Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளைப் போன்று ஓய்வுபெறும் இராணுவத்தினருக்கும் புனர்வாழ்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைப் போன்று ஓய்வுபெறும் இராணுவத்தினருக்கும் புனர்வாழ்வு!

[Friday 2016-01-15 19:00]

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டதை போல ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்களுக்கும் பயிற்சியளித்து சமூகத்துடன் இணைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கூறினார்.

  

தற்போது இராணுவத்தில் ஓய்வு பெறும் நிலையில் பெருமளவான இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்று சமூக நீரோட்டத்துக்கு செல்லும்போது அவர்களுக்கு பயிற்சி அளித்து சமூகத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் கூறினார். இதேவேளை, தற்போது மூன்று படைபிரிவினருக்கு பயிற்சியளித்து வரும இரகசியத்தை வெளிப்படுத்திய பிரதமர், மாலி நாட்டுக்கு யுத்தத்துக்கு அனுப்புவதற்காகவே அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுவதாக கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டால் சர்வதேச நாடுகளின் அமைதி நடவடிக்கையில் இலங்கை படையினராயும் ஈடுபடுத்த முடியும் என்றும் இவர் கூறினார். இனி வரும் காலங்களில் இளம் மாணவர் படையணியை உருவாக்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ருவன் விஜயவர்தன மற்றும் இராணுவ தளபதியிடம் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய மீனவர்களின் அத்து மீறல் பிரச்சினை முற்றாக ஒழியும் வரை கடற்படையினரின் தொகை குறைக்க முடியாது என்றும் வடக்கில் உள்ள இராணுவத்தை குறைப்பது தொடர்பில் காலகிரமத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது உள்ள சமாதான சூழ்நிலையும் எதிர்காலத்தில் நடக்கும் விடயங்களை வைத்து படிப்படியாக வடக்கிலுள்ள இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் கடற்பகுதி மற்றும் நிலப்பகுதியை இலங்கையின் முப்படையினரால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதை 2002ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் விடுதலை புலிகள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் எனவும் பிரதமர் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=149331&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, வாத்தியார் said:

தற்போது இராணுவத்தில் ஓய்வு பெறும் நிலையில் பெருமளவான இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்று சமூக நீரோட்டத்துக்கு செல்லும்போது அவர்களுக்கு பயிற்சி அளித்து சமூகத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் கூறினார். இதேவேளை, தற்போது மூன்று படைபிரிவினருக்கு பயிற்சியளித்து வரும இரகசியத்தை வெளிப்படுத்திய பிரதமர், மாலி நாட்டுக்கு யுத்தத்துக்கு அனுப்புவதற்காகவே அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுவதாக கூறினார்.

பயிற்சி குடுக்கிற ஆக்களை  ஈராக்,லிபியா.சிரியா நாடுகளுக்கும் அனுப்பி ஒங்கடை திறமையை காட்டலாம் தானே....அதென்ன மாலிக்கு மட்டும் தனி அன்பு?????

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைப் போன்று ஓய்வுபெறும் இராணுவத்தினருக்கும் புனர்வாழ்வு!

 

நல்லவிடயம்

இந்தப்பயிற்சியை தமிழர்கள் கொடுத்தால் தான் அது நியாயமானதாக இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இந்தப்பயிற்சியை தமிழர்கள் கொடுத்தால் தான் அது நியாயமானதாக இருக்கும்..

ஏன் தமிழர்கள் கொடுத்தால் நியாயமாக இருக்குமென கருதுகின்றீர்கள்? சரணடைந்த முன்னாள் புலிகளுக்கு சிங்கள ராணுவம் புனர்வாழ்வு கொடுத்தார்கள் என்பதற்காக எண்டு சொல்லுவீர்களாயின், ஒரு கதைக்கு இராணுவத்தினர் புனர்வாழ்வுக்கு ஒத்துக்கொள்கிறார்கள் என வைத்துக்கொள்வோம், இப்போது அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கப் புலிகள் இல்லை. அப்படியானால் உங்கள் பதில் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

ஏன் தமிழர்கள் கொடுத்தால் நியாயமாக இருக்குமென கருதுகின்றீர்கள்? சரணடைந்த முன்னாள் புலிகளுக்கு சிங்கள ராணுவம் புனர்வாழ்வு கொடுத்தார்கள் என்பதற்காக எண்டு சொல்லுவீர்களாயின், ஒரு கதைக்கு இராணுவத்தினர் புனர்வாழ்வுக்கு ஒத்துக்கொள்கிறார்கள் என வைத்துக்கொள்வோம், இப்போது அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கப் புலிகள் இல்லை. அப்படியானால் உங்கள் பதில் என்ன?

நான் புலிகள்  என்று எங்கே குறிப்பிட்டுள்ளேன்.....?

உங்களுக்கும்.......???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நான் புலிகள்  என்று எங்கே குறிப்பிட்டுள்ளேன்.....?

உங்களுக்கும்.......???

