Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு

Featured Replies

  • தொடங்கியவர்

எந்த  எந்த நாட்டு அகதி எந்த எந்த நாட்டில்  அகதி அந்தஸ்து கேக்க வேண்டும் என்று   முன்னாள் அகதிகள்  :) கட்டளை போடுகிறார்கள்:grin:

இதைத்தான் காலம் என்பது வினித். 

பச்சை கைவசம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11988545_763246127117199_809978584440802

11904738_763246123783866_168796970394177

 அண்ணை ஆட்டுக்கை மாட்டை ஓட்டப்படாது!  கண்டவாக்கிலை வெளிக்கிட்ட அல்பேனியா சனத்தைப்போய் சிரியா பிரச்சனையோடை சமனாக்கிறியள்....

  • கருத்துக்கள உறவுகள்

எந்த  எந்த நாட்டு அகதி எந்த எந்த நாட்டில்  அகதி அந்தஸ்து கேக்க வேண்டும் என்று   முன்னாள் அகதிகள்  :) கட்டளை போடுகிறார்கள்:grin:

சிலர் மற்றவர்கள் கேள்வி கேட்காமல் சாணாகம் தட்ட வேண்டும் என நினைக்கிறார்கள்.tw_cookie:

தமிழில் கூறவும்

நேற்று, அருகில் உள்ள சிரிய அகதிகள் முகாமுக்கு,  எனது மகள் ஓரளவு பாவித்த...  தனது ஜக்கெற், கம்பளி உடுப்புக்களுடன், வேறு சில உடைகளையும் கொண்டு சென்று கொடுத்து விட்டு, அவர்களுடன் சிறிது நேரம் இருந்து விட்டு வந்தார். அவர் அங்கு... போக முதல் எம்மிடம் எதுவும் சொல்லவில்லை. வந்த பின்.. அவர் அதனை எம்மிடம் பகிர்ந்து கொண்ட போது... தந்தை என்னும் முறையில், அவரின்  மனித நேயத்தை மெச்சினேன்.   
சிரியாவில் இருந்து வந்தவர்கள், குளிர் தாங்க மாட்டார்கள் அதனால் தான்... கொடுத்தேன் என்று சொன்ன போது, கண்கள் கலங்கியது.

படத்தைப் போட்டால் தான் நாங்கள் நம்புவோம் தமிழ்!!

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் போட்டால் தான் நாங்கள் நம்புவோம் தமிழ்!!

முதலில் அவர், கமெரா.. கொண்டு போகவேயில்லை. 
பாவித்த, உடுப்புக்களையும் நேரடியாக, பாதிக்கப் பட்ட மக்களிடம் கொடுக்க முடியாது.
அதற்கு உரிய, கண் காணிப்பவர்கள் பார்வையில் சோதனையின் பின்பே.... ஏற்றுக் கொண்டு, மிகுதி எமது ஆசையை... கேட்பார்களாம்.

  • தொடங்கியவர்

 

angela-merkel-posiert-fuer-selfies-mit-f

அகதியாக வந்த ஒருவருடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பாவுக்கு அமெரிக்கா மாதிரி பவர் காட்ட வெளிக்கிட்ட ஜேர்மனி நடுத்தெருவிலை நிக்கப்போகுது.
ரஷ்யாவும் அகதிகள் விசயத்திலை கவனம் செலுத்தோணுமாம்.....:shocked:
அட்ரா.....அட்ரா  tw_glasses:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவுக்கு அமெரிக்கா மாதிரி பவர் காட்ட வெளிக்கிட்ட ஜேர்மனி நடுத்தெருவிலை நிக்கப்போகுது.
ரஷ்யாவும் அகதிகள் விசயத்திலை கவனம் செலுத்தோணுமாம்.....:shocked:
அட்ரா.....அட்ரா  tw_glasses:

ரஷ்யாவுக்குப், போக எந்த அகதி விரும்புவான். ரஷ்யன்  காரனே... இங்கை தான், ஓடி வாறன்.
சிரிய அகதிகள் கூட, தாங்கள் போக விரும்பும் நாடுகளாக...  ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்தை தான் விரும்புகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கெடுத்தாலும் மேற்கத்திய கலாச்சாரங்கள் மீது காறித்துப்பும் முஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவ நாடுகளை நோக்கி படையெடுக்கின்றார்கள்? மத்தியகிழக்கில் இல்லாத பணமா?தஞ்சமடைய  நாடுகளே இல்லையா?:cool:

அல்லது பன்றி இறைச்சி மேலுள்ள மோகத்தால் படையெடுக்கின்றார்களா?:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eine weitere Frau hat es mit ihrem Kind durch die Grenze geschafft. Die beiden werden von ungarischen Polizisten festgenommen

Eingebetteter Bild-Link

Ungarn hat 70 Asylanträge entgegengenommen, und 40 davon sofort abgelehnt

Eingebetteter Bild-Link

Syrische Flüchtlinge auf dem Weg nach Europa: Türkische Polizisten blockieren die Autobahn zwischen Istanbul und Edirne, einem Grenzort zu Griechenland

Kein Durchkommen an der bis vor Kurzem offenen Landesgrenze zwischen Ungarn und Serbien: Ein drei Meter hoher Maschendrahtzaun trennt die Flüchtlinge und die patroullierenden Polizisten

Eine Frau und ihr Kind werden von ungarischen Anti-Terror-Einheiten abgeführt

Ein Flüchtling am Grenzzaun zwischen Serbien und Ungarn. Er hat einen Stein zum Wurf in der Hand

Ungarische Spezialeinheiten führen einen Flüchtling ab

Der Zaun an der ungarischen Grenze

அகதி அலையின் உச்சக்கட்டங்கள்.

  • தொடங்கியவர்

இன்றைய ஜெர்மனி செய்திகளின்படி அகதிகளை கடத்துபவர்கள் என சந்தேகபடும் 800 பேர்வரையில் ஜேர்மன் சிறைகளில்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அகதிக்குத்தான் இன்னொரு அகதியின் நிலையும்

புலம் பெயர் தேசங்களின் வேசங்களும் தெரியும்.....

 

என்னைப்பொறுத்தவரை

இவர்கள் அகதிகளின் வலியில் நாடகம் போடுகிறார்கள்

இவர்களது மக்களையே இவர்களால் கவனிக்கமுடியாது திண்டாடிக்கொண்டு

காப்பாற்றுவது போல் ஏமாற்றுகிறார்கள்

ஐரோப்பிய மக்களுக்கு என்றுமே எற்றுக்கொள்ளமுடியாத இசுலாமிய சமூகத்தை

இவர்கள் வரவேற்பதாக நடிப்பது இவர்களின் உச்சக்கட்ட நாடகம்..

அத்தனை அகதிகளும் ஏதாவது வழியில் மீண்டும் அவரவர் தாயகத்துக்கு 

வெளியில் தெரியாமல் அனுப்பி வைக்கப்படுவார்கள்

இவர்களது நாடகம் கனநாள் எடுபடாது

விரைவில் வெளிச்சத்தக்கு வரும்

தற்பொழுதே ஒவ்வொருவரும்

இழுபறிப்படுவதும்

முள்ளிவேலி அடிப்பதும்

இராணுவத்தை வைத்து அடித்து  நொருக்குவதும் என்று பார்க்கின்றோம்..

 

இன்றைய ஜெர்மனி செய்திகளின்படி அகதிகளை கடத்துபவர்கள் என சந்தேகபடும் 800 பேர்வரையில் ஜேர்மன் சிறைகளில்.

இது தான் நடக்கப்போகிறது...

தொடரும்...

  • தொடங்கியவர்

இன்று இரவு செய்திகளின்படி ஜெர்மனி 5 விசேட ரயில்களை அனுப்பி உள்ளது அகதிகளை ஏற்றிவர.

http://www.t-online.de/nachrichten/ausland/eu/id_75465746/deutschland-laesst-fluechtlinge-per-zug-abholen.html

Edited by நவீனன்

மக்களோடு மக்களாகப் பயங்கரவாதிகள் வராட்டி ஒக்கே

அதை விட இன்னொன்று ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது 4 பிள்ளைகள் இருப்பார்கள்.. இப்படியே பெருகி ...

கடைசியில் உலகமே தலையை மூடிக் கொண்டு திரியிற நிலமை வந்திடும் :)

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேகம்...,  சிரியாவில் இருந்து ஜெர்மனிக்கு எப்படி கடல் வழியாகவோ, தரை வழியாகவொ வருவார்கள். மத்தியதரைக் கடல் வழியாக வந்தால், இடையில இத்தாலி, பிரான்ஸ், சுவிஸ் எல்லாம் கடந்துதானே வரவேண்டும். துருக்கியால் வந்தாலும் அங்கிருப்பவர்கள் தடை செய்ய மாட்டார்களா...!

  • தொடங்கியவர்

For the way to Europe, there are five major escape routes. By land, the refugees come to one of Belarus and Ukraine to Poland, Hungary and Slovakia, and via Turkey to Greece and Bulgaria. The waterways to Europe result from Morocco to Spain, Tunisia and Libya to Italy and from Egypt to Greece.

