Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!

Featured Replies

முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!
[ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 01:22.30 AM GMT ]
suresh_premachandran.jpg
முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிடுவது தற்போதைய அரசியல் சூழல்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அவர்களுக்கு தோல்வியொன்று ஏற்படுமாயின் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் ஆராயவுள்ளமை குறித்து வினவிய போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது அரசியல் களநிலவரங்களைப் பார்க்கின்ற போது இனவாதத்தைத் தூண்டி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தரப்பினர் மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை முள்ளிவாய்க்காலில் முற்றாக அழித்து விட்டதாக மார்தட்டி கடந்த காலங்களில் தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்.

அதுமட்டுமின்றி முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்வதாக சர்வதேசத்திற்கு ஒரு போலியான பிரசாரத்தை காட்டிக் கொண்டவர்கள், அவர்களுக்கு நடமாடும் சுதந்திரத்தையோ கருத்து வெளியிடும் சுதந்திரத்தையோ வழங்கியிருக்கவில்லை.

வடக்கிலிருந்து உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாமைக்கும், ஒரு இராணுவ வீரர் கூட குறைக்கப்படாமைக்கும் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி விடுவார்கள் என்றே காரணம் கூறி வந்தனர்.

இவ்வாறான நிலையில் அதே அணியினர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

இவ்வாறான தருணத்தில் முன்னாள் விடுதலைப் போராளிகளைக் கொண்ட அணியொன்று பொதுத் தேர்தலில் போட்டியிடுவது என்பது இனவாதிகளுக்கும் புலிகளை மையமாக வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் ஏது நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.

http://www.tamilwin.com/show-RUmtyHTXSUer4I.html#

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!

 

அப்போ

ஐயா நீங்க............???

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கே எச்சரிக்கை.

அவருக்கு கருத்து கூறும் உரிமை உள்ளது, ஆனால் எச்சரிக்கை விட இந்த *****அதிகாரமில்லை.

வாயில நல்லா வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எச்சரிக்கை செய்யவில்லை....கருத்து சொல்லியுள்ளார் அதை ஊடகங்கள் எச்சரிக்கை என சொல்லியிருக்கு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!

அதுமட்டுமின்றி முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்வதாக சர்வதேசத்திற்கு ஒரு போலியான பிரசாரத்தை காட்டிக் கொண்டவர்கள், அவர்களுக்கு நடமாடும் சுதந்திரத்தையோ கருத்து வெளியிடும் சுதந்திரத்தையோ வழங்கியிருக்கவில்லை.

வடக்கிலிருந்து உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாமைக்கும், ஒரு இராணுவ வீரர் கூட குறைக்கப்படாமைக்கும் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி விடுவார்கள் என்றே காரணம் கூறி வந்தனர்.

எச்சரிக்கை பகுதியை விடுவோம் - சொன்னது ஒன்று எழுதினது ஒன்று என்கிற வரையறைக்குள் . 

ஆனால் :
அவர்களுக்கு பேச்சு சுதந்திரம் நடமாடும் சுதந்திரம் இருக்கு என்றுதானே அவர்களும் போட்டி போட வருகிறார்கள். அதற்கும் அவர்கள் தலை தூக்கிவதற்கும் என்ன ஐயா தொடர்பு ...அவர்கள் போட்டி போட வந்தால், முதலாவதாக இருந்து வழி விடாமல் , அவர்களையும் அணைத்து செல்லாமல் , குரோதம் பாராட்டுவது என்ன விதத்தில் நியாயம் ? 


மக்கள் பெரிய மாற்றம் ஒன்றை எதிர்பார்கிறார்கள். அதை செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு . அதை விடுத்தது இணையங்களை முடக்குவது , அடாவடிகள் செய்வது உங்கள் பழைய செயல்களை  நினைவுகளை விரைவாக நினைக்க தோண்டும் . 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வின்னுக்கு நாங்கள் ஒரு எச்சரிக்கை விட வேண்டும் போல.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகள் என்பதில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தானே அடங்குகிறார். அப்படி இருக்க ஏன் இந்தப் பதறல்.

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் என்று வரும் போது கூட்டமைப்பில் சிலருக்கு உள்குத்து ஆரம்பிக்கவே செய்கிறது.

தமிழ் மக்களின் உரிமைக்காக உண்மையாக உழைக்க.. போராடப் போன போராளி இளைஞர்கள்.. யுவதிகள் தாம் விரும்பும் பட்சத்தில் அரசியலில் ஈடுபட சரியாக வழிகாட்டப்படுவது எதிர்கால தமிழ் மக்களின் அரசியலுக்கு முக்கியமான ஒன்று.

ஜே வி பியை இதில் உதாரணமாகக் கூட காட்டலாம். ஆனால் அந்தளவுக்கு விடுதலைப் புலி முன்னாள் போராளிகள் பதவி ஆசை அரசியலுக்கு வருவார்களா என்று தெரியவில்லை.

இருந்தாலும்.. வித்தியாதரன் போட்டி அரசியல் என்ற நிலைக்கு அப்பால்.. இந்தப் போராளிகளை தமிழர் தாயகத்தில் எதிர்கால அரசியலுக்கு என்று தயார் செய்வாராயின் அது வரவேற்கப்படக் கூடிய ஒன்றே. பழைய சட்டாம்பிக் கிழடுகளால்.. தமிழ் மக்களுக்கு துடிப்போடு எனி அரசியல் செய்ய வழி இல்லை. அவர்களின் அனுபவத்தை நல்ல ஆரோக்கியமான வேளைகளில் தேவையான ஆலோசனைகளின் போது பெற்றுக் கொண்டு.. அரசியல் இயங்கு சக்தியாக இளைய சமூகம் களமிறக்கப்பட வேண்டும்.

Edited by nedukkalapoovan
கூடிய கருத்துத் தெளிவுக்காக.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வின்னுக்கு நாங்கள் ஒரு எச்சரிக்கை விட வேண்டும் போல.

தமிழ் இணையங்கள்...  சில சொற்பிரயோகங்களை நாகரிகமாக வெளியிட வேண்டும்.
தமிழ் வின்னின், இச் செயல்  கண்டிக்கத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.