அப்ப தமிழர் தரப்பில் எவர் புனர்வாழ்வு கொடுக்கவேண்டும் தமிழ் மக்கள் பேரவையா? யார் அவர்கள் (புலிகள் என்று நீங்கள் குறிப்பிடாவிட்டாலும் உங்கள் கனவில் தொக்கி நிற்பவர்கள் அவர்கள்தானே! இல்லையென மறுப்பீர்களா?)

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாலி said:

அப்ப தமிழர் தரப்பில் எவர் புனர்வாழ்வு கொடுக்கவேண்டும் தமிழ் மக்கள் பேரவையா? யார் அவர்கள் (புலிகள் என்று நீங்கள் குறிப்பிடாவிட்டாலும் உங்கள் கனவில் தொக்கி நிற்பவர்கள் அவர்கள்தானே! இல்லையென மறுப்பீர்களா?)

 

சிங்களத்துக்கும் எனக்கும்  எல்லோருமே தமிழர்கள்

 உங்களுக்கு தான் 

கூட்டணி

புலி

ரெலோ

கூட்டமைப்பு

பேரவை.

உண்மையான இன ஐக்கியம் சார்ந்த ஒன்றிணைந்த நாடு என எமது போராளிகளுக்கு சிங்களம் வகுப்பெடுக்குமாயின்

சிங்கள இராணுவத்துக்கு தமிழர்களே அதை உணர்த்தணும்

ஒரு வக்கீலே இரு பக்கமும் வாதிடுவது எதைத்தரப்போகிறது...???

 

Edited by விசுகு

அண்ணையின் அவியலை பாருங்கோ ,

புலி டெலோ ஈபி எல்லாம் தனக்கு ஒன்றாம் .

ஆனால் புலி டெலோவை அடித்தால் அதுவும் சரி 

முதன் முதன் இப்படி ஒரு ஆளை நான் இங்குதான் பார்க்கின்றன் .

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தாங்கிய கைகளை பொதுவாழ்வில் சமூகத்துடன் இணைக்கும்போது மீண்டும் அவை ஆயுதம் தூக்கமல் இருக்கவே புனர்வாழ்வு கொடுக்கப்படுகின்றது. இப்போது ஓய்வு பெரும் நிலையிலுள்ள படையினருக்கும் இந்த நடைமுறையே பின்பற்றப்படப்போகின்றது எனப் பிரதமர் தெரிவித்து இருக்கின்றார்.  புனர்வாழ்வு அளிக்கும்போது இனம் பார்த்து அளிக்கப்படுவதில்ல. இதற்குப் போய் தமிழர்கள்தான் புனர்வாழ்வளிக்க வேண்டும் எனக் கருதுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. அது வெறும் பழிவாங்கும் எண்ணம் மட்டுமே. 

இதை ரணில் ஏன் சொல்லி இருக்கிறார் என்பதே இங்கு முக்கியமானது. இது இலங்கை இராணுவத்துக்கு வெள்ளையடிக்கும் முயற்சிகளில் ஒன்று. போர்க்குற்றவாளிகளான இலங்கை இராணுவம் கட்டுக்கோப்பான நடைமுறைகளைப் பேணி வருகிகின்றது எனச் சொல்லியிருக்கின்றார்.  துணிச்சல்காரரான முகத்துக்கு நேராகவே பேசும் :cool: விக்கி  இலங்கை இராணுவத்துக்கு தமிழர்கள்தான் புனர்வாழ்வளிக்க வேண்டும் எனக் கோரியிருக்கலாம்!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

ஆயுதம் தாங்கிய கைகளை பொதுவாழ்வில் சமூகத்துடன் இணைக்கும்போது மீண்டும் அவை ஆயுதம் தூக்கமல் இருக்கவே புனர்வாழ்வு கொடுக்கப்படுகின்றது. இப்போது ஓய்வு பெரும் நிலையிலுள்ள படையினருக்கும் இந்த நடைமுறையே பின்பற்றப்படப்போகின்றது எனப் பிரதமர் தெரிவித்து இருக்கின்றார்.  புனர்வாழ்வு அளிக்கும்போது இனம் பார்த்து அளிக்கப்படுவதில்ல. இதற்குப் போய் தமிழர்கள்தான் புனர்வாழ்வளிக்க வேண்டும் எனக் கருதுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. அது வெறும் பழிவாங்கும் எண்ணம் மட்டுமே. 

இதை ரணில் ஏன் சொல்லி இருக்கிறார் என்பதே இங்கு முக்கியமானது. இது இலங்கை இராணுவத்துக்கு வெள்ளையடிக்கும் முயற்சிகளில் ஒன்று. போர்க்குற்றவாளிகளான இலங்கை இராணுவம் கட்டுக்கோப்பான நடைமுறைகளைப் பேணி வருகிகின்றது எனச் சொல்லியிருக்கின்றார்.  துணிச்சல்காரரான முகத்துக்கு நேராகவே பேசும் :cool: விக்கி  இலங்கை இராணுவத்துக்கு தமிழர்கள்தான் புனர்வாழ்வளிக்க வேண்டும் எனக் கோரியிருக்கலாம்!

