Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்" - மெல்பேர்னில் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்தி எழுத்தாளர் ப.தெய்வீகனின் முகநூலில் இருந்து இச் செய்தி பெறப்பட்டது.

தான் கூறும் கருத்துக்கள் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக யாராவது கருதினால் அதற்கு தான் மனம் வருந்துவதாகவும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகவும் - ஒரு இலகுநிலையில் (Comfort Zone) இருந்துகொண்டு மக்களை குழப்பியதாக யாராவது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றச்சாட்டை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தயவுசெய்து தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் - தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நேற்று வெள்ளிகிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ள சுமந்திரன் அவர்களுக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற எதிர்ப்பு சம்பவங்களை தொடர்ந்து நேற்றைய தினம் மெல்பேர்னில் இடம்பெறவிருந்த நிகழ்வும் அங்கு கூடியிருந்த ஒரு கூட்டத்தினரால் தடுக்கப்பட்டது.

மாலை 5 மணியளவிலேயே, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு பதாகைகள் சகிதம் வந்திறங்கிய இந்த கூட்டத்தினர், எவரையும் மண்டபத்தின் உள்ளே நுழைய விடுவதில்லை என்று கூறினார்கள். மண்டபத்துக்கு வெளியில் சுமந்திரனின் வருகைக்காக காத்திருந்த இந்த கூட்டத்தில் சிலர், மண்டபத்தின் உள்ளே ஏற்கனவே நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் - அவர்களுக்கு முன்னதாகவே - வந்துவிட்டதை கண்டறிந்து, “சுமந்திரனை உள்ளேயா ஒழித்து வைத்திருக்கிறீர்கள்” என்று கூச்சலிட்டவாறே ஓடிச்சென்று, நிகழ்வு ஏற்பாட்டளர் ஒருவர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்தினார்கள். சிறிது நேரத்திலேயே அந்த முறுகல்நிலை அங்கிருந்த சிலரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

ஆனால், குழப்பம் மிக்க இந்த நிகழ்வை நடத்துவதற்கு மண்டப ஏற்பாட்டாளர்கள் விரும்பவில்லை என்றும் சுமந்திரன் கலந்துகொள்ளவிருந்த சந்திப்பு அங்கு நடைபெறாது என்பதை அறிவிப்பதற்காகவுமே அந்த ஒழுங்கமைப்பாளர் மண்டபத்துக்கு வெளியே தான் வந்திருந்ததாக கூறினார்.

தாக்குதலுக்கு உள்ளான இருவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினர். ஆனால், நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அதனை நம்ப மறுத்த அந்த கூட்டத்தினர் இரவு 7.30 மணிவரை அங்கேயே நின்றுகொண்டிருந்தனர்.

இதற்கிடையில், சந்திப்பு இன்னொரு இடத்துக்கு மாற்றப்பட்டு – சுமந்திரனினதும் அவர் பங்குபற்றும் கூட்டத்தில் பங்குபற்றுவோரினதும் - பாதுகாப்பு காரணங்களுக்காக - அழைக்கப்பட்டோருக்கு மாத்திரமான நிகழ்வாக அது ஏற்பாடு செய்யப்பட்டது.

இரவு எட்டு மணியளவில் ஆரம்பமான இந்த கூட்டத்தில் சுமார் முப்பது பேரளவில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் பேசிய நிகழ்வின் ஒருங்கமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

ஒரு காலத்தில் சிங்கள மக்களில் ஒரு கூட்டத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக புலம்பெயர்ந்த மண்ணில் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு காவல்துறையை அழைத்த காலம் மருவி, இன்று எமது இனத்தில் உள்ள குழப்பவாதிகளிடமிருந்து எமது மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு காவல்துறையை அழைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலமை குறித்து கவலை தெரிவித்தார்.

அதன் பின்னர் சுமந்திரன் அவர்கள் தனது பேச்சை ஆரம்பித்தார். ஜெனீவா தீர்மானம், அதில் கூட்டமைப்பு வகித்த பங்கு, கைதிகள் விவகாரம் மற்றும் தாயகத்தின் நடப்பு நிலைவரம் உட்பட பல விடயங்களை விரிவாக விளக்கினார்.
சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே மேற்படி மன்னிப்பை அவர் கோரியிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் -

“உண்மை எப்போதும் சுடும் என்பார்கள். நான் செய்த தவறும் செய்கின்ற தவறும் என்னென்றால், சுடும் என்று தெரிந்துகொண்டும் சுடுகின்ற பானையை கைகளில் கொடுக்கிறேன் போலுள்ளது. அதனை கொஞ்சம் ஆற்றிக்கொடுத்தால் நன்றாக இருக்குமோ என்று இப்போது நான் எண்ணுகிறேன்.

“அப்படியான அசௌகரியங்களுக்குள் மனவேதனைகளுக்குள் பிளவுகளை நான் ஏற்படுத்தியிருந்தால் அதற்கு நான் குற்றவாளி. அதற்கு நான் மனம் வருந்துகிறேன். முடியுமானவரை அந்த சூட்டை தணித்து கொடுக்கலாமா என்று ஆராய்கிறேன். இனி அப்படித்தன் செய்வேன் என்று நான் வாக்குறுதி கொடுக்கவில்லை. சில சமயங்களில் சுட சுட சொன்னால்தான் அது உண்மையாகவும் இருக்கும்.

“அதற்காக நான் மட்டும்தான் உண்மை சொல்வதாகவும் நினைக்கவேண்டாம். நான் சொல்கின்ற கருத்துக்கள் தவறாக இருந்தால், எங்கேயும் யாரும், எப்போதும் எடுத்துக்கூறினால் அதனை திருத்திக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். அது பற்றி கலந்துரையாடி – உங்களது கருத்து சரியாக இருந்தால் - அதனை ஏற்றுக்கொள்வதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

 

......

