலக ஒழுங்கில் போராளிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள்.யசீர் அரபாத் இந்திராகாந்தியால் அங்கிகரிக்கப்பட்டார்....இந்திராகாந்தி சோவியத்யூனியனின் செல்லபிள்ளை .....கியுபா அதிபரும் அதே போன்று......இன்றைய உலக ஒழுங்கில் இவர்கள் இருந்திருந்தால் இவர்களையும் பயங்கரவாதிகள் என்றுதான் உலகம் சொல்லியிருக்கும்.....தற்பொழுதைய உலக ஒழுங்கில் போராட்டங்கள் யாவும் பயங்கரவாதமாகும்....அரபாத்,கஸ்ரோ,மண்டேலா போன்றோர் உருவாக முடியாது ......
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை புத்தன், கியூகோ சவேஸ் இப்போதான், இரண்டு வருடங்களுக்கு முன்வரை பதவியில் இருந்தார். கொசோவோ, எரித்திரியா, சவுத் ஒசேசியா, சூடான் என்று 75க்கு பிறகும் பல போராட்டங்கள் பயங்கரவாத முத்திரையை கிழித்து வெளிவந்துளன.

திபேத்தியர்களும், கஸ்மீரிகளும் கூட இப்படியே.

நான் மேலே சொன்னதெல்லாம் யாருக்கும் தெரியாததல்ல. நாம்தான் கண்ணை மூடிக்கொண்டு பால்குடிக்கப் பார்கிறோம்.

ஒரு கணம் இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். புலிகள் ராஜீவை கொல்லவில்லை. நீலன், கதிர்காமர் கொலைகளை செய்யவில்லை. சிங்கள மக்களை தாக்கவில்லை. வெறுமனே ராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கினர். இப்படி ஒரு நிலையில் அமெரிக்காவோ, ஈயூவோ புலிகளை தடை செய்திருக்குமா? எல்லாரும் சேர்ந்து அழித்திருப்பார்களா?

நிச்சயமாக இல்லை.

மாவீரகளின் தியாகத்தால் பலமாக உருவாகியவர்கள் புலிகள். தமிழர்களின் ஒற்றை பலமும் அவர்களே. அந்தப் பலத்தை அவர்கள் தலைமையே சிதறடித்தது.

பிரபா பலமான நிலையில் இருந்து சரியான அரசியலை செய்திருந்தால் அல்லது பாலாவை செய்ய விட்டிருந்தால் - சீவியும் சுமந்திரனும் டெல்கியிலும் கொழும்பிலும் போய் பிச்சை எடுக்கும் இந்த துர்நிலை எம் சமூகத்துக்கு வந்திராது.

சுவை சொல்லுமாப் போல எல்லாம் பழங்கதையே.

தீர்வு என்றால் - இனி நாம் மோடியின் காலை கழுவி, கொழும்பை சரிக்கட்டி, 13 இல் தொடங்கி - கால ஓட்டத்தில் சமஸ்டி நோக்கி நகருவதே சரிப்படும். அதைத்தான் சிவியும் சொல்லாமல் சொல்குறார்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

அறவளியில் நின்றிருந்த தலாய் லாமாவுக்கு 

எப்பொழுதோ அவரது இலக்கை கொடுத்துவிடடார்கள்...

 

சொல்பவன் சொன்னால்

கேட்பவனுக்கு......?? :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

தலய் லாமாவுக்கு கேட்டதை கொடுக்கா விடினும், எல்லோரும் சேர்ந்து பயங்கரவாதி முத்திரை குத்தி கும்மி எடுக்காமல் விட்டர்கள்.

அறவழியில் நிண்டதால் (மட்டுமே இல்லை) தான் சீனா போன்ற பெரும் எதிரியை எதிர்த்தும் தலய்லாமாவால் இன்னும் போராட முடிகிறது.

அறம் பிறழ்ந்ததாலே இலங்கை போன்ற ஒரு கோழிகுஞ்சு கூட எம்மை நசுக்கி விட்டது.

தலய் லாமாவும் நேருவை போட்டுத்தள்ளி இருந்தால், அல்லது இன்னும் சில அரை, கால் லாமாக்களை கம்பத்தில் கட்டித்தூக்கி இருந்தால், பீஜிங்கில் ஓடும் ரெயிலில் குண்டு வைத்திருந்தால் - அவரையும் கோபி பாலவனத்துக்கு(திபெத்தில்தான் கடல்/முள்ளிவாய்க்கால் இல்லையே) கூட்டிப்போய் சோலியை முடித்திருப்பார்கள்.

கேப்பவன் கேனையா இருந்தாலும் சொல்பவன் உள்ளதைதான் சொல்ல முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

10983825_10204981628193014_4222643138453

 

கதை இங்க டோங்கிரி.. டாங்கிரி என்று.. போகுது.

 

இவை 13 க்கு அப்பால்.. +.. ++... +++ என்று கனவு காண வேண்டியான்.  :lol:  :D

Edited by nedukkalapoovan

தலய் லாமாவுக்கு கேட்டதை கொடுக்கா விடினும், எல்லோரும் சேர்ந்து பயங்கரவாதி முத்திரை குத்தி கும்மி எடுக்காமல் விட்டர்கள்.

அறவழியில் நிண்டதால் (மட்டுமே இல்லை) தான் சீனா போன்ற பெரும் எதிரியை எதிர்த்தும் தலய்லாமாவால் இன்னும் போராட முடிகிறது.

அறம் பிறழ்ந்ததாலே இலங்கை போன்ற ஒரு கோழிகுஞ்சு கூட எம்மை நசுக்கி விட்டது.

தலய் லாமாவும் நேருவை போட்டுத்தள்ளி இருந்தால், அல்லது இன்னும் சில அரை, கால் லாமாக்களை கம்பத்தில் கட்டித்தூக்கி இருந்தால், பீஜிங்கில் ஓடும் ரெயிலில் குண்டு வைத்திருந்தால் - அவரையும் கோபி பாலவனத்துக்கு(திபெத்தில்தான் கடல்/முள்ளிவாய்க்கால் இல்லையே) கூட்டிப்போய் சோலியை முடித்திருப்பார்கள்.

கேப்பவன் கேனையா இருந்தாலும் சொல்பவன் உள்ளதைதான் சொல்ல முடியும்.

இவ்வளவு அழிவை கண் முன்னே கண்ட பின்பும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்கின்றார்கள் .நாட்டில் என்ன நடந்தது நடக்கின்றது என்பது பற்றி எதுவித அக்கறையுமில்லை நாங்கள் செய்ததுதான் சரி .இதுதான் அவர்களுக்கு முக்கியம் .

 

கதை இங்க டோங்கிரி.. டாங்கிரி என்று.. போகுது.

 

இவை 13 க்கு அப்பால்.. +.. ++... +++ என்று கனவு காண வேண்டியான.  :lol:  :D

 

மோடி ரொம்பத்தான் கஞ்சன்.
 
இரண்டு கரட் துண்டுகள், இரன்டு பீன்ஸ் அப்புறம் ஏதோ மஞ்சளாக இரு சிறிய துண்டுகள்.
 
இவை போதுமா? பாவம் பிக்குகள்.
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வரும்போதே சாராயத்தில் தோய்ந்த தேங்காய்ச்சொட்டுக்களை தாங்களே கொண்டுவந்த்ஹிருப்பர். சாது. சாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.