Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லைக்கா கிராம வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் :சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா கிராம வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் :சம்பந்தன்


லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் பூந்தோட்ட முகாம் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அமைக்கப்படும் லைக்கா கிராமத்தின் பணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

லைக்கா கிராம வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

மேலும் சம்பந்தன் உரையாற்றுகையில்,

பூந்தோட்ட மக்கள் உட்பட வடக்கு தமிழ் மக்கள் லைக்கா நிறுவனத்தின் வீட்டுத்திட்டத்தினை வரப்பிரசாதமாகக் கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசித்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேச அரங்கிற்கு சென்றுள்ளமையினால் இத்தகைய வேலைத்திட்டங்கள் எமது மண்ணில் நடைபெறுகின்றது.

உண்மையில் லைக்கா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர் ஞானம்பிகை ஆகியோரின் தாயக தமிழ் மக்கள் சார்ந்த அபிவிருத்தி மற்றும் மனிதாபிமானப் பணிகள் பாராட்டத்தக்கது.

மேலும் இத்தகைய தாயக மக்களுக்கு பயனுள்ள வேலைத்திட்டங்களை புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் எமது உறவுகள் செய்வதற்கு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.

மேலும் லைக்கா நிறுவனத்தின் பணி மென்மேலும் தொடர தமிழ் மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா நிறுவனத்தின் பணி மென்மேலும் தொடர  எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கும் பங்கு போகுது போல. அறிக்கை பலமா வருகுது. :rolleyes:

அங்கால அம்மணி சந்திரிக்காவும் விடுறா..?! மகிந்த - கோத்த முடிஞ்சுது.. எனி.... லைக்காவுக்கு காலை லிக் பண்ணி வாழ நல்லாத் தெரியும் போல.:rolleyes:

Lebara காரங்கள் இப்படிப் போறங்கள்...

Lebara Foundation’s support of refugee and displaced children in developing countries. http://www.unhcr.org.uk/news-and-views/news-list/news-detail/article/lebara-foundations-support-of-refugee-and-displaced-children-in-developing-countries.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மேலும் இத்தகைய தாயக மக்களுக்கு பயனுள்ள வேலைத்திட்டங்களை புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் எமது உறவுகள் செய்வதற்கு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.

புலம்பெயர் உறவுகள்  என்றால்  விரல்விட்டு எண்ணக்கூடிய கொஞ்ச உறவுகள் தான்  இருக்கினம்.

மிச்சமெல்லாம் புலம்பெயர்ந்த கோஷ்டிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்கள் இனிமேல் தாயகத்திலுள்ளவை பற்றிப் பேசக் கூடாதென்று சொல்லுறியள், ஆனால் அவையின்ர உதவி வேணுமெண்டும் கேக்கிறியள் மவை என்ன, உங்களுக்கு தேவையெண்டால் காசு அனுப்புற மிஷின் எண்டு நினைக்கிறியளோ ?

தெரியாமல்த்தான் கேட்கிறன், இண்டைக்கு நான் காசு அனுப்பாட்டி என்ர சகோதரம் ரோட்டில நிற்கும், ஒவ்வொரு கிழமையும் சிட்னியில, காயப்பட்ட பிள்ளைகளுக்கு உதவி, விதவைகளுக்கு உதவி, ஆசுப்பத்திரியளுக்கு மருந்து, உபகரணம் எண்டு ஆளாளுக்குச் சேர்க்கினம். ஓமன் ஹோலிலை எங்கட சனம் வைக்காத காசு சேர்க்கும் நிகழ்ச்சி இல்லையென்று சொல்லலாம், அந்தளவுக்கு மாறி மாறி நிகழ்ச்சி. நாங்களும் ஒன்றுமே யோசிக்காமக் கொடுத்ப்போட்டு, உப்படியாவது எங்கட சனம் நல்லா இருக்கட்டும் என்றுதான் சொல்லுறம். ஆனால் நாங்கள் பேசக் கூடாது. பேசினால் அது தாயகத்திலுள்ளவையைப் பாதிக்குமாம். 

தாயகத்திலுள்ளதுகள் என்ர அக்காவும், தம்பியும், அண்ணாவும், தங்கச்சியும் எண்டு ஆகும்போது, அவையளுக்காக நான் பேசாமல், பிறகு அமெரிக்கனோ வந்து பேசுவான் ?

புலம் பெயர் வாலுகள் (புலி அமைப்புகளின் சுருக்கம் )  தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் .