அசௌகரியங்களுக்குள் மனவேதனை..! மெல்பேர்னில் கலங்கிய சுமந்திரன்!
[ வெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2015, 10:05.21 PM GMT ]
sumanthiran_001.jpg
ஒரு இலகுநிலையில் (Comfort Zone) இருந்துகொண்டு மக்களை குழப்பியதாக யாராவது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றச்சாட்டை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தயவுசெய்து தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நேற்று வெள்ளிகிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள சுமந்திரனுக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற எதிர்ப்பு சம்பவங்களை தொடர்ந்து நேற்றைய தினம் மெல்பேர்னில் இடம்பெறவிருந்த நிகழ்வும் அங்கு கூடியிருந்த ஒரு பகுதி மக்களால் தடுக்கப்பட்டது.

மாலை 5 மணியளவிலேயே, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு பதாகைகள் சகிதம் வருகை தந்த ஒரு பகுதி மக்கள் எவரையும் மண்டபத்தின் உள்ளே நுழைய விடுவதில்லை என்று கூறினார்கள்.

மண்டபத்துக்கு வெளியில் சுமந்திரனின் வருகைக்காக காத்திருந்த அந்த மக்கள் கூட்டத்தினர் சிலர், மண்டபத்தின் உள்ளே ஏற்கனவே நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அவர்களுக்கு முன்னதாகவே வந்துவிட்டதை கண்டறிந்து, “சுமந்திரனை உள்ளேயா ஒழித்து வைத்திருக்கிறீர்கள்” என்று கூச்சலிட்டவாறே ஓடிச்சென்று,

நிகழ்வு ஏற்பாட்டளர் ஒருவர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்தினார்கள். சிறிது நேரத்திலேயே அந்த முறுகல்நிலை அங்கிருந்த சிலரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

ஆனால், குழப்பம் மிக்க இந்த நிகழ்வை நடத்துவதற்கு மண்டப ஏற்பாட்டாளர்கள் விரும்பவில்லை என்றும் சுமந்திரன் கலந்துகொள்ளவிருந்த சந்திப்பு அங்கு நடைபெறாது என்பதை அறிவிப்பதற்காகவுமே அந்த ஒழுங்கமைப்பாளர் மண்டபத்துக்கு வெளியே தான் வந்திருந்ததாக கூறினார்.

தாக்குதலுக்கு உள்ளான இருவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினர். ஆனால், நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அதனை நம்ப மறுத்த அந்த கூட்டத்தினர் இரவு 7.30 மணிவரை அங்கேயே நின்றுகொண்டிருந்தனர்.

இதற்கிடையில், சந்திப்பு இன்னொரு இடத்துக்கு மாற்றப்பட்டு – சுமந்திரனினதும் அவர் பங்குபற்றும் கூட்டத்தில் பங்குபற்றுவோரினதும் – பாதுகாப்பு காரணங்களுக்காக – அழைக்கப்பட்டோருக்கு மாத்திரமான நிகழ்வாக அது ஏற்பாடு செய்யப்பட்டது.

இரவு எட்டு மணியளவில் ஆரம்பமான இந்த கூட்டத்தில் சுமார் முப்பது பேரளவில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் பேசிய நிகழ்வின் ஒருங்கமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

ஒரு காலத்தில் சிங்கள மக்களில் ஒரு கூட்டத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக புலம்பெயர்ந்த மண்ணில் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு காவல்துறையை அழைத்த  காலம் மருவி, இன்று எமது இனத்தில் உள்ள குழப்பவாதிகளிடமிருந்து எமது மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு காவல்துறையை அழைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலமை குறித்து கவலை தெரிவித்தார்.

அதன் பின்னர் சுமந்திரன் அவர்கள் தனது பேச்சை ஆரம்பித்தார். ஜெனீவா தீர்மானம், அதில் கூட்டமைப்பு வகித்த பங்கு, கைதிகள் விவகாரம் மற்றும் தாயகத்தின் நடப்பு நிலைவரம் உட்பட பல விடயங்களை விரிவாக விளக்கினார்.

சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே மேற்படி மன்னிப்பை அவர் கோரியிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“உண்மை எப்போதும் சுடும் என்பார்கள். நான் செய்த தவறும் செய்கின்ற தவறும் என்னென்றால், சுடும் என்று தெரிந்துகொண்டும் சுடுகின்ற பானையை கைகளில் கொடுக்கிறேன் போலுள்ளது. அதனை கொஞ்சம் ஆற்றிக்கொடுத்தால் நன்றாக இருக்குமோ என்று இப்போது நான் எண்ணுகிறேன்.

“அப்படியான அசௌகரியங்களுக்குள் மனவேதனைகளுக்குள் பிளவுகளை நான் ஏற்படுத்தியிருந்தால் அதற்கு நான் குற்றவாளி. அதற்கு நான் மனம் வருந்துகிறேன். முடியுமானவரை அந்த சூட்டை தணித்து கொடுக்கலாமா என்று ஆராய்கிறேன்.

இனி அப்படித்தான் செய்வேன் என்று நான் வாக்குறுதி கொடுக்கவில்லை. சில சமயங்களில் சுட சுட சொன்னால்தான் அது உண்மையாகவும் இருக்கும்.

அதற்காக நான் மட்டும்தான் உண்மை சொல்வதாகவும் நினைக்கவேண்டாம். நான் சொல்கின்ற கருத்துக்கள் தவறாக இருந்தால், எங்கேயும் யாரும், எப்போதும் எடுத்துக்கூறினால் அதனை திருத்திக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

அது பற்றி கலந்துரையாடி உங்களது கருத்து சரியாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.




