Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தவறான பாதையில் செல்ல முயன்றால் மஹிந்த அரசின் கதியே ஏற்படும்! - புதிய அரசுக்கு சுமந்திரன் எச்சரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sumanthiran-300-news1.jpg

சர்வதேச மேற்பார்வையுடனேயே உள்ளக விசாரணைப் பொறிமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறின்றி, தவறான பாதையில் பயணிக்குமானால், மஹிந்த ஆட்சிக்கு நடந்ததே இந்த அரசுக்கும் நடக்கும். அதைக் காண நாம் விரும்பவில்லை. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

   

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் பரணகம ஆணைக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை. பரணகம ஆணைக்குழுவின் சில அமர்வுகளில் நானும் பங்குபற்றினேன். இந்த ஆணைக்குழுவுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆனால், சாட்சிகள் பல்வேறு விதமான முறையில் அழைக்கப்படுகின்றனர்.

 

சாட்சிகளாக அழைக்கப்படுபவர்களிடம் ஆணைக்குழு தலையிட்டு கோழி, ஆடு தருகின்றோம் என்று கூறுகின்றது. "ஆடு, கோழி வேண்டாம். எமக்கு எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்'' என்று பல தாய்மார்கள் இதன்போது கூறினர். இதுபோன்ற சம்பவங்கள் இந்த ஆணைக்குழு விசாரணையில் இடம்பெற்றுள்ளன. இது ஒரு பாரிய விடயமாகும். இதனால் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை.

 

இவ்வாறான நிலையில், இந்த ஆணைக்குழுவின் பணிகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆணைக்குழு மட்டுமன்றி, அதற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள டெஸ்மன் டி சில்வா தலைமையிலான சர்வதேச ஆலோசனைக் குழு மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே, இப்படியான விசாரணை தொடரக்கூடாது. இவ்வாறான நிலையில், சர்வதேச விசாரணை அறிக்கையை பிற்போடுமாறும், உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை அரசு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்து உறுதியளித்துள்ளது.

 

பரணகம ஆணைக்குழு மற்றும் அதன் விசாரணை நடவடிக்கைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. இந்தத் தவறான முறைக்கு இடமளிக்க முடியாது. எனவே, சர்வதேச மேற்பார்வையுடன் புதிய பொறிமுறை ஊடாக இந்த உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும். அதைவிடுத்து, தவறான பாதையில் அரசு பயணிக்குமானால், மஹிந்த அரசுக்கு ஏற்பட்ட நிலைமையே இதற்கும் ஏற்படும். அதைக் காண நாம் விரும்பவில்லை. உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படவேண்டும். அப்போதுதான் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை ஐக்கியப்படுத்தி பாதுகாக்க முடியும் என்றார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=128505&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உணர்ச்சி வசப்படாமல் அமைதியான முறையில் சிங்கள மக்களுக்கு எமது பிரச்சனைகளை புரியவையுங்கள்.rolleye0017.gif
 
 
புடிச்சு வைச்சிருக்கிற சனத்தை விடுவிக்கிறதுக்கே மகிந்தவுக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும் எண்டு வெருட்ட வேண்டிக்கிடக்கு....மிச்சப்பிரச்சனையளுக்கு என்ன செய்யவேணுமெண்டதை நீங்களே கூட்டிக்கழிச்சு பாருங்கோ :icon_idea:  :D
  • கருத்துக்கள உறவுகள்
சுமந்திரன் அண்ணெய்!
 
உணர்ச்சி அரசியலால் எதையும் சாதிக்க முடியாதாம்.
பிடித்தவர்களை அவர்கள் விடுவார்கள்தானே ....
 
நீங்கள் தீர்வை நோக்கி நகருங்கள். (ராஜ தந்திரமாக)
யாழ்தேவி சேவையில் இருக்கும்போதே பெற்றுகொண்டால் 
கொழும்பில் இருந்து கொண்டுவர சுகமாக இருக்கும் 
என்பது அடியேனின் ஆலோசனை. 
  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் இல்லாட்டி நாங்கள் சிலிப்பர் கட்டையை புடுங்கிப் போடுவம். பிறகு கொம்படிச் சேத்துக்காலா இழுத்துகொண்டு வரவேண்டியதாப் போடும் :)

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே சுமந்திரனைச் சம்பந்தர் பின்கதவால் கூட்டி வந்தவர்.

வந்த வேலையை அவர் சரியாகவே செய்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டில ஒண்டைச்சொல்லவேணும் , உங்களுக்கு உள்ளக விசாரணையில நம்பிக்கை இருக்கா இல்லையா

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டில ஒண்டைச்சொல்லவேணும் , உங்களுக்கு உள்ளக விசாரணையில நம்பிக்கை இருக்கா இல்லையா

 

அடுத்த தேர்தல் வரும் வரை மக்களை மேய்க்க வேண்டுமே

நீங்கள் இப்படியெல்லாம் கேட்கப்படாது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா.. மைத்திரிக்கு நோகாமல் பேசுங்க என்று கூட்டமைப்புக்கு ஏசிறார்.. புலம்பெயர் தமிழர்களை வைக்கிறார்.. பிறகு தானே.. இப்படியும் உளறுறார்.. இவரை விட்டால்.. தாடிக்கார.. குத்தியரை வென்ற வித்தைக்காரனா இருப்பாரோ..?! :lol:  :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்

09/03/15 - இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் , மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன்

18/03/15 - தவறான பாதையில் பயணிக்குமானால், மஹிந்த ஆட்சிக்கு நடந்ததே இந்த அரசுக்கும் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் இல்லாட்டி நாங்கள் சிலிப்பர் கட்டையை புடுங்கிப் போடுவம். பிறகு கொம்படிச் சேத்துக்காலா இழுத்துகொண்டு வரவேண்டியதாப் போடும் :)

ரயில் ஓடாமல் ....
சும்மா தண்டவாளாம் கிடந்தால் எவனாவது எடுப்பன்தானே .
இவர் இப்படி உணர்சிவசபட்டு பேசுவதை கேட்டு அவர்கள் ரயிலை நிறுத்தினால் 
என்ன செய்வது ...? 
  • கருத்துக்கள உறவுகள்

தவறான பாதையில் செல்ல முயன்றால் மஹிந்த அரசின் கதியே ஏற்படும்! - புதிய அரசுக்கு சுமந்திரன் எச்சரிக்கை.

 

மைத்திரி  அரசு வந்து கொஞ்ச காலம் தான்

அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும்

இவ்வாறு எச்சரிக்கை விடுத்து

அவர்களுக்கு கோபம் வந்துவிட்டால்..

 

இப்படியும்  இவர் தான் சொல்கிறார் வேறு ஒரு இடத்தில்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.