Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் எப்போது சுதந்திரமாக இருக்க முடிகிறது ?????

Featured Replies

எங்கப்பா சுதந்திரத்துக்காகப் போராடிய புதுமைப் பெண் சுமே எங்கேஏஏஏஏஏஏஏஎ???????


:D  :D


 

பெண்களைப் பொறுத்த மட்டில் பிறந்த நாள் முதற்கொண்டு வளரும் நாளெல்லாம் பெற்றவரின் கட்டுப்பாட்டின் கீழும், அதன்பின் கணவரின் ஆளுமையின் கீழும் அவர் சார்ந்த மாமனார் மாமியார் போன்றவர்களுக்குப் பயந்தபடியும் பின்னர் பிள்ளைகளுக்குப் பயந்து அல்லது அவர்கள் விருப்பப்படி நடந்து ........தனக்குப் பிடித்தவாறு எப்போது அவளால்  நின்மதியாக சந்தோசமாக வாழ முடிகிறது ????

 

 

சுமே உங்கட மாமியார் வாழை இலை வெட்டிப் போட்டா எண்டு இரவிரவாய் பிளேனிலை ஏத்தி இலங்கைக்கு அனுப்பின கதை எழுதினியள் எல்லோ, நீங்கள் மறந்திட்டியள் நாங்கள் இன்னுமே மறக்கேலையே  :D  :lol: . இப்ப சொல்லுங்கோ யாருக்கு யார் பயம் என்று  :D

  • கருத்துக்கள உறவுகள்
"சுதந்திரம்"
என்பதை நாம் புரியாதவரை அல்லது அதை வரையறுக்க முடியாத வரை 
இதில் தெளிவாக எதையும் எழுத முடியாது.
 
எறும்புகளை எடுத்தால் ராணிக்கு தேவையான அனைத்து உணவு சொவ்காரிய தங்குமிட வசதி 
போன்றவற்றை செய்வதே மற்றைய எறும்புகளின் வேலை.
ஒரு கொலோணியை கட்டி அதை பாதுகாப்பதை எந்த சோம்பலும் இன்றி நாளும் நாலும் செய்யும்.
 
ராணி மற்றைய எறும்புகளின் உழைப்பில் வாழ்ந்துகொண்டு 
முட்டை இடுவது மட்டுமே வாழ்க்கை.
வெளி உலகம் தெரியாது. 
மற்றைய எறும்புகளுக்கு கொலை அச்சுறுத்தல் பிளஸ் உழைப்பு 
ஆனால் வெளி உலகில் வாழ்க்கை. 
 
இதில் எது சுதந்திரம் என்று  நாம்தான்  முடிவு கொள்ள வேண்டும். 
 
மனிதர்களின் வாழ்வு வரையறுக்க படவில்லை 
அதனால் வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதை மறுக்க முடியாது.
இதில் பல ஆண்களும் சிக்கி கொள்கிறார்கள் என்பதையும் ஏற்றுகொள்ள வேண்டும். 
 
பொதுவாக எமது சமூகத்தை பார்த்தால்.
பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை விட எமது சமூகம் அழுக்கானது என்பதுதான் உண்மை.
எனக்கு இருந்த சுதந்திரம் எனது அக்காவிற்கு இருக்கவில்லை.
இது எங்கள் வீட்டில் மட்டுமல்ல எல்லா வீடிலும் பார்த்திருக்கிறேன்.
நான் சயிக்கிள் எடுத்துகொண்டு போனால் அம்மா அப்பா இருவரும் எங்கு போகிறாய் என்று கேட்பதில்லை 
அக்கா போவதற்கு முன்பே காரணம் கூறித்தான் செல்லும் நிலைமை இருந்தது. 
இது பொதுவாக எல்லா வீட்டிலும் இருந்தது.
இது (செவ்வந்தி அக்கா சொல்லும்) தனிமனித ஒழுக்கமா அல்லது சுதந்திர மறுப்பா என்று 
என்னால் முடிவு செய்ய முடியவில்லை.
எனக்கு தரபட்டது  சுதந்திரமா  அல்லது நான் மனித அழுக்கா என்பதும் கேள்விக்கு உள்ளானது.
தராசில் இரண்டும் ஒரே நிறுவையில் இருக்கவில்லை என்பதுதான் எனது வாதம். 
இதை சமநிலை படுத்த தடையாக இருப்பது சமூகம்தான்.
இன்று இந்தியாவில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு சமூகமே முதல் காரணம்.
பெண்கள் இதில் பாதிப்பு அடைகிறார்கள் என்பதை பார்க்கும்போது....
 