 

Edited by நியானி
செய்தி மூலத்துடன் மீண்டும் இணைக்க

  • கருத்துக்கள உறவுகள்

சமயோசிதமாக நிகழ்வின் இடத்தை மாற்றி அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமேயான நிகழ்வாக மாற்றிய ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுக்கள்! சுமந்திரன் நிதனமாக பேசி இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியின்... மூலம் எங்கு பெறப் பட்டது.

மாலை 5 மணியளவிலேயே, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு பதாகைகள் சகிதம் வந்திறங்கிய இந்த கூட்டத்தினர், எவரையும் மண்டபத்தின் உள்ளே நுழைய விடுவதில்லை என்று கூறினார்கள். மண்டபத்துக்கு வெளியில் சுமந்திரனின் வருகைக்காக காத்திருந்த இந்த கூட்டத்தில் சிலர், மண்டபத்தின் உள்ளே ஏற்கனவே நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் - அவர்களுக்கு முன்னதாகவே - வந்துவிட்டதை கண்டறிந்து, “சுமந்திரனை உள்ளேயா ஒழித்து வைத்திருக்கிறீர்கள்” என்று கூச்சலிட்டவாறே ஓடிச்சென்று, நிகழ்வு ஏற்பாட்டளர் ஒருவர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்தினார்கள். சிறிது நேரத்திலேயே அந்த முறுகல்நிலை அங்கிருந்த சிலரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

நல்ல, தமாஸ்.
இனி... சுமந்திரனுக்கு... கோட்டு,சூட்டு  போட்டுக் கொண்டு... வெளி நாடு போற எண்ணமே...  வர மாட்டுது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தச் செய்தியின்... மூலம் எங்கு பெறப் பட்டது.

மாலை 5 மணியளவிலேயே, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு பதாகைகள் சகிதம் வந்திறங்கிய இந்த கூட்டத்தினர், எவரையும் மண்டபத்தின் உள்ளே நுழைய விடுவதில்லை என்று கூறினார்கள். மண்டபத்துக்கு வெளியில் சுமந்திரனின் வருகைக்காக காத்திருந்த இந்த கூட்டத்தில் சிலர், மண்டபத்தின் உள்ளே ஏற்கனவே நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் - அவர்களுக்கு முன்னதாகவே - வந்துவிட்டதை கண்டறிந்து, “சுமந்திரனை உள்ளேயா ஒழித்து வைத்திருக்கிறீர்கள்” என்று கூச்சலிட்டவாறே ஓடிச்சென்று, நிகழ்வு ஏற்பாட்டளர் ஒருவர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்தினார்கள். சிறிது நேரத்திலேயே அந்த முறுகல்நிலை அங்கிருந்த சிலரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

நல்ல, தமாஸ்.
இனி... சுமந்திரனுக்கு... கோட்டு,சூட்டு  போட்டுக் கொண்டு... வெளி நாடு போற எண்ணமே...  வர மாட்டுது.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள வன்முறையாளர்களும், பயங்கரவாதிகளும் ஆயுதமுனையில் சிறைகளில் வாழவே பொருத்தமானவர்கள். இலங்கையில் இவர்களை மக்கள் ஒதுக்கி வைத்தது போல மற்ற நாடுகளிலும் மக்கள் ஒதுக்கி வைக்க வேண்டும். அல்லாவிட்டால் அந்த அந்த நாட்டு காவல் துறையினர் இவர்களை உரிய இடங்களில் வைப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Jude said:

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள வன்முறையாளர்களும், பயங்கரவாதிகளும் ஆயுதமுனையில் சிறைகளில் வாழவே பொருத்தமானவர்கள். இலங்கையில் இவர்களை மக்கள் ஒதுக்கி வைத்தது போல மற்ற நாடுகளிலும் மக்கள் ஒதுக்கி வைக்க வேண்டும். அல்லாவிட்டால் அந்த அந்த நாட்டு காவல் துறையினர் இவர்களை உரிய இடங்களில் வைப்பார்கள். 

1948... சிலோனுக்கு  சுதந்திரம்.
1958  ,,, காலி  முகத் திடலில் உண்ணா  விரதம் 
------
----
-----
--------
--------
05.11.2015´ல்  அவுசில் செம அடி.
சரித்திரம் எப்படி, திரும்பி இருக்கு.
இது, ஆரம்பம் மட்டும் தான்......
உங்களுக்கு,,,, அரசியல் விளங்கப் படுத்த, நான் அடுத்த பிறப்பு எடுத்தாலும்... போதாது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

1948... சிலோனுக்கு  சுதந்திரம்.
1958  ,,, காலி  முகத் திடலில் உண்ணா  விரதம் 
------
----
-----
--------
--------
05.11.2015´ல்  அவுசில் செம அடி.
சரித்திரம் எப்படி, திரும்பி இருக்கு.
இது, ஆரம்பம் மட்டும் தான்......
உங்களுக்கு,,,, அரசியல் விளங்கப் படுத்த, நான் அடுத்த பிறப்பு எடுத்தாலும்... போதாது.

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு போன உங்கள் அரசியலும் வன்முறைகளும் உங்களுக்கே பொருத்தமானவை. வேறு எவருக்கும் பயனற்றவை. மக்களுக்கோ அழிவுக்கான பாதை அது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Jude said:

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு போன உங்கள் அரசியலும் வன்முறைகளும் உங்களுக்கே பொருத்தமானவை. வேறு எவருக்கும் பயனற்றவை. மக்களுக்கோ அழிவுக்கான பாதை அது. 

