Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுடன் பேச்சு தொடர்ந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்!- ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

விடுதலைப் புலிகளுடன் பேச்சு தொடர்ந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்!- ரணில்
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 02:41.36 AM GMT ]

ranil_chandirika_001.jpg

2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்திருந்தால், போரின் மூலம் இழக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
சந்திரிகா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

போர் நிறுத்த உடன்பாட்டின் கீழ் விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தப்பட்ட போது சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதனை புரிந்துக்கொள்ளவில்லை.

2003ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் முரண்பாடுகளுக்கு மத்தியில் தேசியப்பிரச்சினை தொடர்பில் செயற்படமுடியும் என்று தாம் நினைத்த போதும் அது தோல்வியடைந்தாக ரணில் குறிப்பிட்டார்.

அதற்கு பலவேறு காரணங்கள் இருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள் அந்த முயற்சியை குறுகிய பார்வையுடன் நோக்கினர்.

இதன்காரணமாக 2003ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்தையும் ரத்துச் செய்யப்பட்டது.

இதேவேளை கடந்த காலத்தில் பல முரண்பாடுகள் இருந்தபோதும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக சந்திரிக்காவுடன் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக்கட்சி இணங்கியது.

இதனடிப்படையில் பல்வேறு அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார் என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.http://www.tamilwin.com/show-RUmtyHTaSUet6B.html

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் இப்படி சொல்கிறார்கள் ,தமிழர்களில்சிலர்  சொல்லுகிறார்கள் புலிகள் தான் பிழை விட்டவர்கள் என்று

200 மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் என்கின்ற வாந்தி கொம்பனிகள் எங்க ... விரைந்து வரவும்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் இப்படி சொல்கிறார்கள் ,தமிழர்களில்சிலர்  சொல்லுகிறார்கள் புலிகள் தான் பிழை விட்டவர்கள் என்று

200 மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் என்கின்ற வாந்தி கொம்பனிகள் எங்க ... விரைந்து வரவும்

புத்தன், பிரபா.... சிரிச்சு, வயிறு நோகுது.
யாழ்களத்தில், வாந்திக் கூட்டங்கள்... இருப்பதால், வாழ்க்கை கவலை இல்லாமல் போகுது.
இவர்களும் இல்லாவிட்டால், எப்பவோ... விசர் பிடிச்சிருக்கும்.:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் போன்றவர்களுக்கு நரகத்தில் கூட.. இடம் ஒதுக்கக்கூடாது!

யமனையே பச்சடி போட்டு விடக்கூடிய மனுஷன்!:o

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் போன்றவர்களுக்கு நரகத்தில் கூட.. இடம் ஒதுக்கக்கூடாது!

யமனையே பச்சடி போட்டு விடக்கூடிய மனுஷன்!:o

ரணில் போன்றவர்களுக்கு நரகத்தில் கூட.. இடம் ஒதுக்கக்கூடாது! என்ற கருத்தை வரவேற்கும் அதேவேளை, கொடிய நாகத்திலிருந்து பெறப்படும் நஞ்சிலிருந்து மருந்தும் பெறப்படுகிறது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ரணிலின் சில செயற்பாடுகளைப் பயன்படுத்தி ஈழத்தில் ஒரு நிழல் அரசாங்கத்தையேனும் தமிழர்கள் வலுவடையச் செய்தனர். புலிகள் வெளிப்படையாக அரசியல் செய்வதற்கு ரணில் என்ற நாகத்திடம் இருந்துவந்த நஞ்சும் உதவியதாகவே எண்ணத் தோன்றுகிறது. 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்கள் உந்த சிங்க கொடியை மாத்தும் மட்டும் -சிங்கத்தை பார்க்கிற நேரமெல்லாம், புலி நினைப்பு வந்து கொண்டே இருக்க போகிறது . அதே போல தேர்தல் இருக்கும் மட்டும் எங்கட கட்சிகாரர்களுக்கும் புலி நினைப்பு வந்துகொண்டே இருக்கும்....என்ன கொடுமை சார் 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பெல்லாம் புலவாலுகளுக்கு ரணில் ரொம்ப தோஸ்தாகிப் போனான் ?

ரணிலை படிக்க உங்களால் அண்டைக்கும் முடியேல்ல, இண்டைக்கும் முடியேல்ல. :)

 

ஐயோ... ஐயா...