நான் மனித அழுக்கு என்றுதான் என்னால் சொல்ல முடியும்.
மீண்டும் நான் நாமகும்போது அது சமூகம் ஆகிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் கடையில் வாங்கும் பொருள் அல்ல..வீட்டு,வெளிப்புற உறவுகள் தாங்களாக புரிந்து கொண்டு மற்றவர்களது உணர்வுகளுக்கு ஏற்ப நடப்பதை தான் நான் சுதந்திரமாக நினைப்பேன்...நம் பெற்றோர்,உறவுகள் இயற்கையாகவே ஆண் பிள்ளைகளை வேறு விதமாகவும்,பெண் பிள்ளைகளை வேறு விதமாகவும் வளர்த்து விட்டார்கள்..இன்னும் அந்த வரை முறையிலிருந்து சில குடும்பங்கள் மாறுகிறார்கள் இல்லை என்பதும் உண்மை...முன்பு சில விடையங்களை பெற்றோர் கண்டிப்போடு சொல்லும் போது என்ன இவர்கள் எடுத்த எல்லாத்துக்கும் கண்டிக்கிறார்கள் என்று நினைச்சு வெறுப்படைந்த மனம் இப்போ எல்லாம் என்னாச்சும் பேசினால் பேசிட்டுப்  போகட்டும்,செய்துட்டு போகட்டும் என்ற நிலைக்கு வந்துட்டு..

 
கொஞ்சமாவது சுதந்திரம் வேணும் என்று யாரோடும் பழகி கொண்டு இருக்கும் போது அது ஆண்களாகட்டும்,பெண்களாகட்டும் அவர்கள் மற்றவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது. பட்ட கஸ்ரங்களை,வேதனைகளை நாகரீகமற்று இழுத்துப் பேசி மறுபடியும் நோகப்பண்ணும் போது இவர்களை விட பெற்றோரின் கண்டிப்பு  ஒருபடி மேல் என்று தான் சொல்வேன். ஒரு பிள்ளை கெட்டுடக் கூடாது,கண்டவர்களோடு எல்லாம் சேரக் கூடாது,பேசக் கூடாது என்ற கண்டிப்பு வாழ் நாள் நலன் சார்ந்தது அல்லவா...அண்மைய காலங்களில் நான் உணர்ந்த விடையம் இது தான்...சிலருக்கு பிறப்பிலிருந்தே நிறைய விடையங்களில் சுதந்திரமற்ற நிலை தான் அதற்காக எல்லாம் இப்போ கவலைப்படுவது குறைவு...சில மனிதர்களின் குணங்களை யாராலும் மாற்ற ஏலாது...என்னைப் பொறுத்த மட்டில் அன்பாக எந்த விடையத்தை சொன்னாலும்,செய்தாலும் ஏற்றுக் கொள்வேன்..அடக்கு முறை பண்ணினால் தவறை உணரும் மட்டும் மௌனமாகி விடுவேன்..அல்லது கோவம் வேறு விதமாக உணர்த்தபடும்...
 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் அல்லது ஒருத்தி தன் குடும்பத்திற்க்காக ஆசாபாசங்களை  துறப்பதற்கு பெயர் சுதந்திரமல்ல....  :)

 

அதுக்குப் பெயர் தியாகம் என்று கூறப்போகிறீர்களா ??? அல்லது ???? :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிரகுச்சனை என்றால் இந்தக் கேள்விக்கான பதிலை பெண்கள் மட்டும் தான் சரியாகக் கொடுக்க முடியும். ஏனெனில் இக்கேள்வி பெண்களின் உறவுகள், உணர்வுகள் என்பவற்றுடனும் தன் உள்ளுணர்வுடனும் தொடர்புடையது. சில வேளைகளில் பெண்களின் மனங்களில் இதற்கான பதில் இருந்தாலும் எழுதுவதற்கான மனத்திடம் இருக்கும் என்று நினைக்கவில்லை. அதிலும் ஒரு வாழ்வை அதாவது குழந்தை குடும்பம் பேரக்குழந்தைகள் என்று வாழ்ந்தவர்களால் மட்டுமே இதற்கான பதிலைக் கூறமுடியும். எம் சமூக நிலையும் இதற்கொரு முக்கிய காரணம் தான்.