முள்ளி வாய்க்காலில், கொண்டு போய்.... தள்ளி விட்டதே.....
உங்கள், ஒட்டுக்குழு  அரசியல் தான்.
என்று... தமிழன், ஒற்றுமையாக இருந்தான்.
பிரபாகரனுக்கு, கரம் கொடுக்க உங்களுக்கு, வக்கில்லை,,,,
இப்ப.... முள்ளி வாய்க்காலை.... இழுத்து, மூக்கு, சிந்த வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Jude said:

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள வன்முறையாளர்களும், பயங்கரவாதிகளும் ஆயுதமுனையில் சிறைகளில் வாழவே பொருத்தமானவர்கள். இலங்கையில் இவர்களை மக்கள் ஒதுக்கி வைத்தது போல மற்ற நாடுகளிலும் மக்கள் ஒதுக்கி வைக்க வேண்டும். அல்லாவிட்டால் அந்த அந்த நாட்டு காவல் துறையினர் இவர்களை உரிய இடங்களில் வைப்பார்கள். 

பெரிய பகிடி என்னவென்றால் புலன்பெயர் போராளிகள் தாமும் தம்முடைய குடும்பத்தவரும் சுதந்திரமான நாடுகளில் வாழ்ந்துகொண்டு அடுத்தவரின் சுதந்திரத்தில் வன்முறையைக் கையாள்வதுதான். இவர்கள் வாழும் நாடுகளில் இத்தகைய வன்முறையாளர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். இன்னமும் இவர்கள் பயங்கரவாதத்தை கைவிடவில்லை. இவர்களுக்கு கட்டாயம் புனர்வாழ்வளிக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Jude said:

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு போன உங்கள் அரசியலும் வன்முறைகளும் உங்களுக்கே பொருத்தமானவை. வேறு எவருக்கும் பயனற்றவை. மக்களுக்கோ அழிவுக்கான பாதை அது. 

முள்ளி வாய்காலுக்கு முன்னம் நீங்கள் சொர்கத்தில் இருந்தீர்களாக்கும் .....
இப்ப மக்களை மீட்டு  கொண்டு போறதற்கு ......

இப்போதைய அரசியல்  நிலைமையே முள்ளி வாய்காலில் முளைத்ததுதான் 
அவர்கள் தாங்கள் இறந்துபோனதால்தான் இப்ப சுமந்திரனே ஊர் சுற்றுறார். அல்லது எல்லாம் மூடி மறைக்க சுற்றவைக்க படுகிறார்.

அடிப்படையில் பிரச்சனையில் ஒரு வார்த்தை கூட உச்சரிக்க முடியாது.
இதுதான் தமிழரின் நிலைமை.
சம்மந்தர் சுமந்திரன் எல்லோரும் வாய் மூடிதான் கிடக்க வேண்டும். நிலைமை எமக்கும் புரியும்.

பிடித்தவர்களை விடுவது .... பிடிப்பது ... இது செஸ் விளையாட்டு. 
இதுதான் ஈழத்தமிழன் நிலைமை.

நீங்கள் ஒரு வேலை முஸ்லீமோ தெரியவில்லை. 

போராளிகள் உயிர் இருக்கும்வரை உறுதியோடு போராடுவார்கள்.
உங்களுக்கு விளக்கு பிடிக்க அவர்கள் போராட போகவில்லை ..... மக்கள் விடுதலை வேண்ட போனார்கள்.
உயிர் உள்ளவரைதான் போராட முடியும்.

எல்லாளன் எல்லோரையும் அனுராதபுரம் அழைத்து போகவில்லை.
இருக்கும் போது இருந்த இடத்தில் தமிழனாக எழுந்து நின்றான். போராடினான் இறந்தான்.

மனைவிமாரை மற்றவனிடம்  விலை பேசி விற்கும் விபச்சாரம் எல்லாருக்கும் ஒத்துவாரதாது.
ஒரு சிலருக்கு நன்றாக வருகிறது..... அதுக்கு அரசியல் சாணக்கியம்  .... அது இது என்று அவர்களுக்கு தெரிந்த பெயரை  வைத்து கொள்ளலாம்.
ஆனால் "தமிழ் மொழி" தன்னோடு ஒரு பேரை ஏற்கனவே வைத்துவிட்டது. 
அதுதான் அவர்கள் அகங்காரம் முடிய .. எழுத்தில் இருக்கும்.  

4 hours ago, nirmalan said:

பத்தி எழுத்தாளர் ப.தெய்வீகனின் முகநூலில் இருந்து இச் செய்தி பெறப்பட்டது.

தான் கூறும் கருத்துக்கள் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக யாராவது கருதினால் அதற்கு தான் மனம் வருந்துவதாகவும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகவும் - ஒரு இலகுநிலையில் (Comfort Zone) இருந்துகொண்டு மக்களை குழப்பியதாக யாராவது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றச்சாட்டை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தயவுசெய்து தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் - தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நேற்று வெள்ளிகிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ள சுமந்திரன் அவர்களுக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற எதிர்ப்பு சம்பவங்களை தொடர்ந்து நேற்றைய தினம் மெல்பேர்னில் இடம்பெறவிருந்த நிகழ்வும் அங்கு கூடியிருந்த ஒரு கூட்டத்தினரால் தடுக்கப்பட்டது.