சிங்களப்புனர்வாழ்வுக்கு நல்ல விளக்கம்

நன்றி

2 hours ago, arjun said:

அண்ணையின் அவியலை பாருங்கோ ,

புலி டெலோ ஈபி எல்லாம் தனக்கு ஒன்றாம் .

ஆனால் புலி டெலோவை அடித்தால் அதுவும் சரி 

முதன் முதன் இப்படி ஒரு ஆளை நான் இங்குதான் பார்க்கின்றன் 

 

Edited by நியானி
மேற்கோளும் பதிலும் தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

அண்ணையின் அவியலை பாருங்கோ ,

புலி டெலோ ஈபி எல்லாம் தனக்கு ஒன்றாம் .

ஆனால் புலி டெலோவை அடித்தால் அதுவும் சரி 

முதன் முதன் இப்படி ஒரு ஆளை நான் இங்குதான் பார்க்கின்றன் .

 

 

2 hours ago, வாலி said:

ஆயுதம் தாங்கிய கைகளை பொதுவாழ்வில் சமூகத்துடன் இணைக்கும்போது மீண்டும் அவை ஆயுதம் தூக்கமல் இருக்கவே புனர்வாழ்வு கொடுக்கப்படுகின்றது. இப்போது ஓய்வு பெரும் நிலையிலுள்ள படையினருக்கும் இந்த நடைமுறையே பின்பற்றப்படப்போகின்றது எனப் பிரதமர் தெரிவித்து இருக்கின்றார்.  புனர்வாழ்வு அளிக்கும்போது இனம் பார்த்து அளிக்கப்படுவதில்ல. இதற்குப் போய் தமிழர்கள்தான் புனர்வாழ்வளிக்க வேண்டும் எனக் கருதுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. அது வெறும் பழிவாங்கும் எண்ணம் மட்டுமே. 

இதை ரணில் ஏன் சொல்லி இருக்கிறார் என்பதே இங்கு முக்கியமானது. இது இலங்கை இராணுவத்துக்கு வெள்ளையடிக்கும் முயற்சிகளில் ஒன்று. போர்க்குற்றவாளிகளான இலங்கை இராணுவம் கட்டுக்கோப்பான நடைமுறைகளைப் பேணி வருகிகின்றது எனச் சொல்லியிருக்கின்றார்.  துணிச்சல்காரரான முகத்துக்கு நேராகவே பேசும் :cool: விக்கி  இலங்கை இராணுவத்துக்கு தமிழர்கள்தான் புனர்வாழ்வளிக்க வேண்டும் எனக் கோரியிருக்கலாம்!

ஓய்வுபெறும் நிலையிலுள்ள அதிகாரிகள் என்றால் அவர்களுக்கு 55வயது இருக்கும், இனி அவர்கள் எதற்கு ஆயுதம் தூக்கவேண்டும்.
 
எல்லாம் சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றுவரும்போது எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்ற பயிற்சிதான்.
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சிங்களப்புனர்வாழ்வுக்கு நல்ல விளக்கம்

நன்றி

புனர்வாழ்வு அளிக்க்ப்படுதலில் சிங்களப் புனர்வாழ்வு, தமிழ்ப் புனர்வாழ்வு, முஸ்லிம் புனர்வாழ்வு என்று ஒண்டு இல்லை. புனர்வாழ்வு என்றால் ஒன்றுதான். இருந்தாலும் தமிழர் தரப்பில் யார் புனர்வாழ்வு கொடுக்கவேண்டும் என்ற கேள்விக்கு இன்னும் பதிலே இல்லை. 

43 minutes ago, Eppothum Thamizhan said:

ஓய்வுபெறும் நிலையிலுள்ள அதிகாரிகள் என்றால் அவர்களுக்கு 55வயது இருக்கும், இனி அவர்கள் எதற்கு ஆயுதம் தூக்கவேண்டும்.

 
எல்லாம் சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றுவரும்போது எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்ற பயிற்சிதான்.

இது போர்க்குற்றம் தொடர்பாக பனன்னாட்டுச் சமுகத்துக்கு சொல்லப்பட்ட ஒரு செய்திதான். இங்கு புலிகளுக்கு அளிக்கப்பட்டது போன்ற புனர்வாழ்வு ஒருபோதும் வழங்கப்படமாட்டாது. புனர்வாழ்வு என்ற போர்வையில் தமிழ் இளைஞர்களுக்கு மன உளைச்சலினையே சிங்களம் வழங்கியிருக்கும் என எவரும் இலகுவாகக் கூறிவிடுவர். இதனைப் புரிந்துகொள்ளாது, இராணுவத்தினருக்கு தமிழர் புனர்வாழ்வளிக்கவேண்டும் எனக் கோருவது, ரணில் விடும் புலுடாவுக்கு நிகரானது.  அப்படியாயின் இவர்கள் தமிழ் இளைஞர்களுக்கு சிங்களம் நியாயமான புனர்வாழ்வு அளித்தது என ஏற்றுக்கொள்கிறார்களா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.