Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொல் (தேங்காய்) சம்பல் செய்யும் முறை. விளக்குகிறார் வெள்ளையர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 வெள்ளை, தமிழ் பாட்டு, கொழும்பு தெரு உணவு

 

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சைத் தொட்டுட்டீங்கள் நாதம்...!  :)

நன்றி இணைப்புக்கு சகோ முனி!! இந்த வெள்ளை யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களுக்குச் சென்றுள்ளார். இவரிடம் தான் எப்படி உணவுகளை சுவைத்து உண்ணணும் என்று பழக வேணும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேற்காலத்திலை வெள்ளையள் சொன்னால்த்தான் எங்கடடை சனமும் நம்பும்...tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் எமது உணவகங்களில் அவா்களும் அவா்களது உணவகங்களில் நாங்களும் .......

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு முனியர்.வாய் ஊறுது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பலுக்கு உள்ளி போடுகின்றார்.சிங்களவர் உள்ளியா போடுகின்றவை?...நாங்கள் ப.மிளகாய் அல்லவா போடுகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பலுக்கு உள்ளி போடுகின்றார்.சிங்களவர் உள்ளியா போடுகின்றவை?...நாங்கள் ப.மிளகாய் அல்லவா போடுகிறது

நீங்கள் சொல்லுறது பச்ச முளவாய் சம்பல். இவர் போடுறது முளகாய்த்தூள் சம்பல். 

பொறகு, எங்கண்ட இடிச்ச சம்பல், பொரிச்சு இடிச்ச சம்பல், அரைச்ச பச்ச முளவாய் சம்பல், அரைச்ச செத்த முளவாய்ச் சம்பல், இஞ்சிச் சம்பல், தூதுவளைச் சம்பல், உள்ளிச்சம்பல்...

பிறகு சிங்களவரின்ற, கட்டசம்பல், மாசிக்கருவாட்டுச் சம்பல், றால் சம்பல்..... இன்னும் சொல்லலாம்.

தமிழ் நாட்டில இந்த சம்பல்கள் இல்லையக்கோய், ஏனென்டா இவை, டச்சுக்காரர் உபயம். மலேசியா, இந்தோனேசியா வில இருந்து அவயள் கொண்டாந்து உங்க தேங்காயப் போட்டு உல்டா பண்ணி எடுத்தது...

  • கருத்துக்கள உறவுகள்

தூள் சம்பலுக்கு நாங்கள் ப.மிளகாய்,வெங்காயம்[சின்னன்] வெட்டிப் போடுவது

அருமையான பதிவு முனியர்.வாய் ஊறுது.

இந்த சம்பலை  நீங்களே இலகுவாய் செய்து சாப்பிடலாம் சுவைப் பிரியன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூள் சம்பலுக்கு நாங்கள் ப.மிளகாய்,வெங்காயம்[சின்னன்] வெட்டிப் போடுவது

 

ஓமோம், அத கைச்சம்பல் எண்டுறவயல். அது வேற, இது தூள் சம்பல்.

முடிஞ்சா, ஒக்ஸ்போட் ஒன்லைன் டிக்சனரில, Curry எண்டு அடிச்சுப் பாருங்க. 

அட தமிழில இருந்தே, உங்கயும் வந்தது எண்டு நினைப்பியல்...

பிறகு எப்படி, எங்களுக்கு தெரியாத, சிக்கின் ரிக்கா, தண்டூரி,  விண்டலூ, கறி பேஸ்ற் பம்மாத்து, லொட்டு, லொசுக்கு எல்லாம் வந்தது எண்டால், பங்களாதேஸ், ஆபிரிக்க இந்தியர் பண்ணின உல்டா தான்...

அத மாதிரி தான் உந்த சம்பல் விசயமும்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி.நான் இரண்டும் ஒரே சம்பல் என்று நினைத்து விட்டேன்...கறி தமிழரின் சொந்த சரக்கு இல்லா விட்டால் எங்கட மூதாதையர் என்னத்தை சாப்பிட்டவையல்

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓமோம், அத கைச்சம்பல் எண்டுறவயல். அது வேற, இது தூள் சம்பல்.

முடிஞ்சா, ஒக்ஸ்போட் ஒன்லைன் டிக்சனரில, Curry எண்டு அடிச்சுப் பாருங்க. 

அட தமிழில இருந்தே, உங்கயும் வந்தது எண்டு நினைப்பியல்...

பிறகு எப்படி, எங்களுக்கு தெரியாத, சிக்கின் ரிக்கா, தண்டூரி,  விண்டலூ, கறி பேஸ்ற் பம்மாத்து, லொட்டு, லொசுக்கு எல்லாம் வந்தது எண்டால், பங்களாதேஸ், ஆபிரிக்க இந்தியர் பண்ணின உல்டா தான்...

அத மாதிரி தான் உந்த சம்பல் விசயமும்...

டிக்ட்சனரி உங்களை 1500 ஆம் ஆண்டுக்கு முன் கொண்டு போகாது 
அதை வைத்து அதுதான் உண்மை என்று சொல்லிவிட முடியாது.

கவாய் அமெரிக்கா அவுஸ்த்ரேலியா எல்லாம் கண்டு பிடித்ததற்கு ஒரு திகதி வருடம் உண்டு (வெள்ளையன் கணக்கில்)
அதற்கு முன்பே அங்கு சென்று குடியேறியவர்கள் உண்டு. 