மாலை 5 மணியளவிலேயே, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு பதாகைகள் சகிதம் வந்திறங்கிய இந்த கூட்டத்தினர், எவரையும் மண்டபத்தின் உள்ளே நுழைய விடுவதில்லை என்று கூறினார்கள். மண்டபத்துக்கு வெளியில் சுமந்திரனின் வருகைக்காக காத்திருந்த இந்த கூட்டத்தில் சிலர், மண்டபத்தின் உள்ளே ஏற்கனவே நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் - அவர்களுக்கு முன்னதாகவே - வந்துவிட்டதை கண்டறிந்து, “சுமந்திரனை உள்ளேயா ஒழித்து வைத்திருக்கிறீர்கள்” என்று கூச்சலிட்டவாறே ஓடிச்சென்று, நிகழ்வு ஏற்பாட்டளர் ஒருவர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்தினார்கள். சிறிது நேரத்திலேயே அந்த முறுகல்நிலை அங்கிருந்த சிலரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

ஆனால், குழப்பம் மிக்க இந்த நிகழ்வை நடத்துவதற்கு மண்டப ஏற்பாட்டாளர்கள் விரும்பவில்லை என்றும் சுமந்திரன் கலந்துகொள்ளவிருந்த சந்திப்பு அங்கு நடைபெறாது என்பதை அறிவிப்பதற்காகவுமே அந்த ஒழுங்கமைப்பாளர் மண்டபத்துக்கு வெளியே தான் வந்திருந்ததாக கூறினார்.

தாக்குதலுக்கு உள்ளான இருவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினர். ஆனால், நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அதனை நம்ப மறுத்த அந்த கூட்டத்தினர் இரவு 7.30 மணிவரை அங்கேயே நின்றுகொண்டிருந்தனர்.

இதற்கிடையில், சந்திப்பு இன்னொரு இடத்துக்கு மாற்றப்பட்டு – சுமந்திரனினதும் அவர் பங்குபற்றும் கூட்டத்தில் பங்குபற்றுவோரினதும் - பாதுகாப்பு காரணங்களுக்காக - அழைக்கப்பட்டோருக்கு மாத்திரமான நிகழ்வாக அது ஏற்பாடு செய்யப்பட்டது.

இரவு எட்டு மணியளவில் ஆரம்பமான இந்த கூட்டத்தில் சுமார் முப்பது பேரளவில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் பேசிய நிகழ்வின் ஒருங்கமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

ஒரு காலத்தில் சிங்கள மக்களில் ஒரு கூட்டத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக புலம்பெயர்ந்த மண்ணில் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு காவல்துறையை அழைத்த காலம் மருவி, இன்று எமது இனத்தில் உள்ள குழப்பவாதிகளிடமிருந்து எமது மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு காவல்துறையை அழைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலமை குறித்து கவலை தெரிவித்தார்.

அதன் பின்னர் சுமந்திரன் அவர்கள் தனது பேச்சை ஆரம்பித்தார். ஜெனீவா தீர்மானம், அதில் கூட்டமைப்பு வகித்த பங்கு, கைதிகள் விவகாரம் மற்றும் தாயகத்தின் நடப்பு நிலைவரம் உட்பட பல விடயங்களை விரிவாக விளக்கினார்.
சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே மேற்படி மன்னிப்பை அவர் கோரியிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் -

“உண்மை எப்போதும் சுடும் என்பார்கள். நான் செய்த தவறும் செய்கின்ற தவறும் என்னென்றால், சுடும் என்று தெரிந்துகொண்டும் சுடுகின்ற பானையை கைகளில் கொடுக்கிறேன் போலுள்ளது. அதனை கொஞ்சம் ஆற்றிக்கொடுத்தால் நன்றாக இருக்குமோ என்று இப்போது நான் எண்ணுகிறேன்.

“அப்படியான அசௌகரியங்களுக்குள் மனவேதனைகளுக்குள் பிளவுகளை நான் ஏற்படுத்தியிருந்தால் அதற்கு நான் குற்றவாளி. அதற்கு நான் மனம் வருந்துகிறேன். முடியுமானவரை அந்த சூட்டை தணித்து கொடுக்கலாமா என்று ஆராய்கிறேன். இனி அப்படித்தன் செய்வேன் என்று நான் வாக்குறுதி கொடுக்கவில்லை. சில சமயங்களில் சுட சுட சொன்னால்தான் அது உண்மையாகவும் இருக்கும்.

“அதற்காக நான் மட்டும்தான் உண்மை சொல்வதாகவும் நினைக்கவேண்டாம். நான் சொல்கின்ற கருத்துக்கள் தவறாக இருந்தால், எங்கேயும் யாரும், எப்போதும் எடுத்துக்கூறினால் அதனை திருத்திக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். அது பற்றி கலந்துரையாடி – உங்களது கருத்து சரியாக இருந்தால் - அதனை ஏற்றுக்கொள்வதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

அங்கிருக்கும் வீடு வளவு .... காணி பூமி 
அடிக்கடி போய்வருபோது ஆமி போலிஸ் கெடுபிடி 
இதுகள் இல்லாமல் இருக்க 
ஜெனநாயக ரீதியாக ..... கருத்துக்களை கருத்தால் போராடி வென்று காட்டி இருக்கிறார்கள். 

போராடத்தை இவர்களிடம் இருந்து மற்றவர்கள் படிக்க வேண்டும்.
நாட்டுக்காக எவளவு அர்பணிப்பு .... ? 
புல்லரிக்கும் போராட்ட திறனை 
வையகமும் கற்றுக்கொள்ள கடவ !

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலை தொடர்ந்தால் இனி எந்தப் புலம் பெயர்ந்த நாட்டையும் எட்டிப்பார்க்க முடியாது, அத்தோடு நாட்டின் இன்றைய நிலையும் இப்படிப் பேச வைத்திருக்கலாம். பொறுத்திருந்து பாப்போம். உண்மையான மாற்றமாவென்று. கொடுத்திருக்கும் விளக்கம் அவ்வாறு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு போன உங்கள் அரசியலும் வன்முறைகளும் உங்களுக்கே பொருத்தமானவை. வேறு எவருக்கும் பயனற்றவை. மக்களுக்கோ அழிவுக்கான பாதை அது. 