சுமே நாங்கள் எழுதியதையும் வாசியுங்கோ  :D

  • கருத்துக்கள உறவுகள்

சுமே நாங்கள் எழுதியதையும் வாசியுங்கோ :D

நீங்கள் இப்பிடி சொல்லி சுமே அக்காவின் சுதந்திரத்தில் தலையீடு செய்கிறீர்கள் ;)

நீங்கள் எழுதியதை வாசிப்பதும் விடுவதும் சுமே அக்காவின் சுதந்திரம். :p

நீங்கள் இப்பிடி சொல்லி சுமே அக்காவின் சுதந்திரத்தில் தலையீடு செய்கிறீர்கள் ;)

நீங்கள் எழுதியதை வாசிப்பதும் விடுவதும் சுமே அக்காவின் சுதந்திரம். :p

 

அடபாவியள்  :D மீனாவின் சுதந்திரத்தில் குறுக்கிட்டுக் கொண்டு   :rolleyes:  :D

 அதிலும் ஒரு வாழ்வை அதாவது குழந்தை குடும்பம் பேரக்குழந்தைகள் என்று வாழ்ந்தவர்களால் மட்டுமே இதற்கான பதிலைக் கூறமுடியும்.

இதால அக்கா என்ன சொல்ல வாறா எண்டால், திருமணம் செய்யாதவர்கள் இந்த திரி பக்கம் எட்டியும் பாக்கவேண்டம். அப்பிடிபார்த்தாலும் கருத்து எழுதாமல் ஓடி போய்விடனும். :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதால அக்கா என்ன சொல்ல வாறா எண்டால், திருமணம் செய்யாதவர்கள் இந்த திரி பக்கம் எட்டியும் பாக்கவேண்டம். அப்பிடிபார்த்தாலும் கருத்து எழுதாமல் ஓடி போய்விடனும். :lol:  :lol:

 

 

பல தடவைகள் நானும் உணர்ந்து கொண்ட ஒரு விடையம்...உணர்வுகள் என்னும் போது ஓரளவுக்கு வளர்ந்த பின் திருமணம் செய்தவர்களுக்கு தான் உணர்வுகள்  பற்றி எழுதக் கூடியதாக இருக்கும் மற்றவர்களுக்கு அவை பற்றிய அறிவு அவ்வளவாக இருக்காது. என்ற பொருள் பட எழுதுவது எல்லாம் மற்றவர்களை உதாசீனம் செய்வது போலத் தான் எனக்கும் மனதுக்கு படுவது உண்டு..என்ன செய்வது..பட்டால் தான் புத்தி வரும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நான் வேண்டுமென்றே உங்கள் பதிவுகளுக்குப் பதில் எழுதாமல் விடவில்லை. நான் ஒரு பரீட்சைக்காகப் படிக்கவேண்டி இருப்பதால் யாழ் களத்துக்கு வருவதைக் குறைத்துள்ளேன். கட்டாயம் மே மாத இறுதியில் மீண்டும் எம் சொற்போரை வைத்துக்கொள்ளலாம். குறை நினைக்க வேண்டாம் உறவுகளே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல தடவைகள் நானும் உணர்ந்து கொண்ட ஒரு விடையம்...உணர்வுகள் என்னும் போது ஓரளவுக்கு வளர்ந்த பின் திருமணம் செய்தவர்களுக்கு தான் உணர்வுகள்  பற்றி எழுதக் கூடியதாக இருக்கும் மற்றவர்களுக்கு அவை பற்றிய அறிவு அவ்வளவாக இருக்காது. என்ற பொருள் பட எழுதுவது எல்லாம் மற்றவர்களை உதாசீனம் செய்வது போலத் தான் எனக்கும் மனதுக்கு படுவது உண்டு..என்ன செய்வது..பட்டால் தான் புத்தி வரும்....

