Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'விடுதலைப் புலிகள் போரில் தோற்றாலும் அவர்களின் சிந்தனை தோற்கவில்லை'

Featured Replies

'விடுதலைப் புலிகள் போரில் தோற்றாலும் அவர்களின் சிந்தனை தோற்கவில்லை'

 

இலங்கையில் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களின் பிரிவினைவாத சிந்தனை, கருத்து ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அரசியலமைப்பு வழியாக நாட்டின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால், வெறுமனே நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் அளவுக்குத்தான் புதிய அரசியமைப்பு மாற்றம் இருக்கவேண்டும். அதனைத் தாண்டி அரசியலமைப்பு முழுமையாக மாற்றப்படக்கூடாது என்று மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களே கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், அரசியலமைப்பு மாற்றம் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணமுடியுமா என்று பிபிசி ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியது. 'அரசியலமைப்பை திருத்துவதன் மூலமோ அல்லது புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதன் மூலமோ இதற்கு முழுமையான தீர்வு கிடைத்துவிடும் என்று நாம் நினைக்கக்கூடாது. நடைமுறை ரீதியான செயற்பாடு மூலமாகத் தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்' என்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

'2009-ம் ஆண்டு மே 18-ம் திகதி பயங்கரவாத அமைப்பான எல்டீடீஈ-யை யுத்தத்தில் தோற்கடித்தாலும், எல்டீடீயின் சிந்தனையை கொண்டவர்களை கருத்துரீதியில் நாம் தோற்கடிக்கவில்லை' என்றும் கூறினார் ஜனாதிபதி.

'நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு, மீண்டும் நாட்டை பிளவுபடுத்தும் பயங்கரவாத அமைப்பு உருவாகாமல் தடுப்பதற்காக, ஈழ அரசை உருவாக்கும் எண்ணத்தை முற்றாக தடுப்பதற்காக முதலில் அந்த மக்களின் உள்ளத்தை வெல்லவேண்டும்' என்று கூறினார் சிறிசேன.

இலங்கையில் தனிநாடு கோரும் யுத்தம் இனிமேல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் எடுத்துவருவதாகவும் இலங்கை ஜனாதிபதி கூறினார்.

'யுத்தம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து அந்தக் காரணங்களுக்கு தீர்வு தேடுவது அவசியம். கடந்த பல ஆண்டுகளில் அந்தத் தீர்வுகாணும் வேலை நடக்கவில்லை. இன்று நாங்கள் அந்தக் காரணங்களை கண்டுபிடித்து அவற்றுக்குத் தீர்வு காண்கின்றோம்' என்றார் மைத்திரிபால சிறிசேன.

http://www.bbc.com/tamil/global/2016/01/160122_maithri_ltte

 

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிசேனவுக்கு புரியுது எங்கட சிலதுக்கு புரியவே இல்லை. புலிக்கொடியை மடிச்சு அடிப்பெட்டிக்க போடுன்னு எல்லோ நிற்குது. ஆனால் அதனை தமிழரின் அடிமனதில் இருந்து யாரும் அழிக்க முடியாது. :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பேஸ் புக் , இணையம் வந்ததுதான் தாமதம்....புலியி பெயரொன்று சொல்லுபாப்ப்பம்....இன்னுமொருவர் பிரபாகரனுக்கு தான் அட்வைஸ் பண்ணியவராம்....பிரான்சு சனாதிபதியுடன் கைகொடுத்தவராம்... இன்னுமொருவர் சொல்லுறார்...தான் புலிக்கெதிரல்ல ...புலப்புலிவாலுக்கு எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு ...புலிகளைத்தான் தூற்றுவார்......இந்த 3 நாயகர்களூம் கனடாவில்தான் இருக்கினம்....என்ன செய்வது விதியென்று வாசித்துவிட்டு இருக்க வேண்டியதுதான்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு கொடுக்கவேண்டியதில் ஒரு பத்து வீதமாவது குடுத்தால் அந்த சிந்தனை உள்ள தமிழர்களை தனிமைபடுத்த முடியும் என்பது இந்த சொறிலன்காவின் இனவாதிகளுக்கு தெரியும் ஆனாலும் அரசியல் பிழைப்பு வேணுமே அவர்களுக்கு 3016 ல் கூட இப்படித்தான் கூவுவார்கள் கொஞ்சம் வித்தியாசமாக .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

'விடுதலைப் புலிகள் போரில் தோற்றாலும் அவர்களின் சிந்தனை தோற்கவில்லை'

உண்மையான சிந்தனைகள் தோற்றதாக சரித்திரம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

தமிழனுக்கு கொடுக்கவேண்டியதில் ஒரு பத்து வீதமாவது குடுத்தால் அந்த சிந்தனை உள்ள தமிழர்களை தனிமைபடுத்த முடியும் என்பது இந்த சொறிலன்காவின் இனவாதிகளுக்கு தெரியும் ஆனாலும் அரசியல் பிழைப்பு வேணுமே அவர்களுக்கு 3016 ல் கூட இப்படித்தான் கூவுவார்கள் கொஞ்சம் வித்தியாசமாக .

அவசரப்படாதீர்கள்

சிங்களவனின் அடுத்த நூற்றாண்டு காலத்திட்டமே அது தானே...

அதற்குத்தான் இருவரை தமிழர்பிரிவில் தயாராக்கிவிட்டார்களே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.