முள்ளிவாய்க்காலுக்கு முதல் தமிழர்கள் சீரோடும் சிறப்போடும் இருந்ததாக கனம் ஜூட் திருவாய் மலர்ந்துள்ளார். 

2 hours ago, வாலி said:

பெரிய பகிடி என்னவென்றால் புலன்பெயர் போராளிகள் தாமும் தம்முடைய குடும்பத்தவரும் சுதந்திரமான நாடுகளில் வாழ்ந்துகொண்டு அடுத்தவரின் சுதந்திரத்தில் வன்முறையைக் கையாள்வதுதான். இவர்கள் வாழும் நாடுகளில் இத்தகைய வன்முறையாளர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். இன்னமும் இவர்கள் பயங்கரவாதத்தை கைவிடவில்லை. இவர்களுக்கு கட்டாயம் புனர்வாழ்வளிக்கப்படல் வேண்டும்.

சிங்களவர்கள் புனர்வாழ்வு பற்றி பாடம் எடுத்திருக்கினம் போல அண்ணைக்கு.

8 hours ago, nirmalan said:

ஒரு காலத்தில் சிங்கள மக்களில் ஒரு கூட்டத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக புலம்பெயர்ந்த மண்ணில் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு காவல்துறையை அழைத்த காலம் மருவி, இன்று எமது இனத்தில் உள்ள குழப்பவாதிகளிடமிருந்து எமது மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு காவல்துறையை அழைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலமை குறித்து கவலை தெரிவித்தார்.
 

வரலாறு தெரியாதவர்கள் எல்லாம் ... இல்லை இல்லை வரலாற்றை திரிபுபடுத்தி இன்று எழுதத்தொடங்குகிறார்கள் ... சிலர் 

ஒரு காலத்தில் சிங்கள மக்களில் ஒரு கூட்டத்தினர் மற்றும் அவர்களோடு சேர்ந்தியங்கிய தமிழ் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு எதிரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உட்பட்ட தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறையை அழைத்த காலம் மருவி, இன்று எமது இனத்தின் பிரதிநிதிகள் என்ற பார்வையில் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான குழப்பவாதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் காவல்துறையை அழைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலமை.

... அடஉதுகள் கிடக்கட்டும் ஒரு புறத்தில் ...

ஆமா ...  எமனுக்கே ஆப்பிறுக்கும் கேபியின் உந்த புலம்பெயர் கும்பல் ... எப்போதிலிருந்து கூத்தமைப்புடன் ஒன்று பட்டது??? இல்லை ... ஆடு நனைகிறதாம், ஓநாய் ஓ..ஓ..ஓவென்று அழுத ... கதையா?????????????? நடிக்காதீர்கள்!!!!!!!!!!

Edited by no fire zone

4 hours ago, வாலி said:

பெரிய பகிடி என்னவென்றால் புலன்பெயர் போராளிகள் தாமும் தம்முடைய குடும்பத்தவரும் சுதந்திரமான நாடுகளில் வாழ்ந்துகொண்டு அடுத்தவரின் சுதந்திரத்தில் வன்முறையைக் கையாள்வதுதான். இவர்கள் வாழும் நாடுகளில் இத்தகைய வன்முறையாளர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். இன்னமும் இவர்கள் பயங்கரவாதத்தை கைவிடவில்லை. இவர்களுக்கு கட்டாயம் புனர்வாழ்வளிக்கப்படல் வேண்டும்.

ஓ ... அண்ணோய் ... சும்சம், உங்கள் போன்ற காட்டிக்கூட்டிக்கொடுப்பாளர்களிடமிருந்து காத்துக்கொள்ள .. என்ன செயவது? ... விளங்குகுதல்லோ, புலத்தில் சுதந்திரம், பாதுகாப்பாக இருப்பது!!!!

ஆமா ... உங்களுக்கு வன்முறை என்பது என்ன என்று கேள்விப்பட்டீர்களா??? அறிந்தீர்களா??? அனுபவித்தீர்களா??? ... சேர்ந்திருந்து செய்தவர்களுக்கு இதெல்லாம் புரிய்வா போகிறது???? ... கைகளில் உள்ள இரத்தக்கறைகளை ... சும்சம் உட்பட கழுவுங்கள்! ... இன்னும் நாற்றம் அடிக்கின்றது!

8 hours ago, nirmalan said:

 

இரவு எட்டு மணியளவில் ஆரம்பமான இந்த கூட்டத்தில் சுமார் முப்பது பேரளவில் கலந்துகொண்டனர்.
 

ம்ம்ம்... ஐந்தாறு ஏதோ ஒரு வீட்டுல் கூடி கதைத்ததை ... கூட்டம்???

உந்த ஐந்தாறு யார் ... இன்று கூத்தமைப்பில் முதலைக்கண்ணீர் விட்டு பாசம் காட்டும் புல ஒட்டுக்கும்பலின் ஒன்று இரண்டும், ஆடு நனையுதாக ஓநாயாக ஒப்பாரி வைக்கும் ஒன்று இரண்டு கேபிக்களுமாம்! 

சிட்னியிலேயே ... பத்து பதினைந்துதான் போனதாம்!

8 hours ago, வாலி said:

பெரிய பகிடி என்னவென்றால் புலன்பெயர் போராளிகள் தாமும் தம்முடைய குடும்பத்தவரும் சுதந்திரமான நாடுகளில் வாழ்ந்துகொண்டு அடுத்தவரின் சுதந்திரத்தில் வன்முறையைக் கையாள்வதுதான். இவர்கள் வாழும் நாடுகளில் இத்தகைய வன்முறையாளர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். இன்னமும் இவர்கள் பயங்கரவாதத்தை கைவிடவில்லை. இவர்களுக்கு கட்டாயம் புனர்வாழ்வளிக்கப்படல் வேண்டும்.