உதவி செய்வது வேறு அவர்கள் அரசியலை தாங்களே நிர்ணயிக்க நினைப்பது வேறு .பிரச்சனை இதுதான் .

புலிகள் இருக்க மட்டும் அடுத்தவன் வாயை  மூடி வைத்திருந்தவர்களுக்கு அது தொடரமுடியாமல் போனதால் இப்ப துடியாய் துடிக்கினம் .

புலம் பெயர்ந்த மக்களுக்கும் நாட்டில் இருப்பவர்களும் எதுவித பிரச்சனையுமில்லை பிரச்சனை இந்த வாலுகளுடன் தான் .இது ஒரு சிறிய விடயம் யாரும் கணக்கில் எடுக்கவும் தேவையில்லை ஆனால் புலம் பெயர் ஊடகங்கள் பெரும்பாலானவை அவர்கள் கையில் இருப்பதால் ஒன்றை பத்தாக்கி விடாமல் ஊதி பெருப்பித்துக்கொண்டே இருக்கின்றார்கள். இதற்குள் விழுந்து கிடப்பவர்கள் முன்னாள் புலி ஆதரவாளர்கள் தான் .

புலம் பெயர்ந்த அமைப்புகள் (புலிகள் இல்லாத ) செய்யும் உதவிகளையெல்லாம் அரசு ஆதரவு அமைப்புகளாக பட்டம் சூட்டி துரோகிகள் ஆக்கினார்கள் .மகிந்தா பதவி இழந்த பின் இவர்கள் கொஞ்சம் மாறுவார்கள் என்று நினைக்க இந்த தேர்தலில் அவர்கள் செய்த அரசியல் தமது இருப்பிற்கு தமிழ் இனத்தையே பிரிப்பார்கள் விற்பார்கள்  என்பதை மிக துல்லியமாக் எடுத்துக்காட்டியது .  

இந்த தேர்தல் நாட்டில் மக்கள் மிக தெளிவாக இருப்பதும் புலம் பெயர்ந்த பெருன்பான்மை மக்கள் அவர்களுடன் கை கோர்த்து நடப்பதும் மிக தெளிவாக தெரிந்துவிட்டது .

இனி வாலுகளை கணக்கில் எடுக்காமல் விடுவதுதான் எமது இனத்தின் விடிவிற்கு ஒரே வழி .ஆனால் அவர்களிடம் இருக்கும் பணமும் ஊடக பலமும் மக்களை குழப்பிக்கொண்டே இருப்பதைஅவர்களும் தொடர்வார்கள் என்றே நம்புகின்றேன்

நேற்று இரவு கனேடிய வானொலியில் இது பற்றி ஒரு கலந்துரையாடல் போனது  சேரன் மிக தெளிவாக அழுத்தமாக நல்ல கருத்துக்களை வைத்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண லைக்கா நிறுவனம் பூரண ஒத்துழைப்பு :சந்திரிக்கா

நாட்டில் ஏற்பட்ட நல்லாட்சியின் விளைவாக மக்கள் இன்று அமைதியான வாழ்க்கையினை அனுபவிக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

லைக்கா கிராம வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று முன்தினம்  நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சந்திரிக்கா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

 ஜனவரி எட்டாம் திகதியின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் என அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.  கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டின் கீர்த்திக்கு பங்கம் விளைவித்திருந்தனர்.

ஆகவே தற்போது நாட்டில் புதிய ஆட்சி ஏற்பட்டுள்ளது. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது கரங்களைபப் பலப்படுத்தி நல்லாட்சியினை வலுவடையச் செய்ய எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.

இத்தகைய அமைதியான சூழ்நிலையில் தான் வவுனியா மக்களின் நலன்கருதி லைக்கா நிறுவனத் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையிலான குழுவினர் புதிய வீட்டுத்திட்டத்தினை அமைக்கவுள்ளனர். அமையப் போகின்ற லைக்கா கிராமமானது பல்வேறு வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.

அண்மையில் லைக்கா நிறுவனத் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனைச் சந்தித்த வேளையில்,யாழ். மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கு அவர் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் லைக்கா நிறுவனம் மற்றும் ஞானம் அறக்கட்டளையின் நிர்வாகத்தினரின் மக்கள் பணி தொடர்பில் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பதிவு செய்து கொள்கின்றேன்’ எனவும் சந்திரிக்கா தெரிவித்திருந்தார். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=115724229328190918#sthash.zSuZGDUp.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.