 

நான் இதை எழுதும்போது நீங்கள் தவறாக விளங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது என எண்ணிக்கொண்டேதான் எழுதினேன் யாயினி. உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதான் ஆனாலும் அவர்கள் அதை வெளிப்படுத்தவேண்டிய இடம், காலம், நேரம் எல்லாம் வேறுபாடும் அல்லோ. ஒரு அறுபது அல்லது எழுபது வயதுப் பெண்ணின் மனநிலையும் உணர்வும் எமக்கு எப்படி விளங்கும் யாயினி.??? ஓரளவுக்கு நாம் அதை விளங்கியதுபோல் கொள்ளலாமே தவிர நாம் அந்த வயதை எட்டும்போதுதான் அதை எம்மால் முழுதாக விளங்கிக் கொள்ள முடியும். அதுவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுவேறு உணர்வுகளும் எண்ணங்களும் அனுபவங்களும் தான் இருக்குமே தவிர ஒன்றாக இருக்கவே முடியாது. அந்த அர்த்தத்தில்த்தான் நான் எழுதியதே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. :D

 

 

இதால அக்கா என்ன சொல்ல வாறா எண்டால், திருமணம் செய்யாதவர்கள் இந்த திரி பக்கம் எட்டியும் பாக்கவேண்டம். அப்பிடிபார்த்தாலும் கருத்து எழுதாமல் ஓடி போய்விடனும். :lol:  :lol:

 

போட்டுக்கொடுக்க உங்களை மாதிரி ஆக்களைத்தான் தேவை சேவியர். :lol: :lol: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நான் வேண்டுமென்றே உங்கள் பதிவுகளுக்குப் பதில் எழுதாமல் விடவில்லை. நான் ஒரு பரீட்சைக்காகப் படிக்கவேண்டி இருப்பதால் யாழ் களத்துக்கு வருவதைக் குறைத்துள்ளேன். கட்டாயம் மே மாத இறுதியில் மீண்டும் எம் சொற்போரை வைத்துக்கொள்ளலாம். குறை நினைக்க வேண்டாம் உறவுகளே.

 

சுதந்திரமாக பரீட்சை எழுதுங்கோ....:D

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமாக பரீட்சை எழுதுங்கோ.... :D

 

சுமே இன்னும் பரீட்சையே எழுதவில்லை

எங்களுக்கு எப்படி வகுப்பெடுக்கிறார்...?? :o

(ஏதோ நம்மால முடிந்தது.. :lol:  :D )

உண்மையில் நான் வேண்டுமென்றே உங்கள் பதிவுகளுக்குப் பதில் எழுதாமல் விடவில்லை. நான் ஒரு பரீட்சைக்காகப் படிக்கவேண்டி இருப்பதால் யாழ் களத்துக்கு வருவதைக் குறைத்துள்ளேன். கட்டாயம் மே மாத இறுதியில் மீண்டும் எம் சொற்போரை வைத்துக்கொள்ளலாம். குறை நினைக்க வேண்டாம் உறவுகளே.

 

 

படிக்கிறதை விட்டிட்டு இதுக்கை என்ன நாட்டியம்? :D

  • கருத்துக்கள உறவுகள்

அட, சோதினை எண்டால் எல்லா சுதந்திரமும் போயிடுமே....அதுதானே பார்த்தன்...  :rolleyes:

 

off licence certificate exam சரியான ஈசி எல்லோ, அக்கோய்... :)

 
உதுக்குலயும் இதுக்கில ஒரு நாட்டியம்.  :D
 
பிராக்கை விட்டுப் போட்டு, ஓடிப் பொய் இருந்து படியுங்கோவன்.   :lol:

அட, சோதினை எண்டால் எல்லா சுதந்திரமும் போயிடுமே....அதுதானே பார்த்தன்...  :rolleyes:

 

off licence certificate exam சரியான ஈசி எல்லோ, அக்கோய்... :)

 

உதுக்குலயும் இதுக்கில ஒரு நாட்டியம்.  :D

 

பிராக்கை விட்டுப் போட்டு, ஓடிப் பொய் இருந்து படியுங்கோவன்.   :lol:

நாதம் மாம்ஸ்,

கொத்துரொட்டியை போட்டு திரியின் ரூட்டை மாற்றி விடுவமா?

அவ எச்சாமை எழுதிட்டு வரட்டும்

அக்கா யாழில் வைக்கிற விசப்பரீட்சையை விட கடினமாய் இருக்குமோ? :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.