Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போரில் கொல்லப்பட்டோருக்கு அமெரிக்கா சார்பில் முள்ளிவாய்க்காலில் இறுதி வணக்கம் - Photo

Featured Replies

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று உயிரிழந்த இருதரப்பினருக்காகவும் மலர் தூவி இறுதிவணக்கம் செலுத்தினார்.

us-remember-mullivaikal-Tom-Malinowski.j

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி சிறிலங்காவில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

நேற்று அவர் முல்லைத்தீவுக்குச் சென்று, ஆயிரக்கணக்கான பொதுமக்களும், விடுதலைப் புலிகளும், சிறிலங்கா படையினரும் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் நடந்து சென்றார்.

முள்ளிவாய்க்காலில், பாரா கப்பல் தரைதட்டி நின்ற பகுதியில், கரையோரத்தில், மலர்களைத் தூவி, உயிரிழந்தவர்களுக்கு அவர் இறுதி வணக்கம் செலுத்தினார்.

போரில் கொல்லப்பட்ட இரண்டு தரப்பினருக்காகவும் தாம், அமெரிக்காவின் சார்பில் இறுதி வணக்கம் செலுத்தியதாக அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அந்த இடத்துக்குச் சென்ற போது தாம் உணர்வுபூர்வமான நிலையை அடைந்ததாகவும், போரில் உயிரிழந்த இரண்டு தரப்பினருக்காகவும் அமெரிக்காவின் சார்பில் இறுதி வணக்கம் செலுத்தியதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

http://www.pathivu.com/news/38972/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கொல்பவரும் நாமே.. பூப்போடுபவரும் நாமே..! :rolleyes::(

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று உயிரிழந்த இருதரப்பினருக்காகவும் மலர் தூவி இறுதிவணக்கம் செலுத்தினார்.

us-remember-mullivaikal-Tom-Malinowski.j

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி சிறிலங்காவில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

நேற்று அவர் முல்லைத்தீவுக்குச் சென்று, ஆயிரக்கணக்கான பொதுமக்களும், விடுதலைப் புலிகளும், சிறிலங்கா படையினரும் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் நடந்து சென்றார்.

முள்ளிவாய்க்காலில், பாரா கப்பல் தரைதட்டி நின்ற பகுதியில், கரையோரத்தில், மலர்களைத் தூவி, உயிரிழந்தவர்களுக்கு அவர் இறுதி வணக்கம் செலுத்தினார்.

போரில் கொல்லப்பட்ட இரண்டு தரப்பினருக்காகவும் தாம், அமெரிக்காவின் சார்பில் இறுதி வணக்கம் செலுத்தியதாக அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அந்த இடத்துக்குச் சென்ற போது தாம் உணர்வுபூர்வமான நிலையை அடைந்ததாகவும், போரில் உயிரிழந்த இரண்டு தரப்பினருக்காகவும் அமெரிக்காவின் சார்பில் இறுதி வணக்கம் செலுத்தியதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.pathivu.com/news/38972/57//d,article_full.aspx

அடப்பாவியளா ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுதிச்சாம்.  :o  :D
அமெரிக்கன் நேரடியா களத்திலை இறங்கி இறுதி வணக்கம் செலுத்திறான் எண்டால் எங்கையோ ஆப்பு இறுக்க போறான் எண்டு அர்த்தம்.  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

கேவலம் கெட்ட பிச்சைகார சொரிலங்கவால் ஒருத்த... வந்து பொங்கல் பொங்குகின்றார்  ,இன்னுமொருவர்  பூ போட்டு கும்பிடுகின்றார்  ,எம்மை அழிக்க கூட்டு சேர்த்து அழித்தவர்களே   திரும்பி வந்து நிற்க வைத்துள்ளது வெளி அரசியல் .

 

இந்த அருமையான நேரத்தை உபயோகிக்காமல் tna யில் இருக்கும் கொஞ்சம் தமிழ் பெண்களிடம் மைனர் குஞ்சு விளையாட்டு விளையாடுகினம் .சம்பந்தன் கருமாதி வீட்டுக்கும் கல்யாண வீட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் அடக்க அரசியல் எனும் போர்வையில் பிழைப்பு வாதம் மேற்கொள்ளுது. சுமத்திரன் வின்னர் பட வடிவேல் மாதிரி எதோ தான் பெரிய  பிசியான ஆள் மாதிரியும் வடகிழக்கில் தான் தான் அறிவுள்ளவர் மாதிரியும் பீலா விட்டுக்கொண்டு அடுத்த பிழைப்பு வாதம் செய்கிறது.இது எமது தலை எழுத்து .