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுடன் பேச்சு தொடர்ந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்!- ரணில்

 

உண்மை

புலிகள் போராயும் மனித அழிவையும் தவிர்க்கவே விரும்பினார்கள்

தமிழீழம் அல்ல

ஒரு தீர்வை வைத்திருந்தால்

எத்தனையோ லட்சம் உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் பாதுகாத்திருக்கமுடியும்..

ஆனால் என்ன மா***** உணர்வாளர்கள்

புலிகள் தோற்றுவிட்டார்கள்

கொள்கையை விட்டுவிட்டார்கள்

மாவீரர் கனவை சிதைத்துவிட்டார்கள் என இங்கு வாந்தி தொடர்ந்திருக்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுடன் பேச்சு தொடர்ந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்!- ரணில்

 

உண்மை

புலிகள் போராயும் மனித அழிவையும் தவிர்க்கவே விரும்பினார்கள்

தமிழீழம் அல்ல

ஒரு தீர்வை வைத்திருந்தால்

எத்தனையோ லட்சம் உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் பாதுகாத்திருக்கமுடியும்..

ஆனால் என்ன மா***** உணர்வாளர்கள்

புலிகள் தோற்றுவிட்டார்கள்

கொள்கையை விட்டுவிட்டார்கள்

மாவீரர் கனவை சிதைத்துவிட்டார்கள் என இங்கு வாந்தி தொடர்ந்திருக்கும்.....

உண்மை விசுகு அவர்களே ஆனால் ஒரு சிறிய மாற்றம் இருந்திருக்கும் அதாவது இன்று புலத்திலிருந்து வாந்தி எடுப்பவர்கள் நிலத்திலிருந்தே எடுத்திருப்பார்கள்.

 

ரணிலும் உலகமும் ஆடிய நாடகம் தமிழ் மக்களுக்கான தீர்வு தான் என்று இப்பவும் நம்புற கூட்டத்தை என்னவென்று சொல்வது . அவர்கள் வந்தது புலிகளை வேரோடு அழிக்க . இது முட்டாள்களுக்கு விளங்காது ஆனால் இதனை தமிழ் மக்களுக்கு உணர்த்தவே புலிகள் அப்படி இறங்கி பேசினார்கள் .

ரணிலின் நரித்தனத்தையும் உலக நாடுகளின் நோக்கத்தையும் மக்களுக்கு புரிய வைத்தார்கள் ...விளக்கமுள்ள அறிவாளிகள் இதனை புரிந்து கொண்டார்கள் . எம் புனிதர்களை இப்பவும் தெய்வமாக போற்று கின்றார்கள் .  ஆனால் புரியாதவர்கள் இப்பவும் இன்னும் இறங்கி பேசி இருந்தால் ஏதோ சிங்களம் தந்திருக்கும் என்று இப்பவும் பகல் கனவு காண்கின்றார்கள் ... என்ன செய்வது கனவு காணட்டும் . எப்பவும் புலிவாந்தி எடுக்கட்டும் ....

  • கருத்துக்கள உறவுகள்

வாந்தி ஆசிரியர் கம்பெனியில் இருந்து  ஒருவர் ஆஜர் ஆகிவிட்டார் ...
ரணில் பற்றி  கிளாஸ் எடுக்கப்போகிறார்....எல்லோரும் ரெடியாகுங்கோ
கிளாஸ் முடியும் போது ரணில் என்ற பெயரை இதுக்கு முன் கேள்விப்பட்டிருக்கிறோமா ..என்று யோசிக்கும் அளவுக்கு 
அறிவை அப்படியே அள்ளி வார்த்திருப்பார் ...

அது சரி கோசான் வாத்தியார்
ரணில் B.A , ரணில் M.A, ரணில் Phd  இப்படி பட்டம் எல்லாம் தருவீர்கள் தானே ....? 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

எகே....... டண்டணக்கா டண்டணக்கா  டணக்குணக்கா...

 

ரணிலும் உலகமும் ஆடிய நாடகம் தமிழ் மக்களுக்கான தீர்வு தான் என்று இப்பவும் நம்புற கூட்டத்தை என்னவென்று சொல்வது . அவர்கள் வந்தது புலிகளை வேரோடு அழிக்க . இது முட்டாள்களுக்கு விளங்காது ஆனால் இதனை தமிழ் மக்களுக்கு உணர்த்தவே புலிகள் அப்படி இறங்கி பேசினார்கள் .

