Jump to content

ஆண்மீன் துணையின்றி குஞ்சு பொரித்த அதிசய பெண் மீன்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மீன் துணையின்றி குஞ்சு பொரித்த அதிசய பெண் மீன்கள்

 
150418231934_sp_pezsierra_624x351_afp.jpவாள் சுறா, வாள் மீன், கோலா மீன் என்று அழைக்கப்படும் மீன்கள்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கன்னித்தன்மை மாறாமலே, அதாவது ஆண்மீனின் துணையின்றி தாமாகவே குஞ்சுபொரித்த வாள்மீன்களை (கோலா மீன்கள்) கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்குமுன்பும் இப்படியான வித்தியாசமான குஞ்சுபொரிக்கும் முறையை மீன் தொட்டிகளில் அல்லது தனியாக சோதனைக்கூடங்களில் வளர்க்கப்படும் பெண் மீன்களிடம் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருந்தாலும், இயற்கை நீர் நிலைகளில் இப்படியான மீன்குஞ்சுகளை அவர்கள் கண்டிருக்கவில்லை.

ஆங்கிலத்தில் saw fish என்றும் தமிழில் வாள் சுறா, வாள் மீன், கோலா மீன் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் மீன்வகையைச் சேர்ந்த ஏழு பெண்மீன்களை விஞ்ஞானிகள் பரிசோதித்தபோது, அவற்றுக்கு தந்தை மீன்கள் இருந்ததற்கான எந்த மரபணு சான்றுகளையும் அவர்கள் காணவில்லை.

இந்த ஏழு பெண் மீன்களுமே கருவுறாத பெண் மீன்களின் முட்டையில் இருந்து உருவான கருவில் இருந்து பிறந்த மீன்கள் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Current Biology என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெள்யிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகளின்படி, ஒரு உயிரினத்தின் எண்ணிக்கை வெகுவாக குறையும்போது இயற்கையாகவே இத்தகைய கருவுறா முட்டைகளே குஞ்சுகளை பொரிக்கும் நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்கிற சாத்தியத்தை குறிப்புணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

bbctamil.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைமை.... மனுசருக்கும் வந்தால்,
ஆண்கள் செல்லாக் காசாகி விடுவார்கள். :D 
இந்த ஒரு தகுதியை வைத்துத்தான்... மீசையை முறுக்கிக் கொண்டு திரிகின்றோம்....... :lol: 
அதுக்கும்... ஆப்பு வரும் நாள், வெகு தொலைவில் இல்லைப் போல் தெரிகின்றது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Current Biology என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெள்யிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகளின்படி, ஒரு உயிரினத்தின் எண்ணிக்கை வெகுவாக குறையும்போது இயற்கையாகவே இத்தகைய கருவுறா முட்டைகளே குஞ்சுகளை பொரிக்கும் நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்கிற சாத்தியத்தை குறிப்புணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இயற்கை எப்பவுமே ஒரு பிளான் '"B"  வைத்துத் தான் இருக்கின்றது! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைமை.... மனுசருக்கும் வந்தால்,

ஆண்கள் செல்லாக் காசாகி விடுவார்கள். :D

இந்த ஒரு தகுதியை வைத்துத்தான்... மீசையை முறுக்கிக் கொண்டு திரிகின்றோம்....... :lol:

அதுக்கும்... ஆப்பு வரும் நாள், வெகு தொலைவில் இல்லைப் போல் தெரிகின்றது. :icon_idea:

விசாரித்த வகையில உந்த மீனுக்கு 'கள்ள தொடர்பு' இருக்குது எண்டு பக்கத்து வீட்டு திரளி மீன் அக்கா காதுக்க கிசுகிசுத்தா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சாத்தியாமாகக் கூட இருக்கலாம்.

 

ஒரு மரத்தின் கிளையில் இருந்தும் புதிய மரம் வளரும். அதற்காக மரங்கள் பூ.. மகரந்தம்.. காய்.. கனி என்று காய்க்காமல் இருப்பதில்லை.

 

இனப்பெருக்கத்தில் முக்கியமாக இரண்டு வகை உண்டு.

 

1. இலிங்கமற்ற இனப்பெருக்கம். (Asexual reproduction)

2. இலிங்க இனப்பெருக்கம். (Sexual reproduction)

 

இதில் வகை 2 டே மாறும் சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள்.. அதிகம் கூர்ப்படைய.. உதவி வருகிறது. இயற்கை ஆண் - பெண்ணை உருவாக்கினது.. சட்டம் போடவும் சண்டை போடவும் அல்ல. அந்த உயிரினத்தில் தொடர்ச்சியான பிறப்புரிமை மாற்றம் ஒன்றை தோற்றுவித்து அவற்றை வாழும் சூழல் மாற்றத்திற்கு ஏற்ப இயற்கையாக மாறச் செய்து தப்பிப் பிழைத்து வாழ வைக்கத்தான்.