 

http://polpix.sueddeutsche.com/polopoly_fs/1.2265887.1429443454!/httpImage/image.jpg_gen/derivatives/940x600/image.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இருக்குமிடத்தில் 1600 சிரிய அகதிகள் வந்தடைந்துள்ளார்கள்.(அதற்குள் பல பாகிஸ்தானிகளையும் கண்டேன்)

அமெரிக்க படைகள் தங்கியிருந்த பழைய முகாம் ஒன்றை தூசுதட்டி அதில் அமர்த்தியுள்ளார்கள்.

அவர்களை பார்த்தால் அகதிகளாகவும் தெரியவில்லை. நாடற்றவர்களாகவும் தெரியவில்லை.பொருளாதார அகதிகளாகவும் தெரியவில்லை.

அனேகமானோர் கைகளில் ஐ போன் உட்பட விலையுயர்ந்த தொலைபேசிகள்.

வேறொரு நாட்டில் இருப்பது போன்ற பிரமை அவர்களிடம் இல்லை.

மர்மமுடிச்சுகள் தொடரும்.tw_glasses:

  • தொடங்கியவர்

4.7 லட்சம் அகதிகள் ஐரோப்பாவுக்கு வருகை

 
 
 

மத்திய தரைக் கடலை கடந்து இதுவரை 4 லட்சத்து 73,887 அகதிகள் ஐரோப்பாவுக்கு வந்துள்ளனர் என்று ஜெனீவா வைச் சேர்ந்த சர்வதேச அகதி களுக்கான அமைப்பு தெரிவித் துள்ளது.

சிரியா, இராக், லிபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கின்றனர்.

இதுகுறித்து சர்வதேச அகதி களுக்கான அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு இதுவரை 4 லட்சத்து 73887 அகதிகள் ஐரோப் பாவுக்கு வந்துள்ளனர். அவர் களில் 40 சதவீதம் பேர் சிரியாவைச் சேர்ந்தவர்கள். அதாவது 1.8 லட்சம் சிரியா நாட்டினர் ஐரோப்பாவுக்கு வந்துள் ளனர் என்று தெரிவித்துள்ளது.

கிரீஸ், துருக்கி வழியாக வடக்கு ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்லும் அகதிகள் குரேஷியாவை தாண்டி செல்ல வேண்டும். ஆனால் அந்த நாட்டு அரசு முக்கிய எல்லைகளை அடைத்துள்ளது. இதனால் சுமார் 14 ஆயிரம் அகதிகள் எல்லையில் சிக்கித் தவிக்கின்றனர்.

http://tamil.thehindu.com/world/47-லட்சம்-அகதிகள்-ஐரோப்பாவுக்கு-வருகை/article7667642.ece

  • தொடங்கியவர்

அகதிகள் படகு கவிழ்ந்து கிரீஸில் 5 வயது சிறுமி பலி: 13 பேர் மாயம்

 
  • லெஸ்போஸ் தீவுக்கு படகில் வரும் அகதிகள். | படம்: ராய்ட்டர்ஸ்.
    லெஸ்போஸ் தீவுக்கு படகில் வரும் அகதிகள். | படம்: ராய்ட்டர்ஸ்.
  • நெடிய இன்னல் மிகுந்த, ஆபத்தான கடல் பயணத்துக்குப் பிறகு ஏதென்ஸ் நகரில் சாலையில் படுத்துறங்கும் அகதிகள். | படம்: ராய்ட்டர்ஸ்.
    நெடிய இன்னல் மிகுந்த, ஆபத்தான கடல் பயணத்துக்குப் பிறகு ஏதென்ஸ் நகரில் சாலையில் படுத்துறங்கும் அகதிகள். | படம்: ராய்ட்டர்ஸ்.

கிரீஸ் தீவான லெஸ்போஸில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 5 வயது சிறுமி பலியானதாகவும், 13 அகதிகள் மாயமானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

துருக்கியிலிருந்து துன்பம் தரும் பயணத்துக்குப் பிறகு 40 அகதிகள் லெஸ்போஸ் தீவை அடைந்தனர். இவர்களது படகு எந்திரம் கோளாறு அடைந்ததால் கடலில் சுமார் 10 கிமீ நீந்தியே கடந்து லெஸ்போஸ் தீவுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

அயல்நாட்டு உதவிக்குழுக்களால் கடலிலிருந்து மீட்கப்பட்ட 18 வயது மொகமது ரீஸா தெரிவிக்கும் போது, “கடலில் நாங்கள் இருந்த போது எந்த வித நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. நான் இறந்து விட்டேன் என்றே நினைத்தேன்” என்றார்.

துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் கிழக்கு தீவுகளுக்கு நூறாயிரக் கணக்கான சிரியா நாட்டு அகதிகள் பல இன்னல்களுடன் கொந்தளிக்கும் கடலில் சிறிய, பாதுகாப்பற்ற படகுகளில் வந்துள்ளனர்.

ரீஸா, இவர் ஆப்கானிலிருந்து கிளம்பி, குடும்பத்தினரை ஈரானில் விட்டுவிட்டு வந்த போது ராய்ட்டர்ஸ் டிவிக்கு கூறும்போது, “எரிபொருளும் கடல்நீரும் கலந்து விட்டது, நடுக்கடலில் 7, 8 மணி நேரங்கள் தத்தளிதோம். உணவு, குடிநீர் எதுவும் இல்லை.

துருக்கி, கிரேக்க கடலோரக் காவல்படையினர் தவிக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு எந்தவித உதவியையும் செய்ய முன்வரவில்லை. அந்தக் கணத்தில் நாங்கள் எங்களை பயனற்றவர்களாக, உதவாக்கரைகளாக உணர்ந்தோம். நாங்கள் மனிதர்கள் அல்ல.

கடந்த ஞாயிறன்று ஃபர்மகோனிசி தீவில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் பலியான 34 பேர்களில் 15 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு 2 நாட்களுக்குப் பிறகு மேலும் 22 பேர் மூழ்கி பலியாகினர், 200 பேர் மீட்கப்பட்டனர்.

மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு இந்த ஆண்டு புலம் பெயர்ந்த 4,30,000 பேர்களில் 309,000 பேர் கிரீஸ் வழியாகவே வந்துள்ளனர்.

ஜூலை, ஆகஸ்டில் மட்டும் 1,50,000 அகதிகள் கிரீஸுக்கு வந்துள்ளனர். லெஸ்போஸ் தீவில் படகுகளில் அகதிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

http://tamil.thehindu.com/world/அகதிகள்-படகு-கவிழ்ந்து-கிரீஸில்-5-வயது-சிறுமி-பலி-13-பேர்-மாயம்/article7668703.ece?homepage=true

  • தொடங்கியவர்

Ansturm auf Österreich: Mehr als 10.000 Flüchtlinge in wenigen Stunden. Flüchtlinge erreichen über Ungarn das österreichische Nickelsdorf. (Quelle: Reuters)

ஒரு சில மணிநேரத்தில் 10,000 மேற்பட்ட அகதிகள் இன்று ஆஸ்திரியாவை வந்தடைந்துள்ளார்கள்

  • தொடங்கியவர்

'ஆட்துணையின்றி அகதிகளாக வரும் சிறார்கள்'

 
'ஆட்துணையின்றி அகதிகளாக வரும் சிறார்கள்'
 

ஐரோப்பா செல்வதற்காக செர்பியா வரும் அகதி சிறார்களில் கால்வாசிக்கும் அதிகமானோர் பெரியவர்களின் துணையின்றி தனியாக வருவதாக சேவ் த சில்ட்ரன் அமைப்பு கூறுகிறது.

ஐரோப்பா செல்வதற்காக செர்பியா வரும் அகதி சிறார்களில் கால்வாசிக்கும் அதிகமானோர் பெரியவர்களின் துணையின்றி தனியாக வருவதாக சேவ் த சில்ட்ரன் அமைப்பு கூறுகிறது.

 

இந்த வருடத்தில் வந்த 5000 க்கும் அதிகமான சிறார்கள் குடும்பத்தினர் மற்றும் பெற்றோரின் துணையின்றி, தனியாக வந்துள்ளதாகவும், அவர்கள் துஷ்பிரயோகத்துக்கும் ஆட்கடத்தலுக்கும் உள்ளாக்கப்படும் ஆபத்து உள்ளது என்றும் அந்த அமைப்பு கூறுகின்றது.

சிரியாவில் போரில் இருந்து தப்பித்து, தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு, விரக்தியடைந்த நிலையில் தினமும் நூற்றுக்கணக்கான சிறார்கள் செர்பியாவை வந்தடைவதாகவும், அவர்களில் பலருக்கு அவசரமான மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் அது கூறுகின்றது.

http://tamil.thehindu.com/bbc-tamil/ஆட்துணையின்றி-அகதிகளாக-வரும்-சிறார்கள்/article7670905.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.