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து தான் தனது குடும்பம் என்று இருப்பவர்களுக்கு தான் நாட்டில் போராட்டம் இந்த நிலைக்கு மாற பெரும் பங்கு .சிங்களவனுக்கு அடித்தால் காணும் என்று காசை கொடுத்து கடைசியில் அது மகிந்தா கோஸ்டிகளின் கைகளில் போய் சேர்ந்துவிட்டது .

கடைசியில் தாங்கள் நினைத்தது எதுவும் நடக்காமல் போக  புலிகள் சொந்த மக்களை நோக்கி ஆயுதத்தை திருப்பியது மாதிரி இவர்களும் சொந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை நோக்கி கூச்சலிடுகின்றார்கள் .அனுதாபபடுவதை தவிர வேறுவழியில்லை 

ஆனால் எல்லோருக்கும் சேர்த்துதான் சர்வதேசம் தண்டனை வழங்கியிருக்கு இன்னமும் தொடர்ந்து வழங்கும்.சுமந்திரனின் கூட்டத்தை குழப்பியதன் பலனையும் யாரவது அனுபவித்தே ஆவார்கள் . 

கனடாவில் உந்த சேட்டைகளுக்கு இடம் கிடையாது ,புலி வாலுகள் கிட்ட நெருங்கவும் விடமாட்டம் ,அவர்களுக்கும் தெரியும் எங்களுடைய பலம் .எத்தனையோ கூட்டம் நடத்தினோம் .

By Professor Mahesh Nirmalan 

Dear Mr Sumanthiran,
 
Just last week I visited Jaffna and spoke to a cross section of people living there. This included several families that had lost life and limb during the Vanni war. Please be reassured that they all unanimously support your moderate approach to the current political situation.
 
At two of the seminars titled "Impediments to Professional and personal development", that I conducted in the Jaffna district, there was unanimous support for trilingual education, political moderation and "samayosidam" that have characterised the TNA's approach. The diaspora elements who are now demonstrating against you are neither relevant nor are they in touch with ground realities.
 
You do not need be deterred by 'every dog that barks' from the comforts of their spacious living rooms in the Western capitals and Australia. Please be reassured that the affected people are on your side.....and that is all that counts. My very best of luck.
 
Professor Mahesh Nirmalan, Manchester Medical School.
 
 

ஹரி நீங்கள் சொல்வது இன்றைய நிலை .முன்னர் நிலமை வேறுமாதிரித்தான் இருந்ததது .அமிருக்கு வைத்த அஞ்சலிகூட்டதையே குழப்பினார்கள்.பின்னர் ஒரு முறை பொப் ரெயின் கூட்டத்தை குழப்பினார்கள் .மாற்று அமைப்புகளின் கூட்டங்கள் பல குழப்பபட்டன .

இப்படியான சகிப்பு தன்மையற்றவர்கள் கூட்டங்களை குழப்புவதை பெருமையாக நினைத்தார்கள் .கடைசியில் கனேடிய அரசு காட்டமான நடவடிக்கைகள் எடுக்க தொடங்க துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி ஒழிந்துபோனார்கள் .பாவம் சிலர் இப்பவும் நிரந்தர விசா இல்லாமல் திண்டாடுகின்றார்கள் .

ஆஸிக்கு இது புதிது .அங்கும்  இப்படி நாலு நிகழ்வுகள் நடக்க   பின்னர் நிலைமை கட்டுக்குள் வரும் .வர பண்ணுவார்கள் .

நாங்களும் லண்டனில் எங்கே பகிரங்கமாக சம் வருவார் ... அவரிடம் சில் டவுட்டுகள் கிளியர் பண்ண வேண்டும் என்று காத்தும் இருந்தோம்! ... பாதிரி பூட்டிய அறைகளுக்குள் எல்லாவற்றையும் முடித்துப் போட்டுது! ... இனி பகிரங்கமாக ... கூழ் முட்டை அபிசேகம் தான்! ... 

... கனடா வீரர்களோ, சோத்துப்பார்சலுகளோ வந்து பாருங்கள்? ... விரும்பின் சில கூழ் முட்டைகள் தரலாம் குடிக்க!

நாங்கள் வந்தால் நீங்கள் வெள்ளை கொடிதான் .tw_smiley:

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, no fire zone said:

நாங்களும் லண்டனில் எங்கே பகிரங்கமாக சம் வருவார் ... அவரிடம் சில் டவுட்டுகள் கிளியர் பண்ண வேண்டும் என்று காத்தும் இருந்தோம்! ... பாதிரி பூட்டிய அறைகளுக்குள் எல்லாவற்றையும் முடித்துப் போட்டுது! ... இனி பகிரங்கமாக ... கூழ் முட்டை அபிசேகம் தான்! ... 

... கனடா வீரர்களோ, சோத்துப்பார்சலுகளோ வந்து பாருங்கள்? ... விரும்பின் சில கூழ் முட்டைகள் தரலாம் குடிக்க!

கடைசியாக உங்கள் காடைத்தனத்தை காட்ட லண்டளிலாவது உங்களுக்கு "தமிழீழம்" கிடைத்தது என்று நீங்கள் பெருமைப்படுவதாக தெரிகிறது. பிரித்தானிய அரசு உங்களை தேவையான நேரத்த்தில் சரியான இடத்தில் வைக்கும்.

8 hours ago, kalyani said:

முள்ளிவாய்க்காலுக்கு முதல் தமிழர்கள் சீரோடும் சிறப்போடும் இருந்ததாக கனம் ஜூட் திருவாய் மலர்ந்துள்ளார். 