ஆப்ரிக்கவிட்கு ஜெனநாயக பாடம் எடுக்கிற மாதிரித்தான் இதுவும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

டிக்ட்சனரி உங்களை 1500 ஆம் ஆண்டுக்கு முன் கொண்டு போகாது 
அதை வைத்து அதுதான் உண்மை என்று சொல்லிவிட முடியாது.

கவாய் அமெரிக்கா அவுஸ்த்ரேலியா எல்லாம் கண்டு பிடித்ததற்கு ஒரு திகதி வருடம் உண்டு (வெள்ளையன் கணக்கில்)
அதற்கு முன்பே அங்கு சென்று குடியேறியவர்கள் உண்டு. 

ஆப்ரிக்கவிட்கு ஜெனநாயக பாடம் எடுக்கிற மாதிரித்தான் இதுவும். 

 

மருதர்,

கறி குறித்த ஆய்வு செய்தால் பல ஆச்சரியங்கள் கிடைக்கும்.

மிளகு தமிழர் திரவியம். இதுவே உறைப்பு என்னும் ஆறாவது சுவையினை தந்தது. இந்த மிளகை வைத்து வியாபாரம் செய்யப் போய்த் தான் சோழர்கள், கடாரம், ஸ்ரீ விஜயம், சீயம் வென்றார்கள்.

இந்த மிளகை வாங்கி, குர்பானியால் பலியிடப் படும், விலங்குகளை, உறைப்பூட்டி, பிரியாணி ஆக்கினர் அரேபியர்கள்.

அரபுலகில் இருந்து, மெதுவாக ஐரோப்பா போனது, மிளகு. 

மிளகு அறிமுகமாகும் வரை, ஐரோப்பாவில் 'உறைப்பு' என்னும் சுவை தெரிந்திருக்கவில்லை. இதனை அரேபியர்கள் தான் ஐரோப்பாவில் அறிமுகம் செய்தார்கள்.

மிளகினால் வந்த உறைப்பினால், மெய் மறந்த, அரச, பணக்காரக் குடும்பங்கள், மிளகுக்கு பதில் தங்கத்தினை கொடுத்து பண்டமாற்று செய்தார்கள். சில நாடுகள், மிளகினை வரியாக (Pepper Tax), ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த மிளகு வர்த்தகத்தினால் வந்த பெரும் பணத்தினால், அரபிகள், மாலைதீவு, இந்தோனேசியா நாடுகளை முஸ்லிம் நாடுகள் ஆக்கின. இந்தியாவினுள் பூந்து கொண்டார்கள்.

அதேவேளை, துருக்கியின் ஒட்டோமான் பேரரசு, ஐரோப்பியர்கள் தமது கடல் வழியினை பயன் படுத்துவதை தடை செய்ததால், அரேபியர்கள், பெரும் பணம் உழைத்தார்கள்.

ஐரோப்பியர்கள், மிளகு உற்பத்தி செய்பவர்களை தேடி புதிய பாதை காண கிளம்பினர். போத்துகேயர் கிழக்குப் பக்கமாக போய் 1493 ல் சேரநாடு போயினர்.மிளகு கண்டு திரும்பினர்.

அதவேளை, அதே மிளகை தேடி மறுபக்கம் போன ஸ்பானிய கொலம்பஸ் கோஸ்டியில் இருந்த டியாகோ, புதிய உலகத்தில் இருந்து 1494 ல்  மிளகாயினைக் கொண்டு வந்தார்.

மிளகு சந்தை விழ, ஸ்பானியர்கள் அக மகிழ, போர்த்துக்கேயர்கள் மிளகாயினை கொண்டு நம்ம பகுதிக்கு வந்து,  அதை அறிமுகப் படுத்த, நம்ம ஆக்களும், சிங்களமும் சேர்த்து 1506 முதல் 1520 இக்கு இடையில், 'நக்கினார் நாப்புரட்டார்' என்று சுதந்திரதினையே கொடுத்து தொலைத்தோம்.

ஆக மனிதரின் 'உறைப்பு'எனும் நாசமாய்ப் போன சுவை உணர்வு, பல அனர்த்தங்களை உண்டாக்கி உள்ளது.:(

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி.நான் இரண்டும் ஒரே சம்பல் என்று நினைத்து விட்டேன்...கறி தமிழரின் சொந்த சரக்கு இல்லா விட்டால் எங்கட மூதாதையர் என்னத்தை சாப்பிட்டவையல்

கறி மிளகினால் சுவை ஊட்டப் பட்ட எமது சொத்து.

போர்த்துக் கேயர், மிளகாய், உருளைக் கிழங்கு, தக்காளி, பூசணி உட்பட 130 மரக்கறி வகைகளை அறிமுகப் படுத்தி, கறிப் புரட்சி செய்தர்கள்.

ஆனால் அவர்கள் மிளகாய் உண்டாக்கிய ஆர்வ மிகுதியால் பசு மாடுகளில் கை வைக்கப் போய், கோயில், விகாரை களில் தானம் கொடுக்கப் பட்ட மாடுகளுக்காக, கோவில்கள், விகாரைகளை இடிக்கப் போய், மக்களைப் பகைத்து டச்சுக் காரகளிடம் நாட்டினை இழந்தனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நாதமுனி.நான் இரண்டும் ஒரே சம்பல் என்று நினைத்து விட்டேன்...கறி தமிழரின் சொந்த சரக்கு இல்லா விட்டால் எங்கட மூதாதையர் என்னத்தை சாப்பிட்டவையல்

ஒடியல் புட்டு...பழஞ்சோத்தோடை பச்சைமிளகாய்....பனங்கிழங்கு துவையல்......இப்பிடி இன்னும் எக்கச்சக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.