 

ஒரே தாயில் இருந்து.. இரண்டு முட்டைகள் கருக்கட்டி.. வரும் குஞ்சில்.. மாறல்களுக்கான வாய்ப்புக் குறைவு (கூர்ப்படைதலுக்கான வாய்ப்புக்குறைவு). இத்தகைய இனங்கள் சூழல்மாற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல்.. முற்றாக அழிந்து போகவே வாய்ப்பு அதிகம்.

 

என்ன தான் நல்ல இனமாக இருந்தாலும் மாதுகளை பதியங்களுக்கு மாறாக மாதுளம் பழ வித்துக்களையும் சேகரிக்கும் எம் முன்னோர்கள்.. இதில் படிப்புக்கு அப்பாலான படிப்பினை அறிவினை பயன்படுத்தி வந்ததை எண்ணும் போது இப்பவும் வியப்பளிக்கும். அதேபோல் நெற் செய்கையிலும். ஒவ்வொரு போக முடிவிலும்.. புது நெல்லில் தான் விதை நெல் வைப்பார்கள். அதற்குள் ஒளிந்திருக்கும் மரபணுக்காரணங்கள் இப்போது தான் அதிகம் விளங்கப்படுகின்றன. ஆனால் அதனை இப்போ மரபணு மலடாக்கம் செய்யப்பட்ட நெற்களை சில வளர்ந்த நாடுகள் புகுத்தி நாசம் செய்ய விளைவது குறித்தும்  எச்சரிக்கை அவசியம். அது இன்னொரு வகை ஆக்கிரமிப்புப் போர் ஆயுதம்.. ஆகும். :):icon_idea:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசாரித்த வகையில உந்த மீனுக்கு 'கள்ள தொடர்பு' இருக்குது எண்டு பக்கத்து வீட்டு திரளி மீன் அக்கா காதுக்க கிசுகிசுத்தா.. :D

 

பண்ணைகளில், வளரும் கோழிகளும்... சேவல் இல்லாமல் முட்டையிடுது தானே....

அதுகளுக்கும்.... "கள்ள தொடர்பு"  இருக்குமா? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மனிதப் பெண்களும்.. பொதுவாக மாதம் ஒரு முட்டை இடுகிறார்கள் தானே. அதுவும் கள்ளத் தொடர்பாலா..?!

 

பெண் விலங்கு முட்டையிட ஆண் துணை அவசியம் இல்லை. வளமான சூலகம் (சினைப்பை) இருந்தால் போதும். பேட்டுக் கோழி இடும் முட்டை பெரிது என்பதாலும்.. கோழி முட்டையை வெளியில் போடுவதாலும்.. கண்ணுக்கு தெரிகிறது.

 

ஆனால் முட்டை குஞ்சாகத் தான்.. ஆண் கோழி அவசியம். கருக்கட்டிய முட்டையை இட கோழிக்கும் சேவல் தேவை. இடும் முட்டையை கருக்கட்ட மனிதப் பெண்ணுக்கு ஆண் தேவை. (பொதுவாக.) இப்போ ஆய்வுசாலையிலேயே கருக்கட்ட வைக்க வசதி செய்யுறாங்க.

 

கள்ளத் தொடர்பு.. திருமணத்துக்கு அப்பால்.. பாலியல் இச்சைகளை தீர்க்க ஆண் - பெண் மனித விலங்குகள் நடந்து கொள்ளும் ஒரு நடத்தையே அன்றி.. வேறில்லை. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைமை.... மனுசருக்கும் வந்தால்,

ஆண்கள் செல்லாக் காசாகி விடுவார்கள். :D 

இந்த ஒரு தகுதியை வைத்துத்தான்... மீசையை முறுக்கிக் கொண்டு திரிகின்றோம்....... :lol: 

அதுக்கும்... ஆப்பு வரும் நாள், வெகு தொலைவில் இல்லைப் போல் தெரிகின்றது. :icon_idea:

 

இப்ப ஏதோ பெரிசாய் மதிப்பு மரியாதையாய் நடத்துற மாதிரியேல்லோ கதை போகுது..... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைமை.... மனுசருக்கும் வந்தால்,