ரணிலின் நரித்தனத்தையும் உலக நாடுகளின் நோக்கத்தையும் மக்களுக்கு புரிய வைத்தார்கள் ...விளக்கமுள்ள அறிவாளிகள் இதனை புரிந்து கொண்டார்கள் . எம் புனிதர்களை இப்பவும் தெய்வமாக போற்று கின்றார்கள் .  ஆனால் புரியாதவர்கள் இப்பவும் இன்னும் இறங்கி பேசி இருந்தால் ஏதோ சிங்களம் தந்திருக்கும் என்று இப்பவும் பகல் கனவு காண்கின்றார்கள் ... என்ன செய்வது கனவு காணட்டும் . எப்பவும் புலிவாந்தி எடுக்கட்டும் ....

சரியாக சொன்னீர்கள், மகிந்த தோற்கவேண்டும் என்று கூறிய சிங்களவர்கள் பலர் அதே மகிந்தவின் தோல்வியில் தமிழரின் செல்வாக்கு அதிகம் என்பதால் மீண்டும் மகிந்தவிற்கு ஆதரவளிப்பதை சொரிலங்கவிலும் வெளிநாடுகளிலும் வெளிப்படையாக காணமுடிகின்றது.....

சிங்களவன் காஞ்சுபோனரொட்டிதுண்டையே தர யோசிப்பவன்....அதுக்க நல்லா தருவான்

அதுக்க சம்மும் சும்மும் தீர்வு அரைவழியில வந்திட்டு என்று பூச்சாண்டி காட்டினம்  

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலும் உலகமும் ஆடிய நாடகம் தமிழ் மக்களுக்கான தீர்வு தான் என்று இப்பவும் நம்புற கூட்டத்தை என்னவென்று சொல்வது . அவர்கள் வந்தது புலிகளை வேரோடு அழிக்க . இது முட்டாள்களுக்கு விளங்காது ஆனால் இதனை தமிழ் மக்களுக்கு உணர்த்தவே புலிகள் அப்படி இறங்கி பேசினார்கள் .

ரணிலின் நரித்தனத்தையும் உலக நாடுகளின் நோக்கத்தையும் மக்களுக்கு புரிய வைத்தார்கள் ...விளக்கமுள்ள அறிவாளிகள் இதனை புரிந்து கொண்டார்கள் . எம் புனிதர்களை இப்பவும் தெய்வமாக போற்று கின்றார்கள் .  ஆனால் புரியாதவர்கள் இப்பவும் இன்னும் இறங்கி பேசி இருந்தால் ஏதோ சிங்களம் தந்திருக்கும் என்று இப்பவும் பகல் கனவு காண்கின்றார்கள் ... என்ன செய்வது கனவு காணட்டும் . எப்பவும் புலிவாந்தி எடுக்கட்டும் ....

ஐயா

முகங்கள் தெரியும் காலமிது

 

புலிகள் சொல்லிச்சொல்லிப்பார்த்து களைத்துத்தான் ஒரு முடிவுக்கு வந்தார்கள்

இனி அவர்களே பார்க்கட்டும் என்று...

அதனால் தான் இதுவரை புலிகள் ஒதுங்கியும் இருந்தார்கள்

இருக்கிறார்கள்.

இந்த வாந்தி எடுப்பவர்கள் சாதித்துக்காட்ட விடப்பட்ட இத்தனை வருட சந்தர்ப்பங்களை

புலிகளை தூற்றவும்

புலிகளில் பிழை பிடிக்கவும்  அவர்களை தலை தூக்காமல் இருக்கவும் பாவித்துக்ககொண்டதைத்தவிர

மக்களுக்கு 

அவர்களது சுதந்திரவாழ்வுக்கு என்ன செய்தார்கள்??

 

செய்திருந்தால் முடிந்ததுக்கும் மேலாக மக்களுக்குச்செய்து

தாளொணாத்துன்பங்களள் அனைத்தையும் அனுபவித்து

அனுபவித்துக்கொண்டுள்ள முன்நாள் போராளிகள் மீண்டும் 

மக்களுக்கு தம்மை அர்ப்பணிக்க வரவேண்டிய அவசியமே வந்திருக்காது..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை விசுகு அவர்களே ஆனால் ஒரு சிறிய மாற்றம் இருந்திருக்கும் அதாவது இன்று புலத்திலிருந்து வாந்தி எடுப்பவர்கள் நிலத்திலிருந்தே எடுத்திருப்பார்கள்.

 

உண்மை

இன்றும் நிலத்துக்கு தாங்கள் போகவே வாந்தி தொடர்கிறது..

உண்மை

இன்றும் நிலத்துக்கு தாங்கள் போகவே வாந்தி தொடர்கிறது..

100% உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.