Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டியைக் கைவிட்டு சிங்களவர்களுடன் இணைந்து வாழ தமிழர்கள் முன்வர வேண்டும்!

Featured Replies

சமஷ்டியைக் கைவிட்டு சிங்களவர்களுடன் இணைந்து வாழ தமிழர்கள் முன்வர வேண்டும்!

இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தினருடன் இணைந்து வாழ முன்வர வேண்டும். அத்துடன் சமஷ்டிக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

30 வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரினால் தமிழ் மக்களின் சமூக - பொருளாதார கட்டமைப்புக்களை விருத்தி செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் நடைமுறைக்கேற்ற தீர்வுத் திட்டத்துக்கு வர வேண்டும். தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வாகாது. எமது நாடு பெளத்த மதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியமைக்கப்பட்டது. அனைத்து மக்களும் மதங்களும் சமம் என்பதையே பெளத்தம் வலியுறுத்துகிறது - என்றார்.

http://www.malarum.com/article/tam/2015/07/30/11214/சமஷ்டியைக்-கைவிட்டு-சிங்களவர்களுடன்-இணைந்து-வாழ-தமிழர்கள்-முன்வர-வேண்டும்-.html#sthash.p016XRBQ.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

எமது நாடு பெளத்த மதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியமைக்கப்பட்டது. அனைத்து மக்களும் மதங்களும் சமம் என்பதையே பெளத்தம் வலியுறுத்துகிறது - என்றார்.

இந்தியாவிடம்  சொல்லுங்கோ அவையளுக்குதான் தீர்வு வேணுமாம்நீங்கள் தீர்வை கொடுக்காவிட்டால் சில சமயம் அவையள் புலிக்குட்டிகள் திறந்துவிடுவினம் .......அதுசரி ஈழம் கொடுக்க முடியாது,சம்ஸ்டி கொடுக்கமுடியாது ,13+ கொடுக்கமுடியாது,மாகாணசபைக்கு முழு அதிகாரமும் கொடுக்க முடியாது....பின்ன என்னதான் கொடுப்பியள

  • கருத்துக்கள உறவுகள்

..பின்ன என்னதான் கொடுப்பியள..

17_SM_HALWA_7_1365290g.jpg 

இருட்டுக்கடை அல்வா..

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிளா தீர்க்க வேண்டிய எங்கட பிரச்சினையை குழப்பியடிச்சதே இந்தியாதான். தமிழகத்தினை விட கேரளத்துடன் அதிகம் தொடர்பு இருந்திருந்தால் நிலைமை ஒருவேளை மாறி இருக்கும். எங்களுக்கு சேரநாட்டு மக்கள் அதிக உறவுங்கூட!

இப்ப  மட்டும்  என்ன  பிரிச்சா  நிக்கிறம்  :innocent:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப  மட்டும்  என்ன  பிரிச்சா  நிக்கிறம்  :innocent:

கன சிங்களச்சனம் நாடு எப்பவோ பிரிஞ்சிட்டுது எண்டு தான் நினைக்கினம் போலை கிடக்கு..:)

சிங்களச்சனம் அண்டு தொடக்கம் பஸ் பஸ்சாய் யாழ்ப்பாணத்துக்கு ரூர் வருவினம்.
பனங்கொட்டை மாங்கொட்டை தமிழன் எப்பவாவது பஸ் பிடிச்சு கொழும்புக்கு ரூர் போயிருக்கிறானா? இல்லையே!!!!!!  ஏனெண்டால் அவனுக்கு நாட்டுப்பற்று எக்கச்சக்கம்..:cool:

போனாலும் யாத்திரை எண்ட பேரிலை கதிர்காமத்துக்கும்   நடந்தே போறான்...பஞ்சப்பரதேசி

 

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிளா தீர்க்க வேண்டிய எங்கட பிரச்சினையை குழப்பியடிச்சதே இந்தியாதான். தமிழகத்தினை விட கேரளத்துடன் அதிகம் தொடர்பு இருந்திருந்தால் நிலைமை ஒருவேளை மாறி இருக்கும். எங்களுக்கு சேரநாட்டு மக்கள் அதிக உறவுங்கூட!

பக்கத்திலை... இருக்கிற, சிங்களத்தை நம்புறதை விட்டுட்டு....
கடல் தாண்டி,  ஏன்... கேரளத்துக்கு போகவேண்டும்.
சிங்களவனை  நம்பினால், எல்லாம் தர மாட்டானா......:innocent:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக  இந்தியாக்காரனை  சிங்களவன் சோ மச் பெட்டர். அதுதான்  பழைய ஆக்கள் சொல்லுவினம் வயித்துக்குத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக்கூடாது  எண்டு . இந்த வயித்துக்குத்துக்குள்ளை சிங்களமும் அடக்கம்.!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன், சிங்களவனை விட... எங்கடை சனம் தான் ஆபத்தானது.
ஒரு நல்ல வேலை செய்யப் போனால், குழி பறிச்சு விடுறத்துக்கு எண்டு... இரண்டு, மூண்டு  சனம் கிழம்பி விடும்.
மற்றவனை திருத்த முதல், நாம் எம்மை திருத்திக் கொள்வது தான்... மனிதனுக்கு அழகு.:)

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அழகு உங்களில் இருப்பது கண்டு மகிழ்ந்தோம்!:cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய தேசியக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் 13 இற்குள் தீர்வு பற்றிப் பேசலாம் என்கிறது.இந்த நிலையில் சம்பந்தர் 2016 இல் தீர்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பயணம் முடிகிறது என்கிறார்.மக்களை ஏமாற்றுகிறார்.இதுவே அவருக்குக் கடைசித் தேர்தல் கடைசிவரைக்கும் கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம்  ரணில் சமஸ்டி தந்திருப்பார் என்று சிலர் கதை அளந்திச்சினம், இப்ப கதை வேற மாதிரி போகுது. 

கூட்டமைப்பின் சமஸ்டி யோசனையை ஐதேக நிராகரிப்பு

JUL 29, 2015 | 13:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Ajith Pereraதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள, சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும் அரசியல் தீர்வை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா,

“ஒரே நாட்டுக்குள் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஒன்றுபட்டு வாழ முடியாத நிலை ஏற்படுவதை ஐதேக அனுமதிக்காது.

சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளின் இணக்கப்பாட்டுடன், ஒன்றுபட்ட பிரிக்கப்படாத இலங்கைக்குள், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதே, ஐதேக மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கையாகும்.

சமஸ்டி முறையிலான தீர்வை நாங்கள் ஏற்கமாட்டோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐதேக எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை. முன்னைய தேர்தலிலும் அவ்வாறு உடன்பாடு செய்யப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/07/29/news/8275

அட கூட்டமைப்பு பற்றி எல்லாருக்கும் தெரியுமே ...தேர்தல் நெருங்கும் போது தான் பெண்டாட்டி தேவை மற்றும் படி கள்ளப்பெண்டாட்டி தான் 

இப்படி பப்ளிக்கில் மாவையை போட்டுக்குடுக்காதேங்கோ பிரபா :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.