அவன் மண்  எடுக்க வந்தவன் கொண்டுபோய்  பரிசோதிக்க  உண்மைக்கு  நச்சு குண்டு  போட்டவையா  என்று  பார்க்க விரைவில  நல்ல  முடிவு வரும்  இப்படிக்கு ஏகாபத்திய அடிமை   :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவன் மண்  எடுக்க வந்தவன் கொண்டுபோய்  பரிசோதிக்க  உண்மைக்கு  நச்சு குண்டு  போட்டவையா  என்று  பார்க்க விரைவில  நல்ல  முடிவு வரும்  இப்படிக்கு ஏகாபத்திய அடிமை   :lol:

யாதார்த்தை மீறி நக்கலடிப்பது உங்களுக்கு கை வந்த கலை இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று தெரிந்தும் எழுதுவது உங்களின் மனபாதிப்பை எங்களுக்கு காட்டுது .   :)

யாதார்த்தை மீறி நக்கலடிப்பது உங்களுக்கு கை வந்த கலை இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று தெரிந்தும் எழுதுவது உங்களின் மனபாதிப்பை எங்களுக்கு காட்டுது .   :)

இங்கு இவ்வாறான பொழுதுகளே  போகுது  சும்மா நானும்  பற்றாளன்   என்று  காட்டி  எழுதுவதால்  மட்டும்  என்  மனம் இரக்கம்  உள்ளதா  இருக்க  வேணும்  என்று  நான்  நினைக்க வில்லை  அண்ணே  :D

 

அடுத்து  ஏதாவது  எழுத போனால் சிங்கள்  கைக்கூலி  என்பார்கள்  அதை  விட  இது  பருவாயில்லை  அதுதான்  :icon_idea:

இரண்டு பகுதிக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார். முள்லிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் அழிந்தது யார் என்பது வெளிப்படை. அமெரிக்கா தன் நலனுக்காக இலங்கையைப் பிரிக்கும் என்று இன்னுமொரு திரியில் வாதிட்டவர் முகங்களில் கரி பூசியுள்ளார்.   :wub:
 
அமெரிக்கா எந்த ஒரு காலத்திலும் இலங்கையைப் பிரிக்கும் நிலைக்குப் போகப் போவதில்லை. 
 
ஆனால் இலங்கையில் இருக்கும் இனவாத சக்திகளுக்கு எதிராக வேலை செய்யும்.  
 
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு முக்கியமான விடயம். பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் புரியும் அமெரிக்கா பயங்கரவாதிகளுக்காக அஞ்சலியும் செய்திருக்கிறது.

இவர் பரவாயில்லை, வந்து பூபோட்டு அஞ்சலி செலுத்துகிறார்.

 

கொலிடேக்கு வந்து போட்டோ எடுத்து போகாமல் பூப்போட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். இவர் சொல்லவந்தது செய்தியை சொல்லிவிட்டு போகிறார்.

 

புரியவேண்டியியவர்களுக்கு புரிந்தால் சரி.

சிலருக்கு இன்னமும் என்ன நடக்குது என்று விளங்குதில்லை . :lol:

சிலருக்கு இன்னமும் என்ன நடக்குது என்று விளங்குதில்லை . :lol:

அப்பாடா , அர்ஜுன் நீங்கள் விளங்கினவர் தானே கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் ... சும்மா பில்டா விடக்கூடாது .
விளங்கினால் தெளிவாக சொல்லவேண்டும் ....
 
அமெரிக்கனுக்கு இதுவே பிழைப்பாகி போட்டுது   அங்க ISIS இன் அடி தாங்க முடியாமல் முழிக்கினம் ...
வளர்த்து விட்டதே அவர்கள் தானே ... சதாமை சும்மா கொலை செய்ததால் வந்த வினை இது ....
 
அதுமாதிரிதான் எங்களையும் அழிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தவர்கள் ... இன்னும் அனுபவிப்பீர்கள் ...
  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு இன்னமும் என்ன நடக்குது என்று விளங்குதில்லை . :lol:

பலருக்கு விளங்கிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு இன்னமும் என்ன நடக்குது என்று விளங்குதில்லை . :lol:

" உங்களுக்கு என்ன விளங்கினது என சொன்னால் தான் எங்களுக்கு தெரியும் என்று நீங்க நினைக்க மாட்டிங்க என்று எங்களுக்கு தெரியும் " :icon_idea: இங்குள்ளவர்களுக்கு தெரியும் உங்களின் விளக்கம் :D  :D  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.