இது நீங்கள் திருவாய் மலர்ந்தது - நான் அல்ல. நேர்மையாக கருத்தெழுதும் பழக்கமே உங்களுக்கு இல்லையா?

Edited by Jude

1 hour ago, arjun said:

நாங்கள் வந்தால் நீங்கள் வெள்ளை கொடிதான் .tw_smiley:

வெள்ளைக்கொடிதான் ... அப்படியே மாலைதீவுக்கும் அனுப்பி விடலாம் ... கொஞ்ச ஃபிளாஸ்பக்குகளை ஞாமகப்படுத்த ...

41 minutes ago, Jude said:

கடைசியாக உங்கள் காடைத்தனத்தை காட்ட லண்டளிலாவது உங்களுக்கு "தமிழீழம்" கிடைத்தது என்று நீங்கள் பெருமைப்படுவதாக தெரிகிறது. பிரித்தானிய அரசு உங்களை தேவையான நேரத்த்தில் சரியான இடத்தில் வைக்கும்.

இது நீங்கள் திருவாய் மலர்ந்தது - நான் அல்ல. நேர்மையாக கருத்தெழுதும் பழக்கமே உங்களுக்கு இல்லையா?

அண்ணை சூட் ... அப்ப நீங்கள் முந்தி! நா.க.த.அரசு அது இது என்று விட்ட சவுண்ட் எஃபக்ரெல்லாம் எங்கே? ... நீங்கள் எங்கை நிக்கிறீங்கள்/நிக்கப்போகிறீங்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்? ... எவ்வளவு காலத்துக்கு தொப்பியை தொடர்ந்து ...

2 hours ago, Gari said:

கனடாவில் உந்த சேட்டைகளுக்கு இடம் கிடையாது ,புலி வாலுகள் கிட்ட நெருங்கவும் விடமாட்டம் ,அவர்களுக்கும் தெரியும் எங்களுடைய பலம் .எத்தனையோ கூட்டம் நடத்தினோம் .

By Professor Mahesh Nirmalan 

Dear Mr Sumanthiran,
 
Just last week I visited Jaffna and spoke to a cross section of people living there. This included several families that had lost life and limb during the Vanni war. Please be reassured that they all unanimously support your moderate approach to the current political situation.
 
At two of the seminars titled "Impediments to Professional and personal development", that I conducted in the Jaffna district, there was unanimous support for trilingual education, political moderation and "samayosidam" that have characterised the TNA's approach. The diaspora elements who are now demonstrating against you are neither relevant nor are they in touch with ground realities.
 
You do not need be deterred by 'every dog that barks' from the comforts of their spacious living rooms in the Western capitals and Australia. Please be reassured that the affected people are on your side.....and that is all that counts. My very best of luck.
 
Professor Mahesh Nirmalan, Manchester Medical School.
 
 

கரி நாளையே சுமந்தரனுக்கும் உங்க சம்பந்தனுக்கும் ஏதாவது பிரச்சனை வந்தால் நீங்களே முன்னுக்கு வந்து சுமந்திரனை இணையத்தில் திட்டி திரிவீங்க. அது உங்க கட்சி அரசியல். அதுவும் கட்சி கொள்கை என்று இல்லாமல் கட்சியில் உங்க கோஷ்டி தலைவர்களை மாத்திரம் ஆதரிக்கும் உங்க கோஷ்டி பலத்தை பற்றி பேசுறீங்களா? 

13 minutes ago, trinco said:

கரி நாளையே சுமந்தரனுக்கும் உங்க சம்பந்தனுக்கும் ஏதாவது பிரச்சனை வந்தால் நீங்களே முன்னுக்கு வந்து சுமந்திரனை இணையத்தில் திட்டி திரிவீங்க. அது உங்க கட்சி அரசியல். அதுவும் கட்சி கொள்கை என்று இல்லாமல் கட்சியில் உங்க கோஷ்டி தலைவர்களை மாத்திரம் ஆதரிக்கும் உங்க கோஷ்டி பலத்தை பற்றி பேசுறீங்களா? 

சிறி, மிக தெளிவாக சொல்கிறார்! ஆமா, ஹரி, அர்ஜுன, சூட் போன்றவர்கள், இது தொடர்பாக ஏதாவது கருத்து சொல்ல விரும்பின் ... 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, no fire zone said:

அண்ணை சூட் ... அப்ப நீங்கள் முந்தி! நா.க.த.அரசு அது இது என்று விட்ட சவுண்ட் எஃபக்ரெல்லாம் எங்கே? ...

 முதலில் தமிழ் களத்தில் தமிழுக்கு மதிப்பளித்து தமிழில் எழுத பழகுங்கள். ஏதோ  தமிழில் சொல் பஞ்சம் ஏற்பட்டது போல ஆங்கிலத்தை தமிழில் எழுதி தமிழை அவமான படுத்தாதீர்கள்.

 

1 hour ago, no fire zone said:

சிறி, மிக தெளிவாக சொல்கிறார்! ஆமா, ஹரி, அர்ஜுன, சூட் போன்றவர்கள், இது தொடர்பாக ஏதாவது கருத்து சொல்ல விரும்பின் ... 

முதலைச்சர் விக்னேஸ்வரன் நீதிபதியாக இருந்த போது பிரபாகரனுக்கு இருநூறு வருடங்களுக்கு மேல் ஆயுள்தண்டனை விதித்தார். பிரபாகரன் பிடிபடவில்லை. பல பேரை கொன்ற பயங்கரவாதி என்றே பிரபாகரனை குற்றவாளியாக கண்டு விக்னேஸ்வரன் இந்த தீர்ப்பை வழங்கினார். அவர் அன்றும் இன்றும் தெளிவாகவே இருக்கிறார்.

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.