ஆண்கள் செல்லாக் காசாகி விடுவார்கள். :D 

இந்த ஒரு தகுதியை வைத்துத்தான்... மீசையை முறுக்கிக் கொண்டு திரிகின்றோம்....... :lol: 

அதுக்கும்... ஆப்பு வரும் நாள், வெகு தொலைவில் இல்லைப் போல் தெரிகின்றது. :icon_idea:

 

என்ன தமிழ்சிறி அநியாயத்திற்கு நல்லவராயிருக்கிறீர்கள்.  :D

 

அப்போ 2, 3, 4.... பிள்ளைகள் பெற்றபின், வேறு ஒன்றும் தேவையில்லையா?  :D

 

சும்மா தானே சொன்னனீங்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாய்லாந்தில், விசேஷ உணவாக பாம்பு சாப்பிடுவதை வலைத்தளங்களில் பாத்திருக்கிறேன். பாம்பிறைச்சிப்பிரியர்கள் துடிக்கிறார்களோ என்னவோ?
    • ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆங்கில மூலக்கல்வி இருந்தது, ஆங்கில கல்வி கற்றவர்கள் அதன் மூலம் அரச உயர் உத்தியோகங்களை பெற்று முன்னேறி செல்ல அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் ஆங்கில கல்வி பெற்று அரச உத்தியோகம் பெறும் நிலை வரும் போது அதனை தடுக்க  தாய் மொழிக்கல்வியினை கொண்டு வந்து தமக்கு சேவகம் செய்ய ஒரு ஆண்டான் அடிமை அடிப்படையான ஒரு நிலையினை உருவாக்கியதாக கூறப்படுகிறது (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்). இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்றது என கூறி தமிழிற்கு சேவை செய்தார், மதத்திற்கு சேவை செய்தார் என நுண்ணிய அரசியல் செய்ததைப்போலவே (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்) தமிழ் நாட்டில் பிராமனர் ஈடுபட்டனர், இந்தியாவில் இவ்வாறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பொருளாதார ரீதியாக தர முயர்த்த பல சலுகைகள் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ளது ஆனால் எமது சமூகம் அவ்வாறான நிலையின் உருவாக்க விரும்பாத நிலையே இன்னமும் அடிப்படை கல்வியினை பெறமுடியாத வறுமை சூழ்நிலையிலேயே வறுமைக்கோட்டிற்க்கு கீழே பல தலைமுறைகளாக வாழும் நிலை காணப்படுகிறது. ஊரில் ஒருவரது மாடு காணாமல் போய்விட்டது அவர் தமிழீழ காவல்துறையில் சென்று முறயிட்டார், அவரிடம் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உண்டா என கேட்டார்கள் அதற்கு அவர் சாதிய வார்த்தையில் விழித்து அவர்கள் மேல்தான சந்தேகம் உள்ளது என்றார், அவருக்கு 5000 ரூபா அபராதம் விதிதார்கள், அமெரிக்காவில் ஆபிரிக்க வம்சாவளியினரை குற்றப்பரம்பரையாக பார்ப்பது போல பார்க்கும் நிலை எம்மிடமும் உள்ளது. என்னை பொறுத்தவரை தமக்கான உரிமைகளை இழந்து பல தலைமுறைகளாக சைவர், தமிழர் என தமது சுயத்தினை இழந்து  தமிழ் சமூகம் எனும் போர்வையில் அடிமைகளாக  இருப்பதனை விட வேறு மதம், இனம் என்பதன் மூலம் சாதாரண மனிதர்கள் போல சகல உரிமைகளோடு வாழ வேண்டும். நீங்கள் கூறுவது போல திருமண பந்தத்திற்கு மட்டும் சாதி பார்ப்பதாக எடுத்து கொன்டாலும், இந்த வேற்றுமையினை எதிர்பார்க்கின்ற சமூகமாக இருந்த வண்ணம் எவ்வாறு தமிழர், மதம் எனும் ஒருமைப்பாட்டுற்குள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது நியாமாக இருக்குமா? உண்மையாக உங்கள் கருத்திற்கு எதிரான கருத்தல்ல, அத்துடன் தனிப்பட்ட  ரீதியில் சமய, மொழி எனும் அடிப்படையில் பெயர் பெற்ற காலமானவர்கள் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை, ஆனால் இந்த பிற்போக்குவாதத்தினை கடந்து தமிழராக நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். 
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலைவரம்! ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.   வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தியிருந்தார். https://athavannews.com/2024/1400351   ##################  ##################    ###################     மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!   இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதன்படி நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.aகொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1400359 #################  ##################    ################### மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்! மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. இன்னிலையில் வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400362
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.